“என்ன? அப்ப உள்ள போய்ட்டானா?…” என தடதடத்தார் ஆனந்தி.
“போயிருப்பான், பொண்ணையே கட்டி வாழ்ந்திட்டிருக்கான். போகாம மட்டும் என்ன?…” என்று ஆரம்பிக்க,
“இந்தா நிப்பாட்டு…” என அண்ணாமலை வரவுமே மனோ பதறிவிட்டாள்.
“ஒருவேளை சித்தி வீட்டுக்கோ, இல்லை அத்தை வீட்டுக்கோ கூட போயிருக்கலாம்ல. இருங்கம்மா…” என்று சொல்லி அவள் வெளியே வர கேட் அருகே நின்றிருந்த வாட்ச்மேன் எட்டி பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்.
அதை கண்டு மனோ அங்கே தான் நேராக சென்றாள் என்னவோ என்று யோசித்துக்கொண்டே.
“என்னண்ணே? என்ன வெளிலையே எட்டி பார்த்திட்டு இருக்கீங்க? இந்த கேட் பூட்டாம இருக்கு?…” என்று ஒரு ஆள் மட்டும் உள்ளே நுழைந்து செல்லும் அளவிலான வாயில் கதவு திறந்திருப்பதை காண்பித்து கேட்டாள்.
“நம்ம கண்ணன் தம்பியும், ரிது பொண்ணும் நடந்து போனாங்க. அதான் வரதுக்காக திறந்து வச்சிருக்கேன்…” என்றதும் தலையசைத்தவள்,
“நீங்க உட்காருங்க. அவங்க வர வரைக்கும் நின்னுட்டே இருப்பீங்களா? அண்ணாவே கதவை தட்டுவாங்க…” என்று அவரிடம் சொல்லிவிட்டு நேராக வீட்டிற்குள் வந்தாள்.
“சித்தப்பா வீட்டுக்கு போறேன்னுட்டு கேட் கிட்ட என்ன வேலை உனக்கு?…” ஆனந்தி கேட்க,
“ம்மா அண்ணாவும், அண்ணியும் வெளில நடந்து போனாங்களாம். நீங்க நினைக்கிற மாதிரி அண்ணி வீட்டுக்கு போகலை. இப்பத்தான் வாட்ச்மேன் அண்ணா சொன்னாங்க…”
“நிஜமாவா?…” என ஆனந்தி அண்ணாமலையை பார்க்க அவரின் முகத்திலும் சற்று நிம்மதி.
அது அர்த்தமில்லாதது என புரிந்தாலும் என்னவோ மாற முடியவில்லை அவர்களால்.
அந்த வீட்டு பெண்ணே தங்கள் வீட்டில் இருக்க மகன் அங்கே போவதில் மட்டும் என்னவாகிவிடும் என்று ஒரு எண்ணம் உதித்தாலும் அதனை தள்ளி தான் வைத்தனர்.
“சரி அப்பாவை சாப்பிட வர சொல்லு. அண்ணன் வரதுக்குள்ள சாப்பிட்டு போய் படுங்க. அவன் வரவும் சாப்பிடட்டும்…” என்றதும் மனோ ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“அண்ணன்கிட்ட நீங்க சொல்லனும். சேர்ந்து சாப்பிடுன்னு. இது நல்லாயில்லம்மா…” மனோ மனது கேட்காமல் சொல்லிவிட்டாள்.
“நான் சொன்னா மட்டும் அவன் கேட்டுடுவானா? என்னைக்கு என் பேச்சை கேட்டிருக்கான். பேசினா அதுக்கும் பதிலுக்கு ஏதாவது சொல்லுவான்…”
“ம்மா, என்னைக்கு அண்ணா அப்படி உங்களை பேசினாங்க? சும்மா சொல்லாதீங்க…” மனோவுக்கே ஆனந்தியின் பேச்சு பிடிக்கவில்லை.
“ஏன் நேத்து உன் அப்பாவையே பேசலையா?…”
“அது நேத்து. ஆனா இந்த கல்யாணம் நடந்தது கொஞ்ச நாள் முன்னாடி. அதுக்கு முன்ன மட்டும் நீங்க எப்படி பேசினீங்க. நீங்க ஏன்ம்மா இப்படி இருக்கீங்க?…”
“எப்படி இருக்கேன்? என்கிட்டே எப்ப இவன் நல்லா பேசியிருக்கான். என்ன பேசினாலும் ஒத்தை வார்த்தை பதில். ஒதுங்கி ஒதுங்கி இருக்கறது. இவன்கிட்ட நான் என்ன பேச சொல்லு?…” என்று பேசி வைக்க மனோவிற்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
மகன் தான் விலகி போகிறானே என்றால் இழுத்து பிடிக்க தாய்க்கு தோன்றவில்லை.
அவன் விலகுவது மட்டுமே தெரிய அப்படியே இருக்கட்டும் என்பதை போல ஆனந்தியின் செயல்களும் இருந்துவிட்டது.
