நிஜம் – 12
வீட்டிலிருந்து கிளம்பி இருவருமாக கோவிலுக்கு சென்றனர். அப்படியே வெளியே ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு அபூர்வாவுடன் முகேஷை பார்க்க சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
மருத்துவமனை வளாகத்தினுள் செல்லவுமே புரிந்து போனது எதற்கு வந்திருக்கிறோம் என்று.
முகேஷின் அறைக்கு சென்றால் ஷாலினி அவனுக்கு ஜுஸ் பிழிந்தபடி எதையோ கோபமாக விவாதித்துக்கொண்டு இருந்தாள். இருவரின் முகமுமே கோபத்தில் தகித்தது.
“சண்டை முடிஞ்சதுன்னா நாங்க உள்ளே வருவோம். இல்லைன்னா முடிச்சுட்டு சொல்லுங்க வெளில வெய்ட் பன்றோம்…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.
திடீரென கேட்ட அவன் குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்ப லேசாய் திறந்திருந்த கதவில் குரலை மட்டும் அனுப்பியவன் இப்பொழுது மனைவியுடன் உள்ளே நுழைந்தான்.
“அதான் உள்ள வந்துட்டியே. பின்ன என்ன?…” என்றான் முகேஷ் கோபம் குறையாத முகத்துடன்.
“என்னடா முமு, முழுசா மாறியிருக்கும் முமு. இப்ப கூட கோபத்தை பாரு? நாங்களும் எவ்வளவு நேரம் கதவை போட்டு உடைக்கிறது?…” என்று கிண்டல் பேச கண்களை துடைத்துவிட்டு திரும்பிய ஹாசினி,
“வாங்கண்ணா, வாங்க…” என வாசுதேவகிருஷ்ணன், அபூர்வா இருவரையும் பார்த்து வரவேற்பாய் புன்னகைத்தாள் ஷாலினி.
“நல்லா இருக்கீங்களா?…” என முகேஷை விசாரித்த அபூர்வா தன் கணவனை பார்க்க,
“அண்ணான்னு கூப்பிடு. அவனுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை அண்ணா தான்…” என்று கிண்டலாய் சொல்ல,
“அடேய்…” என முணங்கினான் முகேஷ். அவன் சொல்லிய விதத்தில் சட்டென ஷாலினி சிரிக்க அவளை பார்த்த வாசுதேவகிருஷ்ணன்,
“சோகமான வரவேற்பு, இப்ப ஸ்மைலிங் பேஸ். எப்படி இருக்க ஷாலினி ?…” என்றதற்கு முகேஷ் முறைக்க,
“என்னங்க நீங்க?…” என அபூர்வா கடிந்தாள்.
“அடேய்களா உள்ளதை தான சொன்னேன்…” என்று இருவரையும் சொல்லியவன்,
“என்ன ஷாலினி வழக்கம் போல தானா?…” என்று ஒரு ஆரஞ்ச் பழத்தை எடுத்து மேலும் கீழும் தூக்கிபோட்டு கேட்ச் பிடித்துக்கொண்டே முகேஷ் கட்டிலில் ஓரமாய் அமர்ந்தான்.
“என்ன பேசி என்ன செய்ய? இங்க ஒன்னும் ஒத்துக்கவைக்க முடியலை. நானும் பேசி பேசி ஓஞ்சு போய்ட்டேன்…” என சலிப்பாக சொல்லிய ஷாலினி,
“உட்காருங்க நீங்க…” என அபூர்வாவை அமர சொல்ல,
“சும்மா வா போன்னே பேசு. உன்னை விட சின்ன பொண்ணு தான்…”
“அப்ப ஷாலினியை கிழவின்னு சொல்றியா நீ?…” முகேஷ் இடையில் வர,
“மனசுல இருக்கறது தான் வாய்ல வார்த்தையா வரும்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க. இவன் வாயிலையே போடு. பேசாம இருக்கட்டும்…” என்று ஷாலினியிடம் வாசுதேவகிருஷ்ணன் போட்டு கொடுக்க,
“அம்மா சொல்லலைன்னா அய்யாவுக்கு ஒண்ணுமே தெரியாது பாரு. உலகம் நம்பிரும்டா…” என்று அவன் மீது காய,
“ஐயோ போதும் நிறுத்துங்க…” என்ற ஷாலினி அபூர்வாவின் அருகே சென்று அமர்ந்தாள்.
