கார்மேகவண்ணனும் அவனறைக்குள் நுழைய நஞ்சப்பன் வந்துவிட்டான் அவனை பார்க்க.
“அப்பறம் மச்சான், ஹனிமூன் எல்லாம் எப்படி போச்சு? ஒரு போன் கூட பண்ணலையே?…” என்று இலகுவாய் வந்து கேட்க,
“நீ பக்கத்துல இல்லைன்றதை தவிர வேற ஒரு குறையும் இல்லைடா பாய்சா. உன்னை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?…” என்று கார்மேகவண்ணன் சொல்ல நஞ்சப்பன் ‘ங்கே’ என்று பார்த்தான்.
“சரிடா நான் பொறவு வாரேன்…” என்று கிளம்ப திரும்ப,
“டேய் இர்ரா…” என்று அதட்டிய கண்ணன்,
“உக்காரு இப்படி…” என்று தனக்கு எதிர் சீட்டை காண்பிக்க,
“ரொம்பநாள் கழிச்சு வேலைக்கு வந்திருக்க. இனி கம்பெனியோட முதலாளி வேற நீ. நான் ஓபி அடிச்சா உனக்கு புடிக்குமா? நட்பு வேற. வேலை வேற. இதுக்காடா என்னை வேலைக்கு வச்சிருக்க?…” என்று நண்பனிடமிருந்து தானே கொடுத்த தலையை மீட்க குட்டிக்கரணம் அடித்தான் நஞ்சப்பன்.
“ஓஹ், அப்போ குடுத்த வேலைக்கு நியாயமா நடக்கனும்ன்னு சொல்ற?…” என்று கார்மேகவண்ணன் யோசனையுடன் நஞ்சப்பனை பார்க்க,
“அதேதான். அப்படியே பிக்ஸ் ஆகிக்கோ. மச்சான் கப்புன்னு புடிச்சிட்ட…” என்று சொல்லி ‘ஹப்பாடா’ என்று நெஞ்சில் கைவைத்து ஆசுவாசமாக,
“அப்ப பேசாம நீ ஜாபை ரிஸைன் பண்ணிரு. என் பிரெண்டா இரு…” என கார்மேகவண்ணன் அலட்டிக்கொள்ளாமல்.
“எதே…” என்றான் நஞ்சப்பன்.
“ரிஸைன் பண்ணுடா…” என்றவன் கடகடவென்று கணினியில் டைப் செய்ய ஆரம்பிக்க,
“அடேய் அடேய் இருடா, கிராதகா. நல்லாத்தான இருந்த. அதுக்குள்ள என்னாச்சு? நீ ஒழுங்கா பேசறதே இந்த கம்பெனிக்குள்ள தான். இங்கயும் வேட்டு வைப்பன்னு நினைச்சிருந்தா இந்த பக்கமே வந்திருக்கமாட்டேனே…” என்றான் பதறி போய்.
“எனக்கு நீ ப்ரெண்டா இருடா மச்சான்…”
“அடக்கம் பண்ணிருவான் போல. ஆத்தீ முனியாண்டி கண்ணு முன்னாடி நின்னுட்டாரு. அடேய் டைப்பாத. டைப்பாதடா…” என்று கார்மேகவண்ணன் கையை பிடித்து நிறுத்த பார்த்தான்.
“ஓஹ், உன்னோட பாஸ் மேலையே கை வைக்கிறியா?…” என்று அடுத்த குண்டை போட்டான் கண்ணன்.
“நானா? எப்ப?…” அப்பாவி பார்வை நஞ்சப்பன் முகத்தில்.
“இதோ இப்ப பிடிச்சியே? என் கடமையை செய்ய விடாம?…”
“அவ்வ்வ், மச்சான். ட்விஸ்ட் அடிக்காதடா. ஒருவாரம் நிம்மதியா இருந்தேன். சமயத்துல இப்படி பன்றியே? உத்தியோகம் புருஷலட்சணம்டா…” என்று அழமாட்டாத குறையாக சொல்ல,
“புரியலையே?…” என்றான் கார்மேகவண்ணன் நன்றாக அவன் புறம் திரும்பி அமர்ந்து.
“இப்பத்தான் முனியாண்டி எனக்கும் பொண்ணுகிண்ணு பார்க்கலாம்ன்னு வீட்டுல பேச ஆரம்பிச்சிருக்கார். எனக்கும் கல்யாணமாக போகுது. ஹ்ம்ம்….” என்று தலையை ஆட்டி பாவம் போல சொல்ல,
“உனக்கு கல்யாணமா?…” என்று அவன் கேட்ட விதத்தில் பட்டென்று நெஞ்சு வெடித்துவிட்டது நஞ்சப்பனுக்கு.
