ஆத்மா நிர்வகிக்கும் அந்த இடம் சாதாரணமாக ஒரு தளம் இருக்கும். சற்று பெரிதாய் என நினைத்திருக்க மூன்று தளம் கொண்ட அந்த ஷோரூமை ரிதுபர்ணா எதிர்பார்க்கவில்லை.
தலையணை உறைகள், தலையணைகள், திரை சீலைகள், போர்வைகள் இவைகளுக்கு என்ன பெரிதாய் இருந்துவிட போகிறது என்று தான் ஒரு எண்ணம்.
ஆனால் அப்படி அல்ல என்று அந்த கடையின் ஒவ்வொரு பகுதியும் அவளுக்கு அறுதியிட்டு கூறியது.
இரண்டாம் தளத்தில் நின்றவள் அடுத்ததற்கு படியேற அவளுடன் இணைந்து நடந்தான் ஆத்மா.
“வீட்டுக்கு ஏதாவது தேவைனா பாரேன். இங்க கர்ட்டன்ஸ் பிடிச்சிருந்தா கிளம்பும் போது எடுத்துக்கலாம்…” என்று அவன் சொல்ல,
“ஹாங், வீட்டுக்கா?…” என்று யோசிக்க,
“ஓகே, அவசரமில்லை. அதான் இனி இங்க வொர்க் பண்ண போறியே? எப்ப வேணுமோ சொல்லு…” என்றதும் தலையசைத்துவிட்டு அடுத்த தளம் வந்தாள்.
“இவ்வளோ தானா? மேல இருக்கா?…” சாதாரணமாக கேட்க நினைத்தாலும் வார்த்தையில் சற்று கேலி உணர்வு தென்பட்டதை போல இருந்தது.
“இப்போதைக்கு இவ்வளோ தான். வேணும்னா தேவைப்பட்டா இன்னும் ரெண்டு ஃப்ளோர் எடுத்திருவோம். இப்போ குடும்பம் பெருசாகிருச்சே?…” என ஆத்மா சொல்ல,
“நானா? அப்படியா தெரியுது?…” என தன் தாடையை தேய்த்துக்கொண்டவன்,
“இப்ப நீ பன்றது தான் அப்படி இருக்குது…”
“நான் என்ன பண்ணேன்?…”
“புருஷனோட ஷோரூம்ல சம்பளத்துக்கு தான் வேலை பார்ப்பேன்னு சொல்றியே? இதுக்கு பேர் என்ன?…” என்றான் சற்று அழுத்தமாக.
“நாம இதை வீட்டுலையே பேசிட்டோம்…”
“பேசின விஷயத்தை திரும்ப பேச கூடாதுன்னு இருக்கா ரிது?…” என்றவன்,
“ஓகே, அதான் முடிவு பண்ணியாச்சே. சரிதான், திரும்ப ஏன் இந்த டாப்பிக்?…” என தலையை கோதிக்கொண்டான்.
அவனுக்கு தன் முடிவில் அதிருப்தி இருப்பது ரிதுபர்ணா உணர்ந்ததே. ஆனாலும் முடியவில்லை.
தன் முடிவை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை அவள். அவனுக்கு இணையான அழுத்தத்துடன் தான் இருந்தாள்.
“உங்களுக்கு இங்க நான் வேண்டாம்ன்னா இங்க வேற எங்கையாச்சும் வேலை தேடிக்கறேன்…” என்று சொல்லவும் அடுத்த நொடி ஆத்மாவின் ஒற்றை பார்வை சுட்டு பொசுக்கியது.
“ஓகே, வா கிளம்பலாம்…” என்று எழுந்துகொண்டான்.
“எங்க?…”
“வீட்டுக்கு தான் வேற எங்க? எங்க கூப்பிட்டாலும் முகத்தை ஒரே மாதிரி வச்சுட்டு என் கூடவே கிளம்ப யோசிக்கிற…” என வேகமாய் சொல்லவும்,
“சரி இருந்துட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு போகலாம்…” என்றாள் அவனை சாமதானம் செய்வதை போல.
“உனக்கு தான் இங்க இருக்கவே இஷ்டமில்லையே?…” என மீண்டும் அமர்ந்தான்.
“நான் என்ன செய்யட்டும்? வெளிலையும் வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்றீங்க. இங்கயும் இப்படி சொன்னா?…” இப்போதெல்லாம் கொஞ்சமேனும் அவனிடம் சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தாள்.
அதிலும் அவள் ஒரு எல்லை வகுத்ததை போலவே தான் ஆத்மா உணர்ந்து வந்தான்.
அதற்குள் அவன் சொல்லியிருந்த மில்க்ஷேக் வர இருவருக்கும் வைத்துவிட்டு பணியாள் கிளம்பியதும்,
“குடி, இப்பவும் என் முகத்தை தான் பார்ப்பியா நீ?…” என எடுத்துக்கொண்டான்.
இருவரிடத்திலும் வரையறுக்கப்படாத மௌனம் நிலவ ஆத்மாவின் பார்வை அவனின் மனைவியிடம் இருக்க அவள் அவ்வப்போது அவனை பார்க்கவும், பார்வையை திருப்புவதுமாய் இருந்தாள்.
திருமணமாகி சென்னை வந்து ஒருவாரம் கடந்துவிட்டது. முதல்நாள் போலல்லாது அடுத்தடுத்த நாட்கள் வீட்டிலிருந்து தான் அவனின் வேலைகள்.
