திகைப்பும் அச்சமும் போட்டிபோட குறையாத கண்ணீரோடு கீர்த்தி சரணை பார்க்க அவனோ கருமமே கண்ணாக செயலில் இறங்கி ஆவேசத்துடன் அவள் சேலையை விலக்கி கொண்டிருந்தான்.
“மாமா என்ன பண்றீங்க, இது தப்பு..!!” என்று பதறி துடித்தவளாக சேலையை பறித்த கீர்த்தி அதை மார்போடு இறுக பற்றியவாறே எழுந்து நிற்க அவள் விழிகளில் மீண்டும் ஈர மழை.
அர்த்தம் பொதிந்த பார்வையை அவள் மீது செலுத்தியவாறே தானும் எழுந்து நின்று கரங்களை மார்பின் குறுக்காக கோர்த்துகொண்டு கீர்த்தியை தீர்க்கமாக பார்த்த சரணிடமும் ஆழ்ந்த அமைதி.
அவன் ஏதேனும் பேசி இருந்தாலே அவள் அத்தனை அச்சம் கொண்டிருக்கமாட்டாள் ஆனால் கொன்று கிழிக்கும் அவன் பார்வையில் நொடிக்கு நொடி இதயத்துடிப்பு அதிகரித்து அடுத்து என்ன சொல்வானோ என்று கீர்த்தி பார்க்க இருவருக்கிடையிலான மௌனத்தை சரணே உடைத்திருந்தான்.
ஆனால் மௌனத்தை உடைத்தவன் அதன்பின் கூறிய அமில வார்த்தைகளில் விக்கித்து போனவளுக்கு கடந்த நொடிவரை அவன் கடைபிடித்த அமைதியே மேல் என்று தோன்றாமல் இல்லை..!
“தப்பு..!!” என்று புருவம் முடிச்சிட பார்த்தவனின் பார்வையின் பொருள் புரியாமல் நின்றிருந்தாள் பெண்.
“ஹ்ம்ம் ஆமா தப்புதான்” என்று நெற்றியை நீவிவிட்டு அவள் கூற்றை ஏற்று கசப்புடன் புன்னகைத்தான் சரண்.
அவன் வார்த்தைகளும் புன்னகையுமே சரண் கொண்டிருக்கும் வலியை கீர்த்திக்கு உணர்த்த தவிப்புடன் நின்றிருந்தாள்.
“தப்புதான்டி!பெரிய தப்புதான், இதுநாள் வரை தெரியாம புரியாமநிறைய தப்பு பண்ணியிருக்கேன்” என்று அழுத்தமான காலடியுடன் அவளை நோக்கி முன்னேறியவன் விழிகள் உணர்வற்றிருக்க..,
“காதலிக்கிற பெண்ணை அவள் உணர்வுகளை மதிச்சு விலகி நின்னது நான் பண்ணின முதல் தப்பு, என்னை நம்பி இருக்க அவளோட மரியாதையை முன்னிறுத்தி கண்ணியம் காத்தது இரண்டாவது தப்பு..!! மனசுக்கு பிடிச்சவ பக்கத்துல என் மேல மயக்கத்தோடா இருந்தப்பவே அவளை தொடாமவிட்டது மூணாவது தப்பு..!! பணத்தை முன் நிறுத்தி அவளை விட்டு விலக சொன்னப்போ குடும்பமாவது உறவாவது மானம் மரியாதையாவதுன்னு அன்னைக்கு உன்னை இழுத்துட்டு போகாம விட்டது நான் பண்ணின பெரிய தப்பு..!! அதைவிட இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போன உன்னை மறக்கமுடியாம இன்னைக்குவரையும் என் வாழ்க்கையை அழிச்சிட்டு இருக்கிறது நான் பண்ணிட்டு இருக்க முட்டாள்தனமான தப்பு என்றவன் இப்போது அவள் சுவாசக்காற்றோடு உறவாடும் நெருக்கத்தில் நின்று, இப்படி ஏகப்பட்ட தப்பு பண்ணி இருக்கேன்” என்று அடக்கப்பட்ட குரலில் சரண் சீற அவன் வார்த்தைகளில் ஒடுங்கிய கீர்த்தி மேலும் பின்னே நகர்ந்து சுவரோடு சுவராக ஒட்டி நின்றாள்.
