“நீ ஒன்னும் கவலைப்படாத. உன்னை விட்டுட்டு எல்லாம் போகமாட்டேன்…” என்று அவனின் கன்னம் தட்ட,
“இங்கயும் உன் வேலையை காமிச்சிட்டியா? டேய் அடங்குடா. அவனே பாவம் ஒன்னும் தெரியாம முழிக்கிறான்…” என கோவேந்தன் மகனின் கலாட்டாவில் தலையில் தட்டிக்கொண்டு அதட்டினார்.
பதிலுக்கு கண்ணன் பேச, இடையில் வாழவந்தான், நஞ்சப்பன் மாட்டிக்கொள்ள முனியாண்டியின் முகத்தில் சிறு புன்னகை.
நஞ்சப்பனுக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது அவரின் முகத்தில் வருத்தம் குறைந்து அந்த மெல்லிய சிரிப்பை கண்டு.
“டேய் போதும், டாக்டர் வராங்க பார்…” என்றதும் சூழ்நிலை அப்படியே நேர் எதிராக மாறியது.
மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு நேரம் சொல்லிவிட்டு அவர்களுக்கு தைரியம் சொல்லி கிளம்பினார்.
“அவ்வளோ தான். ஆண்டவன் புண்ணியத்துல நமக்கு டோனர் கிடைச்சிட்டாங்க. தைரியமா இருங்க. நான் போய்ட்டு நைட்டுக்கு சமைச்சு கொண்டுவரேன்…” என்று மகிழா கிளம்ப,
“நானும் புறப்படறேன்ம்மா. நீ வா. அப்படியே போற வழில விட்டுட்டு போறேன்…” என்றவருக்கு மகளை சென்று பார்க்கும் வேகம்.
“பொண்ணை தேடின்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே மாமனாரே?…” என்றான் நக்கலாய் கார்மேகவண்ணன்.
“கண்ணா…” என்று மாட்டிக்கொண்டதை போல பாவமாய் பார்க்க,
“தெரியலைண்ணே. நானும் கேட்டுக்கலை….” என்று மழுப்பினார் சித்தாரா.
அவரால் சட்டென சொல்லிவிட முடியவில்லை. கோவேந்தன் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்றிருந்தது.
அத்துடன் சொல்லியிருந்தால் தன் கணவனோ, கண்ணனோ சொல்லியிருக்கலாம். அவர்களே சொல்லவில்லையே என்று அமைதியாகிவிட்டார்.
“தெரிஞ்சுக்காததே நல்லதும்மா. உப்புக்கு பெறாததுக்கு எதுக்காச்சும் சண்டை போட்டிருப்பான். இவன் மனைவின்னு ஆடும் போதே நினைச்சேன். இப்ப பாரு முறுக்கிகிட்டு நிக்கிறதை…” என்று சொல்லிய கோவேந்தன்,
“கேண்டீன் உள்ளயே இருக்குன்னு சொன்னேன். அதோட உங்களுக்கு…” என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே மென்றுவிட்டாள்.
“உங்களுக்குன்னா? என்ன?…” என்று பேண்ட் பாக்கெட்டின் இருபுறமும் கையை நுழைத்துக்கொண்டு இலகுவாய் அவன் கேட்க,
“ஒண்ணுமில்லை…” என்றவள், அவன் அங்கிருந்த ஒரு டீ ஷாப்பில் சென்று நிற்க கண்டு திருதிருவென விழித்தாள்.
அவளின் பார்வையை கண்டும் காணாதவன் போல இருவருக்குமாக ஆடர் செய்துவிட்டு அங்கிருந்த சேரில் சென்று அமர்ந்துகொண்டான்.
“என்கிட்ட எதுவும் சொல்லனுமா ஆழினி?…” என்றான்.
“ஹாங், ஆமா…” என்றவள் அவனின் கேள்வியான பார்வையில்,
“ஜ்வெல்ஸ் எல்லாம் வித்துட்டோம்…” என்றாள் தகவலாக.
“ஹ்ம்ம், அக்கவுண்ட்ல அமொண்ட் க்ரிடிட்டாகியிருக்கு. பார்த்தேன்…” என அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,
“அதை சொல்ல தான் வந்தேன்…”
“ஓஹ், கால் பண்ணி சொல்லியிருக்க வேண்டியது தானே?…” என இதழோரம் துடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“நேர்ல சொல்லனும்ன்னு எனக்கு, எனக்கு தோணுச்சு. வந்தேன்….” என்றவள்,
“அதோட என்கிட்ட மொபைலும் இல்லை. அதான் சொல்லிட்டு போகலாமேன்னு வந்துட்டேன்….” என்று கூறி முடித்தவள், தங்களின் டேபிளுக்கு சுட சுட வந்த வடா பாவ், பொறித்த பச்சை மிளகாயை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“பசிச்சா எடுத்து சாப்பிடு. எனக்கும் நல்ல பசி. அதான் வந்தேன்….” என்று அவளுக்கு ஒரு பிளேட்டை நகர்த்தி தான் எடுத்துக்கொள்ள உண்ணும் அவனையே வியப்புடன் பார்த்தாள் ஆழினி.
