“எங்களுக்கு குழந்தை இருந்தாலும் இல்லைன்னாலும் இவ மட்டும் தான் எனக்கு. குழந்தை முக்கியம் தான். இப்படி ஆளாளுக்கு கேட்கிறதுக்கெல்லாம் நாங்க பெத்துக்க முடியாது…” என்று உறுதியாய் சொல்ல கண்ணீர் வழிந்தது ரிதுவின் விழியில்.
“ஒரு சந்தோஷமான விஷயத்தை இந்த பரபரப்பு எல்லாம் முடிஞ்சு நிதானமா சொல்லலாம்ன்னு இருந்தோம்…” என்று சொல்ல ரிது அவன் தோளில் முகம் சாய்த்து அழுதுவிட்டாள் சத்தமாக.
“நாங்க எதையும் எதிர்பார்க்கலை. தானா ஒருவிஷயம் இங்க கிளம்பி வரும் போது தெரிஞ்சது. அதை நாளைக்கு சொல்லலாம்ன்னு இருந்தோம்…” என்ற பொழுதே,
“கண்ணா, நீ நிஜமாவா சொல்ற? சந்தோஷம் கண்ணா…” என அருகில் வந்த செண்பகம்,
“இன்னும் எதுக்குடி அழற நீ?…” என்று ரிதுவை திருப்பி அவள் கண்ணீரை துடைத்தார்.
முழுமையாய் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இப்படி ஒரு கசப்பான சம்பவம் அமைந்துவிட்டதே என்று அத்தனை பேரும் வருத்தத்துடன் இருந்தனர்.
“விசாலம் மதினி, முருகேஸு என்னத்துக்கு அழறீங்க? பிள்ளையை சந்தோஷமா வாழ்த்த வேண்டாமா?…” என அதட்ட அவர்கள் இருவருமே வந்து அணைத்துக்கொண்டனர் ரிதுவை.
“எப்பப்பா? சொல்லிருக்கலாம்ல?…” விசாலாட்சி கேட்க,
“சமயபுரம் வழில வரப்போ தான் அவளுக்கு முடியலை அத்தை. வாமிட் பண்ணிட்டே இருந்தா. அதான் அங்க ஒரு ஹாஸ்பிட்டல் போய் பார்த்துட்டு அப்படியே வந்தோம். நாளைக்கு சொல்லலாம்ன்னு இருந்தோம்…” என்ற ஆத்மாவிற்கு அங்கிருக்கவே மனதில்லை.
அதீத சந்தோஷங்கள் நேரமெல்லாம் இப்படி மனதெல்லாம் ரணப்படும்படியான நிகழ்வுகள் இருக்க இங்கே இருந்தால் நிச்சயம் பெரிதாகி போகும் என்று கிளம்பவேண்டும் என்று நின்றான் அப்பொழுதே.
“என்ன விளையாடறியா? இப்பத்தான் விஷயத்தை சொல்லியிருக்க? போறேன்னு சொல்ற?…” என மாற்றி மாற்றி பேச,
“கண்ணா, அம்மா என்ன சொல்றேன்னு ஒருவார்த்தை கேளுப்பா?…” என்றார் ஆனந்தி.
“எதுவும் நீங்க சொல்ல வேண்டாம். நீங்க பேசின வரை போதும். அந்தம்மா வாயை திறக்கும் போதே அதை அடைச்சிருக்க வேண்டாமா நீங்க? நீங்க குடுத்த இடம் தானே இவ்வளோ பேசினாங்க…” என்றவன்,
“நான் யாரையும் நோகடிக்க விரும்பலை. இப்ப இருக்கற மனநிலைல இங்க இருக்கவும் முடியாது…” என்றவன் ரிதுவை கிளம்ப சொல்ல மற்றவர்கள் சமாதானம் செய்ய முற்பட்டனர்.
“இதென்ன புதுசா இருக்கு ஆனந்தி? யாரா இருந்தாலும் கேட்கிற கேள்வி தானே நானும் கேட்டேன்? இது ஒரு குத்தமா?…” என பேச பேச வெகுண்டுவிட்டான் ஆத்மா.
“ஏய்…” என்று கத்தியவன் மேலும் பேசும் முன் அவனின் கையை பிடித்து தடுத்துவிட்டாள் ரிது.
“நீ வா முதல்ல…” என்றவன் கிளம்பிவிட்டான் ரிதுவுடன்.
