பவளம் முகத்தை தூக்கி வைத்திருந்தார். மோகனை முறைத்து நின்றார் கலியபெருமாள்.
ஏதோ பிரச்சினை என்று உணர்ந்த பூரணிக்கு விருந்து முடிந்து மற்றவர்கள் எல்லாம் கிளம்பியதே சற்று நிம்மதியாக இருந்தது. அதுவும் பார்வதி விஜயாவை நினைக்கையில் அத்தனை கோபம் வேறு அவளுக்கு.
“என்ன அண்ணி ?”என பவளத்தின் முகத்தைப் பார்த்து பூரணி ஒன்றும் புரியாமல் கேட்க
“நீயே கேளு உன் மகன் கிட்ட, இத்தனை நாளும் என் மகளை அண்ணன் வீட்டுல தரப் போறேன்னு நினைச்சு இருந்தேன். இப்ப வந்து சொல்லுறான் மதுவை கட்டிக்க முடியாதுன்னு…” என்று கொதித்தார் பவளம்.
“அத்தை, சொல்றதை முழுசாக் கேளுங்க.” என்று மோகன் சொல்ல
“இனி என்னத்தை கேட்க…? அதான் என் ஆசையில மண்ணள்ளிப் போட்டாச்சே!” என்று நொடிக்க
கலியபெருமாளும் சங்கடமாக ,”மோகனு ஏன் இப்படி பேசுற நீ?, மதுவுக்கு என்ன கொறை…? அவ தான் என் வீட்டு மருமகள். வர்ற முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சிடலாம்” என்றார்.
“அப்பா புரியாம பேசாதீங்க. சின்னப்பிள்ளையில இருந்து ஒண்ணுமண்ணா வளர்ந்துட்டு, இப்பக் கல்யாணம் எல்லாம் நினைக்கவே முடியல. மதுவுக்கே அந்த மாதிரி நினைப்பு இருக்காது. ஏன் மதுரா நீ என்னையக் கட்டிக்க நெனைக்கிறியா?” என்று அவளிடமே நேரடியாக கேட்டு வைத்தான்.
பவளமோ,” எம்மவ என் பேச்சை மீறமாட்டா.” என்றார் முந்திக் கொண்டு.
“ம்மா !அவளை கேட்காமல் நீயா சொல்லாத” என இனியன் அதட்ட
“என்னை மிரட்டுங்க. ஊர், உறவுனு எல்லாருக்கும் தெரியும் எம்மவளை மோகனுக்கு தான் கட்டி வைக்கப் போறோமின்னு” என்று பவளம் அதற்கும் சலிக்க
“ஊரு ஒறவுக்காக கட்டிக்க முடியாதுத்தை. “என்றவனிடம்,” பிடிவாதம் பிடிக்காத மோகனு. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிரும்டா” என்றார் செவ்வந்தி கூட
“சரியா போகலைன்னா…? சொல்லுமா, சரியாப் போகலைன்னா என்ன செய்வ…? எனக்கு கல்யாணம் வேண்டாம். மறுபடியும், மறுபடியும் கட்டாயப்படுத்தினா நான் பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இருப்பேன் “என்றவன் கோபத்துடன் வெளியேறினான்.
மார்த்தாண்டன் எதையும் கண்டுகொள்ளாமல், வாயில் பற்குச்சியை வைத்துக் குத்திக் கொண்டிருந்தார்.
“இவ எவடி கூறுகெட்டவளா இருக்கா… மருமகனுக்கு இஷ்டமில்லைனா விட்டுடணும், எம்மக அதுக்காக ஏதாவது வேதனைப்படுதா? இல்லையே… அப்ப அதுக்கும் விருப்பம் இல்லைனு தானே அர்த்தம். சும்மா கல்யாணம் பண்ணிக்க தோணாத ரெண்டு பேரை இழுத்துப் புடிச்சு கட்டிக்கன்னா… என்ன நாஞ்சொல்றது மச்சான்?” என நிரூபனிடம் கேட்க
அவனோ என்ன சொல்வது எனத்தெரியாமல் நின்றான்.