ஷோரூமிற்கு வந்துவிட்டு ஒருமணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்பிவிடுவதை வழக்கமாய் வைத்திருந்தான் ஆத்மா.
“நான் இருந்துப்பேன், நீங்க எனக்காக பார்க்க வேண்டாம்…” என ரிதுபர்ணா சொல்ல,
“எனக்காக பார்க்கேன்னு வச்சுக்கோயேன்…” என்று சொல்லிவிடுவான் அவன்.
இதில் இத்தனை நாளில் அவள் கண்டுகொண்டது அவனாக அழைத்து அவனின் பெற்றோரிடமோ தங்கையிடமோ பேசியதில்லை என்பது.
தொழில் விஷயமாக என்றால் இளவரசுவிற்கு அழைத்து பேசி முடித்துவிடுவான். முரளியும், பரத்தும் அவனின் சொல்லுக்கிணங்க வேலை பார்க்க அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை என்பதே இல்லை என தெளிவாகியது.
அதை அவனிடம் கேட்கவும் அச்சம். அதே நேரம் தனக்கெதற்கு என ஒரு ஒட்டாத தன்மை அண்ணாமலையை நினைக்கவும் தோன்றியது.
அவர் சொல்லிய ‘பிச்சை’ என்ற வார்த்தை இன்றளவும் மனதை அறுத்துக்கொண்டிருந்ததே?
ஆத்மாவின் முகத்தில் அண்ணாமலையின் சுவட்டை காணமுடியவில்லை தன்னை திருமணம் செய்ததில் இருந்தே.
அருகில் இருந்தாலும் தந்தை, மகனுக்கிடையே எந்தவிதத்தில் உறவு இருக்கிறது என தெரிந்துகொண்டதில்லை.
ஆனால் இந்த நாட்களில் புரிந்து போனது. மனோவும் அவளாகவே அழைத்து பேசியிருக்க அதற்கும் சொற்ப பதில் தான்.
இந்தளவிற்கு அவனிருக்க ரிதுபர்ணாவிற்கு அப்படி அல்ல. அத்தனை முறை முருகேஸ்வரி, விசாலாட்சி, இளவரசு, முரளி, செண்பகம் என மாற்றி மாற்றி அழைத்துவிடுவார்கள்.
அதையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் இருப்பான் ஆத்மா. வித்யா, முருகேஸ்வரி தவிர்த்து யார் பேசினாலும் அவனிடம் தருவதை அவளறியாமலேயே வழக்கமாக்கி வைத்திருந்தாள் ரிதுபர்ணா.
ஒருவார்த்தை அவன் என்ன செய்கிறான் என்று கேட்டுவிட்டால் உடனே இதோ தரேன் என போனை ஆத்மாவிடம் நீட்டிவிடுவாள்.
“நீ பேசினா பேசிட்டு வைய்யேன். என்கிட்டே ஏன் தர நீ?…” என்று கேட்டலும்,
“நீ சென்னை வந்து ஒருவாரம் தான் ஆகிருக்கு…” என்று சொல்ல,
“நீங்க தான…” என ஆரம்பித்தவள் அவன் பார்வையில் அப்படியே நிப்பாட்டிக்கொள்ள,
“ஓகே, இப்ப அதுக்கு மட்டுமா போற நீ?…” என்றான் ஷோரூமிற்கு கிளம்பியவன் மீண்டும் இருக்கையில் அமர்ந்துகொண்டு.
“கடைகள்ல இந்த மாச வாடகையை வசூல் பண்ணனும்….”
“முரளியை அனுப்பி வைப்போம்…” என்று சொல்ல அவள் திகைத்து பார்த்தாள்.
“என்னாச்சு?…”
“செண்பகம் அத்தைக்கு பிடிக்காது…” என சொல்ல அவனால் நம்பமுடியவில்லை.
“என்ன?…”
“ஆமா, முரளி அதெல்லாம் பன்றது அவங்களுக்கு பிடிக்காது. கம்பெனியை பார்த்துக்கறவனை வசூல் பண்ண சொல்லுவீங்களான்னு ஒருதடவை சண்டை போட்டுட்டாங்க மாமாக்கிட்ட….”
இது அவனுக்கு தெரிந்ததில்லை. வெளிப்படையாக பார்க்கும் விதத்தில் செண்பகம் ரிதுபர்ணாவிடம் நல்லமுறையில் இருப்பதை போல தான் தெரிந்தது.
ஆனால் அவளுக்கென்றான இந்த சில வேலைகளை அவர் பார்க்கவிட்டதில்லை என இப்போது தான் ஆத்மா தெரிந்துகொண்டான்.
“அதுல இருந்து யாரையுமே நான் ஹெல்ப் கேட்டதில்லை. நானே என் வேலையை பார்த்துப்பேன்….”
“சித்தப்பா…”
“மாமா சொன்னாங்க, முடியாத நேரம் நான் பன்றேன்னு. ஆனா எனக்கு தான் இஷ்டமில்லை. அவங்க எனக்கு இவ்வளோ உறுதுணையா இருக்கறதே போதும்ன்னு தோணும். திரும்பவும் அத்தையோட எதுக்கு அவங்களுக்கு பிரச்சனை?…”
“எல்லாம் சரி, அக்கவுண்ட்ல போட சொல்ல வேண்டியது தானே வாடகை பணத்தை?…”