அத்தியாயம் 26
கலக்டர் அலுவகம்.
தன் அறையில் அமர்ந்திருந்தான் நந்தா. அப்பொழுது அமைச்சரிடம் இருந்து ஃபோன் வந்தது. வேலை சம்பந்தமாகப் பேசியவர் அது சம்பந்தமான பேப்பர்களுடன் உடனே தன்னை வந்து சந்திக்கும்படி கூற, அது கான்ஃபிடென்ஷியல் ஃபைல் என்பதால், அலுவகத்தில் வைக்காலம், தன் வீட்டில் உள்ள அலுவக அறையில் வைத்திருந்தான் நந்தா.
“ஹால்ஃப் அன் ஹவர்ல வரேன் சர்.” சொல்லிவிட்டு வைத்தவன், பியுனை அழைத்துத் தகவல் சொலிவிட்டு, “என்னைப் பார்க்க யாராவது வந்தா, வெயிட் பண்ண சொல்லுங்க.” என்றுவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.
வீடு வந்து சேர்ந்தவன், வீட்டில் யாரும் இல்லாதது கண்டு, காவலாளியிடம் கேட்க, “மேடம் கடைக்குப் போறேன்னு சொல்லிட்டு போனாங்க சர்.” என்றான் காவலன்.
சரி என்றுவிட்டு தன் வேலையில் மூழ்கினான். அலுவல் அறைக்குச் சென்றவன், அமைச்சரை பார்க்க போகும் போது எடுத்து செல்ல வேண்டியை ஃபைலை தேடி எடுத்தான். மீண்டும் ஒரு முறை எல்லாம் இருக்கிறதா என்று பார்க்கையில் அப்பொழுதுதான், இன்னும் சில பேபர்கள் பிரிண்ட்அவுட் எடுக்காமல் விட்டு வைத்திருந்தது நியாபகத்திற்கு வந்தது.
கடந்த சில நாட்களாக அலுவல் அறையில் இருக்கும் பிரிண்டர் வேலை செய்யாமல் இருப்பதால், படுக்கை அறையில் இருக்கும் மற்றொரு பிரிண்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக, தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்றான்.
கட்டிலில் மாதுரியின் லேப்டாப் திறந்து கிடந்தது. ‘ஏதோ வேலை பார்த்துட்டு இருந்திருப்பா போல!’ நினைத்துக்கொண்டு தனது லேப்டாப்பை கட்டிலில் வைத்தவன், பிரிண்டரில் அதைக் கனெக்ட் செய்துவிட்டு, தேவையான காகிதங்களைப் பிரிண்ட் கொடுத்தான். பின் அதில் சிலவற்றைச் செராக்ஸ் எடுப்பதற்காகப் பிரிண்டரின் மேல் மூடியை திறக்க, நகல் எடுக்கும் காகிதத்தை வைக்கும் கண்ணாடியின் மேல், அவனின் பேங்க் பாஸ்புக் இருந்தது.
“இது எதுக்கு இங்க இருக்கு?” என்று சொன்னவன், ‘ஒரு வேலை என்னைக்காவது நான் எடுத்து மறந்து வச்சுட்டேனா?’ என்று யோசித்துப் பார்த்தான். இல்லை, இந்தப் பாஸ்புக் மட்டுமில்லை, கடந்த சில மாதங்களாகவே, ஆன்லைன் ட்ரான்சாக்க்ஷன் மட்டுமே செய்துகொண்டு இருப்பதால், பேங்க் பக்கம் கூடப் போகவில்லை. அப்படி இருக்கையில் இது எதற்கு இங்கு வந்தது?