அவள் இடையோடு கரம் கோர்த்து தன்னோடு சேர்த்து அணைத்தவன், “ஏன்டி ஒருத்தன் பெண்களை மதிச்சு, ஒழுக்கமா, கட்டுபாட்டோட, கண்ணியத்தோட நடந்துகிட்டா உங்க பாஷையில் அவனுக்கு இளிச்சவாயன், கையாலாகாதவன்னு பேரு அவனை காலணாக்கு மதிக்க மாட்டீங்க அப்படிதானே..??” என்று அவள் விழிகளை ஊடுருவ, கீர்த்தியோ திடிரென்ற அவன் மாற்றத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க,
“மா…மா என்ன மாமா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை ப்ளீஸ் மாமா என்னை விடுங்க, நீங்க எப்பவும் இப்படி நடந்துக்க மாட்டீங்களே என்னாச்சு உங்களுக்கு..?? இப்போ மட்டும் ஏன் இப்படி பீஹேவ் பண்றீங்க” என்று அவன் பிடியில் இருந்து தப்பும் மார்க்கம் தெரியாமல் வேதனையுடன் பார்க்க,
“அதான்டி..!! அது தான் நான்பண்ண மிகப்பெரிய தப்பு…!! இப்போ யோசிக்கிறேன் ஏன்டா அவ்ளோ முட்டாளா இருந்திருக்கோம்னு” என்றவன் அவளை வெறிக்க கீர்த்தியின் நெஞ்சம் தடதடக்க தொடங்கியது.
அவன் மார்பில் கரம் பதித்து அவனை விலக்க முற்பட அவள் கரங்களை அழுத்தமாக பிடித்து அவள் முயற்சியை தடுத்தவன் அவளிடம், “எப்போ நீ என்கிட்டே மயங்கி இருக்கன்னு புரிஞ்சதோ அப்பவே மத்தவனுங்களை மாதிரி உன்னையும் யூஸ் பண்ணி இருந்தா இன்னைக்கு அக்காக்காக விட்டுகொடுத்தேன் ஆட்டுக்குட்டிக்காக மறைஞ்சி இருந்தேன்னு சொல்லாம என் குழந்தைக்காகவாவது என்னை தேடி வந்திருப்ப அப்படிதானே..!!” என்று சீற,
“மாமா ப்ளீஸ் நான் பண்ணினது தப்புதான் இல்லைன்னு சொல்லலை பட் கோபத்துல எதை யோசிச்சாலும் தப்பு தப்பாதான் தெரியும்நீங்க வாங்க நாம வெளில போய் உட்காந்து பேசலாம் இங்க இருக்க வேண்டாம்” என்று கூற அவளையே நிதானமாக தலை முதல் கால்வரை அளவிட்டு கொண்டிருந்த சரண் எதையும் காதில் வாங்கினான் இல்லை,
‘மாமா ப்ளீஸ் மாமா‘ என்று இறைஞ்சுதலாக பார்க்க அவனோ இளக்கமற்ற குரலில்..,
“ஆனா நான் அப்ப அதை செய்யாததோட விளைவு, அப்பனை பழி வாங்குறேன்னு வந்து என் உயிரை அணுஅணுவா குடிச்ச உன் அக்கா கடைசியா என்னை ஆம்பளையான்னு கேட்டு மாத்திரையை கொடுத்து அசிங்கபடுத்துற அளவு கொண்டு போய் விட்டுடுச்சு…” என்று உச்சபட்ச வெறுப்போடு அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தத்துடன்உச்சரிக்க ஸ்தம்பித்து போனாள் கீர்த்தி.