“இது இதெல்லாம்….” என்றவள் வார்த்தைகளை கட்டுப்படுத்த முயன்றாள்.
“ஏன் நான் எதுவும் நினைச்சுப்பேன்னு கேட்காம அவாய்ட் பன்றியா என்ன?…” படுநக்கலாக அவன் கேட்க,
“ப்ச், நான் ஏன் யோசிக்கனும்?…” என்று சொல்லியவள்,
“இது இதெல்லாம் உங்களுக்கு ஒத்துக்காதே. அதான் பார்த்தேன்…” என்றவளுக்கு ‘இவனுக்கு இது பிடிக்கும் என்று தனக்கெப்படி தெரியாமல் போனது’ என்று பார்த்தாள்.
அதற்குமேல் காத்திராமல் பசியில் அவள் எடுத்து சாப்பிட ஆரம்பிக்க மெல்ல அவளின் தட்டில் இருந்த பச்சை மிளகாயை நகர்த்திவிட்டான் கண்ணன்.
“இது ரொம்ப காரமா இருக்கும் ஆழி…” என்று சொல்ல பதில் பேசவில்லை அவள்.
“டீ எடுத்துக்கோ. இன்னொன்னு சொல்லவா?…” என்று கேட்டு கவனித்தவனிடம் அந்த கோபம் இருந்ததன் சுவடே இல்லை.
இன்னும் அவளால் அவன் காண்பித்த கோபத்தின் தாக்கத்தில் இருந்து வெளிவரமுடியவில்லை.
அதற்காகவே அவன் பேசியதற்காகவே உடனே கிளம்பி சித்தாராவையும் அழைத்துக்கொண்டு நகைக்கடைக்கு சென்று ஆவன செய்து கிளம்பி வந்திருக்க எதுவுமே நடக்காததை போன்ற அவனின் நடவடிக்கையில் திகைப்பு தான் மிஞ்சியது.
“இன்னொன்னு வேணுமா?…” என்று கேட்க,
“ம்ஹூம். போதும்…” என சொல்லிவிட்டு டீயை குடித்து முடித்தவள் கிளம்புவதாய் பார்க்க,
“போலாம் இரு…” என்று சொல்லி காசை கொடுத்துவிட்டு மீண்டும் வந்தமர்ந்தான்.
“கேட்டியே இது எப்படி எனக்கு ஒத்துக்கும்ன்னு. இது மூணு வருஷத்துக்கு முன்ன பழகின பழக்கம். பர்ஸ்ட் டைம் சாப்பிடும் போது எனக்குமே பிடிக்கும்ன்னு நினைக்கலை. ஆனா பிடிச்சு இப்ப வரை சாப்பிடறேன்…” என்று சொல்லி அவளை ஆழமாய் பார்க்க, ஆழினியின் முகத்தில் கோபத்தின் சுவடு அப்பட்டமாய்.
ஆக சஞ்சனா பழக்கிவிட்ட பழக்கம் என்று எத்தனை சாதாரணமாய் இவன் சொல்கிறான் என்று கொந்தளிக்கும் கோபத்தை அடக்கிக்கொண்டு பட்டென்று எழுந்துவிட்டாள்.
“என்ன கோவம் இப்போ?…” என அவளை நிறுத்த பார்க்க,
“உங்க பழக்கம் யார் ஆரம்பிச்சி வச்சா எனக்கு என்ன? என்கிட்ட சொல்லாதீங்க. இப்ப கையை விடுங்க. நான் கிளம்பறேன்…” என்று முணுமுணுவென்று மூக்கு விடைக்க அவள் கையை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“பழக்கத்த ஆரம்பிச்சு வச்சது யாரோன்னு ஏன் நினைக்கிற? டேஸ்ட் பிடிச்சது சாப்பிட்டேன். இப்ப வரை சாப்பிடறேன். எனக்கு பிடிச்சதால மட்டும் தான். யார் யாருக்காகவோ என்னோட பிடித்தத்தை மாத்திக்க முடியுமா?…” என்றான் கண்ணன்.
“வெல், நல்ல பிலாசபி. பத்திரமா வச்சுக்கோங்க. எனக்கு கேட்க வேண்டாம். என்ன சொல்ல வரீங்கன்னு நல்லாவே புரியுது. அதான் சொன்னீங்களே என் நடுமண்டையில நச்சுன்னு அடிச்ச மாதிரி. அதுவே நிறைய புரியவச்சிருச்சு….” என்றவள் தொண்டையடைக்க தன்னை நிதானப்படுத்த அங்கிருந்த தண்ணீரை எடுத்து வேகமாய் பருகி முடித்தாள்.
“கிளம்பறேன்…” என்று வெளியே வர,
“ஆழி நில்லு. உனக்கொன்னு வாங்கி வச்சிருக்கேன்…” என்றான் அவளுடன் வந்து.
