தன்னுடன் முறையற்று இருந்த இருவரங்களாகட்டும் அதற்கடுத்து தன் தாலியை சுமந்து கொண்டு தன்னுடன் இருந்த கடந்த ஒரு மாதமாகட்டும் அவன் பலமுறை கேட்டும் எதையும் பகிராதவளிடம் என்றுமே அவன் கண்டது அசாத்திய துணிச்சலும் சொல்லிலடங்கா உறுதியும், இறுக்கமும் மட்டுமே..!!
தன் முகத்திரை கிழிந்த பின்பும் பிரீத்தியிடம் முன்பு பார்த்த எதுவுமே குறையாமல் இருப்பதை கண்டு சரணுக்கு ஆச்சர்யமே அதனால் மடைதிறந்த வெள்ளமென ஆர்பரிக்கும் ப்ரீத்தியின் ரணங்களை மெளனமாக உள்வாங்கி கொண்டிருந்தான் சரண்.
அவள் பேச பேச இத்தனை நாட்களாக அவள் மீதுஅவன் கொண்டிருந்த பிம்பம் உடைந்து பெரும் வியப்பே தோன்றியது ஆனால் எப்போது பிரகாசத்தை பழிதீர்க்க அவள் அன்னையின் நிலையில் தன்னை நிறுத்த முயன்றாளோ அப்போதே அன்றைய அவள் நடவடிக்கைகளுக்கான விடை அவனுக்கு தெளிந்த நீரோடையாக புலப்பட்டுவிட்டது. தந்தையை பணிய வைக்க அவள் உபயோகபடுத்தியவை எத்தனை வீரியமிக்க வார்த்தைகள் ஆனால் அதையும் துளிகூட அச்சமோ நடுக்கமோ இல்லாமல் அவள்உதிர்க்க அதைகேட்ட சரண் தான் அமிலம் ஊற்றியது போல துடிதுடித்து போனான்.
அவனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவை, அன்று பிரகாசத்திடம் இருந்து புறப்பட்ட இதே வார்த்தைகள் தானே அவனை முழுதாக உடைத்து கீர்த்தியை நீங்கி செல்ல வைத்தது… இன்று அதையே பிரகாசத்திற்கு எதிராக கையாண்டவளை கண்டவனுக்குஎன்ன பெண் இவள்!! என்ற வலி மிகாமல் இல்லை.
இங்கு அவள் காயம் பெரிது மறுப்பதற்கில்லை ஆனால் பழி தீர்க்க தன்னையே சிதைத்து கொள்வது எத்தகைய கொடுரம்..!!
அதையும் செய்ய துணிந்தவள் எத்தகைய மனநிலையில் இருப்பாள் என்ற எண்ணமே மேலோங்க விழிகளில் எழுந்த வலியுடன்ப்ரீத்தியை சரண் பார்த்திருக்கஅதேநேரம் அலர் அவளை ஓங்கி அறைந்திருந்தாள்.
அலர் அடிப்பாள் என்பதை எதிர்பார்க்காத சரணும் எழிலும் ‘அமுலு‘ என்று பதறியவாறு ப்ரீத்தியை நோக்கி செல்ல அங்கு ஏற்கனவே நிறைமாதத்தை எட்டி கொண்டிருப்பவள் ஒருபொழுதும் தன் மசக்கையின் வலிகளை யாரிடமும் பகிராமல் தன்னுள்ளே சேமித்து இறுகிபோய் கிடந்தவள் இன்று தன் மனக்குமுறல்கள் அனைத்தையும் மொத்தமாக கொட்டி தீர்த்த நிம்மதியில் பல மணிநேரமாக ஓய்வின்றி பேசியதில் சக்தி அனைத்தும் வடிந்த நிலையில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தோய்ந்து போன கால்களுடன் கடினப்பட்டு சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.
சட்டென அலர் அடித்த அடியில் நிலை தடுமாறி அருகே இருந்த மேஜையை பிடிமானமாக கொள்ள ப்ரீத்தி முனைய அதற்குள் அவள் வயிற்றிக்கும் மேசைக்கும் இடையில் கரம் பதித்து அவள் விழாதவாறு காத்திருந்தான் எழில்.
விதிர்விதிர்த்து போன ப்ரீத்தியை தன் கைவளைவில் நிறுத்தியவனின் பார்வை அலர்விழியின் மீது ஆவேசமாக படிந்தது. ஆனால் அலர்எங்கே இதை எல்லாம் கணக்கில் கொண்டாள்..!