“அப்ப நீங்க கூட அப்படித்தான் நினைக்கீறிங்களா? யாருக்குமே என்மனசு புரியல…” என மார்த்தாண்டனிடம் கத்திவிட்டுச் செல்ல, பூரணி அவர் பின்னால் ஓடினாள். மற்றவர்களும் அவளைத் தொடர்ந்து செல்ல செவ்வந்தி போகும் நேரம் மதுரா அழைத்தாள்.
மதுராவோ, இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல நின்றவள்,” அத்த ஈரல் வறுத்தது எங்கன வச்சிருக்கீங்க?” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“அடியேய் உங்கம்மா கோவிச்சுட்டு போகுதுடி.” என்று செவ்வந்தி சொல்ல
செவ்வந்திக்கு சிரிப்பு வேறு வந்துவிட்டது அவள் செயலில்.
“இதுல இருக்கு எடுத்துக்க, நான் போய் உங்கம்மாவை பார்க்கிறேன். இந்த மோகனு பண்ற வேலை இருக்கே?” என்று சலித்துக் கொள்ள
“ப்ப்ச் மாமா சரியா தான் பேசுறாரு, போங்க போங்க போய் உங்க நாத்தனாரை மலையிறக்குங்க” என்று உண்ணத் துவங்கிவிட்டாள்.
“இவளை… இங்க என்ன நடக்குது? அவ என்ன கேட்கிறா பாத்தியா?” என்று இனியன் கமலியிடம் நொடிக்க
“அவளை வச்சுட்டே கல்யாணவிஷயம் பேசுறது அவங்க தப்புங்க.” என்ற கமலி ,”அத்தைக்கிட்ட நான் பேசுறேன்.” என்றாள்.
“இதெல்லாம் பேசுவ… ஆனா பேசவேண்டியது பேசமாட்ட” என்றான் அவளை பார்வையால் அளந்தபடி.
“பேசவேண்டியது எல்லாம் பேசறவங்க தான் பேசணும். பேசறவர் ஊமையா இருந்தா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”என்றவளை கூர்மையாக பார்த்தவன் தலையாட்டியபடி ,” பேசிடுவோம். பேச்சு பேச்சா இருக்காது. பரவாயில்லையா…?பரவாயில்லைன்னா பேசிடலாமே !”என்றான் கன்னக்கதுப்பில் நாக்கை சுழற்றியபடி.
வாங்க அத்தைக்கிட்ட பேசுவோம் என இனியனை கமலி இழுத்துச் சென்றுவிட
கவினோ மதுராவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் செய்கை சிரிப்பை மூட்டினாலும்,’ என்னவும் செய்ங்க ,எனக்கென்ன வந்தது ?’என்ற விதம் அவனுக்கு கோபத்தை தந்தது.
அனைவரும் பவளத்தை சமாதானம் செய்ய செல்ல, இவளோ சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“உனக்காகத் தானே பேசுறாங்க. அவங்களை சமாதானம் செய்யாம இப்படி பண்ற?” என்று கடிந்து கொள்ள
“வாழப் போறது நாங்க. எங்களுக்கே இஷ்டமில்லை. அப்படி இருக்கும்போது எங்களை சேர்த்து வச்சு என்ன செய்யப் போறாங்க?” என்றாள்.
மேலும் அவளேத் தொடர்ந்து ,”எங்கம்மாக்கு என்னை அண்ணன் வீட்டில் தந்துட்டா சீர்வரிசை, நகை அதிகம் செய்ய வேணாம். நல்லா பார்த்துப்பாங்க தானும் வரப் போக இருக்கலாம்னு எண்ணம். அவங்க எண்ணத்தை தப்பு சொல்லலை நான், எல்லா அம்மாவும் மகளை பக்கம் வச்சு பார்க்க தான் ஆசைப்படுவாங்க அதுக்காக… கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” என்றாள்.
“சரி கல்யாணம் பண்ணிக்காம என்னதான் செய்யப் போற? எப்ப இருந்தாலும் பண்ணித்தானே ஆகணும்.” என்றான்.
