“எப்புட்ரா…?” சுசியிடம் ஆச்சரியம். சம்ரு எந்தளவிற்கு விஷ்வாவை தன் வாழ்வில் தள்ளி வைத்தாளென்று அறிந்திருந்த சுசிக்கு இதனை நம்ப முடியவில்லை.
“மேடம் நம்ம காலேஜில் தான் ஜாயின் பண்ணியிருக்காங்க” என்றான்.
“ஹோ… அப்போ அவளோட வி.ஆர்’ஐ அவள் பார்க்க வரல… சுடர் கரெஸ்பான்டன்ட்டை பார்க்க வந்திருக்காள். சரியா?” எனக் கேட்டாள்.
விஷ்வா அமைதியாக நின்றிருக்க…
குழந்தை வீறிட்டு அழும் ஒலி. இருவரும் பால்கனியில் இருப்பதால் நன்கு கேட்டது.
அப்போது தான் நினைவு வந்தவளாக சுசியின் முகம் வருத்தத்தை காண்பித்தது.
“என்ன மேடம், மூஞ்சி சுருங்கிப்போச்சு?”
“அது விஷ்வா… உனக்குத் தெரியுமா தெரியாதா தெரியல” என்று அடுத்து தொடர முடியாது தயங்கியவள்,
‘சம்ரு இவனைத்தேடி வந்ததாக தப்பாக நினைத்துக்கொண்டு மீண்டும் மனதில் ஏதும் ஆசைகளை வளர்த்துக் கொள்ளப்போகிறான்! உண்மையை சொல்லிவிடுவது நல்லது’ என சிந்தித்தாள்.
“எனக்கென்ன தெரியல?” அவள் சொல்லாது ஏதோ யோசனையில் இருப்பதால் அவனே கேட்டிருந்தான்.
“சம்ருக்கு… ம்ஃக்கும்… அவளுக்கு குழந்தை இருக்கு.”
“ஹோ…”
சுசி அத்தனை பிரய்த்தனப்பட்டு சொல்லியிருக்க… அவனிடம் சிறு சலனமோ, அதிர்வோ இல்லை. அவனின் சாதாரண முகபாவனை அவளைத்தான் குழப்பியது.
“என்னடா உனக்கு ஷாக்கிங்கா இல்லையா?”
“ஏன்?”
“சம்ருவுக்கு கல்யாணம்…”
“அப்படியா?”
“என்ன அப்படியா? கல்யாணம் ஆகாமல் குழந்தை எப்படி வரும்?” சற்று கடுப்பாகவேக் கேட்டாள்.
விஷ்வா சிரித்தவனாக,
“நான் கேம்பஸ் கிளம்பணும் சுசி. ஸ்கூலில் இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டே” என்று சொல்லிவிட்டு, “நீ உன் ஃபிரண்டை பார்க்கலையா?” என்றவனாக குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
சுசி கீழே வரும்போது, ராஜா அம்மையப்பனிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“அப்புறம் உன் தங்கச்சிக்கு சொல்லியாச்சா?” கேட்டவாறு அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
அம்மையப்பன் “இவனுக்கு தங்கச்சியா? இருக்கிறதா? சொல்லவேயில்லையே! ஏண்டா?” என்றார்.
“அவள் சம்ருவை சொல்றா(ள்)ப்பா” என்ற ராஜா, சுசியிடம் “அங்க தான் பர்ஸ்ட் போனேன். குளிச்சிட்டு இருக்கான்னு யுகிக்கா சொன்னாங்க. அதான் இங்கு வந்துட்டேன்” என்றான்.
“ஹோ… உங்களுக்கு எப்பவும் அவங்க தான் பார்ஸ்ட்ல?” சுசி விளையாட்டாகக் கேட்டாலும், அதுதான் உண்மையென்று தெரியும்.
ராஜாவிடம் சன்னமான புன்னகை.
“சம்ரு… இங்கு எங்கே?” அம்மையப்பன் வினவிட,
“இன்னும் உங்களுக்கு விடயம் தெரியாது இல்லையா மாமா?” என்ற சுசி, “தருண் யுகி பையன் தான். எதிர்வீட்டில் சம்ரு ஃபேமிலி தான் குடி வந்திருக்காங்க” என்றாள்.
“அப்படியா?” என்றவர், “அப்போ சம்ரு உன்னோடு டச்சில் தான் இருந்தாளா?” என்றார் ராஜாவிடம்.
ராஜா சுசியை பார்த்துக்கொண்டே “ஆமாப்பா” என்றான்.
சுசி அவனை நன்கு முறைத்தாள்.
மூன்று ஆண்டில் எத்தனை முறை சம்ருவை பற்றி சுசி அவனிடம் கேட்டிருப்பாள். தெரியாது என்ற ஒற்றை வார்த்தையில் முடித்திருப்பான்.
“உனக்கு உன் ஃபிரண்ட் பெருசுன்னா… எனக்கு என் ஃபிரண்ட்” என்றான். சுசியின் எண்ணவோட்டம் அறிந்தவனாக.
