நிஜம் – 25
அருகில் இருந்த ஊரில் அரசு மருத்துவமனைக்கு காயம் பட்ட அனைத்து பயணிகளையும் கொண்டு செல்ல வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை கையில் சுமந்துகொண்டு உள்ளே ஓடினான்.
எமர்ஜென்சியில் அனுமதிக்கப்பட்டவளுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட தலையில் அடிபட்டதில் ரத்தம் அதிகம் தேவைப்பட்டது. அதற்கு விசாரிக்க சொல்லியபடி வெளியே வந்த டாக்டரை பார்த்ததும்,
“டாக்டர் கண்மணி…” என கேட்க,
“யார் கண்மணி?…” என அவரும் கேட்க,
“டாக்டர் பேஷன்ட் கூட வந்தவர் இவர். உள்ள இருக்கிற பொண்ணுக்கு வேண்டப்பட்டவர் போல…” என நர்ஸ் சொல்லவும்,
“ஓஹ், யாஹ், அந்த பொண்ணுக்கு தலையில நல்ல அடி. ப்ளட் லாஸ் ஆகிருக்கு. நாங்க ப்ளட் பேங்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம்….”
“என்ன க்ரூப்?…” என பரபரப்பாய் கேட்டவன் தனக்கும் அதே பிரிவு என்பதை தெரிந்து தானே ரத்தம் கொடுக்க முன்வர,
“வெரி குட். அன்ட் ஒன திங்க் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம்…” என ஆறுதலாக சொல்ல,
“இல்லை, அவ கால்ல…” என்று பேசவே திணறியதை போல அவனுக்கு தொண்டை அடைத்தது.
“அது பிராக்சர் தான். ஒரு நாலு மாசம் ஆகும் எழுந்து நடக்க. இந்தளவுக்கு பெருசா எதுவும் இல்லைன்னு சந்தோஷப்படுங்க…” என்றவர்,
“இவரை கூட்டிட்டு போய் ஏற்பாடு பண்ணுங்க. நான் மத்த பேஷன்ட் எல்லாம் பார்த்துட்டு வரேன்…” என்று டாக்டர் சென்றதும் அபூர்வாவின் அறைக்குள் வாசுதேவகிருஷ்ணனை அழைத்து சென்ற நர்ஸ் ரத்தம் வழங்க துரிதமாக்கினார்கள்.
அவனின் உடலில் இருந்து அபூர்வாவிற்கு பாய்ந்துகொண்டிருந்த ரத்த துளிகளை பார்த்தபடி அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே தனது கையை மெதுமெதுவாய் அசைத்துக்கொண்டு இருந்தான்.
“கண்மணி…” என மெதுவாய் இவன் அழைக்க அவளிடம் எந்த அசைவும் இல்லை. சற்று நேரத்திற்கெல்லாம் முகேஷ் வந்துவிட,
“என்னடா எல்லாம் ஓகே தானே? யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லயே?…” என கேட்க,
“உயிர் இழப்பு எதுவும் இல்லை. ஆனா எல்லாருக்குமே சின்ன சின்ன காயம், அடி எல்லாம் இருக்கு. ட்ரைவருக்கு தான் ஹெவி…” என்றவன் அபூர்வாவை பார்த்துவிட்டு,
“இந்த ஸ்டூடன்ஸ் எல்லாரும் அவங்க மேம் கல்யாணத்துக்காக வந்திருக்காங்க. நேத்து கல்யாணம் முடியவும் இருந்துட்டு நைட் ரிசப்ஷன் முடியவும் காலையில கிளம்பிருக்காங்க. பாவம்…” என சொல்ல வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் நண்பன் சொல்லியதை கேட்டபடி.
“எல்லாருக்கும் அவங்க பேரன்ட்ஸ்க்கு தகவல் சொல்லிட்டாங்க…”
“எந்த காலேஜ்?…” என கேட்டு தெரிந்து கொண்டவன்,
“செகேன்ட் இயர் ஸ்டூடன்டா?…” என்றான் முகேஷிடம் அவன் சொல்லியதை திரும்பவும் உறுதிப்படுத்த.
“உனக்கேன்டா? அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க. கிளம்ப வேண்டாமா?…” என கேட்க நர்ஸ் வந்து அவனை சற்று ஓய்வெடுக்கும் படி சொல்லிவிட்டு கையில் இருந்தவற்றை அகற்றி செல்ல எழுந்து அமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ப்ச், வீட்ல இருந்து போன். பேசிட்டு வரேன்…” என முகேஷ் வெளியே சென்றதும் அபூர்வாவின் அருகே வந்த வாசுதேவகிருஷ்ணன் ஒரு பக்கமாய் சாய்ந்து இருந்த அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பி அவளின் கன்னம் பற்றியவன்,
“கண்மணி, கண்மணி…” என அழைக்க அவளின் புருவமத்தியில் முடிச்சுகள் விழ அவளால் கண்ணை திறக்க முடியவில்லை.
