“ஹ்ம்ம், ப்ரவுட் மொமென்ட் தான். உன்னோட புருஷனா நான் ரொம்ப பெருமை படற ஒரு தருணம்….” என ஆழ்ந்து அனுபவித்து அவன் சொல்ல,
“பார்ரா…” என்று கிண்டல் பேசினாள் அவன் மனைவி.
“வலி இது வெறும் வார்த்தை இல்லை ரிது. கண் முன்னாடி எனக்கு என்னென்னவோ கொண்டுவந்துட்ட நீ. உனக்குள்ள இருந்து ஒரு உலகம் வெளிவரும் போது அந்த அலறல்ல நான் செத்துட்டேன்….” லேசாய் கண்ணீர் ததும்பிவிட்டது அவனின் விழிகளில்.
“அப்ப வெளில போயிருக்க வேண்டியது தானே? இங்க நின்னு வேடிக்கையா பார்க்கறீங்க?…”
“ஏன் போகனும்? உன்னோட வலியை வாங்கிக்க முடியாது. ஆனா உன் கூட உனக்கு துணையா நான் இருக்க வேண்டாமா? என்னோட உயிர் என் இன்னொரு உயிரை பெத்து தரும் போது நான் பார்க்காம இருக்கறதா? போடி…” என்றான் லேசாய் கன்னத்தை இடித்து.
“டயலாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கே. வீட்டு சுவத்துல கண்டிப்பா எழுதிடுவோம்…” ரிது கிண்டல் செய்தாலும் அவன் பேச்சில் அத்தனை உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.
மனதளவில் அவன் வசப்பட்டிருந்தவள் இப்போது முழுதாய் அவன் வசத்தில் இதழ் ஸ்பரிசத்தில் சில நொடிகள் உறைந்து நெகிழ்ந்து நிமிர்ந்தாள்.
“தண்ணி குடி. உதடெல்லாம் காய்ஞ்சுடுச்சு….” என்று சொல்லியவன்,
“ஆமா, நீ எல்லாமே சாப்பிடலாம் தானே?…” என கேட்க,
“பெரிம்மா, சித்தி, அத்தைங்க எல்லாம் கேட்டுட்டாங்க…” என்ற பொழுதே மருத்துவர் வர ரிதுவை பரிசோதித்துவிட்டு ஆத்மாவிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
இரு நாட்களில் வீடு திரும்பிவிட்டாள் ரிது. சென்னை சென்றாலும் வாரம் ஒருமுறை வந்துவிடுவான் ஆத்மா.
ஐந்து மாதத்தில் தான் ரிதுவை ஆத்மாவுடன் அனுப்பி இருக்க முருகேஸ்வரி பத்துநாள், ஆனந்தி பத்துநாள், செண்பகம் பத்துநாள் என யாரேனும் அங்கே சென்னையில் அவர்களுடன் இருந்துகொண்டே தான் இருந்தனர்.
பதினோராம் மாதம் பரத்தின் மடியில் வைத்து குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்தினார்கள்.
குழந்தையின் ஒரு வயதில் கரூரில் சிறப்பாய் பிறந்தநாள் கொண்டாட்டமும் அரங்கேறியது.
வருடங்கள் இரண்டு கடந்து செல்ல குடும்பத்தின் ஒற்றுமை மட்டும் மாறவில்லை.
இதோ தை பொங்கலுக்கு ஊருக்கு வந்திருந்தாள் ரிதுபர்ணா குழந்தை பூர்விதாவுடன்.
கோவையில் திருமணம் செய்து கொடுத்திருக்கும் மகள் மனோசித்ராவின் தலை பொங்கலுக்கு சீர் எடுத்துக்கொண்டு அண்ணாமலையும், ஆனந்தியும் சென்றுவிட்டு வந்தனர். அவர்களுடன் விசாலாட்சியும்.
அன்று மாட்டு பொங்கல். முதல் நாள் இரவில் சரக்கை அனுப்ப கம்பெனிக்கு சென்றுவிட்டு அப்போது தான் வீடு திரும்பியிருந்தான் ஆத்மா.
உடன் முரளியும் இருக்க வெளியே நிற்கும் அண்ணாமலையை பார்த்துவிட்டு தலையசைத்து உள்ளே சென்றுவிட்டான்.
அன்றைக்கு பொங்கல் வைக்க மாட்டு தொழுவத்தில் ஏற்பாடாகி கொண்டிருந்தது.
“கை பிள்ளையை இடுப்புல வச்சுட்டு இவ பார்க்கற வேலையை பாரேன்?…” என்று அண்ணாமலை வேகமாய் சென்றவர்,
“பாப்பாவை குடும்மா…” என்று சத்தமாய் சொல்லவும்,
“ம்மா…” என்று பதறி திரும்பினாள் ரிது.
அவரின் அதட்டல் சத்தத்தை எதிர்பார்க்காதவள் ஒரு நொடி தடுமாற அவளின் தோளை பிடித்து நிறுத்தி குழந்தையை தூக்கிக்கொண்ட அண்ணாமலை,
“மனுஷன் தான பேசினது? என்னத்தையோ பார்த்து பயந்ததாட்டம் பதறி விழ போற? என்ன பொண்ணோ போ…” என்று சத்தம் போட்டுவிட்டு பேத்தியுடன் நகர இன்னும் ரிதுவின் படபடப்பு அடங்கவில்லை.
