“தந்தையை பழி வாங்க போவதாக கூறி சென்றவள் குழந்தை வேண்டும்” என்று வந்து நின்றதில் அதிர்ந்து போன பார்வதி அவரால் இயன்றவரை நிதர்சனத்தை எடுத்து கூறி ப்ரீத்தியை சமாதானபடுத்த முயன்றார். ஆனால் அன்று அவளிருந்த ஆவேசத்தில், ஆக்ரோஷத்தில், அகங்காரத்தில்அவர் கூறியதை அலட்சியபடுத்தி எதையும் காது கொடுத்து கேட்காமல் தன் முடிவில் இருந்து பின் வாங்காமல் எத்தனை பிடிவாதம் பிடித்து தான் நினைத்ததை ப்ரீத்தி சாதித்து இருந்தாள்.
சொல்லபோனால் அன்று அவள் இருந்த மனநிலையில் சரண் மறுக்க மறுக்க ப்ரீத்தியினுள் ஒரு வித வெறியே கிளம்பியது. அதனால் பார்வதியிடம் முதலில் கெஞ்சலில் தொடங்கிய ப்ரீத்தி இறுதியில் மிஞ்சிட பார்வதியும் வேறு வழி இன்றி அவளுக்கு சம்மதித்து இருந்தார்.
இப்போது அதை நினைத்து பார்த்தவளுக்கு தான் எத்தகைய முட்டாள்தனம் செய்திருக்கிறோம். மண் குதிரை என்று தெரிந்தும் ஆற்றில் இறங்கிய தன் அறிவீனத்தை நிந்தித்து கலங்கிய அதேநேரம் அவள் தாடையை பற்றி நிமிர்த்திய அலர்,
“பைத்தியக்காரி பைத்தியக்காரி கீர்த்தியை லவ் பண்ற மாமா குழந்தையை வச்சு உன்கூட வாழுவாருன்னு எப்படி நம்புன, அடிமுட்டாள் உன்னோட எண்ணம் சுத்த முட்டாள்தனமா உனக்கே தெரியலை..??” என்று கேட்க
“தெரியலை, தெரியலை, தெரியலை” என்று அலரின் கரத்தை தட்டி விட்டவள் எனக்கு தெரியல, எதுவுமே தெரியலை சரி, தப்பு, நியாயம், அநியாயம் இப்படி எதுவுமே தெரியலை அப்போ அவனை துடிக்க வைக்கணும், மத்த பொண்ணுங்க வாழ்க்கையை பத்தி நெனச்சி பார்க்காதவனுக்கு அவன் பொண்ணோட வாழ்க்கையை குழி தோண்டி புதைச்சு அவனுக்கு பாடம் கத்து கொடுக்குற வெறியில இருந்த எனக்கு எதுவுமே தப்பா தெரியலை போதுமா என்று ஆவேசத்துடன் முகம் பொத்தி அழ தொடங்க,
சில நொடிகள் அவளை அழவிட்ட அலர், “சரி கிளம்பு” என்று எழுப்பி நிறுத்த,
எங்க..?? என்றான் எழில்
‘ஸ்டேஷனுக்கு தான்..’
‘இல்லை, இப்போ அவ இருக்கிற நிலையில அவளை மொதல்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகணும்’