“டிங் டாங்ங்ங்!” வீரிட்டு கத்திய அழைப்பு மணி சத்தம் கேட்டு, தூக்கத்தில் இருந்து கஷ்டப்பட்டு எழுந்து வந்து கதவை திறந்தான் மிதுன்.
கையில் இரண்டு மூன்று பிளாஸ்டிக் கவர்களுடன் அவன் எதிரில் நின்றிருந்தாள் சஞ்சனா.
இரண்டு மூன்று முறை கண்களைச் சிமிட்டி சிமிட்டி பார்த்த மிதுன், ‘ங்கே!’ என்பது போலப் பார்வையை அவள் மேல் வீசினான். பின் என்ன தோன்றியதோ, அவள் தோளில் கைவைத்து சற்று நகர்த்தியவன், உள்ளே இருந்து தலையை மட்டும் எட்டி, வராண்டாவின் இரு பக்கமும் பார்த்தான். ‘என்ன பண்றான் இவன் லூசு மாதிரி’ என்றபடி சஞ்சனா அவன் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ பார்த்துவிட்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு, “கனவா இருக்கும்!” எனச் சொல்லிவிட்டு கதவை அடைத்துவிட்டுச் சென்றான்.
“அடேய்!!” என்று பல்லை கடித்த சஞ்சனாவோ, இம்முறை அழைப்பு மணியைச் சற்று அழுத்தமாகவே அடித்தாள்.
“கனவுல கூட நினைச்சதை சாதிக்கணும் இவளுக்கு!” புலம்பியபடி கதவை திறந்த மிதுன், இப்பொழுதும் அவள் அதே பொசிஷனில் நிற்பதை பார்த்துவிட்டு, “கனவு மாதிரி தெரியலையே! ஒரு வேளை இந்தப் பிசாசு உண்மையாவே வந்திருக்கா?” என்று சத்தமாகவே சொல்லிவிட, வாட்டர் பாட்டில் தண்ணியை அவன் முகத்தில் ‘பொலீச்ச்’ என்று அடித்திருந்தாள், அவனின் அழகான ராட்சசி.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, பத்ரகாளி போல நின்றிருந்த சஞ்சனாவை பார்த்ததும், ‘வந்துட்டாயா! வந்துட்டாயா!’ என்றான் மிதுன். கவலைபடாதீங்க இப்போ மனசுக்குள்ள தான்!
‘ஈ’ எனப் பல்லைக் காட்டியபடி மிதுன் வழிவிட்டு நகரவும், அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்ற சஞ்சு, “நான் இல்லன்ற தைரியத்தில ரொம்பவே வாய் கூடிடுச்சு போல உனக்கு!!” என்று கர்ஜிக்க(?),
அவனோ, “நீ இல்லன்ற தைரியதில் தான் பேச முடியும். பின்ன பொண்டாட்டியை பக்கத்தில வச்சுக்கிட்டா பேச முடியும்?! அந்தத் தைரியம் இந்த உலகத்தில் எவனுக்காவது இருக்குமா? ஈரேழு பதினாறு லோகத்துலையும் யாருக்கும் கிடையாது. பொண்டாட்டி மேல பயம் இருக்கிறதுனால தான், அந்தப் பரமேஸ்வரனே, தன் பாடில சரி பாதியை பொண்டாட்டிக்கு கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட்டார். அப்போதான் அவர் வைஃப் அவரை அடிக்க மாட்டாங்க.”
“ஏன் அடிக்க மாட்டாங்க!” அதே முறைப்பு இன்னும் அவளிடம்.
“பின்ன, அவரை அடிச்சா, பார்வதிக்கும் தானே வலிக்கும். ரெண்டு பெரும் ஒரே உடம்பில தான இருக்காங்க.” ஏதோ பெரிய ரகசியத்தைக் கண்டு பிடித்துவிட்ட சந்தோஷத்தில், அவன் பழுப்புக்காட்ட,
சஞ்சுவோ, “அவருக்குத் தான் அடி விழாது. ஆனா உனக்கு விழும்.” என்று சொல்லிவிட்டு, கணவனை வெளுத்து வாங்கும் வகையில் தோதாக ஏதாவது ஆயுதம் கிடைக்கிறதா என்று சுற்றும் முற்றும் தேட, மிதுனோ “அய்யய்யோ!!” என்றுவிட்டு, அந்த இடத்தை விட்டுப் பறந்திருந்தான்.