“இங்க பாரும்மா, கண்மணி. ஒரு நிமிஷம் கண்ணை திறந்து பாரேன்…” என மீண்டும் மீண்டும் அழைத்தான் தவிப்புடன்.
நெற்றியில் தையல் போடப்பட்டிருக்க கண்களை சுருக்கும் பொழுதெல்லாம் அது வலியை கொடுத்தது அவளுக்கு. ஆனாலும் அந்த குரல் அவளை கண்ணை திறந்து பாரேன் என்று அவளை தூண்டியது. லேசாய் இமை பிரிய அதனுடன் நீரும் சேர்ந்து வழிய அவளின் கண்ணீரை சட்டென துடைத்தவன்,
“கண்மணி, உனக்கு ஒண்ணுமில்லை. எல்லாம் சரியாகிடுச்சு…” என்று அவளின் கன்னம் தட்டி வருடிக்கொடுத்தபடி அவன் சொல்ல சொல்ல மெதுவாய் விழி திறந்து பார்த்தவளின் முன்னால் கலங்கலாக ஒரு உருவம்.
அந்த கண்களை மீண்டும் அழுத்தமாய் மூடி திறந்து பார்த்தவள் பார்வை அவனின் விழிகளை விட்டு பார்வையை அகற்றவில்லை.
“க..ண்…ம….ணி…” என மீண்டும் அவள் திக்கித்திணறி வலியுடன் சொல்லி தலையை அசைக்க பார்க்க முடியாமல் போனது.
“ரொம்ப வலிக்குதா? கண்மணி. இங்க பாரு…” என அவள் கண்களை மூடுவதை போல தெரிய அவனின் பதட்டத்தில் வலிய தன் பலத்தை திரட்டி அவனின் முகத்தை பார்க்க முயன்றாள்.
முயல மட்டுமே முடிந்தது. முகம் முழுவதும் தாடியுடன் இருந்தவனின் முகத்தில் கண்களை தவிர வேறொன்றையும் அவள் பார்க்கவில்லை.
“கண்மணி, ஹேய் இங்க பாரும்மா…” என மீண்டும் அழைத்தவன் ஒரு உந்துதலில் அவளின் நெற்றியில் முத்தம் பதிக்கும் முன் அவள் மயக்கத்திற்குள் சென்றிருந்தாள்.
“கண்மணி…” என அழைக்க அழைக்க அவள் விழிக்காமல் போக அதற்குள் நர்ஸ் வர,
“கண்ணு முழிச்சு பார்த்தது திரும்ப மயங்கிட்டாங்க…” என இவன் பதறியதில்,
“ஸார் அவங்களுக்கு இன்னும் முழுசா கான்ஷியஸ் வரலை. அப்படித்தான் இருக்கும். இன்னைக்கு ஒரு நாள் முழுக்க மயக்கத்தில தான் இருப்பாங்க. நாளைக்கு தான் தெளிவாவாங்க…” என்று சொல்லி,
“ஓஹ், ஒரு நாள் ஆகுமா?…” என்று பெருமூச்சு விட்டவன் இதயம் இன்னும் படபடவென அடித்துக்கொண்டது. அபூர்வாவின் முகத்தில் பார்வை நிலைத்திருக்க,
“நான் கூட உங்களுக்கு வேண்டப்பட்ட பொண்ணுன்னு நினைச்சேன். இப்பத்தான் வெளில உங்க ப்ரெண்ட் சொல்லிட்டு இருந்தார் நீங்களும் கோவிலுக்கு இங்க வரப்போ இந்த ஆக்ஸிடென்ட்ட பார்த்தா. க்ரெட் ஸார்…” என நர்ஸ் சொல்லவும் மென்னகை புரிந்தவன் அமைதியாக நின்றான்.
அன்று தான் பார்த்த பெண்ணிற்காக இந்தளவிற்கு தான் தவிக்கிறோம் என்பதிலேயே அவள் தனக்கு எத்தனை முக்கியமானவள் என்பதை உணர்ந்தவன் முகத்தில் வலியுடன் கூடிய முறுவல்.
“உன்னை கொஞ்சம் நல்லா மீட் பண்ணிருக்க கூடாதா கண்மணி?…” என வார்த்தைக்கு வார்த்தை அவளை கண்மணி என வரித்துக்கொண்டான் மனதினுள்.