இத்தனை நேரமாக பிரகாசமை பழிவாங்க புத்திசாலிதனமாக ப்ரீத்திஎடுத்து கொண்ட முயற்சிகளை ஒருவித ஆச்சர்யத்துடன் கேட்டுகொண்டிருந்த அலருக்கு எப்போது ப்ரீத்தி அவர்கள் இருவருக்கிடையிலான பகையில் சரணை பகடை காயாக உபயோகபடுத்த முயன்றாலோ அப்போதே தன் கட்டுபாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தாள். ப்ரீத்தி எப்போது பிரகாசம் சரண்யாவை கடத்த நினைத்த இடத்திற்கு செல்வேன் என்றாளோ அப்போதே ஆவேசத்துடன் எழிலின் கரத்தை உதறி இருந்தாள்.
ப்ரீத்தியின் சொற்கள்அளித்த அதிர்ச்சியில் எழிலுக்குமே மனம் பதறிபோனது என்றால் அலருக்கோ இவளெல்லாம் பெண் தானா..?? என்ற அருவெறுப்பு படர்ந்தது.., பின்னே பழி வெறியில் எத்தகைய இழுக்கில் வலிய சென்று விழ இருந்திருக்கிறாள், அப்படி என்ன துவேஷம் தன்னை சிதைத்து பெற்றவனை வதைக்க வேண்டிய கட்டாயம் என்ன..???
தன்னால் இயன்ற வரை கட்டுபடுத்தி கொண்டு நின்றவள் அடுத்தடுத்துப்ரீத்தி வெளியிட்ட வார்த்தைகளில் கொதித்து போனாள்.
பின்னேஎத்துனை திணக்கம் இருந்தால் சரணின் வாழ்வில்கீர்த்தியாக உருமாறி நுழைந்து அவன் வாழ்வை விளையாட்டு பொம்மையாக கையிலெடுத்து நாசபடுத்தி இருப்பாள், இவள் வாழ்வை பிரகாசம் சீரழித்ததற்கு தன் தாய் மாமன் பிணையா..? இவள் கொண்ட ஒருதலை காதலுக்கு…என்று எண்ணியவளால்நிச்சயம்அதை காதலாக கொள்ள முடியவில்லை.
பின்னே..!!பருவ வயதில் யார் என்னவென்றே தெரியாத சரண் மீது இவளுக்கு உண்டான ஈர்ப்பிற்கு காதல் என்று பெயர் சூட்டியதோடு அல்லாமல் அக்காதலை தக்கவைத்து கொள்ள வேண்டி உடன்பிறந்தவளின் காதலன் என்று தெரிந்தும் தந்தையின் சூழ்ச்சியால் இருவரும் பிரிந்திருந்த நிலையில் அவளை கடத்திஉருமாறி சரணிடம் சென்று அதன் நீட்சியாக சரணை அனைவர் முன்னிலையிலும் குற்றவாளியாக்கி இருக்கிறாளே என்ன திணக்கம் இருந்திருக்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன் இவள் பிள்ளை சுமந்து சரண் வீட்டின் முன் வந்து நின்றபோது கூடி நின்ற ஊர்ஜனத்தின் பார்வை என்னவோ சரண் இவளை ஏமாற்றி கைகழுவியது போல சரணை தானே கூறு போட்டு கொண்டிருந்தது. எந்த தவறுமே செய்யாமல் தன் மாமனை சிலுவை சுமக்க வைத்திருப்பவளை காண்கையில் அவள் சீற்றம் பன்மடங்காக பெருகியது.
“முட்டாள் முட்டாள் மனுஷியாடி நீ..!! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..? அப்படி என்ன உன்னையே அழிச்சிட்டு அவனை பழிவாங்கனும்னுவெறி..!! உன்னோட வெறிக்கு அவனோட சேர்ந்து எத்தனை பேர் பலியாகி இருக்காங்கனு புரியுதா உனக்கு..??” என்று சீறியவாறே மீண்டும் கை ஒங்க,
அதற்குள் “அமுலு என்ன காரியம் பண்றே??” என்று பதறியவாறே சரண் அவள் கரத்தை தடுத்து பிடிக்க எழிலோ நடுங்கும் கரம்கொண்டு கன்னத்தை பற்றி நின்றப்ரீத்தியின் கரத்தை ஆதரவாக பற்றி கொண்டு அவளை மறைத்தவாறுஉணர்வுகள் துடைத்த முகத்துடன்அலரின் முன் வந்தவன்,
‘இன்னொருமுறை அவமேல கைவச்ச தொலைச்சி கட்டிடுவேன் இறக்குடி கையை‘ என்று அடிக்குரலில் சீறியிருந்தான்.
