இத்தனை நாட்களாக தன்னை முன்னிறுத்தி இருவருக்கிடையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த மோதல் இப்போது சரண் பிரச்சனையால் இருவருமே நேரடியாக மோதிக்கொள்வதை கண்டு அதிர்ந்த அலர் எழிலை ஓரமாக அழைத்து சென்று, “ப்ளீஸ் மாமா என்ன இது..?? எனக்கு பயமா இருக்கு அப்பா தான் புரியாம ரியாக்ட் பண்றாருன்னா நீயாவதுகொஞ்சம் அமைதியா இரு” என்று மன்றாட,
“அவருக்கு எல்லாம் புரியும் நீ முதல்ல புரியாம பேசுறதை நிறுத்து, அவ கீர்த்தியா இருந்தாலும் சரி ப்ரீத்தியா இருந்தாலும் சரி அது அவருக்கு பிரச்சனை கிடையாது அவ ஒரு கர்ப்பிணி அவளை நீயும் உன் மாமனும் அடிச்சது நிஜம்..!! இது அவருக்கு தெரிஞ்சா உன்னை அடிக்கவும் தயங்க மாட்டாரு உன்னை காப்பாத்த தான் இங்க இல்லாதவன் மேல மொத்த பழியும் போட்டேன். அவர் என்னடான்னா தம்பி பண்ணதுக்கு அக்காவை அடிக்க போறாரு.., மாமி என்னடி தப்பு பண்ணாங்க அவரை தடுக்க எனக்கும் வேற வழி இல்லை நீ அதை புரிஞ்சிக்க”
“அதுக்கு அவ கீர்த்தி இல்லை ப்ரீத்தின்னு சொல்லி பிரச்சனையை முடிக்க வேண்டியது தானே..!!”
“ஏய் அறிவுகெட்டவளே நீ பண்ணின வேலையில ப்ரீத்தி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கா பாரு” என்று அங்கு கண்ணீரும் வற்றிய நிலையில் நிலையற்ற பார்வையுடன் வாழ்க்கை குறித்த அதீத அச்சத்துடன் பித்துபிடித்த நிலையில் இருப்பவளை சுட்டி காட்டிய எழில் தொடர்ந்து,
“உங்க சரி தப்பு, நியாய அநியாயத்தை எல்லாம் மூட்டை கட்டி ஒரு ஓரமா வச்சிட்டு மனிதாபிமானத்தோட அந்த பொண்ணை பாருங்க, அவளை விட அவளுக்குள்ள இருக்க உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். எந்த தப்புமே பண்ணாத அது எந்த ஆபத்தும் இல்லாம நல்ல விதமா ஜனிக்கனும்அதுக்கு அவளோட மனநிலை சமமா இருக்கணும், நீ போலிஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போவேன்னு சொன்னதுல அரண்டு போயிருக்கா அது அவ மன நிலையும் உடல் நிலையும் ரொம்ப பாதிக்கும் அதுல ரெண்டு உயிருக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்னடி பண்ணுவீங்க..?? என்று அடிக்குரலில் சீறியவன்,
“உன் மாமன் கீர்த்தியை தேடி போயிருக்கான் எப்படியும் அவளை கூட்டிட்டு வந்துடுவான் ஆனா இத்தனை நாள் அவங்க பட்டது போதாதுன்னு இப்போ அவங்க வாழ்க்கை இரண்டு உயிர்களோட மரணத்துல ஆரம்பிக்கனும்னு நெனைக்கிறியா..??”
“மாமா என்ன பேசுற..?” என்று பதறி அவன் வாயை பொத்தினாள். பின்னே ப்ரீத்தியின் தவறுக்கு தண்டிக்க நினைக்கிறாளே தவிர எழில் கூறுவது போன்ற அசம்பாவிதத்தை அவளுமே வரவேற்க தயாராக இல்லை.