காரில் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் ரிது. இப்படி ஒரு வளைகாப்பு நிகழ்வின் பொழுது தானே தனது தாயும், தாய்மாமனும் சண்டையிட்டு மொத்தமாய் உறவை அறுத்துக்கொண்டது என நினைக்கையில் பயப்பந்து உருண்டது.
மனதெல்லாம் பாரம் சூழ அழுகை ஒருபக்கம், ஆற்றாமை ஒருபக்கம். கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம் இவன் என்று ஆதங்கம் ஒருபக்கம்.
எத்தனை ஆசையாய் இருந்தாள் இவ்விஷயத்தை அனைவரிடமும் சொல்லும் பொழுது எப்படி இருக்கும்? என்ன நடக்கும் என்று நினைத்து நினைத்து முதல்நாள் இரவெல்லாம் தூங்காமல் அவனிடம் பேசியது என்று இருக்க எல்லாம் மொத்தமாய் முடிந்திருந்தது.
இன்னும் சீரான உறக்கத்தில் ஆத்மா இருக்க இன்னும் நெருங்கிகொண்டாள் அவனிடம்.
ஒருபக்கம் அத்தனை சந்தோஷமாக இருந்தது அவன் அவளுக்கென இருப்பது. அவளுக்காக மட்டுமென இருப்பது.
இன்னொருபக்கம் அதுவே உறவுகளை விட்டு இன்னும் விலக செய்துவிடுமோ என்ற அச்சமும் கூட.
அவள் இப்படி யோசனையில் இருக்க இரவு பன்னிரெண்டு மணியாகிவிட்டது. புன்னகையுடன் அவனின் நெற்றியில் முத்தமிட்டவள்,
“பார்ரா அத்தைமகளுக்கு அத்தான்னு கூப்பிட வந்திருக்கு?…” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
“முழிச்சுத்தான் இருந்தீங்களா?…”
“ம்ஹூம், இப்ப தான். கொஞ்சம் முன்னாடி…” என்றவன் அவளை தன் கைவளைவில் கொண்டுவர,
“அப்போ முழிச்சிருங்க, நான் தூங்கறேன்…” என்று அவன் தோளில் சாய்ந்து உறங்க முற்பட்டாள்.
அவளின் நெற்றியில் லேசாய் முட்டி முத்தமிட்டவன் மனைவியை அணைத்தவாறே விட்ட உறக்கத்தை பிடிக்க அதிகாலை வேளை அவர்களின் சந்தோஷங்களை அள்ளிக்கொண்டு வந்திருந்தது.
ரிது பயந்ததெற்கெல்லாம் அவசியமே இல்லை என்பதை காலை கீழே பெல்லடிக்கும் சத்தத்தில் அவள் கண் விழிக்க ஆத்மா இன்னும் உறக்கத்தில்.
ரத்னாவுக்கு விடுமுறை அளித்திருப்பது அப்போது தான் ஞாபகம் வர இந்த நேரத்தில் யார் என்று எழுந்து கீழே வந்தாள்.
கதவை திறந்த நொடி அங்கிருந்தவர்களை கண்டதும் கண்கள் விரிந்தது. அதுவும் நடுவில் நின்று தன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு உள்ளே வரவா என்பதை போலிருந்தவரை பார்த்ததும்,
“மாமா…” என்றழைக்க,
“அதான் உள்ள கூப்பிட்டுட்டா தானே? வாங்க எல்லாரும்…” என்று வீட்டினுள் முதல் ஆளாய் நுழைந்தார் அண்ணாமலை.
அடுத்தடுத்து மொதுமொதுவென்று ஆட்கள் நுழைய அவர்களுடன் முருகேஸ்வரியும், வித்யாவும்.
பரத் மட்டும் வரவில்லை. கம்பெனியை பார்த்துக்கொள்ளவென அவனை விட்டுவிட்டு வந்திருந்தார்கள்.
தான் காண்பது கனவா நனவா என்று கூட புரியாத பிரம்மையில் அவள் நிறக் வந்தவர்கள் அவளை அணைத்து கொஞ்சி என்று நிஜம் என்று காண்பிக்க அவ்வளவு சந்தோஷம்.
மூச்சடைத்தது அவர்களிடம் பேச கூட முடியாமல் கண்கள் நிறைய சந்தோஷத்தில் விம்மி நின்றிருக்க,