பல்லை கடித்துக்கொண்டு அவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ரிதுபர்ணா.
“என்ன?…”
“ஒண்ணுமில்லை…” என்று மீண்டும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
முன்னால் போனால் உதைப்பதும், பின்னால் வந்தால் கடிப்பதுமாக அவளை எங்கும் அசையவிடாததை போல வளைத்து பிடிக்க தலை கிறுகிறுத்தது ரிதுவிற்கு.
‘இதான் இவரை வீட்டுல வச்சு வளர்க்கலை. இதுக்கே இவ்வளோ பேச்சு.’ என மனதிற்குள் நினைக்க அதற்கு தான் அவனின் அத்தனை பேச்சும் என்று தெரியவில்லை ரிதுவிற்கு.
“ஏன் அங்க உக்கார்ந்துட்ட?…” என்றவன் அருகே வந்து,
“இப்ப நீ ஏன் மூட் அவுட்டாகிட்ட?…” என்றான் ஒன்றுமே நடக்காததை போல.
“உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது…”
“என்னது?…”
“என்னதா? அதான் கீழ நீங்க இவ்வளோ பேசனுமா?…”
“ப்ச், பிரச்சனை அதே தான். உரிச்ச வெங்காயத்தையே உரிச்சிட்டு இருக்காங்க. கடுப்பாகுமா ஆகாதா?..” என்றான் ஏகத்திற்கும் கடுப்பாக.
“அவங்க பேச்சுல காமிச்சிட்டாங்க. நீங்க செயல்ல காமிச்சீங்க. வித்தியாசம் ஒண்ணுமில்லை…” மனதில் தோன்றியதை பட்டென்று ரிது போட்டு உடைக்க,
“அப்படியா? வா, இங்க உக்கார்ந்து பேசுவோம்…” என அவளை கையில் தூக்கிக்கொண்டான்.
“விடுங்க, விடுங்க முதல்ல. நான் என்ன பேசிட்டிருக்கேன்?…” என்று அவனிடமிருந்து விடுபடும் முன் கட்டிலில் அவளை இறக்கியிருந்தவன்,
“சோபா கம்பர்டபிளா இல்லை எனக்கு…” என்று வசதியாய் அவளோடு அமர்ந்துகொண்டு,
“இப்ப பேசு…” என்றான் சாவாகாசமாக.
“அட்டகாசம் பன்றீங்க…” என்றாள் ஆயாசத்துடன்.
“இதெல்லாம் ரசிக்க கத்துக்கோ…” என்றவன்,
“என்ன சொன்ன? அவங்க சொல்லிட்டாங்க. நான் செயல்ல காமிச்சேனா? எஸ். அப்படித்தான். அதையும் அவங்க ஏன் என்னை பாயின்ட் அவுட் பண்ணனும்? நான் செய்யறேனா ஏதாவது?…” என்றதும் அவனை அயர்ந்து போய் பார்த்தாள்.
“இதுல வித்தியாசம் எதுவும் இல்லைனாலும் அவங்க நான் என்ன செய்யனும்னு சொல்ல கூடாது. எனக்கு தெரியாதா அங்க நிக்கனுமா வேண்டாமான்னு. எனக்கு உன்னை பார்க்கனும். வந்தேன். இதுல அவங்களுக்கு என்ன?…” என்றவனை வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள் ரிதுபர்ணா.
அவன் வந்தது தனக்காக என்று வாய்விட்டு சொல்லவில்லை. ஆனால் தனக்காக மட்டும் தான். தன்னை தேடித்தான் என அவளால் உணர முடிந்தது.
ஆனாலும் வாய்விட்டு சொல்லிவிடமாட்டானாம் என நினைக்கையில் இதழோரம் புன்னகை உருவெடுக்க முயன்று அடக்கினாள்.
“என்னவோ அவங்களை கொத்தா புடிச்சு வீட்டு வாசல்ல கொண்டுவந்து நிப்பாட்டின மாதிரி தான்…” என்று சலித்துக்கொண்டவன்,
“ப்ச், அதை பேசி என் மூட் ஸ்பாயில் பண்ண முடியாது…” என்று இரு கைகளாலும் முகத்தை துடைத்துக்கொண்டவன்,
“இரு, போய் ப்ரஷப் பண்ணிட்டு வரேன்…” என்று எழுந்து சென்றான்.
அவன் சென்றதும் ரிதுபர்ணா கட்டிலில் காலை மடக்கி சாய்ந்து அமர்ந்திருக்க ஆத்மா வரவும், கதவு தட்டப்படவும் சரியாய் இருந்தது.
“மனோவா தான் இருக்கும்…” என ஆத்மா சொல்ல,
“நான் போய் பார்க்கறேன்…” என்று எழுந்தாள் ரிது.
“கையில மருதாணி வச்சிட்டு எப்படி டோர் ஓபன் பண்ணுவ?…” என்று கேட்டுக்கொண்டே கையிலிருந்த டவலை தன் மேல் போர்த்திக்கொண்டு கதவை திறக்க சென்றான்.