‘என்னது..??’ என்று அதிர்ந்தவளின் கண்களில் கலக்கமே மிகுந்திருந்தது.
என்ன சொல்கிறான் இவன், எதனால்அவன் வார்த்தைகளில் இத்தனை கசப்பு என்று அவசர அவசரமாக யோசித்தவளுக்கு கண்ணை கட்டி வனாந்திரத்தில் விட்ட நிலை தான்.. “என்ன.., என்ன மாமா சொல்றீங்க?எனக்கு நீ… நீங்க சொல்றது எதுவும்எனக்கு புரியலை” என்றவளின் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீரை பொழிந்தது,
“பாருடா எங்களுக்கு கல்யாணம் ஆனது குழந்தை பிறக்கபோறது வரை தெரிஞ்சு வச்சிருக்கவளுக்கு அவ பண்ணின அசிங்கமான காரியம் எதுவும் தெரியலைன்னு சொல்றது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை” என்றவனின் குரலில் இருந்த எள்ளல் அவன் பார்வையில் சுத்தமாகஇல்லை.
“ப்ளீஸ் மாமா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது கடத்தி வச்சி இருந்தப்பகூட அவ என்னை உங்களை விட்டு விலக சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணா நான் முடியாதுன்னு தான் சொன்னேன் ஆனா கடைசியா ரூம்…. ரூமை டெக்கரேட் பண்ணி எனக்கு அனுப்பி அவ பேசினதை ஏத்துக்க முடியாம” என்றபோதே கீர்த்தியின் குரல் உடையத்தொடங்கியது.
அதை கண்டவன் “இதெல்லாம் எனக்கு அனாவசியமானது, என்னோட கேள்வி ஒன்னே ஒன்னு தான் அதுக்கு பதில் தெரிஞ்சிக்கத்தான் இவ்ளோதூரம் வந்தேன்.. பதில் சொல்லு அடுத்த நிமிஷம் கிளம்பிடுவேன்” என்றான்.
“என்.. என்ன கேள்வி மாமா..??
“எதனால நீ இங்க இருக்க விஷயத்தை என்கிட்ட சொல்லலை, சொல்ல வந்த சைந்தவியையும்தடுத்த..?” என்று கேட்க அவன் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது.., இருக்கும் ஆத்திரத்தில் தான் கூறுவதை சரியாக புரிந்து கொள்வானா என்று அலமலந்து நின்றவள் பின் எச்சிலை கூட்டி,
“அது மாமா அது வந்து..” என்று தயக்கத்துடன் அவனை பார்த்தவள் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டே, ” என் அப்பாவை தண்டிக்கதான்..!! என்றபோதே சரணின் பார்வை அவள் மீது கூர்மையாக படிந்து மனதில் குளிர் பரவ செய்ய மேலும் தொடரதைரியம் அற்றவளாக மௌனமாக சரணை பார்த்தாள்
‘சொல்லு‘
“அது அது வந்து நான் இங்க இருக்கிறது தெரிஞ்சா நீங்க விடமா என்னை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பீங்க, ஆனா என் அப்பா பண்ணின பாவத்துக்கு நான் எங்க இருக்கேன் எப்படி இருக்கேன்னுகூட தெரியாம துடிக்கனும், நான் கல்யாணம் பண்ணி சீரும் சிறப்புமா வசதியான வாழ்க்கை வாழணும்னு உங்களை கஷ்டபடுத்தினவருக்கு கடைசி வரை நான் கல்யாணம் பண்ணாம இருக்கிறது தான் சரியான தண்டனை அதான் சொல்லலை” என்று கண்களை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் சொல்லி முடிக்கவும்,
“அப்போ உனக்கும் பழிவெறி தான் பெருசா இருந்து இருக்கே தவிர ஒருமுறைகூட என் உணர்வை புரிஞ்சுக்க முயற்சி பண்ணலை அப்படிதானே..??”