“பண்ணிக்கணும் கண்டிப்பாக பண்ணனும். ஆனா இப்படி இல்லை. படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போகணும். சம்பாதிக்கணும். கால்காசுன்னாலும் என் உழைப்பில், என் கல்யாணத்திற்காக வாங்கினதுனு, ஏதாவது சேர்த்துட்டு இப்படி இழுபறி இல்லாம எனக்கே எனக்காக, என்னைப் பிடிச்சு வாழ சம்மதிக்கிற பையன் கூட வாழணும். காதலோட வாழணும். இப்படி அம்மா சொன்னாங்க அப்பா சொன்னாங்கனு பிடிவாதத்தில் ஒரு வாழ்க்கை ஆரம்பிக்க கூடாது. அதுக்காக அவங்க பேச்சைக் கேட்க கூடாதுன்னு இல்லை. இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை எல்லாருக்கும் பிடிச்சமாதிரி வாழ்ந்துட்டுப் போயிடணும். இனியண்ணா கல்யாணத்திலும் அதுதான் என் எண்ணமா இருந்தது. அப்பாக்காக, அத்தைக்காகன்னு ஏன் ஒத்துக்கிட்டான்னு கோபம் வந்தது. அப்புறம் தான் அண்ணாக்கும் , கமலி அண்ணியை பிடிச்சிருக்குனு தெரிஞ்சது. அதனால நான் ஒண்ணும் சொல்லலை. இங்கேயும் அதேதான் மோகன் மாமாக்கு என்னைப் பிடிக்கும். ஒரு அத்தை மகளா என்னை பிடிக்கும் அவ்வளவு தான். அந்தப் பிடித்தத்தை கல்யாணத்தில் காட்டுன்னா எப்படி முடியும்?” என்றாள்.
“எவ்வளவு யோசிக்கிறீங்க ரெண்டு பேரும். கிரேட் “என்ற கவினை தலையாட்டிவிட்டு தன் வேலையைப் பார்த்தாள்.
“மது… !”
“ம்ம்ம்… “
“ஒரு விஷயம் கேட்கவா…?”
“கேளுங்களேன்… !”
“மே பீ எதிர்காலத்தில் மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இருந்தா என் நேமை சட்ஜஸ்ட் பண்ணலாம். எனக்கு ஓகேதான்.” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,” இதுக்குப் பேர் லவ் ப்ரபோசலா?, இல்லை மேரேஜ் ப்ரபோசலா?” என்று கேட்க
“மேரேஜுக்கான லவ் ப்ரபோசல். நல்லா இருந்தா அக்ஸெப்ட் பண்ணிக்கோ, நல்லா இல்லாட்டியும் அக்ஸெப்ட் பண்ணிக்கோ பிகாஸ் உன்னை பொண்ணு கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றான்.
“இல்ல மோகன் மாமா கேட்டபிறகு தோணுச்சோனு நினைச்சேன். ரெண்டு பேரும் சேர்ந்து என்னை சாய்ஸ் ஆக்கி இருக்கீங்க இல்லையா…? உனக்கு வேணுன்னா நீ எடுத்துக்கோ, எனக்கு வேணும்னா நான் எடுத்துக்கிறேன். என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கெல்லாம்…?” என்று அடிக்குரலில் சீற
“எனக்கு யாருக்கும் சாய்ஸா இருக்கப் பிடிக்காது. நான் சூஸ் த பெஸ்டா இருக்கிறதை விட, ஃபில் இன் த ப்ளாங்க் ஆன்சரா இருக்க விரும்புறேன். தட்ஸ் ஆல்” என்றாள் ஸ்திரமாக
“நல்லதாப் போச்சு. செலக்ட் பண்ற வேலை மிச்சம் இதுவா அதுவான்னு இல்லாம அவுட் ஆஃப் ஃபோர்ஷனுக்கு போட்ட மார்க் மாதிரி, நான் உனக்கு வந்திட்டுப் போறேன். அவங்களாவே மார்க் தந்தா மறுக்க முடியாதே!?” என்று கண்சிமிட்டியவன், அதற்கான வேலையை செய்ய சென்றுவிட்டான்.
