பல நாட்களாக பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வசுமதி இவர் கவனத்தை ஈர்க்க அடுத்த ஒரு மாதத்தில் காதல் என்ற பெயரில் வசுமதியை தன்மீது பித்தாக்கி சுற்ற வைத்திருந்தார் பிரகாசம்.
ஆம் இரண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் வசுமதி இப்போதெல்லாம் பள்ளிக்கு செல்வதே வீடு திரும்பும் நேரத்தில் பிரகாசத்தை தோப்பில் சந்திப்பதர்காகவே என்று ஆகிவிட்ட நிலை.
பெற்றோர் இருவருமே படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் மகள் தாமதத்திற்கு தினமும் கூறும் விதவிதமான பொய்களை எளிதாக நம்பிடும் நிலையில் மாலை வேளைகளில் கிடைக்கும் ஒரு மணிநேரத்தில் தன்னை கொண்டாடும் காதலன் அருகாமையில் உலகம் மறந்திருப்பவருக்கு எதை பற்றிய நினைவும் இல்லை.
எளிதாக ஆண்களின் வலையில் விழுந்து வாழ்வை தொலைப்பதே பெண்களின் சாபக்கேடோ என்னவோ துரதிர்ஷ்டவசமாக வசுமதியும் அவர்களில் ஒருவராகி போனார்.
மாநிறமான அவருக்கு எப்போதுமே தன் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மை அதிகம் அதிலும் தன்னுடன் பயிலும் சில மாணவிகளின் நிறத்தோடு தன்னை ஒப்பிட்டு மறுகுபவருக்கு தினமும் தன் அழகை வர்ணித்து தன் பெண்மையை ஆராதிக்கும் பிரகாசத்தின் மீது காதல் வாராதிருந்தால் தான் அதிசயம்! அதிலும் அக்காதல் அதன் அடுத்தடுத்த படிநிலைகளை எட்டி பிரகாசத்தின் இச்சையை தீர்க்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யபடவேண்டும்.
திரைப்படங்களின் உபயத்தால் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பருவ வயதிற்கே உரிய கற்பனைகளில் உலாவும் பெண்ணை காதல் எனும் போர்வையில் பெண்டாள்வது பிரகாசத்திற்கு மிக எளிதாகி போக, ஆண் பெண் உறவு குறித்த எவ்வித புரிதலும் இல்லாத அக்காலத்து பெண்ணான வசுமதிக்கு பிரகாசத்தின் வார்த்தைகளே தெய்வவாக்கு என்ற நிலையில் அவரின் அத்துமீறல் குறித்த அச்சம் இருந்தாலும் அவரைதடுக்க எந்நிலையிலும் அவர் முற்படவில்லை.
அப்போது மட்டுமல்ல அதன் விளைவாக இருமுறை வசுமதியின் உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அறிந்து கொண்ட பிரகாசம்மருத்துவரிடம் அழைத்து செல்ல வசுமதி அவரிடம் எதனால் மருத்துவரிடம் வந்திருக்கிறோம் என்று கேட்கும் முன்னமே தன் பேச்சு திறமையால் அவரை சமாளித்தவர் வெற்றிகரமாக அவருக்கே தெரியாமல் மாத்திரைகள் மூலம் ஒன்றரை மற்றும் இரு மாதக்கருக்களை அழித்திருந்தார்.
மற்ற பெண்களை ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உபயோகித்து தூக்கி எறிந்துவிடும் பிரகாசத்திற்கு ஏனோ வசுமதியிடம் பெற்ற போதை அவரை விட்டு அத்தனை எளிதாக விலக விடவில்லை.அதனால் வருடம் கடந்தும் வசுமதியை உபயோகித்து வந்தவர் மூன்றாவது முறையாக அவர் கருவுற்றபோது சட்டென்று மாயமாகி போனார்.