“டேய்!! நில்லு! ஓடாத!!” என்று கத்தியவள், தன் கையில் இருந்த பைகளைச் சோஃபாவில் போட்டுவிட்டு, அங்கே இருந்த செல்பி ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு கணவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
மிதுனோ, ஹால், டைனிங் டேபிள், இரண்டு படுக்கை அரை, கிட்சன், என வீட்டின் அனைத்து இடங்களையும் தானும் சுத்தி அவளையும் சுத்த வைக்க, சஞ்சுவோ, “டேய்! நான் பார்த்துச் செலெக்ட் பண்ண வீட்டை, எனக்கே சுத்தி காட்டுறியா!! சுத்துற உன் காலை இன்னைக்கு உடைக்காம விட மாட்டேன் பாரு….இதோ வரேன் டா!!” என்று கத்தியபடி அவனை வெறிகொண்டு துரத்தினாள்.
[the_ad id=”6605″]
அதென்னவோ எல்லா ஹீரோக்களும் செய்யும் டெக்னிக்கை நம் மிதுனும் இங்கே பயன்படுத்தினான். தன்னைப் பின் தொடர்ந்தபடியே சரியாகப் படுக்கை அறைக்குள் சஞ்சனா நுழையவும், ஓடுவதை நிறுத்திவிட்டு, அவளை வளைத்து பிடித்தவன், லாவகமாகத் தன் கை வளைவுக்குள் அவளைக் கொண்டு வந்தான்.
“டேய்!! விடு என்னை!” என்றபடி சஞ்சனா திமிற, மிதுனோ, அவள் கன்னத்தில் பட்டென்று இதழ் பத்திதான்.
“டேய்! கிஸ் பண்ணனா, அடி வாங்குவ. நாம ரெண்டு பேரும் இப்போ ‘கா’ல இருக்கோம்.” அவள் அவனைத் தள்ளிவிட முயற்சிக்க,
“அதனால என்ன?! இப்போ பழமாக்கிட்டா போச்சு!” சொன்னவன், மனைவியின் இதழ் நோக்கி குனிய, அவனைத் தள்ளி விட்டாள் சஞ்சனா.
“பிச்சிடுவேன் டா!! யார் பெர்மிஷன் கேட்டுக் கிஸ் பண்ற? நான் இன்னும் உன் மேல கோபமா தான் இருக்கேன். உன்னைக் கொஞ்சி குழாவ ஒன்னும் இங்க வரல.” தன் கெத்தை விடாமல் அவள் சொல்ல,
“கோபமா?! உனக்கு என் மேல இன்னும் கோபம் இருந்திருந்தா, நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்க மாட்ட. பிரிஞ்சு போனதில இருந்து இத்தனை மாசத்தில ஒரு நாளாவது நீ இங்க வந்தியா?!” சற்று அழுத்தமாகவே அவன் கேட்க, “கோபம் இல்லைன்னு நீயா நினைச்சுக்கிட்டா அதுக்கு நானா பொறுப்பு! ஏதோ இன்னைக்குப் புள்ளைக்குப் பிறந்தநாள் ஆச்சே, பாவம் தனியா இருக்கும். பார்த்துட்டு போலாமேன்னு வந்தா…அப்போ போ! நான் கிளம்புறன்.” பதில் சொல்லிவிட்டு விறுவிறுவென்று வாசலை நோக்கி அவள் செல்ல, மிதுனோ நின்ற இடத்தில் அப்படியே நின்றிருந்தான்.
வாசல் வரை போனவள், நின்று திரும்பி கணவனைப் பார்க்க, அவனோ சிரிப்பை அடக்கியப்படி இவளைத் தான் பார்த்திருந்தான்.
கணவனின் கேலி சிரிப்பில் இன்னுமே கடுப்பேரியவள், “டேய்! சிரிப்பா இருக்கா என்னைப் பார்த்தா..” என்றபடி, அவனை நோக்கி பாய்ந்தாள். அவளை அழகாகத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், மறுபடியும் அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு “உன் கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு சஞ்சு குட்டி! உப்புமா செஞ்சு தாயேன்! நான் போய்க் குளிச்சிட்டு வரேன்.” சம்பந்தமே இல்லாமல் படபடவென்று சொல்லிவிட்டு, அவன் சென்றுவிட,
“நான் கோபமா இருக்கேன்னு சொல்றேன். அதைக் கொஞ்சம் கூடச் சீரியஸா எடுத்துக்காம, சிரிச்சிட்டு போகுது பக்கி!” வாய்விட்டே அவள் சொல்ல, மிதுனோ, “துக்கமா இருந்தாலும் சிரிக்கனுமாம், யாரோ சொல்லி இருக்காங்க!” அறைக்குள் இருந்து குரல் கொடுத்தான்.
“ம்முக்கும்!!” இதழை சுளித்தவளுக்கு, என்ன முயன்றும் புன்னகையை அடக்க முடியவில்லை. “சரியான வாலு புருஷா!” என்று வெட்கத்துடன் சொன்னவள், அடுப்படிக்குள் நுழைந்தாள்.
