“என்னை நீ என்ன பண்ணிட்டிருக்க? அவ்வளோ ஸ்டபர்ன். ஆழி நான் சொல்றது இப்பவரை புரியலையா?…” என்றான் ஆற்றமாட்டாமல் அவளை விலகவிடாமல் குறையாத கோபத்துடன்.
மௌனமாய் அவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைத்து அசைந்தவள் முயற்சி எல்லாம் முறியடித்தான்.
“நீ அந்த நகைகளை என்ன எழவுக்கும் வச்சிட்டு போ. என்னவோ பண்ணு. புருஷன் நான் எதுக்கு இருக்கேன்? என்கிட்ட சொல்லவேண்டியதை போன்ல சொன்னா நான் எதுக்கு உனக்கு? எதுக்கு இந்த கல்யாணம்? சொல்லி தொலையேன்…” என்றான் ஆக்ரோஷம் தணியாமல்.
அவன் அத்தனை பேசினாலும் இன்னும் அந்த பேச்சுக்களின் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாத பாரத்துடன் ஆழினியின் கண்கள் கண்ணீரை கொட்டியது.
“அப்போ எவ்வளோ நேரம் பிடிச்சிருந்தாலும் நீ வாயை திறக்கமாட்ட, அப்படித்தானே?…” என்றவன் பட்டென்று அவளை விட்டுவிட்டு இரண்டடி பின்னால் செல்ல மின்சாரம் அறுந்ததை போல் அதிர்ந்து நின்றாள்.
“உன்னை அப்படியே விட்டுட்டு போக முடியாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோம். நகை தானே வச்சிருந்த. எதுக்காவும் இருக்கட்டும், அப்பறம் பேசிக்கலாம்ன்னு திரும்ப தேடி வந்தா, நான் வரப்போ என்ன காரியம் பண்ணின நீ?…” என்றவன் மீண்டும் உடைந்த போனை எட்டி மிதித்தான்.
“என்ன அவ்வளோ லவ்வா? இதுக்கு பேர் காதலா? காதல்ன்ற பேர்ல என்னை நீ டார்ச்சர் பண்ணிட்டிருக்க. புரியுதா இல்லையா?….” என்று இரைந்தான்.
“கண்ணா….” என்றவள் உதடு துடிக்க பார்க்க,
“உன்னோட காதல் மேல அவ்வளோ மதிப்பும், மரியாதையும் பிரமிப்பும் இருந்தது. ஆனா இப்ப அதையெல்லாம் தாண்டி பெரிய பயமே வந்திருச்சு ஆழி? நீ என்ன பன்றன்னு புரியுதா?…” என்றவன் கீழே கிடந்த அந்த சின்ன சின்ன நகைகளை கையில் அள்ளினான்.
“எங்க இதை பார்த்தா உன் மனசுல சந்தோஷம் வருதா சொல்லு? என்ன தோணுது?…” என்று கேட்க அவள் முகத்தில் மிதமிஞ்சிய வேதனையின் சாயல்.
“உன்னால சொல்ல முடியாது ஆழி. ஆனா கஷ்டப்பட்டுட்டே கூட இதை கண்ணு முன்னாடி வச்சு வருத்திக்கிட்டே இருக்கன்னு நினைக்கிற. இதுக்கு பேர் காதலா ஆழி?…” என்ற கேள்வியில் துடித்து போய் பார்த்தாள்.
“பேசி தொலையேன்…” என்றவன்,
“என்ன சொன்ன நீ? நான் ஆசைப்பட்டு வாங்கினதால எனக்காக வச்சிருக்கன்னு தான சொன்ன?…” என்றவன் அதில் செயின், மோதிரம் என இரண்டை எடுத்தான்.
“இதை போடு…” என்று நீட்ட எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு அவனை இறைஞ்சுதலாய் பார்த்தாள் ஆழினி.
“போடுன்னு சொல்றேன்ல….” என்று அவளை நெருங்க,
“ம்ஹூம், வேண்டாம்…” என்று பின்னே சென்றாள்.
