அவன் சொல்லியதன் முழு சாராம்சமும் இப்பொழுது விளங்க ரவியின் முகம் பயங்கரமாக மாறியது.
“என்ன கோபம் வருது போல? என்னை என்னன்னு நினைச்ச மேன் நீ?…” என அவனுக்கு மேலான கோபத்துடன் எழுந்து அமர்ந்திருந்த சேரை ஒரு உதய் விட அது தெறித்து விழுந்ததில் ரவி எச்சிலை கூட்டி விழுங்கினான்.
“இந்த வாசுதேவகிருஷ்ணன் ஒரு கேஸ்ல இன்வால்வ் ஆகறான்னு தெரிஞ்சாலே அவனவனுக்கு ஆடி போயிரும். உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா என்கிட்டையே உன் வேலையை காண்பிப்ப…” என்றவன் ரவியை நெருங்கி அவனின் காதுக்குள்,
“இந்த நிமிஷமே உன்னோட ட்ரெஸ் எல்லாம் கழட்டிட்டு இத்தனை பேர் முன்னாடியும் கேலிக்கூத்தா நிக்கவைக்க முடியும். செய்யவா…” என்று உறும,
“நோ…” என பெருங்குரலில் அலறினான் அவன்.
“வெட்கமா இருக்கா உனக்கு?…” என்றவனின் குரலில் இருந்த கோபத்தில் அச்சத்துடன் அவனை பார்த்த ரவி எங்கே தன்னை அப்படி ஒரு நிலையில் நிறுத்திவிடுவானோ என பயந்து,
“நோ ஸார், நான் தெரியாம பண்ணிட்டேன். இது வரைக்கும் நான் பண்ணினதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். அப்படி எதுவும் செஞ்சிடாதீங்க ப்ளீஸ். என்னை மிரட்டினாங்க. அதுதான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண நினைச்சேன்…” என்று சொல்ல,
“இப்ப நீ செஞ்ச காரியம் நம்ம டிபார்ட்மென்ட்டை இப்படித்தான் கேலியா பார்க்க வச்சிருக்கு ரவி. இவனை பிடிக்க எத்தனை முயற்சி, எத்தனை இழப்பு. முகேஷ் உனக்கு ப்ரெண்ட் தானே? கொஞ்சமும் உருத்தலை, இல்லையா?…” என்று சொல்ல சொல்ல தலை குனிந்தபடி அவன் அமைதியாக இருந்தான்.
“நான் பண்ணினதுக்கு நான் தண்டனை அனுபவிக்க தயார் ஸார்…” என அவமானத்துடன் சொல்ல,
“நீ வந்தன்னைக்கே உன்னை நாங்க ஸ்மெல் பண்ணிட்டோம் ரவி. இனி நீயா அப்ரூவர் ஆனாலும் உனக்கான தண்டனை நிச்சயம்…” என்றவன்,
“நீயெல்லாம் என்ன ட்ரெயினிங் எடுத்த? உன்னை போய் செலெக்ட் பண்ணிருக்கான் பாரு அந்த கூமுட்டை. ரெண்டு தட்டு தட்டினதும் அம்புட்டும் கொட்டிட்ட…” என்று எள்ளலாக சொல்ல ரவி நிமிரவே இல்லை.
அவனுக்கு நிச்சயம் வாசு தன்னை இப்படியே விட்டுவிடமாட்டான் என்று. இனி தப்பிக்கவும் வழி இல்லை என்று. அதற்காக தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.
“வாசு நான் தான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல…” என ஜெயபால் அங்கே வந்துவிட்டார்.
“ஸார் நீங்க ஏன் இங்க?…” என கேட்கவும் ரவி கமிஷனரை பார்த்ததுமே அதிர்ந்து போனான். அவரின் முகத்தை பார்க்க முடியாமல் தலையை குனிந்துகொள்ள,
“ஷேம் ஆன் யூ ரவி…” என்றார் ஒற்றை வார்த்தையில் வெறுப்பை தேக்கி.