“இல்லை மாமா சத்தியமா அப்படி எல்லாம் இல்லை, நான் போய் அப்படி நினைப்பேனா..?? எனக்கும் குழந்தை மேல அக்கறை இருக்கு” என்று துளிர்த்த கண்ணீரை துடைக்கவும்..,
“அப்போ கொஞ்சம் அமைதியா இரு..!! அவளோட தப்புக்கான தண்டனையை ஆண்டவன் ஏற்கனவே நினைச்சு பார்க்கமுடியாதளவுக்கு மோசமா கொடுத்துட்டான்உங்க கோர்ட் ஒன்னும் அதைவிட பெருசா கொடுத்திட போறது இல்லை.., ப்ரீத்தி செய்த தப்புக்கு தண்டிக்கனும்னு நெனச்சா குழந்தை பிறந்த அப்புறம் எது ஒன்னும் லீகலா மூவ் பண்ணு நான் நிச்சயமா உன்னை தடுக்க மாட்டேன்” என்று வாக்கு கொடுக்க அவன் வாதத்தில் இருந்த நியாயத்திற்கு கட்டுப்பட்டு “ஓகே மாமா, ஆனா அப்பா உன்னை தப்பா புரிஞ்சிகிட்டரே” என்று கலக்கத்தோடு கூற..,
“இல்லைன்னா மட்டும் சரியாவா புரிஞ்சிக்க போறாரு..!! என்று அலட்சியமாக கூறியவனுக்கும் தெரிய வாய்ப்பில்லை இன்றைய நாதனுடனான அவனது பிணக்கு தான் பின்னாளில் பெரும் பூகம்பமாக வெடிக்க போகிறது என்று..!!! எதையும் அறியாதவன் போடி போய் இப்போ எதுக்கு வந்திருக்கார்னு கேளு” என்றான்.
“நானா..??” என்றவள் நாதனின் உக்கிரத்தை கண்டு அவரிடம் போக அஞ்சி மறுத்தாள்.
“பின்னே நானா…!!! நான் கேட்டு உங்கப்பா சொல்லிட்டாலும்” என்று பெருமூச்செறிந்தவன்
“போ அமுலு நீயே போய் கேளு, என்ன வேலையா வந்தாரோ அதை பார்க்கட்டும் , அவர் இங்க இருக்கிற வரை பிரச்சனை தீராது இன்னும் பெருசாகும்” எனவும் அலர் தந்தையிடம் சென்றாள்.
மகள் கெஞ்சலுடன் எழிலை அழைத்து கொண்டு செல்வதை வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தவர், “ஊர் மேய போயிருக்க அந்த பொறுக்கி வரட்டும்டி அப்போ இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்” என்று எச்சரித்தவர் நாற்காலியில் அமர்ந்து தன்னை கட்டுபடுத்த போராடிட அதேநேரம் அவர்பார்வையில் எழிலும் அலரும் விழுந்தனர்.
மகளிடம் கடுமையாக எழில் பேசுவதையும் மகள் கண் கலங்குவதையும் கண்டநாதனுக்கு மேலும் காந்தியது, எழில் மீதான அவரது வெறுப்பு இருமடங்காகியது.
மகள் செல்லவுமே எழிலை நெருங்கிய வளர்மதி, “தம்பி அவர் என்னை அடிக்கிறது என்ன புதுசா..?? எப்போ கீர்த்தி மெட்ராசுக்கு சரண்கிட்ட போனாளோ அப்போ இருந்தேஇது வாடிக்கை தான்…., அவர் தம்பி பொண்ணு தான் என் தம்பியை தேடி போனா அவன்மேல தப்பு இல்லைன்னு சொன்னாலும் அவர் ஏத்துக்கலை இப்போ அவன் காட்டுத்தனமா அடிச்சிருக்கப்போ அதோட பலன் நான் அனுபவிக்காம இருந்திட முடியுமா..??” என்று முந்தானையால் கண்ணீரை ஒற்றி எடுத்தவாறே கேட்கவும்..,
“இல்லை மாமி நீங்க நினைக்கிற மாதிரி சரண் மேல தப்பு இல்லை”
“அது எனக்கும் தெரியும் தம்பி, என் தம்பி எந்த அளவுக்கு பெண்களை மதிக்கிறவன்னும் காரணம் இல்லாம கை நீட்ட மாட்டான்னும் தெரியும். அப்படி தான் நான் அவனை வளர்த்திருக்கேன் அதே மாதிரி அமுலுவை நீங்க எப்படி பார்த்துபீங்கன்னு எனக்கு தெரியும் அவருக்கு போட்டியா அவளை அடிப்பேன்னு சொல்லி எனக்காக தேவை இல்லாம நீங்க ஏன் தம்பி கெட்ட பேரு வாங்கணும், அப்படி எதுவும் பண்ணிடாதிங்க என் பெண்ணை அடிச்சாலும் எனக்கு வலிக்கும், எதையும் பெருசு படுத்தாதீங்க, விடுங்க” என்றவர் அதுநேரம் வரை கண்ணில் படாத அன்னையை தேடி அறைக்கு சென்றார்.