பன்னிரண்டாம் வகுப்பில் இருந்த வசுமதி காதலனை காணாமல் தவித்து துடித்தவர்நித்தமும் அவர்கள் சந்திக்கும் நேரத்தில் தோப்பில் கால்கடுக்க நின்று தோற்று போய் வீடு திரும்பியது தான் மிச்சம்.
மாதங்கள் மூன்றை கடந்தும் பிரகாசத்தை காணாமல் தவித்தவருக்கு அவரை எவ்வாறு நெருங்குவது என்று புரியவில்லை. ஆம் அவருடனான காதல் காலங்களில் வசுமதிக்கு இருவருக்கிடையிலான வயது வித்தியாசம் மட்டுமல்ல பிரகாசத்தின்பெயர் தவிர அவர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியாது… அந்தோ பரிதாபம் குனிந்த தலை நிமிராமல் சென்று வருபவர் கட்சி தலைவரின் வீட்டை கடக்கும் போது அங்கு குமிந்திருக்கும் கரை வேட்டிகளின் மீதான இயல்பான அச்சம் தலையை மேலும் தழைத்து கொள்ள செய்ய பிரகாசம் குறித்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் போனது.
பதின்ம வயது பெண்ணான அவருக்கு காதல் கண்ணை மறைத்திருக்க இதோ இன்று வருவார் நாளைவருவார் என்று பிரகாசம் மீதான நம்பிக்கை வசுமதியை பள்ளியை புறக்கணித்து தினமும் அவர் வரவை எதிர்பார்த்து காலை முதலே தோப்பில் காத்திருக்க வைத்திருந்தது.
அவர் காத்திருக்கலாம் ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருக்காதேவாந்தி மயக்கம் போன்ற முதல் நிலை அறிகுறிகள் இல்லையென்றாலும்இரட்டை குழந்தைகள் என்பதால் மசக்கையின் நான்காம் மாத தொடக்கத்திலேயே வயிறு நன்கு தெரிய தொடங்கிட அப்போது தான் மகளின் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவர் தாயின் கருத்தை கவர பெரும் பதட்டத்துடன் மகளிடம் விசாரித்தவருக்கு அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் புரிந்து போக அதிர்ச்சியில் பேச்சின்றி நெஞ்சில் கரம் வைத்து மடங்கி அமர்ந்தவரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.
புத்தகத்தை சுமக்கும் வயதில் பிள்ளையை சுமந்திருக்கும் மகளை அதுவும் காரணமானவனின் பெயரை தவிர வேறு விவரம் எதுவும் தெரியாத நிலையில் இருப்பவளை காணும் தாயின் நிலையை சொல்லில் வடிக்கவும் வேண்டுமா என்ன..!! நெஞ்சம் விம்ம தாயின் கண்ணீர் எதனால் என்று புரியாமல் அழுது கொண்டிருக்கும் மகளை பார்த்தவருக்கு தன் தவறு புரிய தொடங்கியது.
பின்னே எத்தனை பெரியவர்களானாலும் எத்தகைய உயரத்தை எட்டினாலும் பிள்ளைகள் என்றுமே பெற்றவர்களுக்கு மழலை மணம் மாறாத குழந்தையாக தானே தெரிவர்! அதுபோலவே இங்கு வசுமதியின் தாய்க்கு பருவமடைந்த மகளின் அபார வளர்ச்சியோ, எழிலோ கருத்தில் படாமல் போக தினமும் மூன்று வேலை சமைத்து கட்டி கொடுத்து மகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டுமே தன் தலையாய கடமை என்றிருந்தவருக்கு தன் தவறை வலிக்க வலிக்க சாட்டை கொண்டு விளாசி புரிய வைத்துவிட்டார் அவர் மகள்.
