‘நோஓஓஓ..‘ என்று பதட்டத்தோடு சரணை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளியவாறே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து அமர்ந்த கீர்த்தி தடதடத்த நெஞ்சை கையால் பிடித்துகொண்டே, ‘நோ நோ மாமா ப்ளீஸ் விட்டுடுங்க..‘ என்று மீண்டும் அலற தொடங்கினாள்.
அவளின் அலறலில் சைந்தவியின் இரண்டு வயது பெண் குழந்தை வீரிட்டு அழதது… அதையெல்லாம் உணராத கீர்த்தி கழுத்தில் இருந்த டாலரை இறுக்கமாக பிடித்தவாறு அமர்ந்திருந்தாள்.
கீர்த்தியின் அலறலில்விழித்தெழுந்த சைந்தவி, “ஏய் என்னடி ஆச்சு எதுக்கு இப்ப கத்தின” என்று கேட்டவாறே பயத்தில் இருந்த குழந்தையை தூக்கி தோளில் சாய்த்து ஆறுதல்படுத்த… முதலில் தூங்கமாட்டேன் என்று சண்டித்தனம் செய்த குழந்தை சிலநொடிகளுக்கு பின் தூங்க ஆரம்பிக்க அதை தூளியில் கிடத்திவிட்டு உள்ளே வந்த சைந்தவி கோபத்துடன்ஏதோ கூற விழைந்தவள் பிரம்மை பிடித்தார் போல் அமர்ந்திருந்தவளின் முகத்தை கண்டு வாய்வரை வந்த வார்த்தைகளை முழுங்கி “என்ன ஆச்சு கீகீ” என்றவாறு அவளை ஆராய்ந்தாள்.
கீர்த்தியின் விழிகளோ மடை திறந்த வெள்ளமாக கண்ணீரை சொரிந்து கொண்டிருந்தது.
“கீகீ எதுக்கு இந்த அழுகை, நிறுத்து” என்று அவளை பிடித்து உலுக்க..,
தன்னிலை மீண்டவளின் அதரங்கள் ‘மாமா‘ என்று தன்னிச்சையாக முனுமுனுக்க அவளெதிரே இருந்த தோழியை கண்டு மலங்க மலங்க விழித்தவளுக்கு கனவு காட்சிகள் மனக்கண்ணில் விரிய, குனிந்து தன் உடையை ஆராய்ந்தவள் பின் படுக்கையை விட்டு கீழே இறங்கிவிளக்கை ஒளிர விட்டு சரணை தேடிஇண்டு இடுக்கு விடாமல் சோதனையிட ஆரம்பித்தாள்.
அவள் செயல் புரியாமல் அவள் பின்னே சென்றசைந்தவி ஒருகட்டத்தில் ‘கீர்த்தி‘ என்று அவள் தோள்களை பற்றி நிறுத்தி, “என்ன ஆச்சு..?? எதுக்கு இப்படி பண்ற.. ஜஸ்ட் ஸ்டாப் இட்” என்று கூற
“மாமா சவி மாமா..”என்று எச்சில் கூட்டி விழுங்கியவள் விழிகள் அலைபாயமாமா இங்க வந்தாங்கடி, எப்படி எப்படி என்னை.. ப்ரீத்தி என்னை..” என்று ஆரம்பித்தவளின் குரல் தன்னவனை அடுத்தவளுக்கு தாரை வார்த்ததை எண்ணி உடைய அதற்கு மேலும் தொடர முடியாதவளாக முகம் பொத்தி மடங்கி அமர்ந்து கதற தொடங்கினாள்.