“வாசு…” என முகேஷ் வர இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வர,
“கிளம்புவோம். நேரமாகுது. இன்னைக்கு சீக்கிரம் கிளம்பியும் இப்படி மாட்டிக்கிட்டோம். இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாரும் சேஃப். இப்ப நாம கிளம்புவோம்…” என பேசிக்கொண்டு இருக்க வாசுதேவகிருஷ்ணன் காதில் எதுவும் ஏறவில்லை.
எப்படி வெளியே வந்தான் என்றும் தெரியவில்லை. அவனின் மனமெங்கும் அவனின் கண்மணியே நீக்கமற நிறைந்திருக்க நேரம் சென்றதும் தெரியவில்லை. அவன் திருப்பதிக்கு வந்ததும் தெரியவில்லை.
காரில் ஏறியதும் கண்மூடி சாய்ந்திருந்தவன் களைப்பில் உறங்கிவிட முகேஷே காரை செலுத்தினான்.
“ஏன்டா வந்ததும் உள்ள வராம உன்னை கூப்பிட நாங்க இங்க வரைக்கும் வரனுமாக்கும்?…” என வாசுதேவகிருஷ்ணன் தோளில் அன்புக்கரசி ஒரு அடியை போடவும் தான் கண்விழித்து பார்த்தான்.
பார்த்ததும் புரிந்துகொண்டவன் சட்டென கீழே இறங்கி முகேஷை தேட அவன் மருதவேலுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
“என்னடா புள்ள புடிக்கிறவன் வீட்டுல விட்டுடறேன்னு ஏமாத்தி திரும்ப பூச்சாண்டிக்கிட்ட கொண்டு வந்து விட்ட மாதிரி திருதிருன்னு முழிக்கிற? ஆனா அங்க இருக்காரு பாரு பூச்சாண்டி…” என அன்புக்கரசி மகனின் உடையை கூட சரிவர கவனிக்காமல் பேசியவர் அந்த காப்பிக்கொட்டை நிற சட்டையில் இருந்த உதிரத்தை அப்போதுதான் கவனித்து,
“வாசு இது ரத்தமா? எதுவும் அடி பட்டுடுச்சா?…” என பதற,
“அம்மா, என்னை பேச விடுங்க. ரூம் எங்க?…” என பல்லை கடித்துக்கொண்டு அவன் கேட்டதும் அன்புக்கரசிக்கு இன்னும் பதட்டம் தணியவில்லை.
“என்னன்னு சொல்லுடா…” என கேட்கும் பொழுதே கண்கள் கலங்கி அழுகை வந்துவிட,
“வர வழியில ஒரு ஆக்ஸிடென்ட். அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு அப்படியே கிளம்பி வரோம்…” என சமாளித்தவன் முகேஷை முறைத்தான்.
“என்னவோ கோபமா இருக்கான். போய் பாரு. உங்க ரெண்டு பேருக்கும் தனி ரூம் தான் போட்டிருக்கோம்…” என மருதவேல் சொல்லி அவனை அனுப்ப,
“என்னடா அவசரம் உனக்கு? கீழே அடிவாரத்துல எழுப்பிருந்தா ஷர்ட் மாத்திருப்பேன்ல. பாரு அம்மா பயந்துட்டாங்க…” என முகேஷை திட்டியவன்,
“பேக்கை எடு. கீயை அண்ணாக்கிட்ட குடு. அவன் காரை பார்க் பண்ணுவான்….” என சொல்லிவிட்டு நடந்தவனுக்கு உடல் களைப்புடன் மன உளைச்சலும் கூடியது.
இன்னும் சிறிது நேரம் அவளுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்ற கண்மணியை தேடியது அவனின் மனது.
“நல்ல வேளை மேலையே ரூம் புக் பண்ணினாங்க. நல்லா தான் இருக்கு. நாங்க வரப்போ இங்க ரூம் கிடைக்கவே இல்லை வாசு. நெக்ஸ்ட் உங்கப்பாட்ட சொல்லி தான் புக் பண்ண சொல்லனும்…” என முகேஷ் பேசிக்கொண்டே இருக்க அதற்குள் வாசுதேவகிருஷ்ணன் எழுந்து குளிக்க தேவையான உடைகளை எடுத்து வைத்தவன் தனது சட்டையை கழற்றினான்.
அதில் அபூர்வாவின் அடையாளம் காய்ந்துபோய் வடவடயாய் இருந்தது. சட்டையில் மட்டுமல்லாது உள்ளே போட்டு இருந்த வெள்ளை பனியனிலும் திட்டுக்களாய் வர்ணமாகியிருந்தது.