“வாழ்த்துக்கள் அபூர்வா. ஜாயின் தி க்ளப்…” என்று கை கொடுக்க அபூர்வாவும் சேர்ந்து கையை பிடித்து குலுக்கி நன்றி சொல்ல,
“ஒன்னு கூடிட்டாங்க…” என்று நண்பர்கள் இருவரும் சேர்ந்துகொண்டனர்.
“அது கூடியாச்சு நிச்சயதார்த்தம் அன்னைக்கே. என்கேஜ்மேன்ட்ல அஸ்திவாரம் தோண்டி, புடவை கடையில பூஜை போட்டு எங்க கல்யாணத்துல அடிக்கல் நாட்டி நேத்து விருந்துல வீடு கட்டி பால் காய்ச்சிட்டாங்க லேடீஸ் எல்லாரும்…”
“அதுவரை நீ என்ன பண்ணிட்டு இருந்த?…”
“பாதர் ஆஃப் தி நேஷன் சொல்லுவாங்க. இங்க பாதர் ஆஃப் தி டென்ஷன். என்னை பார்த்தாலே மனுஷன் அடுப்புல ஏறி உட்கார்ந்த மாதிரி குதிக்கறார். கொதிக்கறார். அவருக்கு நான் சும்மா கூட அங்கிட்டும் இங்கிட்டும் போய்ட கூடாது…” என வாசுதேவகிருஷ்ணன் கதையளக்க,
“யாரு நீ? சும்மா? அடேய், நம்புற மாதிரி வேற சொல்லு தம்பி, சும்மா உன்னை பார்த்தா டென்ஷன் ஆகறாராக்கும் அங்கிள்?…” என்று முகேஷ் கேலி செய்ய,
“தம்பி…” என்ற வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை பார்க்க தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தவளுக்கு புரையேறியது. வேகமாய் ஷாலினி அவளின் தலையில் தட்டி கொடுக்க,
“பார்த்து பார்த்து…” என முகேஷும் சொல்ல அபூர்வாவிற்கு இருமியதில் முகம் சிவந்தது. அவளின் பதட்டத்தை பர்த்தவன் அடக்கப்பட்ட புன்னகையுடன்,
“ஆர் யூ ஓகே மிசஸ்…” என்று அவன் நிறுத்தி மனைவியை பார்க்க,
“ப்ளீஸ்…” என்றாள் வெறும் வாயை மட்டும் அசைத்து.
“என்ன அண்ணா, கோட்வேர்ட்ல அபூர்வாவை கன்ட்ரோல் பன்றீங்க? பேசவே விடமாட்டேன்றீங்களே?…” என ஹாசினி கேட்க,
“நான் பேச வேண்டாம்னா சொல்றேன்…”
“அப்போ நாங்க பேசறோம். நீங்க பேசாம உங்க ப்ரெண்ட் கூட பேசுங்க. எங்களை பழக விடுங்க. இப்பவே நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை தான் பதில் வருது…”
“அதுக்குத்தான் பழகி குடுத்திட்டு இருக்கேன். சீக்கிரமே பழகிருவா. அப்படித்தானே பூர்வா?…” என கேட்க,
“இவனோட” என திருதிருவென அபூர்வா திணறலுடன் விழிக்க,
“யார் நீங்க பழக்கறீங்களா? அப்ப அதுக்குள்ளே பேசினாதான் உண்டு. இல்லைன்னா உங்களோட சேர்த்து அபூர்வாவையும் நாங்க சமாளிக்கனும்….”
