“அட ஆமாடா. திடீர்ன்னு கிளம்பி வந்திருக்காங்க. எல்லாம் நல்லவிஷயமா தான். ஆழிக்கு வரன் பார்க்கலாம்ன்னு பேச வந்திருக்காங்க…” என்று சொல்ல அதுவரை பெரிதாய் சுவாரஸியம் இன்றி கேட்டவனுக்குள் என்னவோ ஒரு வெற்றிடம்.
“ஓஹ்…” என்றவன்,
“என்ன சொல்றா புது பொண்ணு?…” என்றான் வரவழைத்துக்கொண்ட நக்கலுடன்.
“அவ என்ன சொல்லுவா? பெரியவங்களா பேசிட்டு இருக்காங்க. சரி சரி. நீ வந்தா வரும்போது வாங்கிட்டு போ. இல்லை லேட்டாகும்னா நானே வீட்டுக்கு போயிருவேன். போய்ட்டா உனக்கு திரும்ப கால் பன்றேன்…” என்று வைத்துவிட்டார்.
“நான் தரேன்னு தான்டா சொல்லுவேன். பொறுப்பா குடும்பத்தை பார்த்துக்கறவன் நீ என்ன சொல்லனும்? பறந்த நாளை குடும்பத்தோட கொண்டாடி பறக்கறேன்னு சொல்லவேண்டாமா?…”
“டேய்…”
“பறந்தே டே. போடா போ. போய் வீட்டை பாரு. உன் மன சாந்திக்கு ஒருவார்த்தை சொல்லி வச்சா அதையே புடிச்சு தொங்குவியா? கிளம்பு…” என்று தானும் தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வர,
“நீயும் கிளம்பிட்டியா?…”
“ஆமா, எனக்கும் குடும்பம், அப்பாம்மா எல்லாம் இருக்காங்கடா. இருட்டிருச்சு. வயசு பையன் காத்துக்கருப்பு அண்டாம பத்திரமா வந்துசேருன்னு மகி வேற போன்ல ஒரே அழுகை. வா, வா. போவோம்…” என தன் கேபினை லாக் செய்துவிட்டு கிளம்பினான் அவன்.
“மச்சான்…”
“என்னடா ராசா?…” இன்னும் அப்பாவியாய் கண்ணனை பார்த்து நின்ற நஞ்சப்பன்,
“நீ பிராங்க் பண்ணி சப்ரைஸ் பண்ண போறியா?…” என்று அப்போதும் கேட்க,
“அடேய் மனுஷன் நிலைமை தெரியாம. ஏன்டா ஏன்?…” என்ற கார்மேகவண்ணன்,
“என்னவோ டென்ஷனா இருக்கியே. என்ன மேட்டர்?…” என்றான் நஞ்சப்பன்.
“அப்படியா தெரியுது?…” என்று தன் தாடையை தடவியபடி கண்ணன் கேட்க,
“முச புடிக்கிற…” என்றவனை முடிக்க விடாமல்,
“அடிங்…” என்று கண்ணன் கை ஓங்க,
“எங்கையோ சிக்கிட்டன்னு தெளிவா தெரியுதுடா. வாழற போ…” என்று சத்தமாய் கத்திக்கொண்டே நஞ்சப்பன் ஓடிவிட, அதுவரை கூட இலகுவாய் காண்பித்துக்கொண்டவன் முகம் அப்பட்டமான குழப்பத்திற்குள்ளாகியது.
“ஆழி…” என்று பல்லை கடித்தான்.
அவனின் மனதின் வேகத்தை ஒத்திருந்தது வாகனத்தின் வேகமும். அத்தனை விரைவில் வாழவந்தான் வீட்டை அடைந்திருந்தான் கார்மேகவண்ணன்.
அவன் உள்மனதின் உணர்வுகளை போல ஊமையாய் வானமும் கண்ணீர் சிந்த லேசாய் தூறல் விழ ஆரம்பித்தது வீட்டை அடையவுமே.
“அடடே வாப்பா கண்ணா, எப்படி இருக்க?…” என்றார் ஆழினியின் தாய்மாமா சிவவேங்கடம்.
“ஹ்ம்ம், குட்…” என்று சொல்லியவன் அவர்களிடம் புன்னகைத்துவிட்டு வாழவந்தானை பார்க்க,
“உக்கார்டா. என்ன நின்னுட்டே இருக்க?…” என்றார்.
“இல்ல கிளம்பறேன். மகிம்மா எங்க?…” என்றான் கண்ணன்.
