“இப்பத்தான் உடம்பெல்லாம் தேறி வர்ர நீ. எதுக்குடா பைக்ல வந்த? கார் எடுத்துட்டு வரவேண்டியது தானே? உங்கப்பன் பிடிச்சு என்கிட்ட எகிறிட்டு கிடக்கான்…” என்றார்.
“ப்ச், அய்யனார்கிட்ட பேச்சு வாங்கறது என்ன புதுசா? சும்மா. என்னம்மோ இன்னிக்குத்தான் அவர் உம்மை பேசறது மாதிரியும், நீரு அதுல சுணங்கிட்ட மாதிரியும். ஆஸ்கார் நடிப்பு மாமா….” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
“நேரம்டா படவா….” என்றவர் அவனை பார்த்துக்கொண்டே சிலநொடிகள் மௌனம் காத்தார்.
இப்படியான நேரங்களில் வம்பிற்கென்றே அவன் அவரை கேலி பேசுபவன் இன்றைக்கு அமைதியாய் வர அத்தனை ஆச்சர்யம் வாழவந்தானுக்கு.
வாழவந்தான் பார்வை இப்போது அவனிடம் அழுத்தமாய் படிய அவனை ஆராய முனைந்தார்.
“இந்த ப்ளாக் ஷர்ட், ஆஷ் கலர் ஸ்லிம் ஃபிட் பேண்ட் காம்பினேஷன் ரொம்ப நல்லாயிருக்கு. இந்த ஷர்ட் நம்ம சேர்ந்து தானே போய் வாங்கினோம்…” என்று வாழவந்தான் கேட்க,
“என்ன வேணும்ய்யா மாமா. நேரா கேளேன்…” என்று மரத்தில் சாய்ந்து நின்றவனின் இரு கைகளும் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்து, ஒரு காலை மடக்கி மரத்தில் ஊன்றி நின்றான்.
“இல்ல சும்மா தான்…” என்றவருக்கு அவனிடம் எப்படி ஆரம்பிக்கவென்று தெரியவில்லை.
“அந்த சஞ்சனா பத்தி தெரிஞ்சுக்கனுமா?…” என்று பொட்டில் அடித்தார் போன்று அவன் கேட்க,
“புத்திசாலிடா நீ….” என்று அவனின் கன்னம் தட்டியவர்,
“நீ கிளீன் ஷேவ் பன்றதை விட இப்படி டீப் ட்ரிம் பண்ணிக்கோ. அழகா இருக்கு…” என சொல்ல,
“இந்த கடலை அவிக்கிற வேலை தானே வேணாம்ங்கறேன்…” என்றவனுக்கு ‘ஆழினியை பற்றி சொல்வோமா?’ என்று தொண்டைவரை வார்த்தைகள் வந்துவிட பேசமுடியவில்லை.
“பார்த்தியா உன் முகமே மாறிடுச்சு. இன்னைக்கு நீ என்னவோ சரியில்லை. அதான் சரின்னு வெளில போக உன் கூட வந்தேன்…” என்றவர்,