உரிய வயதில் பெற்றவர்களின் கவனிப்பும், வழிகாட்டுதலும், கண்டிப்பும்தவறும் பட்சத்தில் குழந்தைகளை குற்றம் சொல்லி பிரோஜனம் இல்லை. அதிலும் பதின்ம வயதில் இருக்கும் பெண்ணுக்குள் நூறு மாற்றங்களும் அதை தொடர்ந்து ஆயிரம் கேள்விகளும் முளைக்கும் அவை உரிய நேரத்தில்சரியான நபரிடம் பகிரப்பட்டு லாவகமாக கையாலபடாத பட்சத்தில் விளைவுகள் விபரீதமாகும்.
துளிர்க்கும் முன்னமே சருகாகி போன மகளின் வாழ்வை எவ்வாறு மீட்டெடுக்க போகிறோம்என்ற கேள்வியே அவர் உயிரை உருக்க பலமணி நேரம் செய்வதறியாமல் வழி தெரியாத கானகத்தில் சிக்கி கொண்டவராக தவித்தவர் இறுதியில் கண்ணீரை துடைத்து கொண்டு வருவது வரட்டும் தன்னை கொன்று போட்டாலும் பரவாயில்லை தன் மகளின் வாழ்வு முக்கியம் என்று துணிந்து முடிவெடுத்தவர் கணவரிடம் தெரிவிக்க உச்சகட்ட அதிர்ச்சியில்திகைத்து நின்ற வசுமதியின் தந்தை அடுத்த சில நிமிடங்களில் எடுத்த அவதாரத்தில் தாய் மகள் இருவருமே அரை உயிராய் கிடந்தனர்…
ஏழையாக இருந்தாலும் இத்தனை நாட்கள் மானம் மரியாதையோடு வாழ்ந்து வந்தவரின் கௌரவத்தை இன்று பெற்ற மகளே குழி தோண்டி புதைத்திருக்க கழுத்தில் தாலி இல்லாமல் பிள்ளையை சுமக்கும் மகளோடு தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஏச்சையும் ஏளன பேச்சையும் எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சம் அவரை உயிரோடு கொன்று கூறு போட, இனியும் தாமதித்து பயனில்லை என்று உடனே மகளை மருத்துவரிடம் அழைத்து சென்றார். ஆனால் துரத்ரிஷ்டவசமாக இரட்டை குழந்தைகள் என்பதால் இந்நிலையில் கருகலைப்பு என்பது தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்றுமருத்துவரும் அவர் கோரிக்கையைமறுத்துவிட்டார்.
கெடுத்தவன் யார் என்றே தெரியாத நிலையில் இருந்த ஒரு கதவும் அடைபட்டுவிடஇறுகிய முகத்துடன் மகளை பார்த்த தந்தையின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்த வசுமதி மெல்லிய விசும்பலுடன்,
“அப்.. அப்பா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்ப்பா அவருக்கு நான் தான் எல்லாமே… நிச்சயமா நான் படிச்சி முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாருப்பா நம்புங்க ! என்னைக்கு என்னை பார்த்தாரோ அன்னையில இருந்து என்னை அவரோட மனைவியாதான் நினைக்கிறாராம் நான் இல்லாத உலகத்துல வாழறதுக்கு நரகம் மேல்னு சொல்வாருப்பா அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை ஆனா கண்டிப்பா வருவாரு.. நம்புங்கப்பா” என்று அழுகையோடு அவரை பார்க்க,
மகளின் அறியாமையை கண்டு அவர் கண்களில் நீர் திரண்டிட ‘ப்பாஆஆஅ என்னை மன்னிச்சிடுங்கப்பா‘ என்று கதறலுடன் அவர் காலில் விழுந்தார் வசுமதி.