“ஸாரி ஸார்…” என்றவனின் மன்னிப்பை கூட ஏற்காதவராக வாசுவை பார்த்து,
“என்ன செய்ய? நீ இவனை என்ன பண்ணிடுவியோன்னு தான் வந்தேன். இவனை கஸ்டடில எடுத்திருவோம். நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்…” என சொல்ல,
“அவன் இங்க வந்ததுல இருந்தே கஸ்டடில தான் ஸார் இருக்கான்…” என சொல்லியவன் அங்கிருந்து சற்று தள்ளி ஜெயபாலுடன் நடந்து வந்தபடி,
“இப்போதைக்கு இவன் இங்க இருக்கிறது தான் நல்லது. இவரை நாம ஸ்மெல் பண்ணிட்டோம்னு தெரிஞ்சா இதுல யார் எல்லாம் இன்வால்வ் ஆகிருக்காங்கன்னு நமக்கு தெரியாம போக வாய்ப்பிருக்கு. யாரும் அலார்ட் ஆகாற சான்ஸ் குடுக்க கூடாது பாருங்க. அதுக்கு தான்…”
“ஹ்ம்ம், நீ சொல்றதும் சரி தான். ஓகே நீ கிளம்பு. உனக்கு லீவ் குடுத்தாலும் அடங்கமாட்டேன்ற. எப்ப பார்த்தாலும் விரைச்சுட்டே சுத்தாத…” என அவனின் வயிற்றில் அவர் குத்த,
“என்ன ஸார், என்னோட ரோல் மாடல் அப்படி இருக்கும் போது எனக்கும் அப்படியே வருது…” என அவரையே வாசுதேவகிருஷ்ணன் வார,
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? கிளம்பு மேன். இங்க நான் டேக் ஓவர் பண்ணிடறேன்…”
“ரூல்ஸ், சட்டம், சட்டை பை இதெல்லாம்?…” என கேட்க,
“அடங்கமாட்ட நீ? என்ன செய்ய இன்னும் ஒரு மூணு நாள் தானே? பார்த்துக்கலாம். அதான் உனக்கு துரை இருக்கானே…” என்று சொல்ல,
“இருக்கட்டும் ஸார். நீங்க இதுல இருக்க வேண்டாம். நாளைக்கு விஷயம் வெளில கசிஞ்சா எனக்கு சப்போர்ட் பண்ண நீங்க உங்க இடத்துல இருக்கனும். சோ இதை நானே பார்த்துக்கறேன். முடியாதப்போ உங்களை கேட்காம யாரை கேட்க போறேன்…”
விடாப்பிடியாய் அவரை அங்கிருந்து அனுப்பிய பின்னரே அவன் கிளம்பினான். கிளம்பும் பொழுது அங்கிருந்தவர்களுக்கு தேவையான இன்ஸ்ட்ரக்ஷன் அனைத்தையும் தந்துவிட்டு ரவியையும் பார்த்து எச்சரித்துவிட்டே செல்ல துவண்டு போனான் ரவி.
தனக்கு கீழ் இருந்தவர்கள் அனைவரின் முன்பும் குற்றவாளியாய் நிற்கும் தன் நிலையை அறவே வெறுத்தவனாக அமர்ந்திருந்தான்.
அதிகாலை மூன்றுமணி போல வீட்டிற்கு வந்த வாசுதேவகிருஷ்ணன் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே வர ஹாலில் சோபாவில் மருதவேல் உறங்கிக்கொண்டு இருக்க பெண்கள் மூவரும் கீழே உறங்கினார்கள்.
அவன் வந்த அரவமே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களை கண்டு புன்னகைத்தவன்,
“திருடனே வந்தா கூட அசைய மாட்டாங்க போல. இது போலீஸ்காரன் வீடு…” என லேசாய் தலையில் அடித்துக்கொண்டவன் அபூர்வாவை பார்க்க வலது கையில் மொபைலை இருக்கமாய் பிடித்தவளாக ஒருக்களித்து படுத்திருந்தவளை ஒரு நொடி நின்று பார்த்தவன் பின் அறைக்குள் நுழைந்து விளக்கை கூட போடாமல் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.
