நிஜம் – 5
அறைக்குள் இருந்த அபூர்வாவிற்கு அவன் இப்போதைக்கு செல்ல மாட்டானோ என்ற எண்ணத்தில் சற்று கோபமும் உண்டானது.
இது என்ன பெண்கள் உடை மாற்றும் இடத்தில் வந்து வம்பு செய்வது? என்று நினைத்தவள்,
“நீங்க போங்க, நான் வந்து பேசறேன். இங்க நிக்கறதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க உங்களை?…” என்று மெதுவாக அவள் சொல்லியதை கேட்டவனுக்கு புன்னகை.
“ஓஹ், அப்படி சொல்றியா? ஆனா வெளில வந்து பேசனும். பேசுவ தானே?…” என கறாராய் கேட்க,
“ஹ்ம்ம், பேசுவேன்…” என்றாள் தயக்கமாய்.
“குட், கீழே வெய்ட் பன்றேன்…” என்று சொல்லவும் கதவில் காதை கூர்மையாய் வைத்து அவன் சென்றுவிட்டானா என காலடி சத்தத்தை ஆராய நடந்து செல்லும் சத்தம் கேட்டாலும் எட்டி பார்க்கவில்லை வெளியே.
“லட்சுமி…” என விமலாவின் குரல் கேட்டதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டவள் கதவை திறந்து தலையை வெளியே நீட்டினாள்.
ஆனால் அங்கே விமலா இல்லை. காணாமல் வலதுபுறம் தேடியவள் இடது புறம் பார்க்க சட்டென வாசுதேவகிருஷ்ணன் அவள் கதவை அடைத்துவிடாமல் இருக்க கதவை பற்றிக்கொண்டு அவளையும் சென்றுவிடாமல் அணைக்கட்டியதை போல மறித்து நிற்க மூச்சடைத்தது அபூர்வாவிற்கு.
“விமலாக்கா….” என அவள் திணற,
“லட்சுமி…” என்றான் தொண்டையில் ஒரு விரலை அழுத்தி பிடித்து விமலாவின் குரலில்.
“அடப்பாவி” என வாயை பிளந்து அவள் அதிசயிக்க பார்வை அவனின் பார்வையுடன் கலந்துவிட சில நொடி இருவருமே பார்வை பரிமாற்றத்தில் பண்டமாற்றுமுறையை கடைபிடித்துக்கொண்டு இருந்தனர்.
“என் கண்ணுக்குள்ள உன்னை தேடுறியா பூர்வா?…” என்றான் வாசுதேவகிருஷ்ணன். அவன் கேட்டதும் தான் தன்னுணர்வு வந்தவள்,
“வழி விடுங்க, கீழே போகனும். தேடுவாங்க…” என்று பார்வையை பிரித்து கண்ணாடியை பார்த்துக்கொண்டு அவள் கேட்க அவள் திரும்பியதுமே ரசனைக்கு மாறியவன்,
“இந்த சேரி எனக்காக தானே? அப்ப என்னை பார்க்க விடாம போறேன்னா என்ன அர்த்தம்?…” என அவளின் காதுமடல் அருகே கேட்க சட்டென அவளை சுற்றி ஒரு மாயவலை பின்னப்பட்டதை போல உணர்ந்தவள் சுவாசத்திற்கு யாசிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள் வாசுதேவகிருஷ்ணனால்.
“பூர்வா? டெல் மி. உனக்கு என்னை பிடிச்சிருக்கா?…” என்று மீண்டும் கேட்க அவனின் கேள்விக்கு வார்த்தையால் இல்லாமல் தலையை மட்டும் வெட்கத்துடன் அவள் ஆமோதிப்பாய் அசைக்க,
“என்னை பார்த்து சொல்லு. எனக்கு புரியலை…” என்றவனின் அழிச்சாட்டியத்தில் அவள் தான் தவித்து போனாள்.
கட்டிக்கொள்ள போகிறவன் தான். ஆனால் வாய்மொழியாய் இதுவரை உன்னை பிடித்திருக்கிறது என்று ஒரு முறை கூட அவன் சொல்லவில்லை. அதனால் வாய் வார்த்தையாக சொல்ல முடியாமல் நாணமும் தடுக்க அழுத்தமாய் இதழ்களை மூடிக்கொண்டாள்.