“புரிஞ்சு போச்சுடா. வாய் வைக்காத. புழைச்சு போய் தொலையறேன். மச்சான்…” என்று சொல்லி,
“இன்னைக்கு காலையில் முனியாண்டி முகத்துல முழிக்கும் போதே நினைச்சேன்…” என்று புலம்ப,
“இப்படி உட்கார்…” என்று பாந்தமாய் நண்பனை அமர வைத்தான்.
“பின்ன? நீ அப்பாவிடா பாய்சா. நாளைப்பின்ன ஒருவார்த்தை நீ கூட சொல்லலையேன்னு என்னை பார்த்து விரலை நீட்டி கேட்டுட்டா? நான் தாங்கமாட்டேன் மச்சான்…” என்று சொல்ல,
“போதும்…” என்று கையெடுத்து கும்பிட்டவன் எழுந்துகொண்டான்.
“மச்சான் பாய்சா, இப்ப வேலை நேரம் என்னால உனக்கு பெருசா விளக்க முடியலை. ஈவ்னிங் வீட்டுக்கு வாயேன். விலாவரியா பேசுவோம்…”
“என்னிய சாமியாரா, ஒத்தக்கட்டையா மாத்தற வரைக்கும் விடமாட்ட இல்ல? எனக்கு கல்யாணம்ன்னா கூட உன் பக்கமே தலை வச்சு படுக்கமாட்டேன்…”
“சரி, நீ என்ன இங்க? கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே?…” என்றான் கார்மேகவண்ணன்.
“சைட்டுக்கு போகனும். அதான் கூப்பிட வந்தேன். வரீங்களா?…” என்று கேட்க,
“எஸ், போலாமே…” என்று எழுந்துகொண்டான் அவளுடன் சேர்ந்து செல்ல.
———————————————–
ஆழினியின் அறையெங்கும் நிறைந்து சிதறிக்கிடந்தவற்றோடு அவளின் கைபேசியும் சுக்கல் நூறாக நொறுங்கி கிடக்க, அதனை மேலும் மேலும் உடைத்தான் கார்மேகவண்ணன் அவனின் ஆத்திரம் தீருமட்டும்.
எதற்கும் எதிர்வினையாற்றாமல் வியர்த்து போயிருந்த முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கூந்தல் கற்றைகளை கூட ஒதுக்காமல் வெறித்த பார்வையுடன் தரையில் அமர்ந்திருந்தாள் ஆழினி.
“ஏற்கனவே குற்றவுணர்ச்சில செத்துட்டிருக்கேன். உனக்கு புரியுதா இல்லையா? மேலும் மேலும் என்னை கொன்னுட்டிருக்க நீ. என்னை உயிரோட செதில் செதிலா வெட்டி போட்டுட்டிருக்கடி. புரியுதா? முட்டாள் முட்டாள். இந்த முட்டாள் மேல அப்படி என்ன உனக்கு முட்டாள்தனமான காதல்?…”
“யோசிக்கமாட்டியா? இவன் வொர்த்தா இல்லையான்னு தோணாதா?…” என்று இரைந்தவனின் சத்தத்தில் மிரண்டு பார்த்தாள்.
“இல்லை, இல்லை அப்படியெல்லாம் உங்களை கில்ட்டிய நினைக்க விடலையே. என்ன கண்ணா இது?…” என்றவளை ஒற்றை கையால் தூக்கி தன் முன் நிறுத்திவிட்டான் கார்மேகவண்ணன்.
“என்ன கண்ணான்னா? அப்பறம் ஏன்டி என்கிட்ட சொல்ல வேண்டியதை எல்லாம் உன்கிட்டயே சொல்லி அதுக்கு சொல்யூஷன் தேட பார்க்கிற? இத்தனை நாள் அதுவேற. இப்ப நான் உனக்குள்ள வந்த பின்னாடியும்ன்னா?…” என்றவன்,
“எனக்கு மொத்தமா தோத்துட்ட மாதிரி இருக்கு ஆழி. என் கோபம், ஆதங்கம் எல்லாம் உன்கிட்ட கொட்டிட்டிருக்கேன். எனக்கு நீ தான்ற நம்பிக்கைல, என் எல்லாம் நீ தான்ற நிஜத்துல…” என ஆதங்கத்தில் பேசி,
“ஆனா உனக்கு இன்னும் நான் வெறும் நிழலா தான் இருக்கேனா? உனக்கானவனா என்னை நீ தேடவே இல்லைல? அப்போ எதுக்கு நான், உன்னோட எனக்கான அந்த காதல். டேமிட்….” என்றவன் தன் காலுக்கு கீழ் கிடந்த ஆழினியின் கைபேசியை காலால் உதைக்க உடைந்த பாகம் சுவற்றில் சென்று மோதியது.
“கண்ணா…” என்றவளின் பரிதவிப்பான அழைப்போடு பொங்கும் அந்த விழிநீர் பார்த்தவன்,
“பேசாத. பேசின, அறை விழும். போடி…” என்று சொல்லியவன் கைகள் அதற்கு நேர்மாறாய் ஆழினியை வாரி அணைத்திருந்தது.