‘விடுங்க மாமா‘ என்று திமிறியவாறுசரணிடம் இருந்து தன் கரத்தை உருவியவள் மட்டுபடாத ஆவேசத்துடன், “வேண்டாம்மாமா உன் வார்த்தைக்காக தான் நான் இவ்ளோ நேரம் பொறுமையா இருந்தேன் ஆனா இனி நிச்சயமா முடியாது, பொண்ணாடா இவ..??’ என்று ப்ரீத்தியின் மீது வெறுப்பை உமிழ்ந்தவள் எழிலிடம் சுட்டுவிரலை நீட்டி,
” உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை நீ நடுவுல வராத விலகு…, முதல்ல அவளை விடு நான் பார்த்துக்குறேன்” என்று விட்டால் அங்கேயே அவளை பிய்த்து போடும் வெறியோடு அலர் கணவனுக்கு சரியாக நின்றிருந்தாள்.
அங்கு நிலவும் கனமான சூழலில் மனைவி, சரணைவிட ப்ரீத்தி மற்றும் குழந்தையின்நிலை தான் எழிலை பெரும் கவலை கொள்ள வைத்திருந்தது. ஏற்கனவே அவன் பெற்ற அனுபவம் ப்ரீத்தியின் ஒட்டுமொத்த அழுத்தமும் சிதறி கொண்டிருக்கும் நிலையில் எங்கே அது அவளை பாதித்து சிக்கலில் கொண்டுவிடுமோ என்று அவன் தவிக்க அதற்கு நேர்மாறாக அவன் சரிபாதி அவளை அறைந்து அவன் பதட்டத்தை அதிகரித்திருந்தாள்.
அவள் சுட்டுவிரலை இறுக பிடித்தவன், “ஏய் அறிவு கெட்டவளேஅவ இருக்கிற நிலையில” என்று சினந்தவன் தன் கை முஷ்டிகளை இறுக மூடியவாறே,
“என்னடி சம்பந்தம் இல்லை, என்ன சம்பந்தம் இல்லை அவளும் என் குடும்பத்து பொண்ணு நானும் அவ பண்ணின எல்லாமே சரின்னு சொல்லலை தப்பு தான் ..!! அதுக்காக இவளை அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தா..?? என்றவனின் இறுகிய பிடியின் அழுத்தம் சுட்டுவிரலில் அலருக்கு வலி கொடுத்தது.
‘மாமா‘ என்று சிறு சுணக்கத்துடன் அவனை பார்க்க, அப்போது தான் அவனும் அவள் வலியை உணர்ந்து கரத்தை விடுவித்தவாறே “இன்னொருமுறை விரல் நீண்டுச்சி …” என்று சிவந்த விழிகளுடன் எச்சரிக்க,
அதற்குள் இருவருக்கும் இடையில் வந்த சரணோ, “அமுலு என்ன இது..?? இப்படி தான் அண்ணா கிட்ட பேசுறதா..? கொஞ்சம் அமைதியா இரு, சொல்றதை கேளு, நாம பொறுமையா பேசிக்கலாம்” என்றவன் சிசுவை தாங்கி நிற்கும் ப்ரீத்தி மீது பார்வை செலுத்தியவாறே “அவங்க இருக்கிற நிலையில அவசரபடாத”
அதுநேரம் வரை எழிலை முறைத்து கொண்டிருந்தவள் பெரும் ஆத்திரத்துடன் சரண் புறம் திரும்பி, “இன்னும் என்ன மாமா பொறுமை…!! இனியும் பொறுமையா இருக்க இவ எதாவது பாக்கி வச்சி இருக்காளா என்ன …??” என்றவள் எழில்புறம் திரும்பி,
“டேய் இவளை மாதிரி முட்டாள் யாருமே இருக்க மாட்டாங்க”
“இடியட் இடியட் வாழ்க்கை மேல கொஞ்சமாவது பயம் இருக்கா..? அவனை பழி வாங்குறேன்னு இப்போ உன்னோட மொத்த வாழ்க்கையையும் பலி கொடுத்திருக்கியே அப்படி என்ன உனக்கு பழிவெறி..??” என்றதும் எழிலின் கரத்தை உதறிய ப்ரீத்தியும் அவள் முன்னே வந்து,