அந்நேரம் விஷ்வா சரியாக கீழிறங்கி வர…
“உன்னைவிட இவனுக்கு இன்னொருத்தவங்க தான் ரொம்ப முக்கியமாம் விஷ்வா” என்று போட்டுக்கொடுத்தாள்.
அதற்கு சிரித்த விஷ்வா,
“தங்கச்சியை பார்க்க ஓடிவந்துட்ட போல?” எனக் கேட்டான்.
அம்மையப்பன் மகனின் முகத்தில் சில நாட்களாக மட்டுமே தெரியும் சந்தோஷத்துக்கான காரணம் சம்ருதி தான் என்பதை அறிந்தவராக, விஷ்வாவையே ஆழமாக ஊன்றி பார்த்தார்.
மூன்று வருடங்களில் அவன் சிரித்து… இப்படி இலகுவாக பேசி அவர் கண்டதில்லை.
விஷ்வாவுக்கு நன்குத் தெரியும் சம்ருவை பற்றி வருணிடம் அவன் தெரிந்து கொண்டிருந்தானென்றால், அவனைப்பற்றி ராஜாவிடம் சம்ரு தெரிந்துகொண்டிருந்தாள். கடந்து சென்ற வருடங்களில். ராஜாவுடன் தொடர்பில் இருந்தாலும், கடந்த ஒரு வருடமாகத்தான் சம்ரு தன்னைப்பற்றி கேட்டு அறிகிறாள் என்பதையும் அறிவான்.
“ஆமாம்” என்ற ராஜா, வந்த காரணத்தை சொல்லிவிட்டு, சம்ருவை பார்த்து வருவதாக எழ, அம்மையப்பன் தானும் உடன் சென்றார்.
“நீ போய் பார்க்கலையா?”
“யாரை?”
விஷ்வா தோளை குலுக்கியவனாக தன் அலுவளை காண புறப்பட்டுவிட்டான்.
“தருண் அண்ணா தாம்மா… நம்ம வேலையை நாமதான் பார்த்துக்கணும் சொன்னாங்க” என்றவள், “அத்தை யூனிஃபார்ம் எடுத்து கொடுத்தாங்க. நானே போட்டுகிட்டேன். அத்தை கோம்ப் பண்ணும்போது சமத்தா காட்டினேன் தெரியுமா?” என்றாள். தன் போனி டெயில் இரு பக்கமும் கன்னம் தொட ஆட்டியபடி.
“அப்போ ஸ்ரீ குட்டிக்கு இன்னைக்கு டூ ஸ்டார்ஸ்” என்ற தருண் தன் சட்டை பையிலிருந்து இரண்டு வெள்ளி நிற நட்சத்திர பேட்ஜ் எடுத்து கொடுத்தான்.
“சூப்பரா இருக்குண்ணா” என்ற ஸ்ரீ, “நான் குட் கேர்ளா நடந்துகிட்டால் இன்னும் நிறைய தருவீங்களா?” என்று கண்கள் விரிய கேட்டாள்.
“ம்ம்ம்… தருவனே” என்ற தருண்…
“எங்க சித்திம்மா நாங்க படிக்கிற ஸ்கூல் கேம்பஸில் இருக்க காலேஜில் தான் வொர்க் பண்றாங்க சுசிம்மா. டெய்லி அவங்களோட தான் நான் போகப்போறேன். ஸ்ரீ குட்டியையும் நானே கூட்டிட்டு போறேன். சேஃபா பார்த்துக்கிறேன்” என்றான்.
தருண் பெர்மிஷன் கேட்கவில்லை. தகவலாக மட்டுமே கூறுகிறான். அதுவும் மறுப்பு தெரிவிக்காதபடி.
“ஹீ இஸ் வெரி ஸ்மார்ட் அண்ணி” என்று வந்த அனு,
“உங்களுக்கு இதெல்லாம் யார் சொல்லித்தரா?” என்று தருணிடம் கேட்டாள்.
“சித்திம்மா தான் அனு அத்தை. எனக்கு நிறைய நாலேஜபுல் ஸ்டோரிஸ் சொல்லுவாங்க. அதுல எது ஃபாலோ பண்ணனும் பண்ணக்கூடாது எல்லாம் சொல்லுவாங்க” என்றான்.
“நைஸ்” என்ற அனு, “உங்களுக்கும் நான் அத்தையா?” என வினவினாள்.
“ஸ்ரீ என் சிஸ்டர் அப்படின்னா, நான் உங்களை அவளை மாதிரி அத்தைன்னு தானே கூப்பிடனும்!” என்றான் அந்த அறிவாளி.
“சரி சரி” என்ற அனு அவன் உயரத்துக்கு குனிய முற்பட…
“இருங்க அத்தை…” என்றவன் அவளின் செயலை யூகித்தவனாக நீள்விருக்கையில் ஏறி நின்றான்.
“இப்போ கொடுங்க” என்று தன் கன்னத்தை அவளின் முகத்திற்கு அருகே காண்பித்தான்.
“நீங்க குனிய கூடாது அத்தை. உள்ள பேபிக்கு அன் கம்ஃபெர்ட் ஆகும்” என்றான் பெரிய மனிதனாக.
