“சோகமா எங்க இருக்கேன்? கொஞ்சம் டயர்ட். அது உங்களுக்கு சோகமா தெரியுதா?…” என அவனை லேசாய் முறைக்க,
“டயர்ட்? நான் ஒன்னும் நேத்து அவ்வளோ கஷ்டபடுத்தலையே?…” என்றான் கிசுகிசுப்பாய் ஆத்மா.
அவன் இதழ்களில் குறும்பாய் கள்ளப்புன்னகை அதிகாரமாய் அமர்ந்திருக்க இப்போது கணவனை நன்றாகவே முறைத்தாள் ரிதுபர்ணா.
“உங்க வாய் இருக்கே?…”
“ஆமா இருக்கு. ஆனா, பாவம் தனியா இருக்கு…” என்று கண் சிமிட்ட,
“முதல்ல நீங்க ஊருக்கு கிளம்புங்க. நிஜமாவே தனியா இருந்தா தெரியும் உங்களுக்கு…” என்றாள் அவனை சீண்டவென்று.
“நான் ஏன் இதுக்குன்னு தனியா அங்க போய் இருக்கனும்? அதான் பகல் முழுக்க தனியா தானே இருக்கேன்? அதெல்லாம் முடியாது, முடியாது…” என்றான் விளையாட்டாகவும், அழுத்தமாகவும்.
இருவருக்கும் பிடிவாதம். ஆத்மா அவளை இருக்க சொல்லி தானும் உடன் இருக்க ரிது அதற்கு சம்மதிக்கவில்லை.
அவனை கிளம்ப சொல்லியும் செல்லாமல் பிடிவாதமாய் கரூரிலேயே தான் இருந்தான்.
அங்கிருந்த நாட்களில் கம்பெனிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான் அவன்.
இன்னும் முரளி சென்னையில் இருக்க இங்கிருந்தே வியாபாரத்தை நடத்திக்கொண்டிருந்தான் ஆத்மா.
அவனுக்கு அது ஒன்றும் சிரமமாக படவில்லை. ஆனால் ஒவ்வொன்றிற்கும் நிறைய நேரம் செலவளிக்கவேண்டியதாக இருந்தது.
ரிது சொல்லி சொல்லி பார்த்தும் அவன் அசைவதை போல தெரியவில்லை. அவ்வளவு பிடிவாதம். இப்போதும் அவனை முறைக்க,
“என்ன முறைப்பு? இரு தண்ணி எடுத்துட்டு வரேன். விட்டா உனக்கே இங்க ஒரு பெட்டை போடனும் போல?…” என்று எழுந்து செல்ல வெளியே அமர்ந்திருந்தாள் அவள்.
சற்று நேரத்தில் தண்ணீருடன் வரும் பொழுது ரிது அங்கே இல்லை. சற்று தள்ளி இருக்கும் வாஷ்ரூமில் இருந்து வெளியே வந்தாள்.