“ஆமா வெறி பிடிச்சி போயிருக்கு வெறிதான் பிடிச்சி இருக்கு.. அவனை பிச்சி பிச்சி குத்தி குத்திஉயிரோட சாவடிக்காம என் வெறி அடங்காது…, எனக்கு அவனை கொல்லனும் அணுவணுவா கொல்லனும் இதுல யாரை பத்தியும் கவலை இல்லை, எதை பத்தியும் கவலை இல்லை.. இது என் வாழ்க்கை நான் இழந்ததுக்கு எல்லாம் அவனோட கண்ணீரையும் கதறலையும் பதிலா வாங்கி அவனோட ரத்தத்துல குளிக்காம நான் ஓய மாட்டேன்” என்று வெடித்தவள் அலரை நெருங்கி,
என்னை மனுஷியான்னு கேட்கிறியே முதல்ல அவன் மனுஷனான்னு பாரு…, சக மனுஷன்கிட்ட தான் மனிதத்தோட நடந்துக்கணும் அவனை மாதிரி அரக்கனுக்கு அவன் வழியில போய் தான் பதில் கொடுக்கணும். லிசன் அலர்கிட்டத்தட்ட முப்பதுவருஷத்துக்கு முன்ன எப்படி இருந்தானோ அதைவிட கொடூரமா மாறி இருக்கான்… அவனை வதம் செய்ய எனக்கு நான் தேர்ந்தெடுத்த எந்த வழியுமேதப்பு இல்லை.. அதுக்கு நடுவுல யார் வரா..? யார் காயபடறா..?? எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை”
‘என்ன பேசற..’ என்று சீற்றத்தோடு முன்னேறிய அலரின் கரத்தை தடுத்து தன்னோடு நிறுத்திகொண்டான் சரண்.
‘வேறென்ன பேச..!! இதோபார் அலர் அவனெல்லாம்மனுஷனா இருந்திருந்தா இத்தனை வருஷத்துல திருந்தி இருக்கணும் ஆனா அவன் இப்பவும் ரெண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவா ஆன பிறகும் தன் பெண்ணோட வயசுல இருக்க பெண்களோட மானத்தோட விளையாடுறான்னா அவன்கிட்டஉட்காந்து சமரசம் பேச சொல்றியா..?? இல்லை எங்களுக்கு செஞ்ச அநீதிக்கு அவன்கிட்ட வாழ்க்கை பிச்சை கேட்க சொல்றியா..??’ என்று அடங்காத ஆவேசத்துடன் ப்ரீத்தி.
அதை கண்ட எழில், “ப்ரீத்தி காம் டவுன் உணர்ச்சி வசப்படாத..??” என்றவன் அலரை சுட்டிக்காட்டி,
‘சரண் முதல்ல இவளை இங்கிருந்து கூட்டிட்டு போ..!!‘ எனும் முன்னமே,
“ஏய் லூசு ஏதாவது அர்த்தம் புரிஞ்சி பேசு…, எவனுக்காகவோ தெரிஞ்சே போய் நீ சாக்கடையில விழுவியா..??” என்ற அலரின் உரத்த குரலில்விலுக்கென நிமிர்ந்த ப்ரீத்தி ஒற்றை புருவத்தை மேலேற்றியவாறு,
“ஏன்..?? ஏன் போககூடாது ஏன்..?” என்று ஆங்காரமாக கர்ஜித்தவள் இதையே தான் அவன் அன்னைக்கு சரண்யாக்கு சொன்னான், அப்போ அதோட வார்த்தையோட அர்த்தத்தை புரியாமயாஅவன் சொன்னான். சொன்ன வார்த்தையோட அர்த்தம் புரிஞ்சவனுக்கு அதோட வலியும் என்னன்னு புரிய வேண்டாம்..??” என்றவளின் முகம் தீப்பிழம்பை ஜொலிக்க, நிமிர்ந்த பார்வையுடன் உரத்த குரலில்,
“அதான் சொன்னேன் சரண்கிட்ட அவனா கொண்டு போய் விட்டா தன் பொண்ணோட காதலன்கூட இருக்கா என்ற நிம்மதி கிடைக்கும் முடியாதுன்னு சொன்னா..?? எங்க..?? யாரு..?? எவன்னு தெரியாதவன் கூட எது பெட்டர்ன்னு அவனையே யோசிக்க சொன்னேன் கடைசியா ஒத்துகிட்டான், இதுல என்ன தப்பு..”