அவள் செயலில் பதட்டமடைந்த சவி, “ஹேய் ஹேய் கீகீ என்ன பண்ற அழுகையை நிறுத்து” என்று அவளை அணைத்து கொண்டவள் ‘இங்க பாருடா‘ என்று அவள் முகம் நிமிர்த்தி ‘நல்லா பாரு இங்கநீ, நான், பாப்பா தான் இருக்கோம் சரண் வரலை, எனக்கு தெரியாம சரண் எப்படி வர முடியும்” என்றவள் கீர்த்தியின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையை கண்டு “கனவு கண்டியா கீகீ” என்று கேட்க
அவள் கேள்வியில் சட்டென அழுகையை நிறுத்திய கீர்த்தி அப்போதுதான் கனவிற்கும் நனவிற்குமான வித்யாசத்தை உணர்ந்து, ‘ஆம்‘ என்பதாக தலை அசைக்க,
அவளையே யோசனையுடன் பார்த்துகொண்டிருந்தசைந்தவிக்கு அவள் உடல்மொழியில் தென்பட்ட பதட்டமும் விழிகளின் மிரட்சியும் ஏதோ விரும்பத்தகாத கனவின் விளைவு என்பதை அடித்து கூற கீர்த்தியிடம், “சரி சொல்லு கனவுல வந்த சரண் என்ன சொன்னாரு..??” என்றாள்.
“அது.. அது வந்து…” என்று கனவின் நிகழ்வுகளை எண்ணி பார்த்தவளுக்கு அச்சத்தில் உடல் உதற நா வறண்டு போனது.. இயலாமையில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
தோழியின் பயம் நன்கு உணர்ந்தவள் அவள் கேட்கும் முன்னமே அவள் முன் தண்ணீர் பாட்டிலை நீட்ட வாங்கி மடமடவென்று குடித்தவள் காய்ந்த தன் உதடுகளை ஈரபடுத்தி கொண்டே ‘மாமா’ என்று ஆரம்பித்தவள் ஒரு நொடி தயங்கி பின்தான் கண்ட கனவை அவளிடம் விவரித்திருந்தாள்.
இமைக்காமல் அவளையே பார்த்திருந்த சைந்தவி, “உனக்கு ஏன் இப்படி கனவு வந்தது கீகீ” என்று கேட்க
“தெரியலைடி”
‘தெரியாது‘ என்று கீர்த்தியை கூர்மையாக பார்த்த சவியின் இதழ்கள் எள்ளலுடன் வளைந்து, “எப்படிடி தெரியும்..!! அடுத்தவ புருஷன்னு நல்லா தெரிஞ்ச அப்புறமும் அவர் மேல ஆசைப்பட்டு கனவுல வாழ்ந்துட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லை” என்று கூடை தணலை அவள் மீது கவிழ்க்க,
தோழியின் வார்த்தைகளில் துடிதுடித்து போன கீர்த்தி ‘சவி‘ என்று அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“என்ன சவி..,, என்னடி வச்சிருக்க சவிக்கு..?? என்று ஆக்ரோஷத்துடன் கேட்டவள் ‘முட்டாள்‘ என்று வெறுப்பை உமிழ,
அதில் அடிபட்ட பார்வை பார்த்த கீர்த்தியை முறைத்தவள், “உன்னை மாதிரி சொர்கத்தை நழுவவிட்டு கனவுல குடும்பம் நடத்துறவளை வேற என்ன பேச சொல்ற…?” என்று இத்தனை மாதமாக சரணிடம் அனைத்தையும் விளக்கி எடுத்து கூறி சேருமாறு அவளிடம் மன்றாடி கொண்டிருப்பவளின் ஆதங்கம் அமிலமாக உருவெடுத்தது.