உடனே பாஸ்புக்கை எடுத்துப் பார்த்தான். அன்றைய தேதி வரை, வரவு செலவு கணக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. உடனே அவனுக்குச் சந்தேகம் வந்தது. அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தான். மனைவியின் லேப்டாப் கட்டிலில் திறந்த நிலையில் இருந்தது. உடனே சென்று, அதைத் திருப்பிப் பார்த்தான். பென்றைவ் ஒன்று சொருகப்பட்டிருக்க, அதில் ஏதேதோ ஆடியோ, வீடியோ டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருந்தது. சந்தேகத்தின் பேரில் சிலவற்றை ஓபன் செய்து பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்து போனான்.
அனைத்தும் அவனின் லேப்டாப்பில் அவன் சேமித்து வைத்திருந்த ஃபைல்கள். நரசிம்மனுடன் பேசிய ஆடியோ, வீடியோ என ஒன்று விடாமல் அனைத்தும் இருக்க, கூடுதலாக அவனின் மொபைல் கால் ரிகார்ட்ஸ், வாட்சப்ப் சேட் மெசேஜஸ் என்று அனைத்தும் இருந்தது.
கோபம் சுர்ரென்று ஏற, மாதுரியை ஆங்கிலக் கெட்ட வார்த்தையால் திட்டியவன், “என்னையே வேவு பார்த்துட்டு இருந்துருக்கியா?! நீ வீட்டுக்கு வாடி! உன்னை வச்சுக்கிறேன்!” என்று கர்ஜித்தான், உடனே லேப்டாப்பை ஹாலுக்குக் கொண்டு வந்தவன், அதில் இருந்து பென்றைவை உருவிவிட்டு, சுத்தியல் கொண்டு லேப்டாப்பை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டு, மொதர்போர்ட், ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட சில பாகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்.
தன் மனதில் எறியும் கோப ஜுவாலை போல எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பார்த்தபடி, சோஃபாவில் ஐயனார் போலக் கோபத்துடன் அமர்ந்திருந்தான் நந்தகுமார்.
[the_ad id=”6605″]
நந்தா வேலையில் இருந்து திரும்ப இரவு ஆகிடும் என்று நினைத்துக்கொண்டு தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய மாதுரி, வீட்டில் அவன் இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
வேகவேகமாகப் படிகளில் ஏறி, வீடிற்குகுள் நுழைந்தவள் கண்ணில் பட்டது, ஹாலின் மையத்தில் கருகிய நிலயில் கிடந்த லேப்டாப் பாகங்களும், சோஃபாவில் கோபமாக அமர்ந்திருந்த நந்தாவும் தான்.
தன் கையில் இருக்கும் பெண்ட்றைவை வெறித்தபடி அமர்ந்திருந்தவனின் முகம் எந்த நொடியும் வெடித்துச் சிதற காத்திருக்கும் எரிமலை போலக் காட்சி அளித்தது. அவன் கையில் இருக்கும் பெண்ட்றைவின் மேல் அவள் பார்வை போனது, உடனே புரிந்துபோனது அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று.
ஆயினும் அவனிடம் ஒரு பெண்ட்றைவ் மட்டுமே சிக்கி இருக்கிறதா இல்லை எல்லாமே மாட்டியுள்ளதா என்று யோசித்தவள், நந்தா பார்க்காத நேரம் தூரத்தில் தெரிந்த கிட்சன் கேபிநெட்டை ஓரக்கண்ணால் பார்த்தாள். நல்லவேளை அது திறக்கபடாமல் அப்படியே இருந்தது. மனதுக்குள் நிம்மதி அடைந்தாள். நெஞ்சில் ஒரு பலம் வந்து ஒட்டிக்கொண்டது.
கணவனைப் பார்த்தாள். அவனிருக்கும் கோபத்திற்கு நிச்சயம் தன்னைக் கொலை கூடச் செய்வான் என்று புரிந்துபோனது. ஆனாலும் அவள் பயப்படவில்லை. நின்ற இடத்தில அப்படியே கல் மாதிரி திடமாக நின்றாள். ‘வரட்டும்! இன்னைக்கு என்ன நடந்த்தாலும் சரி, அவனைக் கொன்னாவது, அவனோட சுயரூபத்தை இந்த உலகத்துக்குக் காட்டாம விடக்கூடாது!’ மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.