‘இவனும் வேணாம் எவனும் வேண்டாம். ஏதாவது பேசட்டும் அப்புறம் இருக்கு எல்லாருக்கும்.’ என்று முனகிக் கொண்டாள்.
இத்தனை பிரச்சினை நடந்து கொண்டிருந்தாலும் நிரூபன் பூரணியை கவனிக்கத் தவறவில்லை அவர்கள்.
மறுவீட்டிற்கு வந்தவர்கள் மோகன் பிரச்சினையை முடித்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து தான் கிளம்பினர்.
மதுரா வேலைக்கு செல்லவும் , மோகனுக்கு வேறு இடத்தில் பெண்ணெடுக்கவும் தீர்மானித்திருந்தனர். பவளத்திற்கு இதில் பிடித்தமில்லை என்றாலும் எல்லோருமே இந்தத் திருமணத்திற்கு எதிராய் நிற்கும்போது என்ன செய்வது என அமைதிகாத்தார். அத்தோடு கலியபெருமாள் வீட்டிற்கு செல்வதையும் வெகுவாக குறைத்திருந்தார். இதில் செவ்வந்திக்கு வருத்தமிருந்தாலும் மகனின் முடிவு தான் அவருக்கு முதன்மையாக இருந்தது.
“நேரமாச்சா? அப்போ கிளம்புங்க… நான் எதுவும் சொல்லலை. நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். தேடி வந்து கட்டிட்டு… இப்போ புலம்ப வச்சாச்சு” என்று அவள் பாட்டிற்கு செல்ல
“இப்ப என்ன உனக்கு. நில்லுன்றேன்” என்று அவள் கையைப் பிடித்தவன்,” தேடிவந்து தான் கட்டினேன் இப்போ அதுக்கு என்ன…? ஒழுங்கா சொல்லு…” பிடிவாதமாய் நிற்க
“அதான் கிளம்பிட்டீங்களே, போயிட்டு வாங்க” என்று முறுக்கிக் கொள்ள
“சிவனேன்னு தான் நானும் இருந்தேன். ஜாலியா நினைச்சப்ப சாப்டு, தூங்கி இப்ப பாரு என்னைப் படுத்தற நீ !”என்றான்.
“ஓஓஓ !அப்போ நினைச்சப்ப சாப்பிட்டு, தூங்கி தான் உடம்பை இஷ்டத்துக்கு கெடுத்து வச்சிருக்கீங்க. இதுல தொப்பை இல்லை , நரைமுடி இல்லைனு ஓவர் பில்டப் வேற…மனசுக்குள்ள இருபது வயசுனு நினைப்பு, உள்ள எல்லாம் காயலான்கடை மாதிரி பார்ட்ஸ் எல்லாம் இத்து போயிருக்கு “என்றாள் கடுப்பாக.
“ஓய் !யாருக்கு இத்துப் போச்சு… ஓல்டு லேடி ஐம் ஸ்ட்ராங் பாடி…” என சட்டையை விலக்கி விட்டு கையைத் தூக்கி புஜத்தை இறுக்கிக் காட்டினான்.
“அப்புறம் ஏன் இந்த ஸ்ட்ராங் பாடி நேத்து மயக்கம் வருதுனு உட்கார்ந்துச்சாம் ?”அவன் புஜத்தை கிள்ளி வைத்தாள்.
“ஸ்ஸ்ஸ் ஆஆஆ. ராட்சசி “என முகத்தைச் சுருக்கி சொல்ல
“ஓஓஓ, ராட்சசியா இருக்கட்டும் போங்க.” என இன்னும் முறுக்கினாள்.
“சரி சரி ஹாஸ்பிடல் தானே, போகலாம். ஒண்ணுமே இல்லைனு சொல்லப் போறாங்க, அதுக்கு போய் அலைய சொல்ற… ஆனா ஒரு டீலிங் எப்படி கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டன்னு சொல்லு அப்புறம் வர்றேன்.” என்றான்.