“என்னன்னு சொல்லுங்க…” என்றவள் அங்கிருந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.
“என்ன பன்றேன்? எனக்கு எப்படியும் மொபைல் தேவைப்படும். அதான் வாங்கறேன்….” என்று சொல்லிக்கொண்டே ஒரு போனை டக்கென்று எடுத்துவிட்டாள்.
“பில் குடுங்க….” என்று கண்ணனிடம் சொல்ல,
“ப்ச், சொல்றேன்ல. இப்ப வேண்டாம்….” என்று அவன் மறுக்க,
“திரும்புங்க…” என்றவள் அவனின் பாக்கெட்டின் பின்னிருந்த பர்ஸை எடுத்து தானே அதற்கான தொகையை கொடுத்துவிட்டு, கையோடு கொண்டுவந்திருந்த தனது சிம்கார்டை அதில் பொருத்தி முதலில் கணவனின் எண்ணுக்கு அழைக்க முயன்று பின் அழித்தாள்.
“என்னடி பழிக்கு பழியா?…” பல்லை கடித்துக்கொண்டு கேட்டாலும் அவன் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை.
‘கொழுப்பை பாரேன். இருக்கட்டும் இருக்கட்டும். வச்சிக்கறேன்.’ என்று நினைத்துக்கொண்டவனுக்கு தன் எண்ணை அழித்துவிட்டு வாழவந்தான் எண்ணை அழுத்த,
‘யோவ் மாமா, அவ போன் பண்ணினான்னு எடுத்த, நீ காவி தான். காலி தான். காசி தான்.’ என மானசீகமாய் மாமனாருக்கு மிரட்டல் விடுத்தபடி தவிப்புடன் அவளையும் கையிலிருந்த போனையுமே பார்க்க, தந்தைக்கு அழைப்பு விடுக்க போனவள் விரல் பச்சை பட்டனை அழுத்த முடியாதென சண்டித்தனம் செய்ய,
“ஷிட்….” என்றுவிட்டு மீண்டும் கணவனின் எண்ணிற்கே அழைப்பு விடுத்து பார்க்க உள்ளுக்குள் குத்தாட்டம் ஆடினான் கார்மேகவண்ணன்.
‘மாமா எஸ்கேப் நீ. நஞ்சா பறந்து போடா’ என்று உள்ளுக்குள் குதூகலித்தாலும் வெளியில் விரைப்பாய் நின்றான்.
“எனக்கு இந்த மொபைல் போதும்…” என்றாள் ஆழினி அவனிடம் காண்பித்து.
“அப்போ மெயில், வாட்ஸ் ஆப் எல்லாம் எப்படி செக் பண்ணுவ?…” என்று கேட்டவனை அமர்த்தலாக பார்த்தவள்,
“அதான் எனக்கு புருஷன் நீங்க இருக்கீங்களே? வேற தேவை இல்லை…” என்று சொல்லிவிட்டு அவள் முன்னே நடக்க,
அதன்பின் அவளுக்காக அவன் வாங்கிய கைபேசி கேட்பாரற்று கிடந்தது. ஓரிரு நாட்களுக்கு பின் கோபம் குறைந்து அதனை உபயோகிப்பாள் என்று நினைத்தவனின் நம்பிக்கையும் பொய்யாய் போனது.
“ப்ச், மெயில் செக் பண்ணு ஆழி. இந்தா மெசேஜ் பாரு…” என்று அவனின் கைபேசியில் அவளின் கணக்கையும் சேர்த்து பார்த்தவன், பார்க்கும் நேரமெல்லாம்,
“அப்ப அந்த மொபைலை யூஸ் பண்ண மாட்ட? அப்படித்தானே? எவ்வளோ பிடிவாதம்?…” என்று காய்ந்துவிட்டு எந்த நேரமாக இருந்தாலும் வாழவந்தானுக்கு அழைத்துவிடுவான்.
இல்லை வீட்டிற்கே நேரில் சென்று அவரை படாதபாடு படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.
“யோவ் மாமா பொண்ணாய்யா வளர்த்து வச்சிருக்க?…” என்று ஆரம்பிப்பதில் இருந்து காசியில் தான் நிற்கும் அவனின் பேச்சுக்கள்.
“இந்த பய எனக்கு காவி குடுக்காம விடமாட்டான் சித்து. கேட்டியா நீ?…” என்று சொல்லி பார்க்க,
“மக கூட சேர்ந்து மறைச்சீங்க இல்ல? அனுபவிங்க…” என்பார் சித்தாராவும்.
இவர்களின் கலாட்டாக்களை இதழோரம் ஒதுங்கும் புன்னகையுடன் பார்த்து ரசித்தபடி தான் ஆழினி என்னும் அலை அமைதியாக அமரிக்கையாக கார்மேகத்தை தொட்டு தொட்டு மிதந்துகொண்டிருந்தது.