எவ்வித உணர்வும்இன்றி மனம் சூழ்ந்த வெறுமையுடன் மகளை பார்த்தவர் அமைதியாக வீட்டை சென்றடைய, தடதடக்கும் மனதுடன் தந்தையை பின் தொடர்ந்தார் வசுமதி.தாய் தந்தையரின் அரவணைப்பில் வளரும் பதினேழு வயது பாவையான அவருக்கு இன்னும் தன் வாழ்வு கேள்வி குறியாகி போனதுகூட தெரியவில்லை…
என்றேனும் ஒருநாள் பிரகாசம் வருவார் தன்னை மணம் புரிந்து கொள்வார் தன் குழந்தைகளை கௌரவிப்பார் என்ற நம்பிக்கையே அவரை மேலும் உயிர்ப்புடன் வைத்திருந்தது ஆனாலும் தாய் தந்தையரை இந்நிலையில் நிறுத்தியதை எண்ணிஇரவு முழுக்க அழுது கரைந்தவர் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல சூரியக்கதிர்கள் அவர்கள் குடிசையின் மேற்கூரையை ஊடுருவி அவர் முகத்தில் அறைந்த போதுதான் கண்விழித்தார்..
ஆனால் அன்றைய விடியல் மிகக்கொடுரமானதாக அமைந்திடும் என்று அவர் கனவிலும் எண்ணி பார்த்திருக்க மாட்டார். ஆம் கண்விழித்த வசுமதி கண்டது என்னவோ தன் எதிரே பிணமாகி போயிருந்த தாய் தந்தையரை தான்..!! பெண்ணை விடவும் மானம் மரியாதை பெரிதாகி போகசமூகத்தின் கேள்விகளை எதிர்கொள்ளும் துணிச்சலற்ற அப்பெற்றோர் நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்து கொள்ள வசுமதியின் வாழ்வில் அன்றோடு நிம்மதியற்று போனது…. பெற்றோரின் சடலத்தை கண்ட வசுமதி சர்வமும் ஒடுங்கி போக நிலை குத்திய விழிகளுடன் ஸ்தம்பித்து போனார்.
“வாழ்க்கை என்பது மிக கடினமான ஆசிரியன்” என்பது எத்தனை நிதர்சனமான உண்மை…!!
இதோ வசுமதிக்கான பரிட்சையை வைத்து அதற்கான தண்டனையையும் அளித்தபின் வலிக்க வலிக்க பாடத்தை கற்ப்பிக்க போகிறது.
மாதங்கள் மேலும் இரண்டை கடக்க, வாழ்க்கை எனும் ஆசான் கற்று கொடுத்த பாடமும் ஊராரின் பேச்சும் பார்வையும் அவருக்கு அப்போது புரியாத பல விடயங்களை இப்போது புரிய வைக்க, தான் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்று உணர்ந்தவருக்கு தன்னை குறித்த பேச்சை தன் அறியாமைக்கான பரிசு என்று கடக்க முடிந்தாலும், முகமறியா பூமியை தொட்டிராத சிசுக்களை இழிவாக பேசுவதை தாளமுடியாமல் உள்ளுக்குள் நொறுங்கி போனவர் இனியும் பொறுப்பது முட்டாள்தனம் என்பதால் தன் குழந்தைகளுக்கு நியாயம் செய்ய வேண்டி அவரே பிரகாசத்தை தேடி புறப்பட்டார்.
பெயரை தவிர வேறு எதுவும் தெரியாதவருக்கு ஆரணியில் இருக்கும் பல ஊர்களில் அவரை தேடி பிடிப்பதென்பது மிக சவாலானது தான்…!! ஆனால் பேச்சு வாக்கில் பிரகாசம் ஓரிரு முறை வட்டி பணம் வாங்க வேண்டி நகரில் குறிப்பிட்ட கடையை பற்றி பேசியதில் நினைவடுக்கில் அக்கடையின் பெயரை தேடி களைத்தவர் அதை நினைவு படுத்தமுடியாமல் போனாலும் ஆரணி நகர வீதிகளில் தேடினால் பிரகாசம் கிடைத்து விடுவார் என்ற குருட்டு நம்பிக்கையில் நகரை சுற்றி வர தொடங்கியவர் நாட்கள் மாதங்களை எட்டினாலும் பிரகாசத்தை தேடுவதை நிறுத்தினார் இல்லை.
