மாதவன் “போன வாரம் கூட ஒரு வரன் வந்தாங்க அன்பு, இரண்டாந்தாரமா கூட இல்ல, பையனுக்கு முப்பத்தெட்டு வயசு, தங்கைகளுக்கு கல்யாணம் முடிச்சிட்டு இப்போதான் அவனுக்கு பண்ணிக்க எண்ணமே வந்ததாம்.
இந்த வயசுல சின்ன பிள்ளைகளை கட்டிக்க பிடிக்காம நம்ம சுகந்தியை கேட்டுருக்காங்க. முடியவே முடியாதுனுடுசாம். கல்பனாகிட்டயும் கல்யாணம் பிடிக்காததால உனக்கு பாரமாகிட்டேனானு கேக்குதாம் அன்பு” என்றார் கவலையாக.
“இவளை” என நொந்துகொண்டவன், “இன்னைக்கு போய் இங்க அழைச்சிட்டு வா அத்த, நான் பேசிப்பார்க்குறேன்” என்றான் அன்பரசு.
“வேணாம் அன்பு. உன்கிட்டயும் கோபப்படுவா. அவ விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும்” என்றார் கல்பனா.
சுகந்தியின்திருமணத்திற்குபின்னேதான்சுகந்திஎன்றுபெயர்சொல்லிஅழைத்தான்அன்பரசு. பின்னேதம்பியிடமும்இனிபுள்ளனுசொல்லாத. என்று கட்டளையிட்டிருந்தான்.
சுகந்தி திருமணத்திற்கு முன்பாகவே தனது இருபத்தி இரண்டு வயதில் பொறியியல் படிப்பு முடிந்ததுமே விரும்பிய பெண்ணை மனம் முடித்துக்கொண்டான் சத்யன். அதனால் வீட்டில் பேச்சு வார்த்தை இல்லாமல் போக, சுகந்தியிடம் பேசும் வாய்ப்பில்லாமல் ஆனதோடு, அவளின் திருமணத்திற்கும் செல்ல முடியாத சூழல் உண்டானது.
“ஆமாம்ப்பா”என்றவனுக்குபிறகுதான்முல்லையின்நியாபகம்வர, அதைமறைத்து, “இனிஜிம்முக்கும்வரக்கூடாதுனுசொல்லிட்டேன்ப்பா. ஒருவருசமாமறைமுகமாகிண்டலடிச்சிருக்கான், இப்போஒருமாசமாரொம்பதொல்லைகொடுத்திருக்கான். ஆதிராஜ் சொன்னான். அதனால இனி ஜிம்முக்கும் வர வேணாம்னு சொல்லிட்டேன்” என்றான்.
கஜேந்திரன் மீது கோபம் வந்தாலும், அவனின் அயராத உழைப்பையும் இலக்கையும் நினைத்து, “இரண்டு மாசத்துல போட்டி வரப்போகுதே அன்பு. இந்த ஒருமுறை கண்டிச்சு ஜிம்முக்கு வர விட்டுருக்கலாமில்ல?” என வருந்தினார் மாதவன்.