“போட்டுத்தான் ஆகனும். இந்த நகை எல்லாம் வெறும் நகை தானே? கூடுதலா நான் வேற ரசிச்சு ஆசைப்பட்டு வாங்கின நகை. போட்டுக்க என்ன கஷ்டம்? போடு, போடு…” என்றான் நக்கலும், கோபமுமாய்.
“வேண்டாம் கண்ணா. விடுங்க. தப்பு பண்ணிட்டேன்…” என்று அவனின் கையை தட்டிவிட்டாள் ஆழினி.
“என்ன வேண்டாம்? கஷ்டமா இருக்கா?…” என்று கேட்க அவள் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது.
“சரி, நீ போடவேண்டாம்…” என்றவனின் சொல்லில் நிம்மதியாய் அவனை பார்த்தவள் நிம்மதிக்கு சில நொடிகள் கூட வாழ்வில்லை.
“நானே போட்டுவிடறேன்…” என்று அவள் கழுத்தில் அணிவிக்க போக அதிர்ந்து பார்த்தாள் ஆழினி.
அவள் முகத்தின் அசூயை உடல்மொழிக்கு இடம்பெயர அதிர்வு மறந்து சினம் பொங்கியது அவன் தன் கழுத்தில் வைத்திருந்ததை பார்த்ததும்.
“கண்ணா விடுங்க. விடுங்கன்னு சொல்றேன்ல. வேண்டாம். எனக்கு பிடிக்கலை. விடுங்க. விடுங்க. விடு. விடுடா…” என்று கெஞ்சலில் துவங்கி ஆவேசமும், ஆத்திரமுமாய் அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டவள் கோபமுகம் இதுவரை அவன் காணாதது.
“என்னடா என்னடா செய்ய சொல்ற? எனக்கே நான் என்ன பன்றேன்னு தெரியலை. ஆமா நான் தான் அதை வச்சுக்க நினைச்சேன். நகை மேல ஆசைப்பட்டா? இல்லையே. எனக்கு அது சஞ்சனாவுக்கு ப்ரெசென்ட் பண்ணினதாவே தோணலை…”
“அந்த நகையோட ஒவ்வொரு தேர்வும் உன் முகத்தை, உன் காதலை காமிச்சது. எவ்வளோ ஆசையா அதை எடுத்திருப்ப? வெறும் நகையா என்ன? உன்னோட அன்னைக்கான எண்ணங்கள், உணர்வுகள் தானே? அதுல உன் சந்தோஷம் எல்லாம் தெரிஞ்சது…”
“ஈஸியா கொண்டுபோய் பணமா மாத்துன்னா? எனக்கு முடியலை. உன்னோட மொத்த காதலும் எனக்குன்னா காதலோட நீ வாங்கினதும் எனக்கு சொந்தம்ன்னு நினைச்சேன். பைத்தியக்காரத்தனம் தான். ஆனா எனக்கு அப்போ அதுதான் தோணுச்சு…”
“என்ன பன்றது? எனக்கு தெரியலையே. தப்புன்னு புரியுது. மறைக்கிறதும் தப்பு தான். மறைச்சிட்டேன். கல்யாணத்துக்கப்பறம் சொல்லியிருக்கனும். சொல்லபோனா அந்த நினைவே எனக்கு இல்லை. நமக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் வேற…”
“அப்போ எல்லாம் இந்த நகையோட இருப்பு எனக்கு உணர்த்திக்கிட்டே இருந்துச்சு. என்னைக்கு என்னோட விருப்பம் உனக்கு தெரிஞ்சு வீட்டுல பேசினோமோ அப்பவே அப்பா சொல்ல சொன்னாங்க. ஆனா எனக்கு சொல்ல தோணலை. நானே சொல்லிடறேன்னு அப்பாவையும் ஸ்டாப் பண்ணிட்டேன்…”
“அதுக்கப்பறம் நம்ம கல்யாண வேலைகள், நம்மோட வாழ்க்கைன்னு எல்லாமே மாறிடுச்சு. மத்தவை மறந்திடுச்சு. சத்தியமா மறந்து தான் போய்ட்டேன் கண்ணா. எனக்கே ஞாபகமில்லாததை நான் எப்படி சொல்ல?…” என கேட்டு நின்றவளின் மேல் என்னவோ இன்னும் கோபம் கிளர்ந்தெழ தான் செய்தது.