அதுவே இன்னும் அவன் குடும்பத்துடன் பற்றற்று இருக்க பெரும் காரணமாகி போனது.
“இப்ப எதுக்கு இந்த கரைச்சல்? போய் சாப்பாடு எடுத்து வைங்க…” என வந்து சாப்பிட அமர்ந்த அண்ணாமலைக்கு மகன் மேல் கோபம் தான் வந்தது.
இந்தளவுக்கு அவனிடம் ஒரு மாற்றம், அதுவும் அவளால் என்னும் பொழுது தாங்கள் இன்னும் ஒரு பொருட்டில்லாமல் போனோமே என்பதை போல உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருந்தார்.
மனைவி, மகளிடம் மகன் மீதான அதிருப்தியை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவே.
அமைதியாக உண்டு முடித்து அறைக்குள் சென்றுவிட்டார். வீட்டில் இருக்கவே பிடித்தமில்லாததை போலிருந்தது அண்ணாமலைக்கு.
அன்று காலை கோவிலில் வைத்து சொந்தங்கள் எல்லாம் மகனுடன் மருமகளை பார்த்துவிட்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டதும்,
“என்னன்னாலும் சொந்த தங்கச்சி மக. விட்டுக்குடுப்பாரா? அதெல்லாம் அந்தந்த நேர கோவம் தானே? இப்ப எல்லாம் ஒன்னுமன்னா தானே இருக்காங்க…” என்று கிண்டலாக பேசி சிரித்திருக்க எரியும் தீயில் எண்ணையை ஊற்றியதை போலிருந்தது.
அறைக்குள் நுழைந்தவருக்கு எதையும் காண்பிக்க முடியாத கோபம் ஒருபக்கம். அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்க வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
ஜன்னல் வழியாக பார்க்க ரிதுவுடன் பேசியபடி உள்ளே வந்துகொண்டிருந்தான் ஆத்மா.
அவளின் கையில் கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதற்கான பூஜை பொருட்கள் இருக்க ஜன்னலை மூடிவிட்டு சென்று படுத்துவிட்டார்.
ஆனந்தியும், மனோவும் ஹாலில் அமர்ந்திருக்க கொண்டுவந்த பிரசாதத்தை எங்கே வைக்க என்று யோசித்தபடி ரிது ஆத்மாவை பார்த்தாள்.
இன்னும் அந்த வீட்டின் பூஜை அறையை கூட பார்த்திருக்கவில்லை அவள். இதனை தான் கொண்டு போய் வைத்தால் எதுவும் சொல்ல கூடுமோ என கையிலேயே வைத்திருக்க,
“ராணி இதை வாங்கி அங்க வைங்க…” என்றவன்,
“கையில வச்சிட்டே சாப்பிடுவியா? உட்கார்…” என அமர வைத்துக்கொண்டான்.
தான் கொண்டு வைத்திருக்கவேண்டும். இல்லை அவன் வாங்கி வைத்திருக்கவேண்டு.
இரண்டும் இல்லாது குடும்பத்தில் வேலைக்கு என்று இருப்பவரிடம் வைக்க சொல்ல ரிதுவிற்கு ஒப்பவில்லை.
தானாகவும் உரிமை எடுத்து அங்கே கொண்டு வைக்கவும் விருப்பமில்லை. மனது வரவில்லை.
கொண்டுபோய் வைத்துவிடலாம். ஆனால் அதற்கொரு பிரச்சனையா? அதை விரும்பவில்லை.
தன்னால் எதுவும் வேண்டாம் என எப்போதும் போல ஒதுங்கி இருப்பவளுக்கு அவள் விரும்பாதவையும் நடக்கவிருப்பதை அப்போது உணராது போனாள்.
“என்ன பார்க்கற? குடு…” என அவன் சொல்ல ராணிக்கு புரிந்தது. (Xanax)
“நீங்க கொண்டு போய் வைங்க தம்பி. இல்லைன்னா ரிதுவையே வைக்க சொல்லுங்க…” என்றதும் அவள் முகத்தில் பெரிதாய் விருப்பம் இல்லை.
“இல்லை நீங்க வைங்க…” என ஆத்மாவிடம் நீட்டிவிட்டாள்.
“ஹ்ம்ம், சரி குடு…” என வாங்கி சென்று வைத்துவிட்டு வந்தான்.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வரும் வரை பேசவில்லை. மௌனமாகவே வந்துவிட்டனர்.
தன்னை அழைத்துக்கொண்டு சென்று அதனை செய்ய வைக்கவில்லை. நீ வை என்று சொல்ல கூட இல்லை என தோன்றினாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை.
“ட்ரெஸ் எதுவும் எடுத்துக்கலை நீ? நாளைக்கு மார்னிங் போட்டுக்க வேண்டாமா?…” என்றபடி உடை மாற்றினான் ஆத்மா.