‘என்ன சவி இது நீயும் புரிஞ்சிக்காம பேசினா எப்படி” என்று கலங்கிய விழிகளுடன் கீர்த்தி கேட்க…
“புரியாம பேசுறேனா..?? அடிப்போடி” என்று கண்களை எட்டாத புன்னகையுடன் அவளை பார்த்தவள் “என்னைவிட உன்னை புரிஞ்சவங்க யாரும் இல்லைடி! அதுதான் பாரி வள்ளலுக்கு நேரடி வாரிசு மாதிரி நீ கனவு கண்ட வாழ்க்கையை, ஆசைப்பட்ட சரணை நேத்து வந்த உன் உடன்பிறப்புக்கு தூக்கி கொடுத்துட்டு வந்துட்ட பிறகும் சரனை அடைய நினைச்சு கனவு காண்றது தப்புன்னு உனக்கு தெரியலையா..???” என்று வார்த்தைகளால் அவளை கொன்று கூறுபோட,
இருகரங்களாலும் செவியை பொத்தியவள் “ஸ்டாப் சவி ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்..” என்று உரக்க கத்திகொண்டே பின்னடைந்தவள், ” நீ என்ன பேசினாலும் சரி என்னை எப்படி அசிங்க படுத்தினாலும் சரி என்னால மாமாவை மறக்க முடியாது” என்று தீர்க்கமாக உரைக்க,
கசந்த புன்னகையை வெளியேற்றிய சைந்தவி, “நோ யு ஹாவ் டூ..!! நீ மறந்து தான் ஆகணும்’ என்று கறாரான குரலில் கூறியவள் அவள் முகத்தை பற்றி, “லுக் கீர்த்தி இவ்ளோ நாள் சரண் எப்படியாவது அங்க இருக்கிறவ நீ இல்லைன்னு உணர்ந்து உன்னைதேடி வர வாய்ப்பு இருக்குனு… என்றவள் அறையின் பக்கவாட்டில் கீர்த்தி மாட்டி இருந்த சுவர் கொள்ளா சரணின் புகைப்படத்தை பார்த்து இதை எல்லாம் அலோவ் பண்ணினேன் ஆனாஇனியும் நீ சரணை நெனச்சிட்டு உன் வாழ்க்கையை அழிச்சிக்கிற முட்டாள்தனத்தை நான் பொறுத்துக்கமாட்டேன்”
கீர்த்தியின் பார்வையும் அவள் மீது அழுத்தமாக படிய அதை கண்டுகொண்டவள், “இப்ப அவருப்ரீத்தியோடஹஸ்பான்ட் மட்டுமில்லை சூன் தே போத் ஆர் கோயிங் டூ பி பேரன்ட்ஸ் ! யு டோன்ட் ஹாவ் எனி ரைட்ஸ் ஓவர் ஹிம்…பெட்டர் மூவ் ஆன் (அவர் ப்ரீத்தியின் கணவர் மட்டுமில்லை கூடிய சீக்கிரமே இருவரும் பெற்றோர் ஆகபோகிறார்கள் உனக்கு அவர் மேல எந்த உரிமையும் இல்ல அவரை கடக்குறது உனக்கு நல்லது) இன்னும் புரியற மாதிரி சொல்லனும்னா போகாத ஊருக்கு வழி தேடுற முட்டாள்தனத்தை இத்தோட விட்டுடு”
“நோ சவி இதையே திரும்ப திரும்பசொல்லாத எனக்கு தெரியும் மாமா அப்படி இல்லை” என்று உறுதியாக கூற,
‘சரவணன் சார் உனக்கு கால் பண்ணி தெளிவாதானே சொன்னாரு இனியும் சரணை நெனச்சி உன் வாழ்க்கையை பாழ் பண்ணிக்க வேண்டாம் நல்ல பையனா பார்த்து கட்டிட்டு வாழுன்னு’ என்று கூறியவள் தோழியின் பார்வை எங்கோ வெறித்திருப்பதை கண்டு,
“இதோ பாரு சந்தீப் ப்ரொபோஸ் பண்ணி இன்னையோட மூணு மாசம் ஆக போகுது அவருக்கு ப்ரோமொஷனோட சொந்த ஊருக்கே டிரான்ஸ்பர் ரெடியா இருக்கு.., ஆனாலும்உன்னோட பதிலுக்காக தான் அதை அவாய்ட் பண்ணிட்டு இருக்காரு..!! இப்போவாவது ஓகே சொல்லு, நான் அப்பா அம்மாகிட்ட சொல்லி உங்க கல்யாணத்தை முடிச்சி உன்னை மும்பைக்கு அனுப்பிடுறேன் நீ நினைக்கிற மாதிரி இனி உங்க அப்பா முகத்துலையே நீ விழிக்க வேண்டாம்” என்றிட,
உடலெங்கும் அமிலம் ஊற்றியது போல துடிதுடித்து போன கீர்த்தி, “ஸ்டாப் இட்சவி ” என்று கர்ஜித்தவள் மெல்ல நகர்ந்து ஒரு பக்க சுவரை அடைத்து கொண்டிருந்த சரணின் புகைபடத்தின் மீது சாய்ந்து கண்ணீர் உகுத்தவள் அதை வருடியவாறு ‘ஓவர் மை டெட் பாடி‘ என்று அவளை உறுத்து விழிக்க,