” சரி ஒத்துக்குறேன் அவனை பழிவாங்குறது உன்னோட உரிமை..!! உனக்கு அதுக்கு எல்லா அதிகாரமும் இருக்கு என்று அழுத்தமாக பார்த்தவள்ஆனா மாமா..?? அவரோட வாழ்க்கையில விளையாடுற உரிமையை உனக்கு யார் கொடுத்தா…??? அன்னைக்கு நீ கீர்த்தியா இப்படி வந்து நிற்கும் போது கூடி இருந்து ஊர் மொத்தமும்… என்று தொடங்கியவள் ப்ச் விடுஅவங்களாவது மூணாவது மனுஷங்க ஆனா நானும் அப்பாவும் தானே அப்படி நெனச்சோம் உன்னால அவர்பட்ட அசிங்கம் இல்லைன்னு ஆகிடுமா..?? என்று ஆக்ரோஷமாக இறைந்திட அவளை தடுத்த சரண் அழைத்து வந்து தூர அமர்த்திவிட்டு மீண்டும் ப்ரீத்தியிடம் சென்றான்.
பிரகசமால் அவளும் அவள் தாயும் அடைந்த ரணத்தையும் அவள்கடந்து வந்த முட்பாதையை எத்தனை வேதனையுடனும் வலியுடனும் பகிர்ந்தவளுக்கு வாழ்க்கை அத்தனை எளிதாகபோய் விட்டதா..?? தன் வாழ்வை திருத்தி ஆச்சர்யகுறியாக மாற்றி காட்டுவேன்என்று சூளுரைத்தவள் இன்று அதற்கு நேர்மாறாக வாழ்வை கேள்விகுறியாக்கி வைத்திருப்பதில் எல்லையில்லா ஆவேசமும் வருத்தமும் ஒரே சேர பிறந்தது சரணுக்கு.
வாழ்த்து காட்டுவது தான் வாழ்வே அன்றி வீழ்ந்து வதைத்து அழிந்து போவது அன்று..!!
பிரகாசத்தின் மீதான அவளின் வன்மத்திற்கு மூவரின் வாழ்வை அல்லவா பலி கொடுத்திருக்கிறாள்.
தன் வாழ்வை ப்ரீத்தி சிதைப்பதையே பொறுக்க முடியாதவனுக்குஎப்படி தங்களின் வாழ்வையும் சிதைப்பதை ஏற்று கொள்ள முடியும்..? தன் ஆவேசத்தை கட்டுபடுத்தியவனாக முடிந்த வரை மென்மையான குரலில், “ப்ரீத்தி என்ன இது..?? எதுக்காக இவ்வளவு கொடூரம், அவனை விடுங்கஇதனால உங்கவாழ்க்கையும் பாதிக்கும்னுபுரியலையா..??” என்றுகேட்க,
“சரண் எல்லாரும் உங்களை மாதிரிகிடையாது..!!எங்க அம்மாவை பேசும்போது அவனுக்கு ஏன் அவன் அம்மாவோட நியாபகம் வரலை, சரண்யாவை கடத்தி மும்பைக்கு கொண்டு போனப்போ ஏன் அவனுக்கு கீர்த்தியோட நியாபகம் வரலை, அடுத்த வீட்டுபொண்ணுங்களை என்னன்னு நெனச்சான்..?? இவன் மட்டுமில்லை இவனை மாதிரி பலர் இருக்காங்க, இவனுக்கு நான் கொடுக்குற தண்டனைபொண்ணுங்களை போக பொருளா நினைக்கிற ஒவ்வொரு ஆம்பளைங்களுக்கும் தனக்கும் மகளா, மனைவியா, தங்கையா, தாயா ஒரு பெண் இருக்கா இன்னைக்கு நான் இதை வேற பொண்ணுக்கு செய்யும்போது நாளை என்னை சார்ந்த பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்பட கூடும் என்று எண்ணமும் பயமும் அவனுக்கு வரணும்.., அடுத்தவன் வீட்டு பொண்ணுன்னா இளக்காரமா..?? எப்படினாலும் வளைக்க நினைப்பாங்களா..?? ஒரு பார்வை, ஒரு சொல் சொல்லும் முன்ன அவன் வீட்டு பெண்களோட நியாபகம் வர வேண்டாம்…??” என்று கேட்க..,