உறக்கம் வரவே இல்லை. அவள் ஆழ்ந்த உறக்கத்திலும் மொபைலை இருக்கமாய் பற்றியிருந்த விதமே தன்னை தனது அழைப்பை எந்தளவிற்கு எதிர்பார்த்திருப்பாள் என உணர்ந்தவன்,
“கால் பண்ணா முழிச்சுப்பா, ஆனா தூக்கம் போயிருமே?” என யோசித்து பின்,
“ப்ச், இப்ப என்ன மெதுவா ரெஸ்ட் எடுத்துக்கட்டும்.” என்று அவளுக்கு தனது மொபைலில் இருந்து அழைப்பு விடுக்க வைப்ரேட் மோடில் போட்டிருக்க மொபைல் அதிரவும் உடல் உதற எழுந்து அமர்ந்தாள்.
கணவனிடமிருந்து அழைப்பு என்றதும் வேகமாய் மற்றவர்கள் உறக்கம் கலைக்காமல் எழுந்து அறைக்குள் வந்தவள் இருட்டில் அவன் அமர்ந்திருந்தததை கவனிக்காமல் பூனை பாதம் வைத்து பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
அவளின் செயலில் அடக்கமாட்டாமல் சிரிப்பு வர உதட்டை கடித்தபடி அதை அடக்கியவன் அபூர்வா தன் அழைப்பை ஏற்றதும்,
“யக்கா…” என்றான் கேலி சிரிப்புடன். அதை எல்லாம் புறம் தள்ளியவளாக படபடப்புடன் பேசினாள் அபூர்வா.
“சொல்லுங்க, எங்க இருக்கீங்க? கிளம்பியாச்சா? வேலை முடிஞ்சதா? நைட் எதுவுமே சாப்பிடலையே? சாப்பிட்டீங்களா? வீட்டுக்கு எப்போ வருவீங்க? நான் வெய்ட் பன்றேன்…” என அவனை பேசவிடாமல் பேசி தள்ள,
“மூச்சு விட்டுக்கோடி கண்மணி…” என்றான் சிரிப்பினூடே.
“என்ன சிரிக்கறீங்க? எப்போ வருவீங்கன்னு தானே கேட்டேன்….” என சிணுங்க,
“எனக்கும் உன்னை இப்பவே பார்க்கனும் தான். ஆனா முடியாதே? என்ன செய்ய?…” என்று சொல்லவுமே ஒரு நொடி அமைதியானவள்,
“ஓஹ், இன்னும் வேலை முடியலையா?…” என்றால் இறங்கி போன குரலில்.
“காத்து போன பலூன் மாதிரி மூஞ்சியை வச்சுக்காத. கொஞ்சம் சிரியேன்…”
“யார் பார்க்காங்கலாம் நான் சிரிக்க…”
“ஏன் நான் இல்லையா?…” என்றவானின் குரலே அவளை மயங்க செய்ய,
“இங்க இல்லையே…” என்றாள் ஏக்கம் பொதிந்த குரலில்.
“ஏன் இல்லாம? தேடினா இருப்பேன்…” என்று சொல்லி போனை வைத்துவிட மொபைலை பார்த்தவள் குழப்பத்துடன் பாத்ரூமை விட்டு வெளியே வர அங்கே கதவை தாழ் போட்டுக்கொண்டு திரும்பினான் வாசுதேவகிருஷ்ணன்.
“வா…” என்றதுமே வேகமாய் வந்து அவனின் கைகளுக்குள் அடைக்கலமானவள்,
“வந்ததும் ஏன் எழுப்பலை. இப்பதான் தூங்கினேன். எழுப்பிருக்கலாம்ல…” என விசும்பலுடன் கேட்டு அவனின் தோளில் அடிக்க அவளின் கையை பிடித்து தடுக்க போனவன் விரலில் அவளின் நகம் பதிய,
“ஸ்ஸ்ஸ்ஸ்…”என சட்டென உதறி விலக,
“என்னாச்சு?…” என்று பதட்டத்துடன் அவனின் கையை பார்த்தாள்.
ரவியை சேரை தூக்கி அடித்ததில் அதிலிருந்த கட்டை விரலின் தோலை லேசாய் கிழித்திருந்தது. அவனே அதை கவனிக்கவில்லை.