மிதுனின் பெற்றோர் சென்னையின் மற்றொரு பகுதியில் வசிக்க, திருமணத்திற்குப் பிறகு, வேலைக்குச் செல்ல வசதியாக இருக்குமென்று, மிதுனும் சஞ்சனாவும் இந்த அபார்ட்மெண்ட்டை லோன் போட்டு வாங்கினர். மிதுனை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும், இன்றும் இருவரும் சேர்ந்தே தான், லோனை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கடமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள் சஞ்சனா. ஆனால் மனைவி என்ற உரிமையை மட்டும் போன நிமிஷம் வரை விட்டுக் கொடுத்திருந்தாள். இனி?
பத்து நிமிடத்தில் கமகமவென உப்புமாவை செய்துவிட்டு, ருசி பார்த்தாள். எவ்வளவு சிரத்தை எடுத்துச் செய்தாலும், உப்புமா சப்பென்று தான் இருந்தது. “இதைப் போய் நல்லா இருக்குன்னு சொல்றானே! மூளை எதுவும் கழண்டுடிச்சா?! அவனவன் உப்புமாவை பார்த்தா, செவ்வாய் கிரகத்துகே ஓடிட பார்க்கிறான். இவன் என்னடானா?! குத்து மதிப்பா செய்ற உப்புமாவே இவனுக்குப் பிடிக்குதுனா, கும்முன்னு பிரியாணி செஞ்சா, உண்மையாவே என்னைத் தலையில தூக்கி வச்சு கொண்டாடுவானோ?! செஞ்சாலும், செய்வான்!” என்று வெட்கப்பட்டவள், உப்புமாவை இருவருக்குமாகத் தட்டில் எடுத்துக்கொண்டு சாப்பாடு மேஜைக்கு வர, மிதுனும் குளித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தான்.
இருவருமாகச் சாப்பிட ஆரம்பிக்க, “சரி, எப்போ உன்னோட லகேஜை எடுத்துட்டு வர?! நான் வேணா போய் உங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு வரவா?” அவன்பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, “மொதல்ல கோபம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்.” அவளோ அலட்சியமாகப் பதில் சொல்ல, நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல், தட்டை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றான்.
மிதுன் எழுந்து செல்வதைப் பார்த்துவிட்டு, உணவை பாதியில் நிறுத்திவிட்டு, சஞ்சனாவும் எழுந்துகொள்ள, கிட்சனில் இருந்து வெளியே வந்தான் அவன். தன்னைக் கடந்து செல்லும் கணவனை ஒரு பார்வை பார்த்தவள், கைகழுவ உள்ளே சென்றாள்.
[the_ad id=”6605″]
“பொண்டாட்டி கோபமா இருக்காளே! ஏதாவது சமாதனம் செய்வோம்ன்னு செய்றானா பாரு! கோபம்ன்னு சொல்லிட்டா, அதை நம்பிட்றதா…” கையைக் கழுவியப்படி அவள் முனங்கி கொண்டிருக்கும்போதே, சட்டென்று பின்னில் இருந்து அவளை அணைத்த மிதுன், “நீ சொன்னா நான் நம்பிடணுமா டி, என் பொண்டாட்டி! என் பொண்டாட்டியை பத்தி எனக்குத் தெரியாதா!” என்று சொல்லிவிட்டு அவள் தோள் வளைவில் தன் பற்களால் கடித்து வைத்தான்.
“ஸ்ஸ்!! ஆ!! வலிக்குது டா எருமை!” அவள் துடிக்க, “நல்லா வலிக்கட்டும். இத்தனை நாளா எனக்கு மட்டும் எவ்வளவு வலிச்சு இருக்கும்.” கோபம்போலச் சொன்னான் மிதுன்.
“இங்க மட்டும் என்னவாம். நாங்க மட்டும் என்ன தினமும் சிரிச்சிட்டா இருந்தோம்.” உள்ளே போன குரலில் கூரியவளின் கண்கள் பழைய நினைவுகளில் கலங்கி போனது.
“அப்புறம் ஏன் டி, என்னை விட்டு போன?” கேள்வி கேட்ட மிதுனின் குரலும் கலங்கி இருந்தது.
“ஏதோ கோபம்! போயிட்டேன். நீயாவது, வந்து தரதரன இழுத்துட்டு வந்திருக்க வேண்டியது தான?!”