“ஆமா, மறந்துட்டேன். இப்ப போய் எடுத்துட்டு வரேன்…” என தலையில் தட்டிக்கொண்டவள் வெளியே செல்ல போக,
“இரு ரிது. உடனே ஓடுவ. நேத்து கொண்டுவந்த கவர்ல வேற சேரியும் இருக்கு. நாளைக்கு அதை கட்டிக்கோ…” என்றான்.
ரிதுபர்ணா அந்த கவரை எங்கே என தேடி எடுத்து பார்க்க அதுவும் பட்டு புடவை தான்.
“நாளைக்கு மதியம் தானே? மார்னிங் இதை கட்டிட்டு உன் அம்மா வீட்டுக்கு போய் வேற மாத்திக்கோ. இப்ப இங்க இருந்து எங்கயும் போக கூடாது…” என்று அவளை நெருங்கியிருந்தான்.
“இருந்தாலும் இந்தா இருக்கற வீட்டுக்கு பட்டுப்புடவை ஒருக்கா, வேற புடவை ஒருக்கா. என்னால முடியாது. நான் போய் எடுத்துட்டு வரேன்…”
“இப்ப எடுத்துட்டு வந்து இப்பவேவா கட்டிக்க போற? அநியாயம்டி. இங்கருந்து நீ எப்படி போறன்னு நானும் பார்க்கறேன்…” என்றவன் அணைப்பில் சிக்குண்டாள் ரிது.
“ப்ளீஸ், போய் எடுத்துட்டு உடனே வந்திடுவேன். ப்ளீஸ், ப்ளீஸ்…” என சொல்லி அவனை கொஞ்சி, கெஞ்சி அவனின் போனில் இருந்து தனது எண்ணிற்கு அழைத்தவள் முருகேஸ்வரியிடம் வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பி ஓடினாள்.
“நீங்க ஏன் போக போறீங்க? அதெல்லாம் இருக்காது…” அத்தனை நம்பிக்கையாய் அவள் கூற,
“உன் மேல கோவப்பட்டு போறேன்னே வச்சுக்கோயேன். சொல்லு. என்ன செய்வ?…”
“எனக்கு தோணலை. அதெல்லாம் போகமாட்டீங்க. அதுவும் என்னை விட்டுட்டு. அது எதுவும் நடக்காது…” என்றவள் முகத்தில் அத்தனை உறுதி.
“ரியலி, அவ்வளோ நம்பிக்கை…” என்றவனுக்கு அவளின் பேச்சில் தெரிந்த நம்பிக்கை அவ்வளவு பிடித்தது.
“இந்த நம்பிக்கையை எப்பவும் காப்பாத்துவேன் ரிது…” என்றவனின் இதழ்கள் அவளுக்குள் உறுதிமொழி கூற பாஷையற்ற சப்தத்தில் கண்களை மூடிக்கொண்டு அவனோடு இணைந்தாள் பெண்.
எல்லாம் மறந்தது. அவனின் புன்னகையும், அணைப்பும் ரிதுவை அவனுலகத்திற்குள் இழுக்க பத்துநாள் தவிப்பின் தாக்கம் அந்த அணைப்பில் உணர முடிந்தது.
“சாமி சாமின்னு பாரு, மருதாணி எல்லாம் என் மேல…” என்று தன் மேல் காண்பிக்க அவன் மார்பில் மருதாணி கோலங்கள் தடமாய் சிவந்திருந்தது.
“இதுவும் கண்டிப்பா சாமி குத்தம் தான். பதிலுக்கு நானும் குடுக்க வேணா?…” என்றவன் அவள் விரல்களை தன் மேல் பூசினான்.
“நான் ஒன்னும் வேணும்னு பூசலை…” என்றவள் சிணுங்கல் ஆத்மாவின் உணர்வை உசுப்பேற்ற தன் கைகளுக்குள் மொத்தமாய் அள்ளிக்கொண்டவன் பேச்சுக்கள் எல்லாம் அவள் காதோர ஜிமிக்கிகளிடம் சரணடைந்தது.
“போச்சு இந்த ஜிமிக்கியும்…” என்று அவன் அத்துமீறலில் சுதாரித்து ரிதுபர்ணா விலகி பார்க்க,
“போனா வாங்கிக்கலாம். என்னை கொஞ்ச நேரம் ப்ரீயா விடேன். இன்னைக்கு இந்த ஜிமிகியை என்ன பன்றேன்னு பார்…” என பேச்சை நிறுத்த அத்தனை நாள் விலகலுக்கும் சேர்த்த விதமாய் அவனின் வேகமிருந்தது.
“பேசாம உன்னை மும்பைக்கு கூட்டிட்டு போயிருந்திருக்கனும்…” என ஒருபாடு சொல்லி தீர்த்தான் என்றால் சொல்லாதவை எல்லாம் செயலில்.