இரு குழந்தைகளை சுமந்திருக்கும் நிலையில் பேருந்து பயணமும் அதை தொடர்ந்த தேடுதலும் அவரை மேலும் பலவீக்கமாக்கினாலும் சோர்ந்து போகாதவர் முயற்சியை கைவிடாமல் ஒவ்வொரு தினமும் தன் பயணத்தை மேற்கொண்டவரின் அயராத முயற்சியின் பலனாக மேலும் இரு மாதங்கள் கடந்த நிலையில் பிரகாசத்தை கண்டு பிடித்திருந்தார்.
ஆம் அரசியலின் முதல் படியை அவர் எட்டிய தருணம் அது..!!
கட்சி சார்பாக நின்று தங்கள் வார்டில் பெரும் வாக்கு வித்யாசத்தில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்ட பிரகாசம் நன்றி தெரிவித்து நகரம் முழுக்க தலைவருக்கு அவர் அடித்து ஒட்டியிருந்த போஸ்டர் தான் அவரை அடையாளம் காட்டி கொடுத்தது.
போஸ்ட்டரில் பிரகாசத்தின் முகத்தைகண்டதுமே சில நொடிகளுக்கு அசைவற்று போனார் வசுமதி. இத்தனை நாட்களாக இருகுழந்தைகளை சுமந்த நிலையில் தேற்றுவார் யாரும் அற்று, நேரம் காலம் அறியாமல்மழை வெயில் தெரியாமல்பிரகாசத்தை தேடி திரிந்தவருக்கு இப்போது அவர் நிழலை கண்ட நிலையில் அடிவயிற்றில் இருந்து பெரும் கேவல் எழுந்திட வாய் விட்டு கதறி அழ தோன்றியது.
ஆனால் இருக்கும் இடம் நடுவீதி என்பதாலும் இத்தனை நாட்கள் முறையற்று பிள்ளை சுமந்திருப்பதால் சுற்றத்தாரின் ஏளன பார்வைக்கும் அருவருக்கும் பேச்சுக்கும் சொந்தமாகி போயிருந்தவருக்கு இப்போது வீதியில் போவோர் வருவோரின் பார்வைக்கு விருந்தாவதில் உடன்பாடு இல்லை அதனால் பொங்கிய அழுகையை இருகரங்களால் வாய்பொத்தி வெளியேறாமல் அடக்கியவருக்கு கொண்டிருக்கும் உணர்வுகளின் ஆர்பரிப்பால் கண்கள் குளமாகி போவதை தடுக்க முடியவில்லை.
உச்சி வெயிலில் நின்றிருந்தவருக்கு சுட்டெரிக்கும் சூரியனின் தயவால் உற்பத்தி ஆகிய வியர்வையும் விழிகளில் பெருக்கெடுத்த நீரும் அவர் காணும் காட்சியைமறைக்க இமை சிமிட்டி முந்தானையால் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு மீண்டும் பிரகாசத்தின் முகத்தை கண்டவருக்கு இருண்ட வானில் மின்னல் கீற்றாக நம்பிக்கை ஊற்றெடுக்க தொடங்கியது.
நம்பிக்கை விதை அவர் நெஞ்சில் விழுந்த கணமே தன் வாழ்வை மீட்டெடுக்கும் உறுதியுடன் பிரகாசத்தை தேட கிளம்பியவரின் முன் பிரகாசமே வந்து நின்றிருந்தார்.
ஆம் ‘சாத்தானை நினை உடனே வந்து நிற்கும் !!‘ என்பார்களே அதுபோல போஸ்டரை பார்த்து கொண்டிருந்த வசுமதி பிரகாசத்தை தேடி கிளம்ப முற்படுகையில் அவர் அருகே வேகமாக வந்த கார் ப்ரேக்கிட்டு உரசிக்கொண்டு நின்றது.