“ஏன்மா ஷாலினி? அப்படி என்ன பேச தெரியாம ட்ரெயினிங் குடுத்துருக்கேன்?…”
“நல்லா குடுத்தேங்க. இதோ உங்க பிரண்ட்க்கு குடுத்திருக்கீங்களே, என்ன பேசினாலும் பதில் சொல்றாரு. எது சொன்னாலும் சமாளிக்கறார். எமோஷனலா கூட எதுவும் சொல்ல முடியலை…” என்று விளையாட்டாய் சொன்னாலும் ஷாலினியின் குரலில் லேசாய் வருத்தம் இழையோடியது.
“புதுசா சமாளிச்சா பரவாயில்லை. நீங்க லவ் பன்றப்ப இருந்தே அவன் இப்படித்தானே? உனக்கு தான் தெரியுமே. தெரிஞ்சு பிடிச்சு தானே மேரேஜ் பண்ணிக்கிட்ட?…” என வாசுதேவகிருஷ்ணன் கூறிய வார்த்தை கூரிய முள்ளென ஷாலினி சாட்டிய குற்றத்தில் தைத்தது.
அவனின் பேச்சில் அவள் அமைதியாக அபூர்வாவிற்கு எதுவும் புரியவில்லை என்றாலும் பிரச்சனை என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தாள்.
“போலீஸ்க்காரன் பொண்டாட்டின்றது பெருமை மட்டுமில்லை. அது ஒரு தன்னலமில்லாத கடமை. நாங்க படிச்சுட்டு நாட்டுக்காக எங்க கடமையை செய்யறோம். சில நேரம் தியாகங்களும். அதே மாதிரி எங்களுடைய குடும்பமா நீங்களும் இதை செய்யத்தானே வேணும்…”
“எல்லாம் ஏத்துக்கிட்டு இப்ப பாதியில் எமோஷனலா வேண்டாம்னு சொன்னா அது சுயநலம் மட்டுமில்லை. எங்களோட தனித்தன்மையை, எங்க பிடித்தத்தை தூக்கி எறிய வைக்கிற இந்த குணம்…”
“போதும்டா, நீ வேற ஏன்?…” என முகேஷ் வேதனையுடன் அவனை பார்க்க,
“ஹேய் நான் சொல்லாம ஷாலினிக்கு யார் சொல்லுவா?…” என்றவன்,
“ஏன் ஷாலினி, நான் சொன்னதை நீ எப்படி புரிஞ்சிக்கிட்ட?…”
“ரைட் வே ல தான் அண்ணா புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு தெரியுது. ஆனாலும் இவர் இப்படி படுத்திருக்கும் போது எதிர்காலத்தை நினைச்சா இன்னும் பயமா இருக்குது…” என்றவள் கை தன்னைப்போல தன் வயிற்றை தடவி கலங்கலாக தெரிந்த முகேஷின் முகத்தை பார்த்தாள்.
“இதுதான், இந்த எமோஷன்ஸ் அவனை தடுமாற வைக்குது. இதே நீ போல்டா உங்களால முடியும். எங்களுக்காக போராடி வருவீங்கன்னு சொல்லி பாரு. அவன் கண்டிப்பா உன் நம்பிக்கையை காப்பாத்துவான். உன்கிட்ட வந்து சேர்வான்…”
“அதை விட்டுட்டு நீயும் பயந்து அவன் மனசுலயும் அந்த பயத்தோட தாக்கம் அவனையும் பாதிச்சு ஏதோ ஒருவிதத்துல அவனை தடுமாற வைச்சிரும் வேலை நேரத்துல. அந்த தடுமாற்றம் தான் சில நேரத்தில் கவன சிதறல்களை குடுக்கும். அப்படி ஒரு சுட்சுவேஷன் தான் இந்த ஆக்ஸிடென்ட் கூட…”
“ஒரு நிமிஷம் தன்னை தாக்க வர அந்த வண்டியை பார்த்ததுமே அவன் மைண்ட் உன்னோட பயத்தை தான் நினைச்சது. ஷாலினி சொன்ன மாதிரி ஆகிடுமோன்னு அந்த நொடி நேரம் அவன் புத்தியை உன் பயம் ஆக்கிரமிச்சுடுச்சு. இல்லைன்னா ஜஸ்ட் லைக் தட் தான் என் முமுக்கு. சும்மா பறந்து அதுல இருந்து எஸ்கேப் ஆகியிருப்பான்…”
“நீங்க நிஜமாவா சொல்றீங்க?…” அப்பாவியாய் ஷாலினி கேட்க,
“கண்டிப்பா, லவ் பண்ணும் போது எல்லாமே உனக்கு கர்வமா தெரிஞ்சது. மனைவின்னு வரவும் நீயும் பயப்பட ஆரம்பிச்சுட்ட. அவனை விட நீ தைரியமா இருக்கனும். இப்ப இத்தனை வேதனையை தாங்கிட்டு இருக்கறவன் கூட சண்டை போடற. அவனுக்கு இதில இருந்து வெளில வர தோணுமா? இல்லை உன்னை எப்படி சமாளிக்கறதுன்னு நினைக்க தோணுமா?…”
வாசுதேவகிருஷ்ணன் பேச பேச ஷாலினியின் மனநிலை முற்றிலும் மாறுபட்டது. புத்திமதி என்னவோ ஷாலினிக்கு. ஆனால் முழுவதும் கிரகித்துக்கொண்டது அபூர்வா தான்.