இல்லை இல்ல மாமாநான், நீங்க.. என்று வார்த்தை தந்தியடிக்க இதழ்களை மடித்து கேவலை கட்டுபடுத்தியவள், நீங்க இப்ப உங்க குழந்தை.. இது தப்பு மாமா!! எனும் போதே
“என்னடி சொன்ன..? நான் தொடப்போகும் முதல் பெண்ணே நீதான்டி” என்று சீற்றத்துடன் கூறியவன் அதே வேகத்துடன் அடுத்து அவள் வார்த்தைகளை தொடராத வண்ணம் அவள் இதழ்களை வன்மையாக சேர்ந்திருந்தான். அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து போயிருந்த கீர்த்திக்கு அடுத்து நிகழ்ந்தவை எதுவும் மூளையில் பதியவில்லை.
ஆவேசமாக முத்தமிட்டவாறே அவளை கட்டிலில் கிடத்திய சரணும் அடுத்த சில நிமிடங்கள் தன்வசம் இழக்க அதன் விளைவாய் கீர்த்தி மிகவும் காயப்பட்டு போனாள். சரண் முத்தமிட்ட வேகத்தில்அவள் இதழ்கள் ரணமாகி போக அதிலிருந்து வெளியேறிய குருதியின் சுவையை அவன் உணரதொடங்கியும் அவளை விடுவிக்க தோன்றாமல் அடுத்த நிலைக்கு முன்னேற தொடங்கி இருந்தான். அவனது ஆவேசத்தாக்குதலை எதிர்பாராத கீர்த்தியோ முதலில் அதிர்ந்தாலும் அதில் அவன் கொண்டிருந்த ரணத்தை உணர்ந்து அவனை எதிர்க்கும் துணிவும் அற்றவளாக அசைவற்று கிடக்கஅதற்கு நேர்மாறாக அவள் கண்களோ கரை உடைத்து கிளம்பி இருந்தது.
இதுநாள் வரை அவன் கொண்டிருந்த அலைப்புருதல், வேதனை, வலி, துரோகம், அனைத்திற்க்கும் வடிகாலாய் பெண்ணவள் அமைந்து போக தன்னிலை இழந்து மூர்க்கமாக அவளை கையாண்டு கொண்டிருந்தவன் அவள் கண்ணீரில் தான் சற்று நிதானமடைந்து தன்னிலை திரும்பஅப்போது தான் அவன் செய்து கொண்டிருக்கும் செயலின் வீரியம் புரிபட வேகமாக அவளை விட்டு விலகிய சரண் அருகே இருந்த போர்வையை அவள் மீது போர்த்தி விட்டு உணர்வுகளின் அழுத்தம் தாளாமல் இருகரங்களையும் தலைக்குபின் கோர்த்து கொண்டு இலக்கற்ற பார்வையுடன் அமர்ந்துவிட்டான்.
மனதினுள் கலவையான உணர்வுகள் முட்டி மோத எதையுமே எண்ணி பார்க்க விரும்பாதவனின் தலையே வெடித்து விடும் நிலை.