அவள் பதிலை எதிர்பார்தவள் ‘கண்டிப்பா பைத்தியம் தான்டி நீ..!!இன்னும் எத்தனை நாளைக்கு சரண்கூட கனவுலையே குடும்பம் நடத்த போற என்றவள் தன் கைபேசியை எடுத்து இப்போ நீ ஓகே மட்டும் சொல்லு சரணுக்கு நான் புரியவைக்கிறேன் இல்லையா சந்தீப்க்கு ஓகே சொல்லு’ என்று அவளை கார்னர் செய்திட,
‘அப்போ சொன்னது தான் இப்பவும்.., சந்தீப் கிட்ட அன்னைக்கே தெளிவா முடியாதுன்னு சொல்லிட்டேன் அதையும் மீறி என் மனசு மாறுற வரை காத்துட்டு இருப்பேன்னு சொல்றது சுத்த பைத்தியக்காரத்தனம், அதை நீயும் என்கரேஜ் பண்ணாத’
சிலநொடிகள் மெளனமாக கீர்த்தியை பார்த்தவள், சரி அப்போ கிளம்பு இப்பவே சரண்கிட்ட போய் உண்மையை சொல்லி அவளை டைவர்ஸ் பண்ண சொல்லி உன்னை கல்யாணம் பண்ணி வைக்கறேன் என்றிட,
அதிர்வோடு தோழியை பார்த்தவள், தலையை குனிந்து கொண்டு, “என்னால மாமாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று அழுத்தமான குரலில் கூற…
அவள் முகத்தை நிமிர்த்தியவள் “அப்போ இதுக்கு என்னடி அர்த்தம்” என்று சரணின் புகைப்படத்தை சுட்டி காட்ட,
விழிகளில் மிகுந்த வலியுடன் “தண்டனை”என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருந்தாள் கீர்த்தி.
“தண்டனை” என்று மெல்லிய குரலில் வேதனை இழையோட கூறியவளை கண்ட சைந்தவிக்கும் தோழியின் வேதனையின் வெளிப்பாட்டில் முகம் சுனங்க, “யார் தப்புக்கு யார்டிதண்டனை அனுபவிக்கிறது…” என்று சீறியவள் அவளது கசங்கிய முகத்தை கண்டு நிதானித்து கீர்த்தியை அழைத்து வந்து நாற்காலியில் அமர்த்தி,
“இங்க பாரு கீகீ உன் மேல எந்த தப்பும் இல்லை நீயா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிற… இது கதையோ, மேடை நாடகமோ, சினிமாவோ இல்லை வாழ்க்கை…! யாரோ செஞ்ச தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிறேன்னு சொல்றது அபத்தம்னு உனக்கே புரியலையாடி..?? இப்போ நீ அனுபவிக்கிற வலி ஒரு கட்டத்துல உன் உயிரையே விலை கேட்கும், கொஞ்சம் நிதானமா யோசிச்சி முடிவு எடு…பேசினா தீராத பிரச்சனை எதுவும் இல்லை, ரொம்ப சின்ன வாழ்க்கைடி இது அதை அழகாக்கிகிட்டு அனுபவிச்சி வாழறதுநம்ம கையில இருக்கு அதை விட்டுட்டு தண்டனை அது இதுன்னு பேசாத..” என்று எங்கோ பார்த்துகொண்டிருந்தவளின் பார்வையை தன் புறம் திருப்பியவள்
“வாழ்க்கை ஒருமுறை தான் கீகீ தேவை இல்லாததை யோசிச்சு மேலும் மேலும் சிக்கல் ஆக்கிக்காத.. ஏற்கனவே உன்னோட இடத்துல இன்னொருத்தி உட்காந்திருக்கா அதை நெனச்சி தினம் நீ படுறபாடு எனக்குதெரியாதுன்னு நினைக்கிறியா..?? என்று அவளை ஆழ்ந்து பார்த்தவள் உன்னை பத்தி எனக்கு தெரியும்டி எல்லாமே உங்க அப்பா பண்ணின வேலை இதுல உன் தப்பு என்ன இருக்கு நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு கஷ்டபடாதசரண் கிட்ட பேசு எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்” என்றிட,
ஆனால் தீர்க்கமாக தோழியை பார்த்த கீர்த்தி, “இதுல புதுசா யோசிக்க எதுவும் இல்ல சவி, பெற்றவர்களோட பாவ புண்ணியம் பிள்ளைகள் தலையில, இத்தனை நாள் என்னை பெத்தவரோட பணத்துல அமோகமா வாழ்ந்த நான்தானேஇப்போ அந்த ஆளோடபாவகணக்குக்கான தண்டனையை அனுபவிக்கனும் அதுதானே சரி..! அதை இல்லன்னு உன்னால மறுக்க முடியுமா..??” என்று வலி மிகுந்த குரலில் கேட்டிருந்தாள்.