“வாசு…” என முகேஷ் அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவன் உடலின் அதிர்வை கண்கூடாய் கண்டவன்,
“என்னாச்சு உனக்கு? பிளட், நம்ம சர்வீஸ்ல பார்க்காததா? ஏன் நெவர்ஸா இருக்க?…” என கேட்க,
“எந்த காலேஜ்ன்னு கேட்டியே, வேற ஏதாவது டீட்டயில்ஸ் கேட்டியா?…” என்றான் அவசரமாக.
“அது அந்த ஏரியா ஸ்டேஷன்ல இருந்து வந்து டேக்ஓவர் பண்ணிட்டாங்க. வேற எதுவும்…” என யோசித்து நிற்க நண்பனின் அமைதியில்,
“கேட்டிருக்கனுமோ வாசு? தப்பு பண்ணிட்டேனாடா?…” என்றான் வருத்தமாய்.
“ப்ச், ஹேய் விடு, யார் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான. இது வேற ஒண்ணுமில்லை…” என முகேஷிடம் சொன்னாலும் அவனின் மனம் இன்னும் கண்மணியின் கண்களுக்குள்ளேயே தான் மிதந்து கொண்டு இருந்தது.
“சரி நான் குளிச்சுட்டு வரேன்…” என்றவன் அந்த உடைகளை ஒரு கவரில் போட்டு வைத்து குளித்து வர முகேஷும் வந்துவிட்டான். இருவருமாக மருதவேல் விமலா இருக்கும் அறைக்கு வர அவர்களுக்கு சாப்பிட வாங்கி வைத்து இருந்தார்கள்.
“எப்போ கிளம்பனும் அண்ணா?…” என முகேஷ் கேட்க,
“இன்னும் ரெண்டுமணி நேரம் இருக்குதுடா. மெதுவா சாப்பிடுங்க. காலையில வந்துருவீங்கன்னு இட்லி வாங்கி வச்சிருந்தோம். வர லேட்டானதும் அதை போட்டுட்டு இப்ப வெரைட்டி ரைஸ் தான் கிடைச்சதுன்னு வாங்கி வச்சிருக்கோம். சாப்பிடுங்க….” என்றவன்,
“விமலா அந்த ஜுஸ் எடு…” என விமலாவை அதட்டும் குரலில் மருதவேல் அழைக்க அவனை முறைத்த வாசுதேவகிருஷ்ணன்,
“அடங்கமாட்டியா நீ?…” என திட்டவும்,
“சரிடா விடேன்…” என்றவன் விமலா கொண்டு வந்து கொடுத்த பழச்சாறை வாங்கி மூவருக்குமே ஊற்றி மிச்சத்தை அவளிடம் கொடுத்தான்.
“அப்பா எங்கடா?…” என்றவனுக்கு பதில் சொல்லாமல்,
“இதை உன் ரூம்க்கு கொண்டு போ…” என குடுத்தனுப்ப விமலாவும் வெளியேறியதும்,
“உன் ரூமா?…” என சந்தேகமாய் வாசுதேவகிருஷ்ணன் அண்ணனிடம் மெதுவாய் கேட்க,
“ஆமா, அம்மாவும் அவளும் பக்கத்து ரூம்ல இருக்காங்க. இங்க நானும் அப்பாவும் இருக்கோம்…” என்று சொல்லவும் தான் அந்த அறையை நன்றாக பார்த்தான்.
இரண்டு கட்டில்கள் பிரித்து தனித்தனியாக கிடந்தது. சிங்கிள் காட் பெட். பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டான்.
“உன்னையெல்லாம் திருத்த முடியாது முத்துவேல் மகனே…” என பல்லை கடித்து கோபத்தை வெளிப்படுத்த,
“ப்ச், வாசு தப்பு. கோவிலுக்கு வந்திருக்கோம்…” என மருதவேல் சொல்லிய விதத்தில் கடுப்பானவன்,
“இல்லைன்னாலும். போயிரு பார்த்துக்கோ. கோவிலாம் எங்களுக்கு தெரியாது பாரு…” என திட்டிவிட்டு,
“நாங்க எங்க ரூம் போறோம். கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறேன். கிளம்பும் போது சொல்லு…” என்று சொல்லிவிட்டு வந்து தனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் படுத்துக்கொண்டான்.
முகேஷ் அவனின் முகத்தை முகத்தை பார்க்க அவனின் கேள்வியை புரிந்தவன் பதில் சொல்லவேண்டும் என்று கூட தோன்றாமல் கண்ணை மூடி உறங்க முற்பட்டான். அவனின் விரல்கள் இன்னொரு கையில் ஊசி துளைத்த இடத்தை வருடியது.