மனைவி வந்துவிட்டதை அவளின் நிழல் உருவம் தெரிவிக்க, நிமிர்ந்து மாதுரியை பார்த்த நந்தாவின் கண்களில் கொலை வெறி! சோஃபாவில் இருந்து எழுந்தான். நேரே அவளை நோக்கி சென்றவன், தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட, இடியென விழுந்த அறையில், தூர போய் விழுந்தாள் மாதுரி.
வேகவேகமாக மனைவியின் அருகில் வந்த நந்தா, அவளின் முடியை கொத்தாக பற்றித் தூக்கினான். உயிர் போகும் வலி இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், கீழ் உதட்டை பற்களால் அழுத்த கடித்தபடி கணவனை முறைத்துப் பார்த்தாள் மாதுரி.
“எத்தனை நாளா இந்த வேலை பார்த்துட்டு இருக்க? ம்ம்ம்!! சொல்லுடி! எத்தனை நாளா இந்த வேவு பார்க்கிற வேலை?!” கர்ஜித்தான்.
கணவனின் கண்களை நேருக்கு நேராக அனல் பார்வை பார்த்த மாதுரி, “இதே கேள்வியை நான் கேட்கிறேன், எத்தனை நாளா இந்தத் திருட்டு வேலை? சொல்லு டா? எத்தனை நாளா இந்த ஈன வேலை பார்த்துட்டு இருக்க?” சத்தமில்லாமல் அதே நேரம் அழுத்தமாகக் கேட்டாள்.
மாதுரி ‘டா!’ என அழைத்ததில் வெறிகொண்ட நந்தா, மீண்டும் மாதுரியின் கன்னத்தில் அறையை, அடுத்த நொடி அவன் கன்னத்தில் மாதுரியின் ஐந்து விரல்கள் சாட்டையெனப் பதிய, கன்னம் காந்தியது அவனுக்கு.
கணவனைப் பதிலுக்கு அடித்திருந்தாள் மாதுரி!
“ஹவ் டேர் யு? யு ப்ளட்டி பி*****” ஆங்காரத்துடன் ஆங்கிலக் கெட்ட வார்த்தையை உதிர்த்தவன், “என்னைக்கு என்னையே வேவு பார்க்க ஆரம்பிச்சியோ, இனி உன்னை உயிரோட விடக்கூடாது டி!” சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவன், சற்று முன்பு லேப்டாப்பை எரித்துவிட்டு வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அதன் மூடிய திறந்து, திரும்பி அவள் மேல் ஊற்ற போன நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
ஏனெனில் மாதுரியின் கையில் தீ குச்சி ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
“வா! வந்து ஊத்து டா! ம்ம்! கமான்! யு பாஸ்டர்ட்! தில்லு இருந்தா கிட்ட வா டா!” ஆக்ரோஷமாகக் கத்தியவள் தீ குச்சியை அவன் மேல் தூக்கி வீசுவது போலப் பாவனைச் செய்து, “வா நாம ரெண்டு பேருமே செத்து போவோம். ம்ம் ஊத்து!” எனக் கர்ஜித்தாள்.
“மரியாதையா அதைக் கீழ போடுடி!” மிரண்டபடி கூறினான் நந்தா!
“நீ தானே என்னைக் கொல்லணும்னு சொன்ன, அதான் உனக்கு ஹெல்ப் பண்றேன். கிட்ட வா!” சொல்லிக்கொண்டே அவள் முன்னேற, அவன் பின்னே நகர்ந்தான்.