“இந்த மனுஷனுக்கு நல்லநாள் கூட தெரியாது. திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறினதாட்டம் எப்ப பாரு வல்லுன்னு விழுந்துட்டு…” என ஆனந்தி தலையில் அடித்துக்கொண்டார்.
“நீ ஏன் ரிது பதறிட்ட? கீழே ஈரமா இருக்கு. கீழே பிள்ளையோட விழுந்திருந்தா?…” என செண்பகம் சொல்ல,
“ஹ்ம்ம், சரி முருகேஸ்வரி பானைக்கு பொட்டு வச்சிருப்பா. நான் போய் பானையை எடுத்துட்டு அவளையும் இழுத்துட்டு வரேன்…” என விசாலாட்சி செல்லவும் செண்பகமும் இளவரசுவை அழைக்க செல்ல பேத்திக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு இங்குமங்கும் அண்ணாமலை சுற்றினார்.
பரத் மகனின் கை பிடித்து நடந்துகொண்டிருந்தான் அண்ணாமலையுடன். ஏழுமலை வெளி திண்ணையில் அமர்ந்து இளவரசுவுடன் பேப்பர் பார்த்துக்கொண்டு இருந்தார்.
ரிது மீண்டும் அடுத்த பசுவிற்கு சந்தனத்தை எடுத்து வைத்து குங்குமத்தை எடுக்க திரும்ப,
“ஹேப்பி பார்த்த டே ரிது…” என்று வந்தான் ஆத்மா.
“சேம் டூ யூ…” உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொல்ல,
“கொழுப்புடி….” என்று சுற்றிலும் பார்த்துவிட்டு அவளின் காதை திருக்கினான்.
“இவ்வளோ நேரம் வேடிக்கை பார்த்துட்டு இப்ப வந்து பேச்சு. அதுவும் எனக்கு ஹேப்பி பர்த்டே சொன்னா? இன்னைக்கா என் பர்த்டே?…” சடசடவென பொரிந்தாள் ரிது.
“இப்ப என்ன இன்னைக்கு பிறந்தா தானா? அடுத்து வர பர்த்டேக்கு இது அட்வான்ஸ் விஷ்ன்னு வச்சுக்கோயேன்…” என்று அவளின் தோளில் இடித்தவன் சந்தனத்தை ஒற்றை விரலில் எடுத்து கன்னத்தில் பூச,
“அதே தான். இதுவும் சேம் டூ யூ. அட்வான்ஸ் விஷ் தான்…” என்றவள் பூவை எடுத்து பசுவிற்கு வைக்க போக அது அவள் கையிலிருந்ததை பறித்து சாப்பிடவே வந்தது.
“ஒழுங்கா நின்னு. பொங்கல் வச்சதும் பொங்கலை சாப்பிடுவியாம். அதை விட்டுட்டு உன் தலைக்கு வைக்கிற பூவை சாப்பிடற?…” என்று பசுவிடம் வாக்குவாதத்தில் இருந்தாள்.
“இத இதத்தான் சொன்னேன். அதோட பாஷை உனக்கும், உன் பாஷை அதுக்கும் புரியுதுன்னு…” என்று கிண்டல் பேச,
“அப்படியே கடிச்சுருவேன். ஓடிருங்க. இந்த பூவை வந்ததும் வைக்க பார்த்து முடியவே இல்லை. சின்ன மாமா என்னன்னா என்னால முடியாதுன்னு போய் உக்கார்ந்துட்டார்…”
“அவ்வளோ தானே? குடு நான் வைக்கறேன்…” என பூவை கையில் வாங்க,
“ப்ச், போங்க. குளிக்காம சாமி கும்பிடறதுக்குள்ள இதெல்லாம் தொட்டுட்டு…” என்று அவன் கையில் தராமல் விலக்கிக்கொண்டாள்.
“குளிக்காம உனக்கு தாலியே கட்டிட்டேன். உன் தங்கச்சிக்கு மாலை போட மாட்டேனா?…” என்று சொல்லவும்,
“வேண்டாம் கண்ணத்தான், என் பொறுமை போச்சு…”
‘போச்சுன்னா?…” ஆத்மாவின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
ரிதுவின் கோபத்தில் அவள் முகம் சிவக்க அதனை பார்த்தவனுக்கு அப்படி ஒரு குதூகலம்.
“ஓகே, இப்ப என்னத்துக்கு இந்த வம்பு? நேத்து நான் பெரிம்மா வீட்டுல எல்லாரோட இருந்தேன்னு ரிவெஞ்சா?…” என்று முறைக்க,
“இதுக்கெல்லாம் ரிவெஞ்ச் எடுப்பாங்களா என்ன? இப்ப நினைச்சா உன்னை என்னால தூக்கிட்டு போகமுடியாதா?…” என்றவன் பார்வை அவள் கழுத்தில் பதிய கேலி புன்னகை மறைந்து ரசனை கொஞ்சியது.
“ஹ்ம்ம், போடமாட்டேன்னு சொன்ன?…” என்றான் அவள் கழுத்தில் தவழ்ந்த அந்த ஆரத்தை பார்த்து கண்சிமிட்டி.
அழகாய் முத்துக்கள் பாதிக்கப்பட்டு கழுத்து நிரம்ப ஜிமிக்கிகளால் செய்யப்பட அழகிய ஆரம் அது.