“இப்ப நேரம் ஆகலையா மளிகைக்கடைக்காரருக்கு…?”என்றவள் அவன் கைவளைவில் இருந்தாள்.
“என்னை அவளுக்காக தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்களாம். அதாவது நடராஜனை சந்தேகப்படக்கூடாது அதனால அவருக்கு என்னை தங்கச்சி முறைக்கு கொண்டு வர்றதுக்காக தான் இவ்வளவு செய்றீங்கனு சொன்னா. “
“ம்ம்ம் அப்புறம்…”
“அப்புறம் என்ன உங்க முன்னாள் மனைவியோட அண்ணன்களும், சேர்ந்துட்டு இதெல்லாம் வேண்டாம், நீங்க ஆம்பளை இல்லை அது இதுனு என்னென்னவோ சொன்னாங்க “என்று நிறுத்த
அதற்கு பூரணியின் பதில் என்னவாக இருந்திருக்கும் என்று ஆர்வமுடன் பார்த்தான் நிரூபன்.
“நான் என்ன சொல்லி இருப்பேன் நீங்க சொல்லுங்க?” என்று அவனிடமே கேட்க தெரியவில்லை என தலையாட்டினான்.
“அவங்க பேசின எல்லாம் கேட்டு முடிச்சுட்டு. பொறுமையா வனஜாவை இழுத்து வச்சு ரெண்டு அறை அறைஞ்சேன். தடுக்க வந்த அவனுகளை செருப்பை காட்டி தள்ளுங்கடானு சொன்னேன். பொது இடம்ன்றதால அடிச்சிடுவேனோன்னு சத்தமில்லாமல் நின்னானுக. இப்பவுமே நான் உன்னால, மத்தவங்களுக்காகனு அவரை வேண்டாம்னு சொல்லி இருந்தேன். ஆனா உன்னை மாதிரி கேவலமான புத்தி உள்ளவளுக்காக நான் ஏன் ஒதுங்கிப் போகணும்.?, நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீ என்னவேணா நினைச்சுக்கனு சொல்லிட்டு, அவனுக கிட்ட திரும்பி அவரு ஆம்பளையா இல்லையானு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்பட வேண்டாம். இன்னொரு தடவை இதுமாதிரி பேசிட்டு வந்தா போலீஸ் வந்து ஆம்பளையா இல்லையானு உங்களை செக் பண்ணும்னு மிரட்டி விட்டேன்.”
“அடிப்பாவி !”என்றான் வாயில் கைவைத்தபடி
“என்ன அடிப்பாவி… வந்த கோபத்துக்கு அவனுகளுக்கும் நாலு விழுந்திருக்கும் அதுக்குள்ள வனஜா வாங்கிக் கட்டிக்கிட்டா… காதலிச்சவனை செத்துப் போயிருவேன்னு சொல்லி மிரட்டி கட்டிக்க தெரிஞ்சவளுக்கு, அவன் கூட வாழ்ந்த வாழற வாழ்க்கையை ரசிக்கத் தெரியணும், இப்படி பயந்து பயந்து வாழ்ந்து அவ எல்லாம் என்னத்த சாதிக்கப் போறா…?நல்லவேளை கமலிக்கு மாமியாரா வாய்க்கலை அவ” என்றாள் எரிச்சலுடன்.
“சிலரோட பிறவிகுணத்தை மாத்த முடியாது பூர்ணி.” என்றவன் ,”அவங்க சொன்னதால தான் கல்யாணம் பண்ணியா?” என்று கேட்க
“நிரூபா அடுத்தவங்களுக்காக முடிவு எடுக்கலை. உங்களைப் பிடிச்சது. ஆனாலும் என் மனசில் நிறைய கேள்வி, இத்தனை வயசுக்கு அப்புறம் கல்யாணம்… தாம்பத்திய வாழ்க்கைனு ஒண்ணு இருக்கு. நண்பர்களா வாழறது எல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள எந்த அளவிற்கு சரி வரும்னு தெரியல. கல்யாணம்னா அடுத்த எதிர்பார்ப்பு ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றதா தான் இருக்கும். “
“நான் உன்னை அதுக்கெல்லாம் ஃபோர்ஸ் பண்ணலையேம்மா…?”