“இழுத்துட்டு வந்தா, முதுகு தோல் உறுஞ்சி ட்ரெஸ் எல்லாம் கிழிஞ்சி போயிருக்கும். அதான் பொண்டாட்டி பாவமாச்சேன்னு விட்டுட்டேன்.” சிரிக்காமல் அவன் சொல்ல,
கணவனின் கிண்டலை புரிந்து கொண்ட சஞ்சனா, அவன் கைவளைவில் நின்றவாறே திரும்பி, அவன் நெஞ்சில் சரமாரியாகக் குத்த ஆரம்பிக்க, அவளை லாவகமாகத் தடுத்தவன், “சண்டை போதும் டி, கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணுவோம்.” என்று கண்ணடித்துச் சொல்லிவிட்டு, அடுத்த நொடி, மனைவியோடு படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தான் மிதுன்.
பல மாதத்திற்குப் பிறகு மனைவியுடனான கூடலில், சஞ்சலம் எல்லாம் மறைந்து நிம்மதி அடைந்த மிதுனின் முகம் மகிழ்ச்சியில் பிராகசித்தது. அவன் நெஞ்சில் படுத்திருந்த சஞ்சனாவோ, “பேசிப் பேசியே என்னை ரேப் செஞ்சுட்டா டா! யு ராஸ்கல்!” என்று மீண்டும் சண்டைக்கு வர, “வேணும்னா போய்ப் போலீஸ்ல் கம்ப்ளைன்ட் பண்ணு டி பொண்டாட்டி!” கூலாகப் பதில் சொன்னான் மிதுன்.
சட்டென்று எழுந்து கொண்ட சஞ்சனா, “போலீஸ்ன்னு சொன்னதும் தான், நான் சொல்ல வந்ததே நியாபகத்துக்கு வருது டா. இதையே மறக்கவச்சுட்ட நீ!” என்று பரபரப்பாக,
எழுந்து அமர்ந்த மிதுன், “ஹா…ஹா…அது தான் புருஷன். சரி என்ன விஷயம் சஞ்சு?” என்று கேட்டான்.
“அந்த மெண்டல் ஹாஸ்பிட்டல் ஃபயர் கேஸ்ல, போலீஸ் சீக்ரெட்டா ஒரு பேஷென்ட்டை அட்மிட் செஞ்சு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காங்க.”
அதிர்ச்சியோடு மனைவியின் பக்கம் திரும்பியவன், “என்ன சஞ்சு சொல்ற? உண்மையாவா?”
“நூறு பெர்சென்ட் உண்மை. அவங்க ஒரு லேடி. அவங்களும் அந்தத் தீ விபத்துல மாட்டுனவங்க தான்.”
“உனக்கு எப்படித் தெரியும்?!”
“அதெல்லாம் எனக்கு எல்லா இடத்துலையும் ஆள் இருக்கே மகனே! எனக்குத் தெரிஞ்சவங்க ஜி.எச்ல தான் நர்ஸா இருக்காங்க.”
[the_ad id=”6605”]
“நியுஸ் கண்ஃபர்மா?!”
“பக்கா!! எனக்கு என்னமோ, இதுக்குப் பின்னாடி ஏதோ விஷயம் இருக்கிற மாதிரி தோணுது. இல்லனா எதுக்குப் போலீஸ் அவங்களை மறைச்சு வைக்கணும்.”
“ஒரு விஷயத்தைப் போலீஸ் மறைக்கிறாங்கன்னாலே அதுல ஏதோ இருக்குன்னு அர்த்தம். சரி, இதுல நீ என்ன செய்யப் போற?”
“நான் இல்லை, நாம!”
“என்ன சஞ்சு சொல்ற?!”
“ஆமாம்! நாம ரெண்டு பேரும் இன்னைக்கு நைட் யாருக்கும் தெரியாம ஹாஸ்பிட்டல் போய், அவங்க யாருன்ற விவரத்தை கண்டுபிடிக்கப் போறோம். அப்புறம் இன்னொரு விஷயம், இது நாம தனியா செய்யப் போற ப்ராஜெக்ட். உங்க சேனலுக்கோ, எங்க சேனலுக்கோ தெரிய வேண்டாம்.”
மிதுனோ யோசிக்க, “சேனல்ல சேர்றதுக்கு முன்னாடியே நாம ஒரு ஜர்னலிஸ்ட். அதை நியாபகம் வச்சுக்கோ. இதை நாம மட்டும் தனியா செய்றோம். அவ்வளவு தான்.” அவள் முடிவாகச் சொல்லிவிட, இறுதியில் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான் மிதுன்.
நந்தா செட் செய்த ஆட்கள், அன்று இரவு அவளைக் கொல்ல திட்டமிட்டிருக்க, மிதுனும் சஞ்சனாவும் அன்றே மருத்துவமனை செல்வது என்று முடிவு செய்துள்ளனர்.
அடுத்து என்ன ஆகும்?
இதற்கிடையில் ‘கைரேகை’ டெஸ்ட்டில் மாட்டப்போவது யாரு?