அவன் நினைத்ததை போல மனோ தான் நின்றிருந்தாள். கையில் ஒரு பாத்திரமும் இருந்தது.
“என்ன மனோ?…” என கதவை ஒருக்களித்து திறந்து வைத்து ஆத்மா நின்றான்.
“அம்மா இதை குடுத்துட்டு வர சொன்னாங்க ண்ணா…” என்று காண்பிக்க வாங்கி பார்த்தவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
“குட்நைட் ண்ணா…” என்று சொல்லியவளுக்கு,
“குட்நைட் மனோ…” என பதிலுக்கு சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டு வந்தான்.
“என்ன இது?…” என்று கேட்க,
“கொழுக்கட்டை…” என்று சொல்லியபடி சோபாவில் அமர தானும் இறங்கி வந்து அமர்ந்துகொண்டாள் அவனுக்கெதிரே.
“இப்ப மட்டும் சோபா ஓகே வா?…” என கேட்டவளுக்கு பதிலில்லை. ஒன்றை எடுத்து அவளுக்கு தர,
“இப்பவா?…” என்றவள் பார்க்க அது தீபம் ஏற்றப்பட்ட கொழுக்கட்டை.
“சாப்பிடு. நல்லாயிருக்கும்…” என அவளுக்கு ஊட்டியவன் தானும் சாப்பிட்டான்.
“நாங்க நாளைக்கு தான் இதை செய்வோம்…”
“அம்மா எப்பவும் இந்த மாசம் முழுக்க சாமிக்கு விளக்கு ஏத்த இதையும் செய்வாங்க. இப்பவும் செய்யறாங்கன்னு நினைக்கறேன்…” என்றவன் வேறு பேசவில்லை.
உண்டு முடிக்கும் வரை அவனிடம் அசாத்திய மௌனம். ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடித்து கையை கழுவிக்கொண்டவன் ரிதுவின் பார்வையை கவனித்தும் கவனிக்காதவனாக தான் கொண்டுவந்த பேக்கை எடுத்தான்.
“உனக்கு சில்க் சேரி, ப்ளவுஸ் ப்ளஸ் ஜ்வெல்ஸ்…” என்று எடுத்து வைக்க விழிகள் விரிய அதனை பார்த்தாள் ரிது.
“இதுக்காகவா வந்தீங்க?…” என்று அவனிடம் நம்பமுடியாமல் கேட்டும்விட ஆத்மாவின் முகத்தில் பெரிதாய் ஒன்றுமில்லை.
“இதுக்காகன்னு சொல்ல முடியாது. கம்பெனில ஒரு வொர்க். வரப்போ சரி போறதும் போறோம் இதை கொண்டு வரலாமேன்னு எடுத்துட்டு வந்தேன். அவ்வளோ தான்…” என்றான் அவன்.
கொஞ்சமும் சளைக்காமல் சமாளிப்பவனிடம் எனக்காக தான் என்று வாதிடவா முடியும் என்பதை போல அவன் எடுத்துவைத்ததை எல்லாம் ஒரு பார்வை பார்த்தவள்,
“ஓகே, தேங்க்ஸ்…” என்று முடித்துக்கொள்ள ஆத்மாவின் முகம் போன போக்கில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்த்தாள்.
“வொய் நாட்? எனக்கு எவ்வளோ சிவக்குதுன்னு பார்ப்போம்…” என்று அசராது அவளை இழுத்து பிடிக்க அவனின் கைவரிசையில் ரிதுவின் கால்கள் துவண்டுவிட அவளை கைகளில் ஏந்திக்கொண்டான் ஆத்மா.
“பார்த்தா வெய்ட் போட்ட மாதிரி இருக்கு. ஆனா கொஞ்சமும் ஸ்ட்ரெந்த் இல்லை…” என்று குறை பேசியவனிடமிருந்து தப்பிக்கும் மார்க்கமில்லை அவளுக்கு.
“ப்ளீஸ்…” என்றவளின் குரல் கூட அவனுக்கு ராகமாய் இருக்க காதினோரம் உறவாடிய ஜிமிக்கியில் அத்தனை முத்தங்கள் வைத்தான்.
“பெரிய ஜிமிக்கி எடுத்துட்டு வந்திருக்கேன். நாளைக்கு அதை மாத்திக்கோ…” என்றவன் பேச்சினோடு அவன் பற்கள் ஜிமிக்கியில் உராய்ந்து சப்தமெழுப்ப,
“தள்ளி இருங்க…” என்று விலகினாள் அவள்.
“ஏன்? ஏன்? ஏன்?…” என்று அத்தனை ஏன் கேட்க,
“நாளைக்கு கோவிலுக்கு போகனும். சித்தியும், பெரியம்மாவும் சுத்தபத்தமா இருக்கனும்னு சொல்லியிருக்காங்க…” என்று வாய்க்கு வந்ததை அவனிடம் ஒரு வேகத்தில் சொல்ல,