[the_ad id=”6605″]
“எவ்வளவு பதவி வெறி டா உனக்கு!! சி.எம்மையே கொலை செஞ்சிருக்க! என்னைப் பைத்தியம் ஆக்குறதுக்கு மாத்திரை கொடுத்திருக்க! எனக்கே தெரியாம அந்த நரசிம்மன் பொண்ணுகூட ஊர் மேய்ஞ்சுட்டு இருந்திருக்க! போயும் போயும் உன்னை லவ் பண்ணேன் பாரு! என்னைச் செருப்பால அடிக்கணும். த்தூ!” அவன் முகத்திலேயே காரி துப்பினாள்.
“ஏழைன்னு பாகுபாடு பார்க்காம, உன்னை ஏத்துகிட்டு தன் வீட்டு மாப்பிளை ஆக்குனாரே என் அப்பா, அவரையும் கொலை செஞ்சிருக்கியே. அந்த நல்ல மனுஷனை கொல்ல எப்படி டா உனக்கு மனசு வந்தது? நன்றி கெட்ட நாயே!” ஆங்காரத்துடன் கத்தியவளின் குரல், தந்தையின் நினைவில் உடைந்தது.
கன்னத்தில் வழியும் கண்ணீரை அழுத்த துடைத்தவள், “உன்னை மாதிரி பதவி வெறி பிடிச்ச கேடு கெட்டவன், இனி எனக்குத் தேவை இல்லை! உன்னைப் பத்தின எல்லா உண்மையையும் இந்த ஊருக்கு சொல்லாம விட மாட்டேன். கூடிய சீக்கிரம் உன்னை ஜெயில்ல தள்ளி கலி திங்க வைக்கிறேன் டா.” ஆக்ரோஷத்துடன் சொன்னவள், அடுத்த நொடி “அம்மா!!” என்ற அலறலுடன், உடல் வெட்டிக்கொள்ளத் தொப்பென்று கீழே விழுந்தாள்.
அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான் கௌஷிக்.
அவன் கையில் டேசர் அல்லது ஸ்டன் துப்பாக்கி என்று சொல்லப்படுகிற ஒரு வகைத் துப்பாக்கி இருந்தது. தாக்க முயற்சிக்கும் அல்லது முரண்டுபிடிக்கும் குற்றவாளிகளைச் செயலிழக்க செய்யும் அளவுக்குச் சிறிய வகை மின்சாரத்தை அவர்களின் உடலில் பாய்ச்சும் கருவி தான் டேசர் கருவி. மனநல பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதால், தனது பாதுகாப்புக்கு என்று எப்பொழுது வைத்திருப்பான் கௌஷிக். இது சட்டத்துக்குப் புறம்பானது என்றாலும், அவனை யாரும் கேள்வி கேட்டதில்லை.
இதற்கு முன்பு நந்தா இருந்த சமயம், அவன் இங்கு வந்திருந்ததால், இம்முறையும் காவலர்கள் அவனை உள்ளே அனுமதித்திருந்தனர். வந்தவன் மாதுரி பேசியது முழுவதையும் கேட்டுவிட, அவள் கையில் இருந்த தீ குச்சியைப் பார்த்துவிட்டு, சட்டென்று தன் பாக்கெட்டில் இருந்து டேசரை ஆன் செய்து, அவள் சுருண்டு விழும் வரை முதுகில் வைத்து அழுத்தியிருந்தான்.
அளவுக்கு அதிகமான மின்சாரம் உடலில் பாய்ந்ததில், தேள் கொட்டியது போல உடல் விர்ரென்று இழுக்க, சுருண்டு போனாள் மாதுரி.
விழுந்த மாதுரியின் அருகில் வேகமாக வந்த நந்தா, “என்னையே ஒரு செகண்ட் நடுங்க வச்சுட்டா *******” கோபத்துடன் அவளது வயிற்றில் ஒரு எத்து எத்தினான். “அம்மா!” ஈன குரலில் முனங்கினாள். இன்னும் ஆத்திரம் அடங்காமல், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கற்சிலையைத் தூக்கிவந்து மாதுரியின் தலையில் அவன் போடப்போக, சட்டென்று இடைபுகுந்து நந்தாவை தடுத்து நிறுத்தினான் கௌஷிக். அவன் கையில் இருந்த சிலையைப் பிடுங்கி கீழே வைத்தவன், “அவசரப்படாதீங்க சர்! வெளிய போலீஸ் இருக்கு. விஷயம் தெரிஞ்சுது அவ்வளவு தான்.” அவன் காதில் கிசுகிசுத்தான்.