சில நிமிடங்களுக்கு பின் கண்ணீருடன் தன் அருகே அமர்ந்த கீர்த்தியிடம், “ஒருத்தனை நல்லவனாவே இருக்க விடமாட்டீங்க இல்லை உங்ககூட சேர்ந்து இன்னைக்கு நானும் என்னோட சுயத்தை இழந்திருப்பேன்” என்று வெறுப்போடு பார்த்தவன்,
“மனுஷன்டி..! நான் உயிரும் உணர்வும் உள்ள மனுஷன்..!! காதலிச்சது குற்றமா..??அதுக்காக ஆளாளுக்கு என்னை பந்தாடுவீங்களா..??? எனக்குன்னு எந்த ஆசையும் இருக்க கூடாதா…?? அதை என் குழந்தைன்னு நீ சொல்றது இதுவே கடைசியா இருக்கணும்” என்று எச்சரித்தவன் தன் அருகே நடுங்கும் கரங்களால் போர்வையை பற்றுகோலாய் இறுக பிடித்து கொண்டு அச்சத்துடன் தன்னை பார்த்தவளின் முழங்கையை பற்றி இழுத்து,
“எனக்கு குழந்தைன்னு ஒன்னு பிறந்தா அது உன் மூலமா மட்டும்தான்..!! இது இன்னைக்கு நேத்து இல்லை எப்போ உன்கிட்ட என் மனசை தொலைச்சேனோ அப்போ இருந்தே நாம நம்ம குழந்தை, குடும்பம்னு நான் கண்ட கனவு அதுல எந்த மாற்றமும் இருக்காது” என்று திடமான குரலில் கூறியவன் என்ன புரிஞ்சதா..?? என்று உறும,
வெளிறிப்போன முகத்துடன் ஆம் என்ற தலை உருட்டல் மட்டுமே கீர்த்தியிடம்..!!
அதை வெறுப்புடன் பார்த்தவன் “ஆனா இத்தனை மாசத்துல ஒருமுறை கூடவா உனக்கு என்னை தேட தோணலை, அவ்ளோ கல்நெஞ்சக்காரியாடி நீ..???” என்று கேட்க,
“இல்லை மாமா” என்றவளின் விழிகளில் மீண்டும் ஈரம் கசிந்தது
“எப்போ உனக்கு என்னை விட உங்கப்பனும் கூட பிறந்தவளும் முக்கியமா போயிட்டாங்களோ அப்புறம் எதையும் பேசுறதுல அர்த்தம் இல்லை, இனியும் இங்க இருந்தா நீ ரொம்ப காயப்பட்டு போயிடுவ அப்புறம் என்னையே நான் மன்னிக்க முடியாது… தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் இன்னையோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது வரேன்” என்றவன் அடுத்த நொடியே எழுந்து அறையை விட்டு செல்ல முயல,
ஓடி வந்து அவன் கரத்தை பிடித்து தடுத்தவள், “ப்ளீஸ் மாமா எனக்கு நீங்க கோபமா இருக்கீங்கன்னு புரியுது ஆனா நான் இல்லாதப்போ என்ன நடந்ததுன்னு எனக்கு சத்தியமா தெரியாது சரவணன் அங்கிள் ப்ரீத்தி ப்ரெக்னன்ட்டா இருக்கிறதா சொல்லி தான் எனக்கு தெரியும் ஆனா ப்ரீத்தி ஏன் அப்படி பேசினான்னு எனக்கு தெரியாது..!! உங்களோட கோபம் யார் மேல அப்போ என்ன நடந்தது எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்” என்று கேட்க,
திரும்பி அவளை பார்த்தவன் என்ன நினைத்தானோ,
“கேளு நல்லா காது குளிர உன் அக்கா பண்ணினதை கேளு” என்று ப்ரீத்தி அவனிடம் வந்து சேர்ந்த நாள் முதல் இறுதியாக குழந்தையை கருவுற்றது வரை கூறி முடிக்க விக்கித்து போயிருந்த கீர்த்தியிடம் அசைவில்லை.
**********************************
“அவளுக்கு தான் வெறி பிடிச்சி போயிருந்தது அதனால எதையும் என்கிட்டே சொல்லலை ஆனா உனக்கு என்னடி, ஏன்..?? என்கிட்டே இப்படி தான், இதனால தான் நான் இங்க இருக்கேன்னு எனக்கு ஒரு தகவல் கொடுக்கலை, பதில் சொல்லு” என்று உரத்த குரலில்கூற அவனது கர்ஜனையில் கீர்த்தியின் உடல் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.
