கௌச்லயாவின் முகமெல்லாம் கசப்பும், வேதனையின் மிச்சமும் தான். அந்த உறவையே இன்றுவரை அவர் தள்ளி தானே வைத்திருக்கிறார்.
முன்பெல்லாம் ராம்நாத்திற்கு பிடிக்கவில்லை. அதனால் கௌசல்யாவும் தள்ளி நிற்கிறார் என்று நினைத்ததுண்டு.
அவருக்கு பயந்து தன் பெற்றோருடன் பெரிதாய் பட்டுக்கொள்வதில்லை என்று நினைத்திருந்தான் கௌரவ்.
ஆனால் உண்மையை என்று அறிந்தானோ அன்றிலிருந்து இன்றுவரை அந்த குடும்பத்தினை அவனாலும் மன்னிக்க முடியவில்லை.
தான் கைக்குழந்தை என்றால், ஆகர்ஷன் மட்டும் அந்த நேரம் என்னவாம்? ஒருவயதிற்கும், இரண்டு மாதத்திற்கும் பெரிதாய் என்ன வேறுபாடு?
இருவருமே குழந்தைகள் தானே? கௌரவ் கேட்கவும் கௌசல்யாவின் விழிகள் உணர்வுகளை முழுதாய் தொலைத்தது.
“ம்மா…” என்று அவரின் கைமீது தன் கரம் வைக்க,
“கூப்பிடனும். உன் கல்யாணத்துக்கு…” என்று விட்டுப்போன பிடிப்புடன் அவர் கூறிவிட்டு,
“இதையெல்லாம் நீ நினைக்காத கௌரவ். சந்தோஷமா இருக்கனும். ஆமா, நிலாட்ட பேசினியா? நல்ல பேசுவா…” என்று சொல்ல கௌரவ்வின் இதழ்கள் புன்னகையுடன் உள்பக்கம் மடிந்துகொண்டதும்,
“என்ன கௌரவ்?…” என்றார் கௌசல்யா.
“ஹ்ம்ம், பேசுவோம். சரி நீங்க போய் லன்ச் எடுத்து வைங்க. வர்றேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் கைபேசியை பார்த்தான்.
அவளின் ஞாபகங்கள். அவளை தான் அறிந்துகொண்ட ஒவ்வொரு ஞாபகமும் நினைவடுக்கில் அடுத்தடுத்து வந்து நின்றது.
முதன்முதலில் அவளை விபத்துக்குள்ளாக்கி அவனிடம் வந்தடைந்த அந்த புகைப்படம்.
அடுத்ததாய் மருத்துவமனையில் சிகிச்சையில் அவளிருந்த புகைப்படம். அதன்பின் அத்தனை வருடங்கள் கழித்து தங்களின் பேருந்தில் ஏறும் முன் செய்த கலாட்டா.
கௌசல்யாவின் பரிசான மோதிரத்தை எடுத்து தந்தது, காபிஷாப்பில் பார்த்தது, இறுதியாய் சற்றுமுன்னர் தன்னிடத்திலேயே வந்து அவள் பேசி சென்றது.
சட்டென்று நினைவு வந்தவனாக மேனேஜருக்கு உடனடியாய் அழைப்பு விடுத்தவன்,
“சுசீ, என் டேபிள்ல இருக்கிற பொக்கேவை வீட்டுக்கு குடுத்தனுப்புங்க…” என்றான்.
ராமநாத் வந்து குதித்து சென்றதில் அதனை வரைந்து வந்திருந்தான். இப்போது ஞாபகம் வரவும் அதனை பத்திரப்படுத்த நினைத்தவன், மீண்டும் அவளின் அலைபேசி எண்ணை பார்த்தான்.
எண்ணின் இலக்கங்கள் பச்சை குத்தியதை போல அவனின் பார்வையில் சென்று ஒட்டிக்கொண்டது.
அவளின் எண்ணை தன் கைப்பேசியில் பதியவில்லை. கீழுதட்டினை கடித்தபடி அப்படியே விட்டுவிட்டான்.
இதற்கும் என்ன எதிர்வினை வரும் என நினைத்தாலும் அதற்காகவே சேமிக்காமல் இருந்தான் கௌரவ்.
‘உன்னை போய் அமைதின்னு சொல்றாங்களேடா’ என ஆகர்ஷன் தான் அவ்வப்போது கூறுவான்.
இப்போது தானாகவே அந்த எண்ணம் வந்தது. கூடவே கீற்றாய் குறுஞ்சிரிப்பும் பூத்தது.
எழுந்து வெளியே வர டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ராமநாத் முணங்கிக்கொண்டிருந்தார் இன்னும்.
மகன் வந்தமர்ந்ததும் மீண்டும் கப்சிப்பென்று நிறுத்திக்கொண்டாலும் ஒரு வேலையை பார்த்துவிட்டு தான் வந்திருந்தார்.
அன்று மாலையே சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்திறங்கிய சாருலதா கௌசல்யாவை பிடிபிடி என்று பிடித்தாள்.
“அப்பாவுக்கு பிடிக்கலைன்னு தெரியுதேம்மா. எதுக்காக அந்த சம்பந்தத்தை பார்க்கறீங்க நீங்க?…” என்று பேச, விக்ரமும் அந்தநேரம் வந்துவிட்டிருந்தான்.
“சாரு, பொறுமையா பேசு. என்ன நீ அம்மாவயே அதிகாரம் பன்ற?…” என விக்ரம் உடன்பிறந்தவளை அதட்ட,
“அம்மான்னா, அவங்க தப்பு பண்ணினா கேட்க வேண்டாமா? அண்ணாவுக்கு அம்மா சொன்னதால மறுக்க முடியாம கூட ஓகே சொல்லவேண்டிய கட்டாயம் இருந்தா?…”
“அப்படி அண்ணா யாருக்காகவும் சரின்னு சொல்லிடுவாங்களா? ஏன் உனக்கு தெரியாதா?…”
“இதுக்கு நானும் சம்மதிக்கமாட்டேன். அந்த டாக்டர் ஃபேமிலி நல்லவங்களாவே இருந்துட்டு போகட்டுமே. ஆனா நம்ம குடும்ப விஷயத்துல ஏன் தலையிடனும்? பிரத்யூவுக்கு தான் அவங்க சம்பந்தி வீடு. நமக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது…..” என்றாள்.
“சம்பந்தம் கிடையாதுன்னு நீ எப்படி சொல்லுவ?…” என்றான் கௌரவ்.
“அண்ணா வாங்கண்ணா….” என்று வேகமாய் உள்ளே வந்த கௌரவ்விடம் அவள் பேச,