“சரி அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீங்க ஞாபகத்துல வச்சுக்கோங்க. அவனை பார்த்தா தான் உங்களை கைல பிடிக்க முடியாதே?…” சித்தாரா சிரிக்க,
“இல்லையா பின்ன? கொஞ்சநஞ்ச சேட்டையா பன்றான்? எனக்கே கால் பண்ணி மாமா உன் பொண்ணை குடுன்னு பாடறான். எனக்கு தெரியாதா அவன் எப்ப என்ன பேசுவான், ஏன் பேசறான்னு. ஷாக்கா இருந்தாலும் தானா வரட்டும்ன்னு தான் வெய்ட் பண்ணேன்…”
“ஆமாமா, என்கிட்ட கூட சொல்லாம…” என்று அவர் சிரிக்க,
“ஒருவேளை என் புரிதல் தவறா போய், அவன் சாதாரணமாவே பாடியிருந்தா? அதான் ஒரு யோசனை. நம்ம ஆழிக்கிட்டையும் அவ்வளோ பதட்டம் அப்போ. எனக்கு என் பிள்ளைங்க என்கிட்ட வெளிப்படையா இருக்கனும். நிஜமா இருந்தா எப்படியும் சொல்லாம இருக்கமாட்டான். நான் நினைச்ச மாதிரியே உடனே சொல்லிட்டான்…” என்றார் மனம் நிறைந்து.
“சரி, சரி என்னோட அண்ணே எந்திச்சு வராங்க. போய் பேசிட்டிருங்க…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் சித்தாரா.
அங்கே ஆழினி நின்றுகொண்டிருக்க பார்த்ததுமே திகைத்து போனார். குளித்து முடித்து சாதாரணமாய் சல்வாரில் நின்றிருக்க,
“என்ன ஆழி இது?…” என்றார் அவசரமாய் வந்து.
“என்னம்மா? காபி எடுக்க வந்தேன்…” என்று நிதானமாக பதில் தந்தவள்,
“எதுக்கு இந்த பதட்டம்? யாருமே இல்லை ஹால்ல…” என்று சொல்ல,
“அதுக்கு? நைட்டே சொன்னேன்ல நான். நான் சொல்லும்போது கண்ணனோட வான்னு…”
“ம்மா பசிக்குது. அதான் வந்துட்டேன். இது ஒரு தப்பா?…” என்றவள்,
“கண்ணா எழுந்ததும் வீட் பிஸ்கட், ரஸ்க் வச்சு தானே காபி குடிப்பாங்க. அதான் எடுத்துட்டு போக வந்தேன்…” என்ற மகளை எதுவும் சொல்லமுடியவில்லை.
“அதான் வந்துட்டா இல்ல? விடுங்கம்மா…” என்ற கமலா,
“பாப்பா வேற எதுவும் வேணுமாய்யா?…” என்றார் ஆழினியிடம்.
“இது போதும். நான் எடுத்துட்டு போறேன்…” என்று ட்ரேயுடன் நகர,
“இரு இரு. யாரும் இருக்காங்களான்னு பார்க்கறேன்…” என சித்தாரா எட்டி வெளியே பார்த்தார்.
“ஹப்பா யாருமில்லை. முக்கியமா உன் பெரியம்மா….” என்று நிம்மதியானவர்,
“ஆழிம்மா. நேத்து தான் கல்யாணமாகி இருக்கு. நீ புடவை கட்டிக்கோயேன். ப்ளீஸ். அப்படியே மண்டபத்துக்கு கிளம்பனும்…” என்று சித்தாரா சொல்ல,
“அவ்வளோ தானே? நான் கட்டிக்கறேன். இதுக்கு ஏன் கெஞ்சனும்? குளிச்சிட்டு டக்குன்னு மாத்திக்க இதுதான் ஈஸியா இருந்தது. இப்ப என்ன? மாத்திடலாம்…”என்று கிளம்பி சென்றாள் ஆழினி.