சைந்தவியோ என்ன பதில் கூறுவது என்று புரியாமல் அவளை பார்க்க, “வாழ்க்கை வாழ்க்கைன்னு சொல்றியே மாமா இல்லாத ஒரு வாழ்க்கை எதுக்கு எனக்கு..??? அப்படி வாழ்ந்து நான் என்ன பெருசாசாதிச்சிட போறேன் சொல்லபோனா அவரை புரிஞ்சிக்காத நான் நா…” என்று இதழ்களை அழுந்த கடித்தவள் விழிகளில் கண்ணீர் கரை புரண்டோட அதை துடைத்துக்கொண்டே,
“ப்ரீத்தி சொன்னது ரொம்ப சரி நான் மாமாக்கு தகுதி ஆனவளே இல்லை மாமாக்காகவே இத்தனை வருஷம் காத்திருந்த ப்ரீத்திகூட தான் அவர் இருக்கணும்..நா.. நான்.. நான் அவர்கூட சேர்வது தப்பு” என்று விசும்பியவள் “என்னோட வாழ்க்கைக்காக தானே அந்த ஆளு மாமாவை.. மா..மா.. மாமாவை அவரோட அப்பாவை குடும்பத்தை அசிங்க…” என்றவளின் தொண்டை அடைக்க அதற்கு மேலும் தொடர முடியாமல் நா தழுதழுக்க கண்கலங்கி நின்றாள் கீர்த்தி.
தோழியின் நிலை கண்டு நெருங்கி ஆதரவாக சவி அரவணைக்கவும் பேச முடியாமல் அவள் தோள்வளைவில் கண்மூடிதவித்தவள் பின் முகத்தை அழுந்த துடைத்து, “இல்லை சவி நான் கல்யாணம் குழந்தைன்னு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து அந்த ஆளுக்கு நிம்மதி கொடுக்க மாட்டேன் அப்படி பண்ணினா நானே மாமாவோட உணர்வை மதிக்காம போனதா ஆகிடும் என்னை காதலிச்ச பாவத்துக்காக அவர் இதுவரை பட்டதே போதும் இனியும் அவர்கூட நான் சேர்ந்து என்னால அவர் பட்ட அசிங்கத்தை எல்லாம் நியாபகபடுத்தி அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பலை” என்றவள் தொடர்ந்து,
“மாமாக்கு மட்டுமில்லை எங்க அம்மாக்கு பண்ணின துரோகம், என்கூட பிறந்தவளை அப்பா பேரைகூட சொல்ல முடியாத நிலையில நிறுத்தினது வசுமதி அம்மாவை செய்த சித்ரவதை… என்றவளின் கண்முன் தன்னை ஈன்றேடுத்தவள் பிரகாசத்தால் பட்ட துன்பங்கள் வலம்வர குரலில் உறுதியுடன் தோழியை பார்த்தவள் தன்னோட பேர், புகழ், பதவி வெறிக்காககாதலி,கட்டின மனைவி, பெற்ற பெண்கள், மாமான்னு எல்லாரோட உணர்வோட, உயிரோட விளையாடி அவர் பண்ணின அக்கிரமத்துக்கு தண்டனை வேண்டாமா சவி..? நீ சொல்ற மாதிரி நான் மாமாகூட சேர்ந்து நல்லா வாழ்த்தா அந்த ஆள் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாம நிம்மதியா இருப்பான் இப்பேற்பட்ட ஆளுக்கு மகளா பிறந்த பாவத்தை நினைச்சு என்னை நானே வெறுக்குறேன்டி, நான் சந்தோஷமா இருக்ககூடாது இருக்கவே கூடாது மாமாவை பிரிஞ்சி இருக்க தண்டனை எனக்கு தேவை” என்றவளின் வார்த்தைகளில் அத்தனை அனல் தெறித்தது.