“முடியாது கௌஷிக்! இவ பேசுன பேச்சுக்கு இவளை கொல்லாம விடமாட்டேன். பரதேசி நாய்! ஒரு ஆம்பளை, அதுவும் கட்டின புருஷனை கை நீட்டி அடிக்கிறா?” கௌஷிக்கின் பிடியில் இருந்து திமிறியபடி மாதுரியை அடிக்க முயற்சித்தான் நந்தா.
“செத்துகித்துப் போய்ட போறாங்க சர்.!” இதைச் சொல்லி சொல்லியே நந்தாவை அமைதியடையச் செய்தவன் என்ன விஷயம் என்று கேட்க, நடந்ததைக் கூறினான்.
“இவங்க பேசுறதை கேட்டா, ரீசண்ட்டா இவங்க நீங்க கொடுத்த மாத்திரையைச் சாப்பிடலன்னு தெரியுது. இனி இவங்களை இங்கே விட்டு வைக்கிறது ரிஸ்க். நாம திட்டம் போட்டது மாதிரி பைத்தியக்கார ஹாஸ்பிடலுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு.” அரை மயக்கத்தில் கிடந்த மாதுரியை பார்த்தபடி சொன்னான் கௌஷிக்.
“இப்போ திடீர்ன்னு எப்படி?” நந்தா சந்தேகமாகக் கேட்க,
“ஏற்கனவே இவங்களுக்கு லேசா மெண்டல் இசியு இருந்தது தானே?”
“ஆமா!”
“இப்போ அது முத்திடுசுன்னு ஒரு பொய்யை பரப்பிவிடுங்க! சிம்பிள்!”
“புரியல!”
[the_ad id=”6605″]
“எங்கையோ போயிட்டுக் கோபமாக வீட்டுக்கு வந்தாங்க. காச் மூச்சுன்னு கத்தினாங்க. திடீரென்னு குழந்தையைத் தூக்கி மாடியில் இருந்து கீழ தூக்கிப்போட பார்த்தாங்க. நான் எப்படியோ குழந்தையைக் காப்பாத்திட்டேன், இப்படித்தான்.” ஒரு பெண்ணின் வாழ்கையை அழிக்கிறோம் என்ற குற்றஉணர்வு இல்லாமல் அசால்டாகச் சொன்னான்
நந்தா முகத்தில் இப்பொழுது ஒரு பிரகாசம். “நீ சொல்றதும் சரி தான். அப்படியே செஞ்சுடலாம்.”
“முதல்ல மெண்டல் ஹாஸ்பிடலுக்கு ஃபோனை போடுங்க. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்.”
கௌஷிக் சொன்னபடி, நந்தா செய்ய அடுத்த அரை மணிநேரத்தில் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து வாகனம் வந்தது. அவர்களிடம் பொய் கதை சொன்ன நந்தா, வீட்டில் சிதறி கிடந்த பொருட்களைக் காட்ட, கலக்டர் சொன்னதை நம்பிய மருத்துவ உதவியாளர்கள், கீழே மயங்கி கிடந்த மாதுரியை ஸ்ட்ரெட்சரில் தூக்கிக்கொண்டி செல்ல, நந்தாவின் தோளில் இருந்த குழந்தை, கண்மூடி படுத்திருக்கும் தாயை நோக்கி விரல்நீட்டி தாவமுயற்சி செய்தபடி வாயில் எச்சில் ஒழுக கதறி அழுதது.
நந்தாவிடம் சைகை செய்துவிட்டு, வந்தவர்களுடனே கிளம்பி சென்றான் கௌஷிக்.