“அப்பா கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்று அலர் ஆரம்பித்த போதே அவளை தடுத்த நாதன்,
“எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை அந்த நாய் என்று ஆரம்பித்தவர் உன் மாமனுக்கு ஃபோனை போடு நான் அவன்கிட்டே பேசிக்கிறேன்”
‘ப்பா‘ என்று தவிப்புடன் அலர் பார்க்க,
“அப்போ நீயும் சொல் பேச்சு கேட்க மாட்ட அப்படிதானே..???” என்று விண்டு போன மனதுடன் கேட்கவும் “இல்லல்லப்பா இதோ பண்றேன்” என்றவள் உடனே எழிலிடம் விரைந்து விடயத்தை கூறி சரணுக்கு அழைக்க செய்திருந்தாள்.
பின் தீபிகாவை தேடி சென்றவள், “சித்தி நீங்களாவது சொல்லுங்க எதுக்கு காலையிலயே அப்பாவை கூட்டிட்டு வந்திருக்கீங்க, ஏதாவது முக்கியமான விஷயமா”
மகளை தன் நெஞ்சில் சாய்த்து அவள் தலையை ஆதூரமாக வருடிக்கொண்டிருந்த தீபிகா தொண்டையை செருமி, “கீர்த்திக்கு ஒன்பது தொடங்கிடுச்சி, இந்த மாசத்துல வேற நல்ல நாள் இல்லை அதான் நாளைக்கே வளைகாப்பு செய்து கூட்டிட்டு போறதை பத்தி பேச வந்தோம் ஆனா இனியும் என் பொண்ணை இங்க விட்டு வைக்க எனக்கு பயமா இருக்கு அலர்”
பெறாத மகளுக்கான அவரது கண்ணீரை வேதனையுடன் பார்த்த அலர், “பயப்படாதீங்க சித்தி எல்லாமே சரி ஆகும், நம்பிக்கையோட இருங்க” என்றவள் எழிலிடம் அதை தெரிவிக்க, ஏழாவது முறையாக சரணுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த எழில் அவன் அழைப்பை ஏற்கவும்,
“ஹலோ சரண்”
“சொல்லுங்கண்ணா”
“எங்க இருக்க..??”
“கீர்த்தியை தேடிட்டு இருக்கேண்ணா”
“சரி நான் சொல்றதை நல்லா காது கொடுத்து கேளு, இங்க உங்க மாமா வந்திருக்கார் உன்னை உடனே பார்க்கனும்னு சொல்றார்”
திடீரென மாமா எனவும் அலைச்சலில் இருந்தவனுக்கு யார் என்று பிடிபடாமல் போக, “எந்த மாமா..??” என்றான்.
“உன் பெரிய மாமாடா..!!”
‘என்னது..??’ என்றவனின் குரலில் அப்பட்டமான அதிர்வு. பின்னே தன் வீட்டிற்கு வந்திருக்கும் நாதன் தான் இல்லாத நிலையில் அங்கு நிலவும் சூழலில் அன்னையை ஏதேனும் பேசி விடுவாரோ என்ற அச்சத்தால் விளைந்த அதிர்வு தான் அது..!!