“இதை நீ நியாயப்படுத்த நினைக்கலைன்னாலும் நீ சொல்றதை என்னால அக்சப்ட் பண்ணிக்கவே முடியாது ஆழி. அதை விட நீ பண்ணின பாரு. அதை ஜீரணிக்கவே முடியலை…” என்றவன்,
“என்கிட்ட உன்னோட மன இறுக்கத்தை சொல்ல கூட முடியலைன்னா நாம என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கோம்? சொல்லு…” என்றவன் கேள்வியில் சுக்குநூறானது ஆழினியின் மனது.
“எனக்காக, என்னோட ரசனை, என் விருப்பம், என் காதல்ன்னு அந்த நகையில ஒன்னொன்னையும் எனக்காக தேடினவளுக்கு அந்த பொருளால எனக்கு எவ்வளவு மனவேதனைன்னு தெரியாதாமா?…” என்றான்.
‘அவன் கேட்பதும் சத்தியமான உண்மை தானே?’ என்று வாயடைத்து நின்றிருந்தாள் ஆழினி.
“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி எவ்வளோ வேகத்துல என்னை தள்ளிவிட்ட? அந்த நகையை போட்டுக்க கூட இல்லை. உன் கழுத்துல சும்மா வச்சு பார்க்கறதுக்கே உன் மனசு இடம் குடுக்கலை. இது, இதுதான் நிதர்சனம் ஆழி. இந்த உணர்வு தான் உண்மை…” என்றவன்,
“இதை உணராம காதல்ன்ற பேர்ல நீ பன்ற மடத்தனத்தை என்னால அனுமதிக்க முடியாது. என்னை விரும்பினாலும் சொல்லமாட்ட. என்னை பிடிச்சாலும் சொல்லமாட்ட. எல்லாமே நானே தெரிஞ்சுக்கனும். நானே தேடி வரனும். நானே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துக்கனும்ன்னா என் வாழ்க்கைல சரிபாதின்ற நீ எதுக்கு?…” என்றான் வேண்டுமென்றே அவளை காயப்படுத்த.
“இவ்வளோ நேரம் பேசின நான் என்ன செத்தா போய்ட்டேன்? நல்லா தானே உனக்கு முன்னாடி பேசிட்டிருக்கேன். ஒன்னொண்ணுக்கும் நான் வருத்தப்பட கூடாது, கஷ்டப்படக்கூடாதுன்னு மொத்தமா என்னை குழில தள்ளி நெருப்பை வச்சுட்ட ஆழி…” என்றான் காயப்பட்ட வலியுடன்.
“உன்னையும் கஷ்டபடுத்தி என்னையும் காயப்படுத்தி காயத்தை இன்னும் இன்னும் குத்தி கிழிச்சு ரணமாக்கிட்டு இருக்க. போதாததுக்கு எல்லாத்துக்கும் மேல போன்ல பண்ணுனியே ஒரு விஷயம். ச்சே. போடி. அது கூடவே குடும்பம் நடத்து…” என்றவன் அறையை விட்டு வெளியேற பார்க்க,
“ஸாரி கண்ணா….” என்றாள் ஆழினி பரிதவிப்புடன்.
“இந்த ஒரு வார்த்தைல எல்லாத்தையும் மாத்திட முடியுமா உன்னால? எனக்காக எல்லாம் செஞ்சவளுக்கு நான் வேண்டாம்ன்னு சொன்ன விஷயம் மட்டும் எப்படி பிடிச்சதா மாறுச்சு? அதுவும் எனக்காகன்னு சொன்ன கன்னம் பழுத்துடும். அவ்வளோ வெறில இருக்கேன்….” என்றான் பல்லை கடித்தபடி.