விழி விரித்து அவன் சொல்லியவற்றை கேட்டு கேட்டு ஒவ்வொரு வார்த்தைகளையும் தன் இதயச்சுவற்றில் அச்சுக்களாய் செதுக்கி பதிந்துகொண்டாள்.
“ஹ்ம்ம், புரியுது தான். ஆனாலும் இப்படி பார்க்கறப்போ…” ஷாலினி மீண்டும் முகேஷின் உடல்நிலையை காரணம் கட்ட,
“நீ மட்டும் சீக்கிரம் குணமாகி ட்யூட்டிக்கு போங்கன்னு அவன்கிட்ட சொல்லு. அதுவே அவனுக்கு ஆயிரம் மடங்கு பலம். உனக்காகவே அவன் முயற்சி எடுப்பான். பாதி ட்ரீட்மென்ட், மெடிசின் வேலைன்னா, மீதி உன்னோட தைரியம் தான் மருந்து. இதுக்கு மேல உன் சமத்து தான் ஷாலினி. அண்ணன் சொல்றேன் புடிச்சுக்கோ…” என சொல்ல,
“ஹ்ம்ம் ஓகே அண்ணா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” என்று அவளும் சொல்ல,
“அதுக்கென்ன? சரி நாங்க கிளம்பவா?…” என்று கட்டிலில் இருந்து இறங்க,
“அட இருங்க, வந்து எதுவும் சாப்பிடாம போனா எப்படி? நான் கேண்டீன்ல போய் ஜுஸ் வாங்கிட்டு வரேன்…” என ஷாலினி எழுந்துகொள்ள,
“அதெல்லாம் எதுவும் வேண்டாம். நீ இவனை பாரு. நாளைக்கு மறுநாள் நாங்க மறுவீட்டுக்கு மாமியார் வீட்டுக்கு போறோம்…” என சொல்ல,
“எத்தனை பேரை மாமியார் வீட்டுக்கு அனுப்பிருப்பீங்க. இப்ப நீங்களே மாமியார் வீட்டுக்கா?…”என ஷாலினி கிண்டல் பேச,
“அந்த மாமியார் வீட்டுல மாமியார்கள் வெளில இருப்பாங்க. மாப்பிள்ளைங்க தான் லாக்கப்ல இருப்பாங்க. இந்த மாமியார் வீட்டுல என் மாமியார் நான் கிளம்பற வரைக்கும் வெளில வரமாட்டாங்க…” என்று கைதட்டிக்கொண்டு சிரிக்க அவனை முதன் முதலாக அபூர்வா முறைத்து பார்த்தாள்.