“எதுக்குண்ணா..??”
“கீர்த்திக்கு நாளைக்கு வளைகாப்பு செய்யறதை பத்தி பேச வந்தவரு இங்க நீ உன் மனைவி கீர்த்தியை அடிச்சிட்டு போனதுல கோபமா இருக்கார் உன்னை உடனே வர சொல்றார்” என்றான் நாதனை பார்த்தவாறு
“என்னண்ணா பேசுறிங்க யாருக்கு யார் பொண்டாட்டி, என்ன நடந்தா எனக்கென்ன என்று அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டவன், ண்ணா எனக்கு என் கீர்த்தி முக்கியம் நான் எங்கயும் வர முடியாது”
‘சரண் நான் சொல்றதை நல்லா புரிஞ்சிக்கோ’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன்,
“இங்க தீபிகா மாமி உன்னோட பெரிய மாமாவை கூட்டிட்டு வந்திருக்காங்க” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே எழிலிடம் இருந்து கைபேசியை பறித்த நாதன்,
“டேய் ****** மனுஷனாடா நீ! என் பொண்ணை மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சி வச்சி இருக்க” என்று ஆரம்பித்தவர் மேலும் சில நல்ல வார்த்தைகளை கொண்டு சரணை அர்ச்சிக்க, சரவணனை தேடி அலைந்து கொண்டிருப்பவனுக்கு நாதனின் பேச்சு எரிச்சலை கிளப்ப அடுத்த நொடி பதிலளிக்காமல் அழைப்பை துண்டித்து இருந்தான்.
அதில் நாதனின் ரத்த அழுத்தம் பல மடங்கு எகிறிட, மீண்டும் அதே எண்ணுக்கு விடாமல் அழைக்க ஒரு கட்டத்தில் எடுத்த சரணிடம், “எங்க இருக்க நீ முதல்ல வீட்டுக்கு வா நாளைக்கு வளைகாப்பு இரு..” என்றவரை இடையிட்ட சரண்,
“மாமா நான் அவசர வேலையா வெளியே வந்திருக்கேன் வந்து உங்க கிட்ட பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்து தன் வேகத்தை கூட்ட,
“டேய்.. டேய் சரண்…” என்று இவர் கத்திகொண்டிருக்க ‘அதான் அவன் வச்சிட்டானே இன்னும் எதுக்கு கத்திட்டு இருக்கீங்க‘ என்றவாறே அவரிடம் இருந்து கைபேசியை பெற்ற எழில் அணைத்து பாக்கெட்டில் போட, அங்கு கலைவாணியுடன் வளர்மதி வந்து சேர்ந்திருந்தார்.
இரவு நால்வரும் பேசிக்கொண்டிருக்கும்போது கண்விழித்த கலைவாணிக்கு முதலில் நால்வரும் உறங்காமல் விழித்திருப்பது ஏன் என்று புரியாமல் நிலை கதவில் சாய்ந்தபடி அவர்களை பார்க்க அவரை முதலில் கண்டு கொண்ட சரண் அவரை அழைத்து அறைக்கு சென்றவன் ப்ரீத்தியிடம் தங்களின் பேச்சை அவர் கேட்காமல் இருப்பது தான் அவர் உடல் நலனிற்கு நன்மை எனக்கூறி அவர்க்கு மயக்க மருந்தை செலுத்தி இருந்தான்.
அதன் விளைவாக விடிந்த பிறகும் மயக்க மருந்து மற்றும் மூப்பின் காரணமாக உறங்கி கொண்டிருந்தவர் வளர்மதி வந்து அழைத்த பின் தான் வெளியில் வந்தார் அங்கு மருமகளின் நிலைக்கண்டு துடித்து போனவர் அவளை கட்டிக்கொண்டு அழ தொடங்கி இருந்தார்.