உணர்வோ அவளோடு ஒன்றாக கலந்துவிட்டதை போல மதிமயங்க கண்ணை மூடி இருந்தவன் உறக்கம் கூட வராமல் தவித்தான்.
பின் மருதவேல் வந்து மொட்டை போட அழைக்க ஏற்கனவே முடிவாகி இருந்த வேண்டுதல் என்றாலும் கூடுதலாய் அவனின் கண்மணிக்காக வேண்டியது.
இன்னும் முழுதாய் ஒரு நாள். அதுவரை மயக்கமும் தெளியாது. நாளை தரிசனம் முடியவும் கிளம்பிவிடவேண்டும் என்ற நினைப்புடன் மொட்டை போட்டு முடித்து கிளம்பி கோவிலுக்கு சென்றான்.
முகேஷ், வாசுதேவகிருஷ்ணன். முத்துவேல், மருதவேல். அன்புக்கரசி, விமலா. இப்படி இருவர் இருவராக கூட்டத்தில் நடந்து கொண்டிருக்க கடுப்புடன் அண்ணனை பார்த்தவன் தன்னருகே அழைத்து,
“அண்ணியோட சேர்ந்து நடடா…” என சொல்ல,
“ப்ச், கோவிலுக்கு வந்துட்டு…”
“வாயை மூடிரு பார்த்துக்கோ. ஏன்டா பேசிட்டு வரதுக்கு என்னடா உனக்கு?…” என திட்ட,
“அப்பா முக்கியமான கணக்கை பத்தி பேசிட்டு இருக்காரு. சும்மா இருக்கமாட்டியா நீ? அப்பறம் கணக்கு குழறுபடி ஆகிடும்…” என தம்பியிடம் சொல்ல,
“உன் வாழ்க்கையே குழம்பி கிடக்கு…”
“என்னடா பேச சொல்ற நீ? பேச என்ன இருக்குது? அவ நல்லா சாப்பிட்டா. உன் முன்னாடி தான ஜுஸ் கூட குடுத்தனுப்பிச்சேன்…” என்றவனை கூட்டத்தில் அடிக்க கூட முடியாமல் கையை முறுக்கியவன்,
“போ, போயி வத்தலுக்கும் புளிக்கும் கல்யாணத்தை பண்ணி வை. உன்னையெல்லாம் திருத்த முடியாது…” என்றவன் தாயின் அருகே சென்று நின்றுகொண்டான்.
அதன் பின்னர் அவர்கள் நால்வரும் பேசிக்கொண்டே சென்றனர். நல்லபடியாக தரிசனம் முடியவும் லட்டுகளை வாங்கிவிட்டு அங்கேயே சுற்றிவிட்டு அறைக்கு வந்து சேர இரவாகிபோனது.
“விடியவும் நித்யகல்யாணம். சீக்கிரம் எந்திச்சிடனும் வாசு. அம்மா வந்து போன் பன்றேன்…” என சொல்லி சென்றுவிட்டார் அன்புக்கரசி.
பாத்ரூமிற்கு சென்றவன் பார்வை அங்கிருந்தே ஜன்னலில் படிய வேகமாய் வெளியே வந்தவன் அங்கிருந்த கயிற்றில் வரும் போது அணிந்திருந்த உடை கொடியில் காய்ந்துகொண்டு இருப்பதை பார்த்தான்.
“அம்மா வேலையா தான் இருக்கும். துவைக்கும் போது எத்தனை கஷ்டப்படிருப்பாங்க…” என்று வேதனை கொண்டவன் ஹாஸ்பிட்டலில் யாரின் எண்ணையாவது வாங்கி வந்திருக்கலாம். எதையும் செய்யாமல் போனோமே?…” என்று நொந்தவனாக கண்ணை மூடினான்.
மறுநாள் நித்யகல்யாணம் முடியவும் அன்புக்கரசியிடம் சொல்லிக்கொண்டு உடனே புறப்பட்டவன் அந்த ஹாஸ்பிட்டலுக்கு செல்ல அங்கே வேறு பயணிகள் ஓரிருவர் தான் இருந்தனர்.
சிறு சிறு காயங்கள் இருந்தவர்கள் கூட கிளம்பி சென்றிருக்க அவனின் கண்மணியை முதல் நாள் இரவே வந்து அவளின் பெற்றோர் ஆம்புலன்ஸுடன் வந்து அழைத்து சென்றுவிட்டதாய் சொல்ல எதுவும் செய்யமுடியாத நிலை.
“வாசு….” என முகேஷ் அவனின் தோளில் கையை வைக்க,