“ஹப்பா இந்த பொண்ணோட….” சித்தாராவிற்கு தலையே சுற்றியது.
“நம்ம பாப்பா என்னைக்கு மறுத்து பேசிருக்கு? அதெல்லாம் சொன்னா கேட்டுக்கற பிள்ளை தான்…” கமலா சிரிக்க,
“ஆழினி பேசமாட்டா. ஆனா அவளை யாராச்சும் பேசினா கண்ணா சும்மா இருக்கமாட்டானே. முன்னாடியே யாரையும் பேசவிடமாட்டான். இப்ப கேட்கவா வேணும்? எதுக்கு அதுக்கெல்லாம் வாய்ப்பு குடுத்துக்கிட்டு?…” என்றார்.
“ஹ்ம்ம், பார்த்ததும் தெரிஞ்சது…” என்றவளுக்கு வேறு என்ன பேசவென்று தெரியவில்லை.
முதல்நாள் இரவின் மிச்சங்கள் இப்போதும் அவள் முகத்தில் படர்ந்திருக்க, இந்த காரணமற்ற பேச்சுக்கள் கொண்டு தன் நாணத்தை மறைக்க முயன்றாள்.
விடாமல் அவனின் பார்வை துளைத்ததில் அவனெதிரே அமர முடியாத சங்கடம் அவளுள் எழுந்தது.
“கண்ணா ப்ளீஸ்…” என்று ஒருகட்டத்திற்கு எதிரே அமரமாட்டாமல் எழுந்து அவனருகில் இருந்த சிறிய இடத்தில் அவனோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்துகொள்ள,
“ஹேய் ஆழி…” என்றான் சத்தமாய் சிரித்தபடி அவளை ஒரு கையால் வளைத்து அணைத்து.
“அடி விழும். இப்படியா பார்க்கறது? ப்பாஹ், அநியாயம்…” என்று சொல்லியவள் சிணுங்கலில் சிரித்தவன்,
“வேற எப்படி பார்க்க?…” என்று கேட்டு,
“நீ கம்பர்ட்டபிளான்னு செக் பண்ணேன். கேட்டா இன்னும் கூச்சப்படுவியோன்னு தோணுச்சு…”
“பார்த்தா எப்படி தெரியுது?…” என்று கேட்டவளை இன்னும் முகமெல்லாம் புன்னகை பொங்க பார்த்தான்.
“சொல்லிடுவேன். அப்பறம் நீ ரூம் விட்டு எழுந்து போய்ட்டா?…” என்று கேட்க,
“ஓஹ் காட். யூ ஆர்…”
“ஹ்ம்ம் சொல்லு….”
“கண்ணா…” என்று அவனின் நெஞ்சில் சாய அவள் முகத்தை நிமிர்த்தி மூக்கின் நுனியில் முத்தமிட்டவன்,
“சும்மா பார்த்தேன். பார்த்துட்டே இருந்தேன். இப்பவும் உனக்கு எப்படி என் மேல இவ்வளோ இவ்வளோ. ப்ச், ஒரு வருஷத்துக்கு முன்ன நீ நான் இப்படி நினைச்சு பார்த்தேன். இப்ப இன்னைக்கு இந்த நிமிஷம். சிரிப்பு வருது….” என்றான் கேலியாய்.
“உங்களை யார் கவனிக்க வேண்டாம்ன்னு சொன்னது? கண்ணு தெரியலை. நானா பேசினா குதர்க்கமா பதில் சொல்றது. வேற என்ன தெரியும் உங்களுக்கு?…” என்றாள் நொடிப்பதை போல.
“என்ன சண்டை போடனுமா?…” என்று கேட்டவன்,
“சரி, அய்யனார் நமக்கு ஹனிமூன் ட்ரிப்க்கு பேசிட்டு போனார் போல மாமாக்கிட்ட. எனக்கு இஷ்டமில்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்…”