“திரும்ப முட்டாள்னு ப்ரூவ் பண்ற ப்ரீத்தி உங்க மூணு பேரோட வாழ்க்கையைபலிகொடுத்தா அவனை மாதிரி ஜென்மம்திருந்தும்னு நினைக்கிறியா..??” என்று அலர் கேட்க,
“இதோபார் இது நான் அவனுக்கு எதிரா நடத்துற யுத்தம் இதுல அவனை தோற்கடிக்க அழிக்க நான் எடுக்குற எந்த ஆயுதமும் என்னை பொறுத்த வரை சரியே, நான் கீர்த்தியா மாறி என்னையே அவனை அழிக்கும் ஆயுதமாக்கினதுல இருந்து இப்போ வரை எல்லாமே சரி” என்று நெஞ்சுரத்துடன் கூற,
அது நேரம் வரை அவள் உடல்நலனே பிரதானமாகி போயிருந்த எழிலுக்கே அவள் பதில் அதிருப்தி அளிக்க,
“இல்லை ப்ரீத்தி இது தப்பு..!! கீர்த்தி உன்கூட பிறந்தவ அவஉனக்கு என்ன பாவம் பண்ணினா..??பிரகாசம் அன்னைக்கு உங்க அம்மாவை தேடி வந்து அவராதானே உங்க ரெண்டு பேரில் கீர்த்தியை தூக்கிட்டு வந்தாருஉன்னோட வாழ்க்கையை எங்கயுமே அவ தட்டி பறிக்கலையே…?? ஆனா இங்க நீ கீர்த்தியோட பேரை வச்சி அவ வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்து இருக்க, பாவம்அவ ஏற்கனவே ரொம்ப மனசு ஒடஞ்சி போயிருந்தா சரண் அவ வாழ்க்கையில வந்த பிறகுதான் அவ முகத்துல பழைய சந்தோஷத்தை நான் பார்த்தேன். ஆனா அதை நிலைக்க விடாம ரெண்டு பேரையும் ஏன்..?? எதனால..?? எதற்கு..?? ன்னு கூட தெரியாம பிரிச்சு வச்சது எந்த விதத்துல நியாயம்னு நினைக்கிற…?? அவனோட பாவங்களை பட்டியல் போட்ட உனக்கு நீ பண்ணினது இருக்கிறதுலேயே பெரிய பாவம்னு தெரியலையா..??? என்றான்.
எழிலின் விழிகளை ஊடுருவி நின்ற ப்ரீத்தியிடம் சில நொடிகளுக்கு கனத்த மௌனம் பின் சரணை பார்த்தவாறே மெல்லிய நடுங்கும் குரலில், “இல்லை மாமா எனக்கு அப்போ இருந்த கோபத்துல எதுவும் பெருசா ஆராய தெரியலை , ஏன்னா இவரை முதல்ல பார்த்தது நான், ஆசைப்பட்டது நான், இத்தனை வருஷமா இவரை மட்டுமே மனசுல சுமக்குரவ நான் ஆனா அவ இப்போ வந்தவதானே..??? சொல்லபோனா என்னோட வாழ்க்கையை அவதான் தட்டி பறிச்சா என்னோட தலை எழுத்து சரியா இல்லாம போனதால என்னால அதுக்கப்புறம் இவரை பார்க்க முடியலை இவர்கூட என்னோட வாழ்க்கையை எப்படி எல்லாம் அமைக்கனும்னு கனவு கண்டிருந்தேன் மாமா அது என்னோட தப்பா சொல்லுங்க…?? என்று உடைந்த குரலில் கேட்க,
“ஏய் முட்டாள் உன்னோட ஒரு தலைகாதலுக்கு மாமா எப்படி பொறுப்பாவாரு…?? இப்படி ஒருத்தி தன்னை இத்தனை வருஷமா நெனச்சிட்டு இருக்கான்னுகூட அவருக்கு தெரியாதே..”என்று பேசிக்கொண்டே சென்றவள் எழிலின் உஷ்ண பார்வையில் தான் பேச்சை நிறுத்தினாள்.