வேகமாக வந்த வாகனம் தடுப்புகருவியை அழுத்தமாக அழுத்தியதில் கிரீச்சிட்டு வசுமதியை உரசி நிற்க அதை எதிர்பாராமல் திடுக்கிட்டு போன வசுமதி பயத்தில் வயிற்றை சுற்றி தன் கரங்களை படரவிட்டு பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்தவாறு ஒரெட்டு பின் வைத்திருந்தார். அன்னிச்சையாக அவர் கண்கள் காரின் உள்பகுதியை ஆராய அங்கு கண்ட காட்சியில் மேலும் திகைத்து போனார்.
ஆம் காரினுள் அவர் கண்டதென்னவோ தன் மீது பதித்திருந்த பார்வையை அகற்றாது ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரகாசத்தை தான்…!!!
காண்பது கனவோ என்று அதிர்ந்து நின்றவருக்கு கண்களை இருட்டி கொண்டு வந்ததுபின் நிஜம் புரிபட அவரை கண்ட மகிழ்ச்சியில் வசுமதியின் விழிகள் கண்ணீரை உகுக்க தொடங்கிட அதற்குள் கார் கதவை திறந்த பிரகாசம் அவரை ஏறுமாறு பணிக்கவசுமதியும் இன்னும் திகைப்பில் இருந்து மீளாதவராக எந்த கேள்வியும் கேட்க தோன்றாமல் அழுகையினூடே ஏறி அமர்ந்தார்.
வாகனம் கிளம்பிய பின்னும் மீள கிடைக்காத சொர்க்கத்தை கண்டவருக்கு எங்கே கண் சிமிட்டினால் தான் காண்பது கனவாகி போகுமோ என்ற அச்சத்தில் அகலாத பார்வையை பிரகாசத்தின்மீதே செலுத்தியவர் நாசி விடைக்க விம்மும் மனதில் தைரியம் வரபெற்றவராக, “ஏன்.. ஏன் விட்டுட்டு போனீங்க என்னை தேடி வ… வரலை எல்லாரும் சொல்ற மாதிரி நான்…, நீங்க என்.. என்னை ஏமாத்திட்டீங்களா..?? என்று திணறியவருக்கு அதற்கு மேலும் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் போக தலை குனிந்து மேலும் கதற தொடங்கினார்.
தாய் தந்தையை எண்ணி, தன் அறியாமையை எண்ணி இத்தனை மாதங்கள் பட்ட அவமானங்களை எண்ணி இழந்த பருவத்தை எண்ணி என்றுஅனைத்திற்கும் சேர்த்து வைத்து வசுமதி கண்ணீர் வடிக்க தொடங்கினார்.
இறுகிய முகத்துடன் அவரை பார்த்து கொண்டிருந்த பிரகாசத்தின் முகத்தில் மேலும் கடுமை கூடிட அதே கணம் இத்தனை நேரமாக அவர் அடக்கி வைத்திருந்த வன்மம் பலமாக தலை தூக்கிட ஸ்டேரிங்கில் பதிந்திருந்த அவர் கரங்களோ இப்போதே வசுமதியின் கழுத்தை நெறித்துவிட துடித்து கொண்டிருந்தது.. ஆனால் இருக்கும் சூழல் அதை செய்யவிடாமல் தடுக்க தன்னை கட்டுபடுத்தி கொண்டு சிவப்பேறிய விழிகளுடன் அவரையே வெறித்து கொண்டிருந்தார்.
பின்னேஇத்தனை நாட்கள் தீபிகாவுடனான திருமண வாழ்வையும் அரசியல் வட்டத்தில் தலைவரின் மாப்பிள்ளை என்ற போதையையும் தடை இன்றி அனுபவித்து கொண்டிருந்தவருக்கு அவரின் கனவுகளை தவிடு பொடியாக்கும் நிலையில் வந்து நிற்கும் வசுமதியை ஆரத்தழுவி ஆரத்தி எடுத்தா வரவேற்க முடியும்?