‘ஆ.., ஆனா..‘ என்று தொடங்கிய சைந்தவியை தடுத்தவள்,
“அதே தான் சவி, இன்னைக்கு இல்லாட்டியும் ஒருநாள் அங்க இருக்கிறது நான் இல்லை ப்ரீத்தின்னு கண்டிப்பா அந்த ஆளுக்கு தெரிய வரும் அப்போ நான் எங்க, எப்படி, என்ன நிலைமையில இருக்கேன்னு கூட தெரிஞ்சிக்க முடியாம அந்த ஆளு பரிதவிச்சி நிற்கணும் என்றவளின் விழிகளில் கட்டுக்கடங்காத சீற்றம்!
“அது எப்படிடி அவரோட ரெண்டு குழந்தையில் ஒன்னை மட்டும் கூட்டிட்டு வந்து சீரும் சிறப்புமா வளர்த்த ஆளுக்கு இன்னொரு குழந்தை பத்தின உறுத்தலே இல்லாம இருந்திருக்க முடியும்? இதோபாரு சவி அந்த ஆளால மாமா அவரோட அப்பாவை இழந்துட்டு பரிதவிச்சு நின்ன மாதிரி உயிரோட என்னை இழந்துட்டு நிற்கிற நிலையே அந்த ஆளோட பாவத்துக்கு நான் கொடுக்கிற தண்டனை” என்று அசாத்திய திடத்துடன் தோழியை பார்த்தாள்.
“என்னடி பேசுற என்று அலுத்துகொண்டவள், ஏய் அதுதான் ப்ரீத்தி அங்க உங்கப்பாவை நீ சொல்றதைவிட கொடூரமா தண்டிப்பேன்னு சொல்லிட்டு போயிருக்காளே அப்புறம் நீ எதுக்காக உன்னோட வாழ்க்கையை பணயம் வைக்கற, சரண் பத்தி யோசிக்க மாட்டியா..??
‘இல்லை சவி நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க, என்னை பெத்தவன் அவருக்கு செஞ்ச அநியாயத்துக்கு இந்நேரத்துக்கு மாமாக்கு கல்யாணம் என்றாலே வெறுத்து போயிருக்கும்.., ப்ரீத்தி என்ன சொல்லி அவரை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சான்னு தெரியாது ஆனா அன்னைக்கு அவ வீடியோ அனுப்பி அவர் எனக்கு இல்லைன்னு.. “என்றவளின் குரல் கமற அருகே இருந்த நீரை எடுத்து பருகியவள் மேலும் உறுதியான குரலில்,
“மாமா இல்லாம எனக்கு இனி வாழ்க்கைன்னு ஒன்னு இல்லை, ஆனா என்னோட சுயநலத்துக்காக அவரோட நிம்மதியை கெடுக்க மாட்டேன்… நான் அவர்கிட்ட இருந்து தள்ளி இருக்கிறது தான் அவருக்கு நல்லது, அப்புறம் நீ சொன்னியே…” என்று கண்களை அழுந்த மூடியவள்
“நான் அனுபவிக்கிற வலியே ஒரு நாள் இல்லை ஒருநாள் என்னை கொன்னுடும்னு..”என்று விழிதிறந்து நெஞ்சம் விம்ம தோழியை பார்த்தவள்,
‘அப்படியாவது அந்த வலி என்னை கொன்னுதான் போடட்டுமே உயிரோட இருந்து தினம் தினம் சாகறதுக்கு ஒரேயடியா நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்’ என்று முடிக்கும்முன் அவள் கன்னத்தை பதம் பார்த்தது சைந்தவியின் கரம்.