********************************************
“உன் தம்பிக்கு சேர்க்கை சரி இல்லைடி கொஞ்சமும் மட்டுமரியாதை ஒன்னும் இல்லாம நான் பேசிட்டு இருக்கும் போதே கட் பண்றான்” என்று வளரிடம் சீறியவரின் பார்வை எழிலை கூறு போட்டு கொண்டிருந்தது.
‘அப்பா மாமாவே ஏதோ அவசரத்துல இருக்கிறதால கட் பண்ணி இருப்பாரு விடுங்க அதுக்கு எதுக்கு சம்பந்தம் இல்லாம’ என்று கேட்க,
“நீ வாயை மூடு உனக்கு என்ன தெரியும்..??” என்று மகளிடம் சிடுசிடுத்தவர் வளரிடம்,
“என்னடி வளர்த்து வச்சிருக்கீங்க பெண்ணோட அருமை தெரியாம..?பாரு அருமை பெருமையா பெண்ணை வளர்த்து இவனுங்க கிட்ட கொடுத்தா கொரங்கு கையில கிடைச்ச பூமாலை மாதிரி பிச்சி பிச்சி போடுறானுங்க ச்சை பொண்டாட்டியை அடிக்கிறது பிடிச்சி தள்ளிவிடறது, இஷ்டத்துக்கு பேசுறதுன்னு என்றவரின் விழிகளில் மகள்களின் வாழ்வு குறித்த கவலையும் அச்சமும் போட்டி போட்டது.
“என்ன இதுக்கா இவனுங்களுக்கு பெண்ணை கட்டி கொடுத்தோம், கொஞ்சமும் மரியாதை தெரியாதவனுங்க” என்று எழிலை பார்த்தவாறு கேட்க,
“அப்படி நான் பண்ற கொடுமையை தாங்க முடியாட்டி அவர் பெண்ணை கூட்டிட்டு போக சொல்லுங்க மாமி அதைவிட்டுட்டு எதுக்கு தேவை இல்லாம ஜாடை பேசணும்” என்று நாதனுக்கு சளைக்காமல் பேச,
‘தம்பி என்ன இது நீங்களும் அவருக்கு சரியா பேசிட்டு..‘ என்ற தாயை முந்திய அலர்.
‘அப்போ நான் உனக்கு வேண்டாமா மாமா..?? நிஜமாவே என்னை போக சொல்றியா..?? ஏன் இப்படி பேசுற’ என்று பரிதவிப்புடன் கேட்க…
“அடியேய் ! நீ வேற கொஞ்சம் அமைதியா இருடி, உன்னை அனுப்புறதுக்காக பேசலை ப்ரீத்தியை அவர் கூட அனுப்புறதுக்காக பேசிட்டு இருக்கேன்” என்று அவளை தோளோடு சேர்த்து அணைத்து தன்னருகே நிறுத்தினான்.
நாதனை நெருங்கிய கலைவாணி அவரிடம் இருக்கரங்களையும் கூப்பி, “மாப்பிள்ளை என் பையன் பண்ணின தப்புக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், நேத்து எனக்கு உடம்புக்கு முடியலை அதனால என்ன நடந்ததுன்னு தெரியலை எதுவா இருந்தாலும் அவன் கை நீட்டி அடிச்சது தப்பு, நீங்க என்ன சொல்றீங்களோ அதன்படியே செஞ்சிக்கலாம்”
அவர் கரத்தை கீழே இறக்கிய நாதன், “ப்ச் அத்தை அவன் பண்ணினதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க, எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு, உங்களுக்கு இப்போ பரவாயில்லயா..??” என்று நலன் விசாரிக்க,
“அது இருக்கட்டும் மாப்பிள்ளை நீங்க ஏன் நின்னுட்டு இருக்கீங்க முதல்ல உட்காருங்க” என்று அவரை அழைத்து நாற்காலியில் அமர செய்தவர்
“எப்போ வந்தீங்க, மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை வீட்டுக்கு வந்த உங்களை வாங்கன்னு கூட சொல்ல முடியாம போயிட்டேன் .. சொல்லுங்க என்ன குடிக்கிறீங்க டீயா..?? காபியா..?? இல்லை டிபன் பண்ணட்டுமா..?? என்று வீட்டு மாப்பிள்ளைக்கு உண்டான மரியாதையுடன் கேட்க,
அதெல்லாம் வேண்டாம் அத்தை நான் இங்க வந்ததே வேற விஷயமா என்றவர் வளைகாப்பு குறித்து அவரிடம் பேசியவர், நாளைக்கு விட்டா வேற நல்ல நாள் இல்லை.., எப்படி ஏற்பாடு எல்லாம் உங்களுக்கு திருப்தியா..? என்றார்.