பொதுவாகவே அதிர்ஷ்டம் எப்போது எத்திசையில் யார் மூலம் வரும் என்று கணிக்கமுடியாது அதுபோல தான் பிரகாசத்தின் வாழ்விலும் அவரே எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டிருந்தது. கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கும் என்ற பழமொழி அவர் வாழ்வில் சாத்தியமான தருணத்தில் அதிர்ஷ்ட தேவதையின் பார்வையை முழுமையாக பிரகாசத்தின் மீதுபட அடுத்தடுத்து அவரே எதிர்பாரா பல நிகழ்வுகள் அவர் வாழ்வில் நடைபெற தொடங்கவும் சொர்க்கமே நழுவி அவர் கைசேர்ந்த மகிழ்வில் திளைத்து இருந்தார் பிரகாசம்.
ஆம் அவர் சார்ந்திருந்த கட்சியின் தலைவர் பலவருட உழைப்பின் பலனாக சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான அளவில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகி இருந்தார். ஜாதி கட்சி என்று பரவலாகஅடையாளபடுத்த பட்டிருந்தாலும் கொண்ட கொள்கைகளாலும் அணுகுமுறையாலும் பலகட்ட போராட்டத்திற்கு பின் சட்டமன்றத்தில் தன் கால் தடம் பதிக்கிறார் அதுவும் நாற்பதிற்கும் மேற்பட்ட தன் கட்சியை சார்ந்த வெற்றியாளர்களுடன்.. இத்தனை நாட்கள் அவசியத்திற்கு மட்டுமேசென்னை பயணம் மேற்கொண்டவர் அடுத்துமுதல்வர் நாற்காலியை குறிவைத்து இப்போது நிரந்தரமாக சென்னையில் குடியேறிவிட்டார்.
ஆனால் வாரம்தோறும் சொந்த தொகுதிக்கு வருபவர் மக்களையும் கழக உறுப்பினர்களையும்சந்திக்க ஒருபோதும் தவறியதில்லை. அத்தகைய ஒரு சந்திப்பின் போது தோட்டத்தில் நின்று மக்களின் குறைகளை கேட்டுகொண்டிருந்தவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்மூடித்தனமான தாக்குதல்நடைபெற அவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து ஓட்டமெடுத்திருக்க அந்நேரம் தனக்கு மூன்றுமுறை வெட்டு காயம் பட்டாலும் அதை பெரிதும் பொருட்படுத்தாமல் தன்னுயிரை பணயம் வைத்து தலைவரின்உயிரை காத்திருந்தார் பிரகாசம்.
அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல் அத்தலைவரின் துரதிரிஷ்டமாக இருந்தாலும் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை முதல்முறை பிரகாசத்தின் மீது பட்ட தருணம் அது..!!பல வருட முயற்சிக்கு பின் தலைவரின் வீட்டினுள் நுழையும் அளவு செல்வாக்கு பெற்றிருந்த பிரகாசம் அவரை காப்பாற்றியதன் மூலம் இப்போது அவர் மன புத்தகத்தில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
ஏற்கனவே பிரகாசத்தின்மேடை பேச்சுக்களை கேட்டிருந்தவருக்கு அவரது எழுச்சி மிகு ஆற்றலும்கூட்டத்தை தன் பேச்சால் கட்டிபோடும் திறனும் கட்சியின் கொள்கைகளை எடுத்து செல்லும் விதமும் பிடித்திருக்க, இப்போது எதை பற்றியும் யோசிக்காமல் தன் உயிரை காத்த தன்னலம் பேணா குணமும் சேர்ந்துகொள்ள துடிப்பான இளைஞனான பிரகாசமே திருமண வயதில் நிற்கும் தன் மகள் தீபிகாவிற்கு ஏற்ற ஜோடி என்று முடிவெடுத்துவிட்டார்.