“ச்சை அறிவு கெட்டவளே என்ன பேச்சு பேசுற…?? இதோ பாரு கீகீ நான் பலமுறை உனக்கு சொல்லிட்டேன் இந்த பேச்சை எடுக்ககூடாதுன்னு ஆனா நீ இதேமாதிரி பேசிட்டு இருந்தா எதை பத்தியும் யோசிக்க மாட்டேன் கண்டிப்பா சரணுக்கு கூப்ட்டுடுவேன் பார்த்துக்கோ” என்று கீர்த்தியை மிரட்ட,
உன்னால் முடியாதுடி என்று கசந்த புன்னகையை கீர்த்தி வெளியேற்றவும் அவள் கூற்று புரியாமல் சைந்தவி பார்க்க “என்ன மறந்துட்டியா..?? என்று புருவம் உயர்த்தியவள் எந்த சூழலிலும் சரணுக்கு கால் பண்ண மாட்டேன்னு உன் பொண்ணு மேல சத்தியம் பண்ணி இருக்க சவி ஒருவேளை நீ அதை மீறுற மாதிரி தெரிஞ்சா , எனக்கும் வேற வழி இல்லை என்று விரக்தியாக புன்னகைத்து கொண்டவள் நீ தேடினாலும் கிடைக்காத தூரத்துக்கு போயிடுவேன்” என்று பதிலுக்கு மிரட்டினாள்.
ப்ச் என்னடி இது.. என்றவளின் விழிகளும் வேதனையை தத்தெடுக்க “உன்னையும் உங்க அப்பாவையும் தண்டிக்க நினைக்கிற உனக்கு நீ இல்லாம ப்ரீத்திகூட வாழகூடிய வாழ்க்கை உன்னோட சேர்த்து சரணுக்கும் தான் தண்டனைங்கிறது ஏன் உனக்கு புரியலை அதை எப்ப உணரபோற??” எனவும்…
தோழியின் கேள்விக்கு பதில்கூற முடியாமல் சில கணங்கள் விழித்தவள் “இல்லை எனக்கு அதெல்லாம் தெரியாது, நான் மாமாக்கு பொருத்தமானவள் இல்லை..” என்றவளின் மூச்சு காற்றும் சீரற்று போக ஆழ்ந்த மூச்சை எடுத்தவாறே …
“அவ… அவரு அவருக்கு நான் வேண்டாம் அதா… அதான் என்று கண்ணீரை கட்டுபடுத்திகொண்டே சைந்தவியை ஏறிட்டவள் அதான் மாமா அவளை நா… நான்னு நெனச்சிட்டு…” என்றவளுக்கு தன்னவன் ப்ரீத்தியுடன் வாழ்வை தொடங்கி இருக்ககூடும் என்ற நினைவையே அறவே வெறுத்துதவிக்கையில் அதை மேலும் அதிகரிப்பது போல அவள் கர்ப்பம் தரித்திருக்கும் செய்தி நிதர்சனத்தை எடுத்துரைக்க அதை ஏற்கவும்முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் தவித்தவள் இயலாமையில் மடங்கி அமர்ந்து முகம் பொத்தி கதற தொடங்கியிருந்தாள்.
“ஏன் கீகீ என்று அவள் முகத்தை நிமிர்த்தியவள்அழுகை எல்லாத்துக்குமே தீர்வாகாது அந்நேர வலியை போக்குமே தவிர, பிரச்னையை தீர்க்காது… அழற நேரத்துல அடுத்து என்னன்னு யோசிச்சாலே பல பிரச்சனைகள் தீர்ந்துடும்…” என்றவள் அவள் முகத்தை துடைத்து….
“எதுக்கு நீயும் கஷ்டப்பட்டு சரணும் கஷ்டப்பட்டுட்டு…. போதும்டி உங்க அப்பாவால அவர் பட்டதே போதும் இனியும் அவரை தண்டிக்காதே.., இப்போ சொன்ன பாத்தியா நீ அவருக்கு பொருத்தமானவள் இல்லைன்னு இன்னொருமுறை அதை சொல்லாத யு போத் மேட் பார் ஈச் அதர்… அங்க உன்னோட இடத்துல வேணும்னா ப்ரீத்தி இருக்கலாம் ஆனா கண்டிப்பா சரண் மனசுல நீதான் இருப்ப” என்றாள்.
இது எனக்கேதெரியாதா..!! என்பதாக ஒரு பார்வை பார்த்தவளுக்கு தானே தெரியும்அவனை ஏற்கவும் முடியாத விலக்கவும் முடியாத திரிசங்கு சொர்க்கத்தில் தவித்து கொண்டிருப்பவளின் வேதனைக்கு முடிவு என்பதே இல்லை என்று ..!!