“எதுக்குன்னா? நீரடிச்சு நீர் விலகாது. இப்பத்தான் அந்த குடும்பத்துக்குள்ள போயிருக்க நீ. இன்னும் எவ்வளவோ வருஷமிருக்கு. அவங்களோட தான் பொழப்பா புலங்கனும். நாளைக்கே உன் மாமியாருக்கு ஒண்ணுன்னா நீ தான் முதல்ல இருந்து பார்க்கனும்…”
“குடும்பம்ன்னா எல்லாம் தான் இருக்கும். சாப்பிடற சாப்பாட்டுலையே உரைப்பு, உவர்ப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு கூடவே கசப்பும் எடுத்துக்கறதில்லையா? அதுமாதிரி தான். மனுஷங்க எல்லாம் ஒட்டுக்கா ஒரே மாதிரி இருந்தா இங்க யாருக்கும் தனித்துவமே இல்லாம போயிரும்…”
“அவங்கவங்க குணத்தோட அதை எப்படி சரிக்கட்டி போகறதுல தான் இருக்கு நம்மோட சாமர்த்தியம். ஏன் உன் புருஷன் மேல கோவமாத்தான் இருந்த. இப்ப இணக்கமா போகலையா? அது மாதிரி தான்…” என நீண்ட அறிவுரையை அவர் சொல்ல,
“சரிங்க பெரிம்மா. இப்ப என்ன செய்யனும்? அவங்களுக்கு போன் போட்டு குட்நைட் சொல்லவா?…” என சிரித்தாள் ரிது.
“கண்ணன் அன்னைக்கே சொன்னான். இவ சேட்டைன்னு. நாங்க தான் நம்ம ரிதுவேன்னு சொன்னோம்…”
“இப்ப மட்டும் வேற ரிதுவா பெரிம்மா?…” என அவள் மீண்டும் சிரிக்க,
“ம்க்கும் இதுக்கொண்ணும் குறைச்சலில்லை. இப்ப என்ன செய்ய போற?…” என்றார்.
“என்கிட்டே கேட்டா? நான் என்ன சொல்ல? எல்லாம் உங்க மருமகனை கேளுங்க. அவருக்கு தெரியாதாக்கும் அண்ணாவோட கல்யாணம் இருக்குன்னு?…” என்று நொடித்துக்கொள்ள,
“நீ சிரிப்படிம்மா, எல்லாம் உன்னால. அவனை இப்படியா ஆட்டி வைப்ப. கண்ணா அவ்வளோ எல்லாம் யோசிக்கிற ஆளே இல்லை. ஆனா உன்னை ஊருக்கு தனியா அனுப்பனும்னாலே அலற ஆரம்பிச்சிடறான்…” என பேசிக்கொண்டிருக்க,
“ப்ச், எனக்கு அதெல்லாம் தெரியாது. இப்ப நீங்க தான் பேசி என்னை நாளைக்கே அங்க கூட்டிட்டு வந்து விட சொல்லனும்…” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் உள்ளுணர்வில் சட்டென திரும்பி பார்க்க ஆத்மா தான் அங்கே.
“போச்சு…” என முணுமுணுத்து போனை வைக்கும் முன் பிடுங்கிவிட்டான் அவன்.
“சரியா போச்சு. உன்னை நான் கேட்டது போக இப்ப நீ என்னை கேட்கிறியா? நான் கல்யாண சோலியை பார்ப்பேனா? உங்க ரெண்டுபேத்து பஞ்சாயத்துக்கு மத்தளம் வாசிப்பேனா?…” விசாலாட்சி ரிது என நினைத்து பேச,
அவன் சொல்லிய விதத்தில் ரிது தலையில் கைவைத்து அப்படியே மேஜையில் கவிழ்ந்துவிட்டாள்.
“கண்ணா, நீ எப்ப வந்த?…” திகைப்பை காட்டிக்கொள்ளாமல் அவர் பேச,
“இவ போன்ல பேச ஆரம்பிக்கவுமே வந்துட்டேன்…” என்றவன்,
“இன்னைக்கு இங்க உங்க மக செஞ்சதுக்கு கல்யாணம் வேறையாக்கும்? அங்க கூட்டிட்டு வந்து இன்னும் கேர்லெஸா இருக்கவா?…” என்றான் கடுமையாக.
“ஆனா இதெல்லாம் அநியாயம்டா கண்ணா. நடந்தது நடந்து போச்சு. என்னவோ திருஷ்டின்னு நினைச்சுக்கோயேன். பாவம் அவ. கொண்டுவந்து விட்டு போ. இல்லன்னா நான் வந்து கூட கூப்பிட்டுக்கவா?…” என அவன் மறுப்பான் என்று தெரிந்தே கேட்க,
“ம்ஹூம், அவ என்னோடவே வரட்டும். அங்கருந்து என்னோடவே கிளம்பட்டும்….” முடிவாய் அவன் சொல்ல,
“அப்ப நீயாவது கிளம்பி வா ராசா. அதையும் செய்யமாட்ட நீ…” என விசாலாட்சி புலம்ப,
“என்னை வான்னு இப்ப தானே கூப்பிடறீங்க? யார் என்னை முன்னாடியே வான்னு கூப்பிட்டீங்க?…” என்றதும் ரிதுவோடு விசாலாட்சியும் அதிர்ந்து போனார்.