“ச்சோ… ச்சுவீட்” என்ற அனு, தருணின் இரண்டு கன்னத்திலும் அழுந்த முத்தம் வைத்தாள்.
அவர்களைத்தேடி வருணே வந்துவிட்டான். முதல் முறை தன்னுடைய உடன்பிறவா சகோதரனின் இல்லம் வந்திருந்தான்.
கேட்டினை தாண்டி உள்ளே வந்தவன், வீட்டு வாயிலில் நின்றபடி தருண் என்றழைத்தான்.
சுசி வேகமாக சென்று, “வாங்கண்ணா… உள்ள வாங்க” என்று வரவேற்றாள்.
“இருக்கட்டும்மா! ஸ்கூல் டைம் ஆச்சுது” என்றான்.
“பரவாயில்லைண்ணா வாங்க. உங்க தம்பி கூப்பிட்டால் தான் வருவீங்களா?” எனக் கேட்டாள்.
வீரய்யனின் இறப்பின் போது தான் மித்ரனின் மனைவியாக சுசியை நேரில் பார்த்திருந்தான். அதற்கு முன்பே விஷ்வாவின் தோழியென அவனின் பேச்சில் பலமுறை கேட்டுள்ளான். ஆனால் இப்போது தான் முதல்முறையாக பேசுகின்றனர். அதுவும் அவள் உரிமையாய் பேசிட அதற்கு மேல் மறுக்காது உள்ளே வந்தான்.
“ஹாய் வருப்பா” என்று ஓடி சென்று வருணின் கைகளில் ஏறிக்கொண்டாள் ஸ்ரீ.
“வெல்கம் ஹோம் வருப்பா” என்ற ஸ்ரீ, தன்னுடைய அம்மா மற்றும் அத்தையை வருணுக்கு அறிமுகம் செய்து வைக்க… அனுவும் சகஜாமாகவே அவனுடன் உரையாடினாள்.
காலையே கோவிலுக்கு சென்றிருந்த சுஜா அப்போது தான் வந்து சேர்ந்தார்.
வருண் இருப்பதை பார்த்தவர்,
“வாப்பா” என்றழைத்து, அனைவருக்கும் பிரசாதம் தானே இட்டுவிட்டார்.
பார்த்து சில நாட்கள் தானாகிறது. எதிரெதிர் வீட்டு நபர்கள் என்ற எண்ணமின்றி இரு குடும்பத்துக்கும் இடையே இயல்பாய் உறவு ஆரம்பித்து நெருக்கமாகத் தொடங்கியிருந்தது.
இவர்களின் நெருக்கம் பல வருடங்களாக பிரிந்திருக்கும் காதலர்களை ஒன்று சேர்த்திடுமா?
இனியாவது எந்தவொரு பிரச்சனையும் இடையில் வராது இருக்குமா?
சுஜா, கோவில் சென்று வந்த பொருட்களை பூஜையறையில் வைத்துவிட்டு வருவதாக சென்றிட,
“சம்ரு ஹஸ்பெண்ட் எங்க இருக்காங்கண்ணா?” என சுசி கேட்டிட… வருண் அவளை குழப்பமாக பார்த்தான்.
‘குழந்தை இருப்பதால் சம்ருவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு நினைச்சிட்டாங்களா?’ என சரியாக சிந்தித்த வருண்…
“சம்ருவுக்கு இன்னும்…” என்று ஆரம்பிக்க,
“ஸ்கூலுக்கு டைம் ஆச்சுன்னு சம்ரு கூப்பிடுறாப்பா” என்று வந்தார் அம்மையப்பன்.
அதில் வருண் சொல்ல வந்ததை விட்டுவிட்டான்.
“ஓகேம்மா… அப்புறம் பார்க்கலாம்” என்ற வருண் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளி சென்றிட, வருணின் பின்னாலே சென்றார் அம்மையப்பன்.
“ராஜா போயிட்டானா மாமா?”
சுசி கேட்டதற்கு திரும்பாமலே “போயிட்டா(ன்)ம்மா” என்றவர் வருணிடம் தன் மனதிலிருப்பதை கேட்டிட வேண்டுமென்ற எண்ணத்தில் நிற்காது சென்றுகொண்டே இருந்தார்.
சம்ரு பிள்ளைகள் இருவரும் தன்னுடன் வருவதால் காரினையே எடுத்தாள்.
குழந்தைகளை அமர வைத்து சீட் பெல்ட் போட்டவள், வருணிடம் சொல்லிக்கொண்டு காரினை கிளப்பிட,
“வருண்” என்றழைத்து உள்ளே நுழைய இருந்தவனை தடுத்தார் அம்மையப்பன்.
“சொல்லுங்க அங்கிள்” என்ற வருண் அவரின் அருகில் சென்றான்.
“என் பையன் உனக்கு தம்பி… நான் மட்டும் உனக்கு அங்கிளா?”
அவர் கேட்டதில் வருண் மென் புன்னகை சிந்தினான்.
“சொல்லுங்கப்பா. என்ன பேசணும்?”
வருண் அவர் இதை நேரடியாகக் கேட்பானென்று எதிர்பார்க்கவில்லை.