“ப்ப்ச்… ஃபோர்ஸ் பண்றது வேற ஓபனா பேசுறேனே… முப்பத்தி ஏழு வயசு ஆகப் போகுது. இன்னும் கொஞ்ச வருஷத்துல மெனோபாஸ் அதுஇதுனு வந்துடும், லேட் மேரேஜ் அதில் குழந்தை எப்படி முடியும்னு ஒரு கேள்வி, அதைத் தாங்கற சக்தி இருக்கான்றது அடுத்தது. அதைவிட முக்கியம் உங்களை என்னால திருப்திபடுத்த முடியுமா… தாம்பத்தியம்னா என்னன்னே புரிஞ்சும் புரியாம இருக்கிற நான் எப்படி அடுத்த கட்டத்தை எதிர்கொள்வேன், ஒருவேளை முடியலைன்னா… உங்களுக்கு இதனால பிடிக்காம போயிட்டா இன்னும் என்னென்னவோ ஓடுச்சு அதைவிட முக்கியமா இந்தக் கல்யாணத்தை ஊர் உலகம் எப்படி பார்க்கும் கேலிகிண்டல் எல்லாத்தையும் ஏத்துக்கிற மனப்பக்குவம் நம்ம கிட்ட இருக்கா…?”
“அது மட்டும் வாழ்க்கை இல்லையேம்மா. இதுவரை நமக்குள் எதுவும் நடக்கலைன்னாலும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் துணையா தானே இருக்கோம், இனிமேலும்…” என்றவனை பேசாதே என்று தலையாட்டிவிட்டு
“அதுமட்டும் வாழ்க்கை இல்லை தான், ஆனா அதுவும் ஒரு பகுதி தானே… இனிமேலும் இப்படியேனு சொல்லாதீங்க” என்றவளை தன்னோடு இறுக்கி இருந்தான் அணைப்பில்.
“சரியான கல்லூளிமங்கன்.” என்று முனகியவள்,” இதைக் கூட புரிஞ்சுக்காத அளவுக்கு சின்னப்பிள்ளை கிடையாது நான். “என்றாள்.
“அடிப்பாவி ஒரு மாசம் வேஸ்ட் ஆகிடுச்சே” என்றவன் முகம் கொஞ்சம் இறுகியது.
“எனக்கும் ஆசை, மோகம் எல்லாம் இருக்கு பூர்ணி. ஆனா எல்லா இடத்திலும் என்னை அவனுக அசிங்கப்படுத்தி வச்சிருக்கானுக. எனக்குப் பிடிக்கவே இல்லை. அவனுக தங்கச்சி ஓடினதுக்கு நான் காரணமா சொல்லு. அவளை நான் யூஸ் பண்ணி இருந்தா போயிருக்க மாட்டாளாம் என்ன பேச்சு இது? அருவறுப்பா இருக்கும். வேண்டாம்னு மறுக்கிறவளை ரேப்பா பண்ண முடியும். அதுவும் அந்த வயசில் என் உணர்வுகள் எத்தனை இளமையா இருந்திருக்கும். அதையே கட்டுப்படுத்தி இருக்கேன்னா எவ்வளவு தூரம் காயப்பட்டிருப்பேன் நான். பிடிக்கலை எதுவும் பிடிக்கலை. அண்ணன் தம்பி , சொந்தக்காரன் வீட்டில் எல்லாம் ஆசையா தங்கக் கூட முடியாது. எப்போ கிளம்புறன்ற மாதிரியே பார்ப்பானுக. “
“ஏன்…?”