“ப்ரீத்தி கொஞ்சம் புரிஞ்சிக்கம்மா அவங்க ரெண்டு பேரும் காதலிக்கறாங்க சரணுக்கு நீ யார்னுகூட தெரியாதே..? அப்புறம் எப்படி நீ அவன் கீர்த்தியை காதலிச்சதையும் பெண் பார்க்க போனதையும்தப்பு சொல்லுவ..!! என்று ப்ரீத்தி அருகே அமர்ந்து அவள் தலை கோதியவன்,
“எங்களுக்கு தான் இப்படி நீ ஒருத்தி இருக்கிறது தெரியாது ஆனா உனக்கு எங்களை தெரிஞ்சிருக்கு அப்புறமும்எங்கள்ள யாரையாவது ஒருத்தரை தேடி வரணும்னு கூடவா உனக்கு தோணலை.. வந்திருந்தா உன்னை இந்த நிலைக்கு போக விட்டிருக்க மாட்டோமே” என்று கசந்த குரலில் கூறியவன்,
“ஏன்மா நீ ஆசை பட்ட வாழ்க்கை என்ன? இப்போ அதை எந்த நிலையில் கொண்டு வந்துநிறுத்தி இருக்கன்னு உனக்குபுரியுதா..??” என்று கேட்க கடந்த ஒருமாத காலத்தில் தன் தவறுகளை உணர்ந்திருந்தவளுக்கு குற்றஉணர்வு மேலோங்க பதிலளிக்க முடியாமல் மௌனத்தை அவனுக்கு பரிசளித்தவளின் விழிகளிலும் மெல்லிய நீர் படலம்..!!
“சரி சரண் கீர்த்தியை கூட விடு ஏதோ ஒரு விதத்துலஉன்னோட கட்டுகடங்காத, கண்மூடிதனான பழி உணர்வுக்கு இடையில காயபட்டாங்கன்னு வச்சுகிட்டாலும்..”, என்று வலியோடு கண்களை இறுகமூடி திறந்தவன்,
“இந்த சிசு என்னம்மா பாவம் பண்ணினது இதுக்கு ஏன் இந்த தண்டனை…!!” என்று கேட்க அதுநேரம் வரை அவள் கொண்டிருந்த திடம் மொத்தமும் வடிய எழிலன் கேள்விக்கு பதிலின்றி அவள் தலை தழைந்தது.
“சொல்லு கேட்குறாங்க இல்லை.. இவ்ளோ நேரம் பேசின இதுக்கு பதில் சொல்ல முடியலை இல்ல” என்று அலர் மீண்டும் குரல் கொடுக்க,
அவளை ஏறிட்டு பார்த்த எழில் “உன்னை நான் அமைதியா இருக்க சொன்னேன்” என்றுஅழுத்தமாக கூற,
அவன் கட்டளைக்கு பணிந்தால் அது அலர்விழி அல்லவே..!!
எழிலை முறைத்தவள், “நீ என்ன இவளுக்கு ஓவரா சப்போர்ட் பண்ற..?? அதான் தப்புன்னு உனக்கே தெரியுது அப்புறம் என்ன மயிலே மயிலேன்னு அவகிட்ட கெஞ்சிட்டு இருக்க நீ விடு மாமா இவளை எப்படி பார்க்கனும்னு எனக்கு தெரியும்” என்று குறையாத ஆவேசத்துடன் கூற,
“ம்ப்ச் உள்ள சாப்பிட எதாவது இருக்கா பாரு இல்லை சமைச்சி எடுத்துட்டு வா” என்று களைப்பில் சோர்ந்திருந்த ப்ரீத்தியை பார்த்தவாறே கூற, அத்தனை கோபத்திலும் அவன் உணர்வுகளை அவதானித்தவள் கணவனின் கட்டளையை ஏற்று சமையலறைக்குள் சென்றிருந்தாள்.
அவள் செல்லவுமே இருகரங்களாலும் முழங்கால்களை கட்டிக்கொண்டு தலை கவிழ்ந்திருந்த ப்ரீத்தியிடம் தோன்றி இருந்த மெல்லிய விசும்பல் அவன் செவி தீண்ட இனி ப்ரீத்தி விளக்கம் அளிக்க வேண்டியது சரணுக்கு மட்டுமே என்பதால் அவர்களுக்கு தனிமை அளித்த அகனெழிலன் தானும் அகன்று உள்ளே சென்றான்.