“நீங்களும் சொல்லலை. மாமாவும் சொல்லலை. ஆளாளுக்கு ரிது, ரிதுன்னு தானே சொன்னீங்க. அவளை முன்னாடியே அனுப்பிடு. இல்லைன்னா நாங்க வந்து அழைச்சுக்கவா அப்படின்னு அவளை மட்டும் தானே கூப்பிட்டீங்க?…” என்றதும் விசாலாட்சி கலங்கி போனார்.
அவன் சாதாரணமாகவோ, கிண்டலாகவோ பேசவில்லை. அவர்கள் மீதான நேரடி குற்றசாட்டு அது.
அத்தனை உணர்ச்சிவசப்பட்டிருந்தான் ஆத்மா. அதை கேட்டு ரிதுவுமே சட்டென எழுந்துகொண்டாள்.
“கண்ணா, உனக்கு வேலை இருக்குமேன்னு தான்…”
“முதல்ல கூப்பிடனும். வேலை இருந்தாலும் கிளம்பி வாடா. இங்க நீ இருக்கனும். நீ வந்து பார்க்கனும். நம்ம வீட்டு கல்யாணம் அப்படின்னு யார் சொன்னீங்க?…” என்றவன் மேஜையின் மீது ஒரு காலை ஊன்றி அமர்ந்துகொண்டான்.
“இல்லடா கண்ணா, அப்படியெல்லாம் நினைக்கலை நாங்க…”
“இருக்கட்டும் அத்தை. நான் தப்பு சொல்லலை. என்னை பெத்தவங்களே அவன் எதுக்கு இதுக்கெல்லாம் வர போறான்னு தண்ணி தெளிச்சிட்டாங்க. உங்களை சொல்லி என்ன செய்ய?…” என்றவன்,
“வரனும்னு ஆசை எப்பவுமே எல்லாருக்குமே இருக்கும். ஆனா கூப்பிட தான் யாருமிருக்கமாட்டாங்க. சின்னதுல நானா கேட்டும் என்னை எதுலையும் கலந்துக்க விடலை. கலந்துக்க கூடிய வயசுல யாரும் கூப்பிடலை. இவன் வரமாட்டான்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்க. இப்ப நீங்களும்…”
“என்ன கண்ணா? தப்பு தான்….” என விசாலாட்சி சொல்லும் பொழுதே ரிது அழுதுவிட அவளை கண்களால் அதட்டியவன் அவளை அருகில் இழுத்து தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டான்.
“ஆமா, தப்பு தான். என் அத்தை மக கல்யாணத்துக்கு கூட எனக்கு யாரும் கூப்பிடலை. நானா அங்க வர போக சரியா போச்சு…” என சிரித்துவிட,
“சுந்தரி கல்யாணத்துக்கு நீ எங்கடா தானா வந்த? எத்தனை தடவை கூப்பிட்டேன்…”
“அது முன்னாடியே சொல்லனும். கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் காணலைன்னு தானே கூப்பிட்டீங்க…” என்றவன்,
“அத்தை மகன்னு நான் சொன்னது என் பொண்டாட்டியை. அன்னைக்கு நான் வரலைன்னா…”
“ஆமாப்பா. நீ மட்டும் வரலைன்னா?…” என விசாலாட்சி நெகிழ,
“வரலன்னா நான் தப்பிச்சிருப்பேன். அதை சொல்ல வந்தேன் த்தை. உடனே ஒரு செண்டிமெண்ட்…” என சிரித்தபடி ஆத்மா இலகுவாய் சொல்ல,
“மறுக்கா நீ ஓடற கார்ல தவ்வ போற பாரு. அன்னைக்கே சுந்தரி கேட்டா அதை நான் பார்க்கலையேன்னு. அடுத்து தவ்வறப்ப வீடியோ எடுத்து தரேன்னேன். வா, வா…” என்று சிரிக்க ஆத்மாவின் முகத்திலும் மென்னகை.
கண்ணீருடன் நின்றவள் கன்னத்தில் வழிந்த நீரை விரல் கொண்டு துடைத்தபடி சிரித்தவன்,
“ஓகே நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் த்தை…” என்றான்.
“கண்ணா, கண்ணா…” விசாலாட்சி அவசரமாய் அழைக்க,
“சொல்லுங்க த்தை…” என்றான்.
“ரிதுவை திட்டிடாத. பாவம் என்னவோ கவனிக்காம விட்டுட்டா…” என ரிதுவிற்கு பரிந்துகொண்டு அவர் பேச,
“ஹ்ம்ம், நான் பார்த்துக்கறேன்…” என்று போனை வைக்கும் முன்,