“பார்ரா பூர்வாவுக்கு கோபத்தை. என் மாமியார், பேச கூடாதுன்னு நீ கூட சொல்ல முடியாது. வேணும்னா உன் மாமனாரை பேசு. நானும் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று உடன்படிக்கை போட,
“ஹப்பா எப்படித்தான் இப்படி பேசறீங்களோ?…” என அபூர்வா வாயில் கை வைத்துவிட,
“ஏன்டா மாமியாருக்கு மாமியார் தானே ஈக்வல்? நீ இப்ப கூட உன் அப்பாவை தான் கோர்த்துவிடற. உன்னை மாதிரி அபூர்வா பேச மாட்டான்னு தானே?…” என்று முகேஷ் குட்டை உடைக்க,
“இப்படியே நீங்க பேசிட்டு இருங்க, நானும் அபூர்வாவும் கீழே போய்ட்டு வரோம்…” என சொல்லி அபூர்வாவை எழுப்பிக்கொண்டு ஷாலினி கதவை திறந்து வெளியேற அபூர்வா வாசுதேவகிருஷ்ணனை திரும்பி பார்த்தாள்.
இன்னும் முறைப்புடன் பார்த்தவளை கண்டு புன்னகைத்தவன் வேகமாய் சாய்ந்து அமர்ந்திருந்த முகேஷின் கண்களை தன் கையால் மூடி அபூர்வாவை நோக்கி இதழை குவித்து கண் சிமிட்ட சட்டென கதவை திறந்துகொண்டு ஓடினாள் அபூர்வா.
“அடேய் கையை எடுடா, நான் வேணா கண்ணை மூடிக்கறேன்…” என முகேஷ் கத்தியதும் தான் கையை எடுத்தவன்,
“உன் கூட கண்ணாமூச்சி கூட விளையாட எனக்கு உரிமை இல்லையாடா முமு? வெரி பேட்…” என்று சொல்ல,
“அடேய் நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும். போதும்டா…” என்று சிரித்தவன்,
“ஆனாலும் நீ பேச பேச எனக்கே நான் அப்படித்தானோன்னு நினைக்க வச்சுட்ட பாரு. எங்க இருந்துடா புடிக்கற நீ?…”
“வண்டலூர் ஜு ல இருந்து தான். வேணும்னா சொல்லு உனக்கும் புடிச்சு தரேன்…”
“உன்னை ஒரு நிமிஷம் கூட பெருமையா பேச விடமாட்டியே. பாவம் அபூர்வா…” என்றதும் வாசுதேவகிருஷ்ணன் முகம் பிரகாசிக்க,
“ஆனா நீ பக்கா பிளாட் தானே? உண்மையை சொல்லு…” என்று அவனின் முகத்தை கொண்டே சொல்ல,
“தெரிஞ்சு உனக்கு ஆக போறது எதுவும் இல்லை முமு. உனக்காக தான் ஷாலினி மைண்ட்செட் மாத்தியிருக்கேன். ஏடாகூடமா எதையாச்சும் பேசி இழுத்து வச்சுக்காத. இன்னொருக்க பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன்…”
“உன்னை நான் கூப்பிட்டேனாக்கும்?…” என்று முறைத்தவன்,
“இருந்தாலும் இந்த முறை ரொம்ப அழுதுட்டா. பேச்சுக்களும் அதிகமாகிடுச்சு, சமாளிக்க முடியாத அளவுக்கு குழந்தையை காரணம் காட்டி…” என முகேஷ் சொல்ல அவனின் மனநிலையை உணர்ந்தவனாக,
“இதை எல்லாம் நீ தான் ஹேண்டில் பண்ணனும் முமு. எப்போ ஷாலினி இவ்வளவு பயந்துட்டாளோ அவளோட பயத்தை போக்கி தைரியத்தை குடுக்கறது உன் கைல தான்…” என்று சொல்ல பெண்கள் இருவரும் வந்துவிட்டனர் பழச்சாறோடு.
மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு இன்னொரு நாள் பார்க்க வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
காரில் திரும்பும் பொழுது அபூர்வா அமைதியாக இருக்க அவளை திரும்பி பார்த்துக்கொண்டே ஓட்டியவன்,
“இதுவரைக்கும் எத்தனை பேர்?…” என்றான் திடீர் குரலில். அவனை திரும்பி பார்த்தவள் கவனம் அவன் கேட்டதில் இல்லாமல் போக,