“வயசுப் பொண்ணுங்க இருக்கிற வீடாம். நான் பொண்டாட்டி செத்து இளமைப்பசியோட சுத்துறவன்னு நினைப்பு அவங்களுக்கு. எவ்வளவு கேவலமான எண்ணம் பாரு. புருஷன் செத்தா உங்களுக்கு எப்படி இதுமாதிரி தொல்லை வருதோ , அதுபோல எங்களுக்கு மறுகல்யாணம் பண்ணிக்கலைனா வேற மாதிரி பேசுவாங்க. அந்த மாதிரி சுகத்திற்கு ஆள் தேடுவானுக, யாரையும் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவாங்க அப்படி எல்லாம் பேசி சிரிப்பாங்க. இதுவே பண்ணிக்கிட்டா பொண்டாட்டி செத்தும் ஆசை அடங்கலை இவனுக்குனு சொல்வாங்க. ஒருத்தங்களை பத்தி புறணி பேசணும்னா எப்படியும் பேசிடுவாங்க இதுல ஆண்பெண் பிரிவெல்லாம் இல்லை. எதைப் பத்தியும் கவலைப்படாம வாழ்ந்துட்டுப் போயிடணும் “என்றான்.
“தெளிவுதான். அதுசரி இத்தனை வருஷம் இவ்வளவு கட்டுப்பாட்டோட இருந்தீங்க தானே அப்புறம் என்ன இப்போ காதல் கல்யாணம் ?”
“கண்டதும் கண்மூடித்தனமான காதல் அதான்” என்று சிரித்தான்.
“ஹப்பா நம்பிட்டேன்.!”
“நம்பலைனா போ. “என்றவன்,” நீ பஸ் ஸ்டாண்டில் ரத்தத்தோட உட்கார்ந்து இருந்தியே… அந்த நிமிஷம் ஒரு மாதிரி ஆயிட்டேன். அந்த நிலையில் உன்னைப் பார்க்கவும், உன்னை தனியா விடவேக் கூடாதுனு தோணுச்சு. அதுக்கப்புறம் என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் வயசுப்பையன் போல திரும்ப திரும்ப உன் நினைப்பு. பார்க்கணும், பேசணும்னு தோணவும் ரொம்ப டிஸ்டர்ப் ஆனேன். அதனால தான் இனியன் கல்யாணத்திற்கு கூப்பிட்டதும் வந்துட்டேன். அப்பதான் புரிஞ்சுது. “
“என்னன்னு…?”
“வயசுக்கும் லவ்க்கும் சம்பந்தமே கிடையாது. அது எப்போ வேணும்னாலும் யார்க்கு வேணும்னாலும் எந்த சூழ்நிலையிலும் வரும்னு “
“ஓஓஓ…!”
“என்ன ஓஓஓ!, நாலுவார்த்தை அதிகம் பேசாதவனை இப்படி வளவளனு பேச வச்சுட்டியே… “சலித்தாலும் இன்னும் வளவளத்தான்.
“எப்படித் தெரியும்? அன்னைக்கு இதைப்பத்தி யார் கிட்டயும் பேசலை ” என்று பரபரத்தவனிடம்
“அய்யா சொன்னாங்க. அவரு விசாரிச்சதுல அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருந்தது, அதுவும் மூணுவயசுல ராகுல் இருக்கான்னு எல்லாம் சொல்லி இருக்காங்க. நடராஜனை நினைச்சு மனசை விட்டுடுவேன்னு என் கிட்ட உண்மையை சொன்னாங்க அய்யா. அவனை நினைச்சு வருத்தப்பட்டுக்காத ஆயானு சொன்னவரு, நமக்கு ஒரு விஷயம் கிடைக்காம போகுதுன்னா அதைவிட நல்லதா ஒண்ணு கிடைக்கப் போகுதுனு அர்த்தம். ஒனக்கு எந்தக் கொறையும் வராது சாமின்னு சொன்னாரு. அவர் சொன்னதுதானே நடந்திருக்கு” என்று அவள் சொல்லவும் நிரூபனின் அணைப்பு இறுகியது.
சிலநிமிடங்களுக்குப் பிறகு”சரி கிளம்பலாம் .”என்று அவள் விலக
“இனி சத்தியமா முடியாதுடா கண்ணா. “என்றவன் அடுத்து எப்போது தேடுதலை துவங்கினான் என்று தெரியாமலேயே அவனன்பில் திளைத்து மிதந்து கொண்டிருந்தாள்.