என்ன பதில் சொல்லுவாள் தந்தையை பழிவாங்கும் முனைப்பில் இங்கே வந்து அமர்ந்தவளுக்கு அங்கே சென்றிருப்பவள் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தகூடும் என்று கீர்த்தி நினைத்துகூட பார்க்கவில்லையே. ப்ரீத்தியால் சரண் அனுபவித்த சித்ரவதைகளுக்கு தானே காரணமாகி போனோமே என்று துடிதுடித்து போனவளுக்கு என்ன சொல்லி அவனை தேற்ற என்று புரியவில்லை. ஆயினும் மனதினுள் உறுதியான முடிவெடுத்தவள்சிலநொடிகளுக்கு பின் அவனை நெருங்கி,
“மாமா நான் பண்ணினது பெரிய தப்பு.., என்னை பெத்தவரை தண்டிக்கறேனு சொல்லி உங்களை தண்டிச்சிடேன், என்ன கஷ்டமா இருந்தாலும் உங்ககிட்ட சொல்லி இருக்கணும்.., ஆனா எனக்கு அப்போ அவ பேசினதுல எதையும் யோசிக்க முடியலை, நீ விலகு நான் அவரை சந்தோஷமா வச்சிப்பேன்னு சொல்லவும் எனக்கு..” என்றவளின் குரல் உடைய அதை செருமியவாறே, ஒவ்வொரு முறையும் நான் செய்யும் தப்பு உங்களை அதிகமா காயப்படுத்துது அதனால நான் வேண்டாம் மாமா உங்களுக்கு..!!”
இதோ நீங்க எனக்காக இவ்ளோதூரம் தேடி வந்தபோதும் எனக்கு உங்க கூட சேரும் கொடுப்பனையே இல்லை நான் ஒரு பாவப்பட்டவ, என்னால நீங்க எத்தனையோ அனுபவிச்சிடீங்கஇனியும் கஷ்டப்பட வேண்டாம் எப்பவும் பெத்தவங்களோட பாவம் பிள்ளைகளுக்குன்னு சொல்லுவாங்க இங்க என்னை பெத்தவர் பண்ணாத பாவமே இல்லை என்னை பெற்ற அம்மா வசுமதியில தொடங்கி வளர்த்த அம்மா, உங்.. உங்க…” என்றவளிடம் இருந்து பெரும் கேவல் எழ கண்களை துடைத்து கொண்டு எழுந்து சென்று விளக்கை ஒளிரவிட்டவள் ஒரு பக்க சுவரை அடைத்து கொண்டிருந்த அவன் புகைப்படத்தை சுட்டி காட்டி,
“இவ்ளோ நாள் உங்ககூட இப்படி தான் வாழ்ந்தேன் இனியும் இப்படியே வாழ்ந்துக்குறேன், என்னோட தலை எழுத்து இதுதான்..!!ப்ளீஸ்நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்லை மாமாநீங்க போங்க தயவு செஞ்சி இங்க இருந்து போயிடுங்க இனிமேலாவது எங்க யாரோட குறுக்கீடும் இல்லாமநீங்க நிம்மதியா நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு” என்று முகம் பொத்தி கதறியவாறே மடங்கி அமர்ந்தவள் அழுகையில் கரைய தொடங்கி இருந்தாள்.
சில நிமிடங்களுக்கு தன் புகைப்படத்தை வெறித்து கொண்டு நின்றவனின் பார்வை மீண்டு கீர்த்தி மீது படிய, “இப்போ கூட உன்னை கூட்டிட்டு போக சொல்லமாட்ட இல்லை, நீ இல்லாம நான் நல்லா இருக்கிறது கனவுலகூட நடக்காத விஷயம்டி..!! ” என்று மனதினுள் சொல்லி கொண்டவன் ஒரு வெற்று பார்வையை அவள் மீது வீசி மறுநொடியே கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் வாழ்க்கையையே வெறுத்து கனத்த இதயத்துடன் ஆரணி நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தான்.