“என்ன இது தோல் கிழிஞ்சிருக்கு?…” என கேட்க,
“இதெல்லாம் சும்மா எங்கையாச்சும் கீறிருக்கும். அதை விடு. நீ சாப்பிட்டியா?…” என கேட்க தலையசைத்தவள்,
“இருங்க மருந்து போடறேன்…” என நகர போனவளை நிறுத்தி கட்டிலில் அமர்ந்து அருகில் அமர்த்திக்கொண்டவன்,
“இதுக்கு மருந்தா? அதெல்லாம் சரியாகிடும். சரி ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?…” என கேட்டு பேச்சை மாற்றினான்.
“இன்னும் இல்லையே. எடுத்து திரும்ப உள்ளவே வச்சுட்டேன்…” என அசடுவழிய சொல்ல,
“நல்லா வச்ச போ. சரி போய் தூங்கு. நாளைக்கு எடுத்து வச்சிப்போம்…” என அவளை அனுப்பவும் எழுந்து வெளியே வந்தவள் கதவை அடைக்க போய் பின் நன்றாக கதவை திறந்து வைத்து சென்று படுத்துகொண்டாள்.
அவளின் செயலில் ஒரு விரிந்த புன்னகை தான் வாசுதேவகிருஷ்ணன் முகத்தில். அவனும் அவளை பார்த்தபடியே சாய்ந்து படுத்தவன் சில நொடியில் உறக்கத்தை தழுவினான்.
மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு மருதவேல் அன்புக்கரசியையும் விமலாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
இரவு ரயில். மாலை வீட்டிற்கு வந்து அங்கிருந்து சேர்ந்து கிளம்புவோம் வாசுதேவகிருஷ்ணன் சொல்ல சரி என்று சொல்லி கிளம்பிவிட்டார்கள்.
அங்கே வீட்டில் இவர்களுக்காக முத்துவேல் கடைக்கு செல்லாமல் காத்திருந்தார். காலையே வந்துவிடுவார்கள் என பார்த்தாள் மதிய உணவு நேரத்திற்கு தான் வந்து சேர்ந்தார்கள்.
மருதவேலிடம் பேசவே இல்லை முத்துவேல். ஆனால் பார்வை மட்டும் அவனை தொடர்ந்தது. அவராக ஏதாவது பேசுவார் என்று பார்த்து பார்த்து அவர் பேசாமலே இருக்கவும் தானே பேசினான் அவன்.
“கடையை நீங்க போய் திறந்துட்டீங்களாப்பா? இப்ப நான் போய்ட்டு வரேன்…” என சொல்லி கிளம்ப போக,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஒரேதா உன் நகர்வலத்தை முடிச்சுட்டு வா…” என முத்துவேல் சொல்ல அவர் கோபமாக சொல்கிறாரா என்ன என்றே தெரியாமல் அவன் விழிக்க,
“அதான் அப்பா சொல்லுறார்ல. என்னைக்கு அவர் பேச்சை நீ மீறிருக்க. இன்னைக்கு மீற. பேசாம போயி துணிமணி எடுத்து வை பெரியவனே. கடைக்கு போட்டுட்டு போற மாதிரி எடுத்து வைக்காத…” என்ற அன்புக்கரசி,
“நீ எடுத்தே வைக்க வேண்டாம். விமலா வைக்கட்டும். அவளுக்கு தெரியும்….” என சொல்லி,
“விமலா நீ போயி எடுத்து வை. ஆமா லட்சுமி சேலை எடுத்து வச்சிருந்தால்ல. அதுக்கும் சட்டை எடுத்து வச்சுக்கோ. புதுசா வாசு கல்யாணத்துக்கு எடுத்தோம்ல. அதுலயும் ரெண்டு எடுத்து வச்சுக்கோ. லட்சுமிக்கு ஒன்னு கொண்டுபோய் குடு…”
என்னவோ அன்புக்கரசியே வெளியூர் செல்ல போவதாக பம்பரமாய் அவர் சுழல என்ன நடக்கிறது என்றே முத்துவேலுக்கு புரியவில்லை.