அவன் முகத்தில் சுரத்தில்லை என்று பார்த்ததுமே வாழவந்தான் கண்டுகொள்ள அங்கே வைத்து கேட்கமுடியவில்லை.
வரவேற்பறைக்கு பின்னிருந்த மிகப்பெரிய இன்னொரு ஹாலில் வட்டவடிவிலான மெத்தையில் பெண்கள் எல்லாம் அமர்ந்திருந்தனர்.
“வா கண்ணா…” என்று சித்தாராவும், மகிழாவும் அழைக்க,
“ம்மா, கீ…” என்றான் தன் தாயிடம்.
அவரிடம் கேட்டாலும் அவனின் பார்வை என்னவோ ஆழினியை தான் மையம் கொண்டது.
அப்பட்டமான கலவரம் தாங்கிய முகம். அவள் முகத்திலேயே ஒருவித பிடித்தமின்மையும், தன்னை பார்த்ததும் தவித்த தவிப்பும் அட்சுபிசகாமல் அவனுள் சென்று சேர்ந்துகொள்ள அந்த உணர்வுகள் அவனை பந்தாட துவங்கியது.
“இரு கண்ணா, அதுக்குள்ள ஏன் கிளம்பற?…” என்றார் சித்தாரா.
‘கடைசி வரை இவன் என்னை புரிந்துகொள்ள போவதில்லையோ? புரிந்தாலும் விரும்ப போவதில்லை’ என்பதை போலொரு தோற்றத்தை அவனின் வாழ்த்து காண்பித்தது.
‘அடுத்தவர்கள்’ என என்றைக்கோ சொல்லிய அந்த வார்த்தை இப்போதும் அவள் காதில் கேட்க மனம் திறக்கவே தயங்கியவள் இப்போது மொத்தமாய் பின்வாங்கிவிட்டாள் இந்த வாழ்த்தில்.
“தேங்க்ஸ்…” என்று மட்டும் சொல்ல தொண்டை அடைத்தது ஆழினிக்கு.
அவளின் இந்த பார்வை அவன் வசமிழக்க செய்வதாய் இருக்க அவனுக்கு செய்வதறியாத ஒரு நிலையென்றால் அது இந்த தருணம் மட்டுமே.
‘காதல், இது அதுவல்லாமல் வேறு என்னவாம்?’ ஏற்கனவே அனுமானித்தது தான். ஆனால் அது முழுவடிவம் பெறவேண்டுமே.
இத்தனை நாட்கள் நிஜமா, நிழலா, யூகமா என்று அல்லாடிக்கொண்டிருந்தவனுக்கு நாளும், பொழுதும் நகர நகர அவளின் பால் அவனும் நகர்ந்துகொண்டிருப்பதை அன்று உணர்ந்துகொண்டான்.
இதோ இந்தநொடி எல்லாம் முடிவிற்கு வந்துவிட்டதை போலிருந்தாலும் அவளாக எதையும் சொல்லாமல் தான் என்ன செய்துவிட முடியும்?
மறுக்கவும், ஒதுக்கவும் அவள் வாய் திறந்தால் தானே? ஏற்கவும் கூட அவள் தானே வேண்டும்.
வெகுநேரம் இப்படியே இருவரும் நின்றிருந்தால் உள்ளிருப்பவர்கள் தேடக்கூடும் என்று சுதாரித்தவன்,
“சாவியை தா…” என்று அவன் கை நீட்ட அவன் உள்ளங்கையில் வைத்தாள் ஆழினி.
வாங்கியவன் ஒருநொடியும் நில்லாமல் அங்கிருந்து மழையில் இறங்கி பைக்கை நோக்கி செல்ல,
“மழை பெய்யுது. ஏன் நனையறீங்க?…” என்றாள் சத்தமாய்.
உணர்வின்றி அவளை திரும்பி பார்த்த பார்வையில் ஆழினி இரண்டடி பின்னே நகர்ந்து செல்ல, பைக்கை கிளப்பியவன் மழையில் நனைந்துகொண்டே கேட்டிற்கு சென்றான்.
மனதின் உந்துதலோ, அவளின் உள்மன அழைப்போ எதுவோ ஒன்று மீண்டும் திரும்பி ஆழினியை ஒரு பார்வை பார்த்தவன் தான் கிளம்பிவிட்டான்.
சீறிக்கொண்டு செல்லும் இருசக்கரவாகனத்தின் சத்தம் ஆழினியின் காதை கிழித்ததை போல மனதையும் கிழித்தது.