அவன் சொல்ல சொல்ல தான் செய்த காரியத்தின் இன்னொரு பிம்பம் அவளின் கண்களுக்கு அப்போது தான் புலப்பட்டது.
“நான் சொல்லவா? எனக்காக செய்யறன்னு உனக்கு நீயே ஒரு சந்தோஷத்தை உருவாக்கிக்கற ஆழி. அது உடையக்கூடிய ஒரு நீர்க்குமிழி. அந்த பபிள் நல்லதில்லை. மாயத்தோற்றம். உன்னோட இந்த அதீதத்துல இருந்து வெளில வா. இயல்பா இரு….”
“காதலிச்சோம்ன்ற காரணத்துக்காக வாழ்க்கையையே நாம தியாகம் பண்ண முடியாது. எனக்காக எனக்காகன்னா அப்போ உன் வாழ்க்கையை நீ எப்போ வாழ்வ?…” என்றான் கார்மேகவண்ணன்.
“நீ ஒவ்வொருதடவையும் என்னோட முகம் பார்த்து, என் விருப்பப்படி நடந்தா எனக்கு சந்தோஷம்ன்னு நினைக்கிற? சத்தியமா இல்லை. நான் பெருமைப்படவோ சந்தோஷப்படவோ இல்லை. அளவுக்கதிகமா நேசிக்கலாம். அளவில்லாம நேசிக்கலாம். ஆனா அதை மட்டுமே வாழ்க்கையா நினைக்க கூடாது…”
“இது உன்னை இன்னும் ஸ்ட்ரெஸ்ல விடும். அது என்னையும் பாதிக்கும். உனக்கொண்ணுன்னா நானும் துடிச்சு போவேன்றதும் காதல் தான். உனக்கொண்ணுன்னா என்னை நான் காயப்படுத்துப்பேன்றது பைத்தியக்காரத்தனம். அது உடலளவில இருக்கனும்ன்னு இல்லை. உன்னை நீயே மெண்டலி சஃபர் பண்ணிக்கற….” என்றான் கோபத்தை குறைத்து தன்மையாய் எடுத்து சொல்லி.
அவன் பேச பேச மடங்கி அமர்ந்தவளின் அழுகை சத்தமின்றி மௌனத்தை எடுத்துக்கொண்டது.
“இவ்வளோ சொல்லிட்டேன். வேற என்ன சொல்றதுன்னு தெரியலை. நீயா என்ன முடிவுக்கு வரனுமோ வா. யோசி. சுயமா சொந்தமா புத்தின்னு ஒன்னு உனக்கு அந்த கடவுள் படைச்சிருக்கான்ல? பார்ப்போம் என்ன செய்யறன்னு….” என்றவன் பெருமூச்சுடன் வெளியேறிவிட்டான்.
மாடியிலிருந்து தடதடவென்று இறங்கி வர வாழவந்தானுடன் சித்தாராவும் இப்போது ஹாலில் அமர்ந்திருந்தார்.
மருமகனின் வருகையில் இருவருமே எழுந்து நிற்க அவர்களை கண்டனத்துடன் பார்த்தவன்,
“இன்னும் நீ கிளம்பலையா மாமா?…” என்றான் கோபமாய் வாழவந்தானிடம்.
“டேய் கோவப்படாதடா. கண்ணா…” என்று அவனின் கன்னத்தை பற்ற வர,
“போயா…” என்று தட்டிவிட்டவன்,
“உம்பொண்ணு விட்டா எனக்கு இன்னொருத்தியை பாருன்னாலும் செய்வா போல? ரெடியா இரு. எனக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வைக்க. அப்படி நடந்தா அய்யனார் வீட்டுக்கெல்லாம் போமாட்டேன். இந்த வீட்டுலையே தனிக்குடித்தனம் நடத்துவேன். பார்த்துக்கோ…” என்று சொல்ல,