இளையமகன் முதல்நாள் காட்டிய காட்டில் மூத்தவனுக்கு கொடுக்க பத்தாயிரம் எடுத்துவைத்து அவர் அதை கொடுக்க அமர்ந்திருக்க,
“இங்க பாரு பெரியவனே போறது எல்லாம் இருக்கட்டும். அங்க உன் தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும் நீ செலவு பண்ணு. உன்னையும் விமலாவையும் லட்சுமி வீட்டுல எப்படி பார்த்துக்கிட்டாங்க. நீயும் மதிப்பா செஞ்சா லட்சுமி நாளைப்பின்ன அவங்க வீட்டுல பேசும் போது நம்ம வீட்டை உசத்தி பேசுவா…” என சொல்லி,
“என்னங்க நான் சொல்லுறது? நமக்கு தான மரியாதை. என்னதான் வாசு அண்ணன்னு கூட்டிக்கிட்டாலும் அங்க போற இடத்துல பெரியவன் கையில வச்சு செலவு செஞ்சா தான் அவனுக்கும் மதிப்பு. உங்களுக்கும் மதிப்பு. நேத்து நீங்க வேண்டாம்னு சொன்னதும் என்னனோன்னு நினைச்சிருந்தா?…”
“என்ன சொல்ல வர அன்பு?…” என்றார் பரிதாபமாய் தனது கையில் இருந்த பணத்தை தடவியபடி.
“எதாச்சும் மனசுக்குள்ள வச்சிருந்தா அத அந்த நினப்ப நாம வளர விடலாமா? நாமதான் எப்பவும் செய்யுறோம்னு ஒரு எண்ணம் பதிஞ்சிட கூடாது பாருங்க. அதுக்குத்தான். மருதுவுக்கு என்ன இல்லை? அன்னைக்கு அங்க அவசரமா விட்டுட்டு வந்ததால ஒன்னும் குடுக்க முடியலை உங்களால…” என கேட்க,
“ஆங், ஆமா ஆமா….” தலையாட்டுவதை தவிர முத்துவேலுக்கு வேறு பதில் இருப்பதாய் தெரியவில்லை.
“எனக்கு தெரியும்ங்க ஏதோ ஒரு நினைப்புல தான் அன்னைக்கு வந்திருப்பீங்க. இல்லைன்னா மருது கையில கை கொள்ளாம குடுத்து நம்ம கௌரவத்தை அங்க நிப்பாட்டிருப்பீங்க. சரி அதை விடுங்க. இப்ப குடுங்க. அவன் அங்க பார்த்துப்பான்…” என படபடவென அன்புக்கரசி முடிக்க மருதவேல் தந்தையை பார்த்தபடி இருந்தான் அமைதியாக.
“ஹ்ம்ம், நீயே சொல்லு எம்புட்டு குடுக்கலாம்னு…” என சொல்லவும்,
“உள்ள வாங்க…” என அவரை அழைத்து சென்றவர் அவரையே தனக்கு சரி என்ற அளவை சொல்லி முத்துவேல் எடுத்து வைத்ததில் இருந்து நான்கு மடங்கு அதிகமாய் பணத்தை கொடுக்க வைத்த பின் தான் நிம்மதியானார் அன்புக்கரசி.
முத்துவேலுவுக்கு எதுவும் புரியவில்லை. எப்படி இத்தனை பணம் கொடுத்தோம் என யோசிக்க யோசிக்க புரியாமல் போக தம்பதிகள் கிளம்பியேவிட்டனர்.
முத்துவேல் சாதித்த ஒன்று அன்புக்கரசியை ரயில் நிலையத்திற்கு அனுப்பாமல் இருந்தது மட்டுமே.
“நானும் போய் கை ஆட்டிட்டு வரட்டா?…” என கேட்டு கேட்டே முத்துவேலை வேறு எதையும் யோசிக்கவிடவில்லை அன்புக்கரசி.
அங்கே முத்துவேலும் மறந்த ஒன்று வாசுதேவகிருஷ்ணன் கொடுத்த பாஸ்புக், ATM கார்டை பற்றி மொத்தமாய் மறந்துவிடிருந்தது.