“நீங்க எல்லாமே நிறைவா செய்வீங்க உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே பண்ணிடுங்க மாப்பிள்ளை இதுல நான் சொல்ல புதுசா என்ன இருக்கு”
சரி அத்தை அப்போ நாளைக்கு காலையில ஒன்பதரைக்கு விசேஷம் ஆரம்பிக்கிறோம் வந்துடுங்க அதுக்கு முன்ன உங்க பையன் வந்ததும் என்னை பார்க்க சொல்லுங்க என்று கலைவாணியிடம் விடை பெற்றவர் ப்ரீத்தியிடம், “கிளம்பு கீர்த்தி போகலாம்”
பதறிக்கொண்டு வந்த கலைவாணி “என்ன மாப்பிள்ளை இது வளைகாப்பு முடிஞ்சுதானே கூட்டிட்டு போவாங்க நீங்க என்ன இப்பவே கிளம்ப சொல்றீங்க, அக்கம் பக்கம் என்ன நினைப்பாங்க”
அங்குஎழில் ப்ரீத்தியிடம் அமைதியாக நாதனுடன் செல்லுமாறும் எந்த நிலையிலும் இப்போதைக்கு எந்த உண்மையையும் கூறாமல் இருக்குமாறும் கட்டளை இட அவளும் புரிந்ததாக தலையசைத்தாள்.
“உங்க பையன் இந்த அளவுக்கு காட்டு மிராண்டித்தனமா நடந்துகிட்டதுக்கு பிறகும் என் பெண்ணை இங்க விட்டுட்டு போக எனக்கென்ன பைத்தியமா..?? உங்க பையனை முதல்ல வந்து என்னை பார்க்க சொல்லுங்க அதுக்கு அப்புறம் குழந்தை பிறந்த பிறகுகூட அவளை இங்க அனுப்பணுமா வேண்டாமான்னு நான் முடிவு பண்றேன்”
அவர் கூறுவதை மறுக்க முடியாத நிலையில் நின்றிருக்கும் கலைவாணிக்கும் அதை ஏற்றுகொள்வதை தவிர வேறு வழி இல்லை.
அதில் பல்லை கடித்த நாதன், “என் பொண்ணு எங்க இருக்கனும்னு நான்தான் முடிவு பண்ணனும் இவன் என்ன சொல்றது” என்றவர் தீபிகாவிடம்,
“கீர்த்தி என்கூட இருக்கட்டும் தீபா நான் அவளை பார்த்துக்குறேன், நீங்க வளைகாப்பு வேலையை பாருங்க”
‘சரி மாமா’ என்று தீபிகா ஒப்புக்கொள்ளவும்ப்ரீத்தியை அணைத்து பிடித்தபடி அழைத்து சென்ற நாதன் காரில் அவளை பத்திரமாக ஏற்ற அவளை தொடர்ந்து மற்ற இருவரும் அமரவும் வாகனத்தை தன் வீட்டை நோக்கி கிளப்பினார் நாதன்.
அவர் செல்வதையே பார்த்து கொண்டிருந்த எழில் ‘சக்சஸ்’ என்று அலரின் கன்னத்தில் முத்தமிட்டு ‘வீட்டுக்கு போனதும் முக்கியமான வேலை இருக்குடி செல்லம் சீக்கிரம் கிளம்பு’என்றவன் கலைவாணியிடம் விடைபெற்று மனைவியோடு கிளம்பினான்.