“ஸ்பீக் அவுட் பூர்வா…” என்றவனின் பேச்சை கேட்பதை போல் இல்லை. அங்கே நிற்க முடியாமல் தடுமாற,
“ஹ்ம்ம், சேரி ரொம்ப அழகா இருக்கு. உனக்கும் ரொம்பவே பொருத்தமா இருக்கு. எனக்காக எடுத்து, எனக்காக கட்டி பார்த்து, எனக்கு காண்பிக்காம இருந்தா தப்பாச்சே. இதுக்கு உன் மேல எத்தனை செக்ஷன் கேஸ் போடலாம் தெரியுமா?…”
வாசுதேவகிருஷ்ணன் வழக்கம் போல பேச சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் கோபப்பட்டுவிட்டானா என. ஆனால் முகத்தில் கோபத்தின் சுவடில்லாமல் வேறொரு உணர்வு மிளிர அவனின் இதழ் பிரியாத ஒரு சிறு புன்னகை அவளை கவர்ந்தது.
[the_ad id=”6605″]
அவளிதழ்களும் அவனுடன் சேர்ந்து மலர ஆரம்பிக்க அதை கண்டவன் கண்கள் அவளின் முகமாற்றத்தில் உள்ளம் தடுமாற அவளையே பார்த்திருந்தவன்,
“என் கண்ணுக்குள்ள உன்னை தேடுறியா பூர்வா?…” என்றான் உள்ளார்ந்து. சட்டென அவனின் கேள்வியில் தெளிந்தவள் பார்வையை விலக்கிக்கொள்ள,
“பேசமாட்ட, ஹ்ம்ம்…” என்றவன் தன் ஆள்க்காட்டி விரலை மட்டும் நீட்டி அவளின் முகத்தின் முன்னால் தொட்டுவிடுவதை போல இங்குமங்குமாய் விரலை அலைபாயவிட அவனின் விரல் செல்லும் திசையெங்கும் அபூர்வாவின் கருவிழிகள் நர்த்தனம் ஆடியது.
“ப்ளீஸ்…” என்றவளின் குரல் காற்றோடு கரைய அவளின் இதழ்களின் முன்னால் நின்ற விரல் எங்கே தன்னை தீண்டிவிடுமோ என்று மூச்சை பிடித்துக்கொண்டு அஞ்சியவள் நொடியும் தாமதிக்காமல் அவனின் நெஞ்சின் மேல் தன் இரு கைகளையும் வைத்து அவனை தள்ளிக்கொண்டு சென்றாள்.
இப்பொழுது அவளின் உரசலில் இன்பமாய் அதிர்ந்து நின்றது வாசுதேவகிருஷ்ணன் தான். ஒரு ஆள் செல்லும் அந்த பாதையில் அவனை இடித்துக்கொண்டு அவள் தள்ளி செல்ல இதழ்களில் சட்டென பூத்த புன்னகையுடன் அபூர்வா சென்றுவிடாமல் பிடித்து நிறுத்தினான்.
“ஹேய் பூர்வி நில்லு…” என்றவனின் கை பற்றுதலில் திரும்பி பார்க்காமல் தன் கையை உருவிக்கொள்ள பார்க்க அவளின் உள்ளங்கையின் கதகதப்பை தான் வலிய கரங்களுக்குள் இதமாய் உணர்ந்தான். அதில் லேசாய் அழுத்தம் கொடுத்தவன்,
“பதில் சொல்லு பூர்வா….” என்றான் உல்லாச குரலில்.
“விடுங்க, யாராவது வந்திருவாங்க…” என அவனிடமிருந்து விடுபடுவதிலேயே இருக்க,
“சரி அப்போ அன்னைக்கு சொன்னியே ஏய் தம்பின்னு, அதை சொல்லு விடறேன். இப்பவே…” என சொல்ல,
““ம்ஹூம்…” என்று அவள் பிடிவாதம் பிடிக்க,
“அதே மாடுலேஷன், அதே துள்ளல் எதுவும் மாறாம சொல்லேன் என் அன்பு யக்கா…” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன் மிரட்டலாய்.
“எங்க விமலா லட்சுமிய?….” என்று மகிழ் குரல் கேட்டதும் இவன் அவளை தாண்டி தன் பார்வையை மகிழ் வந்த திசையை நோக்கி செலுத்த அசந்த நேரம் கையை உருவிக்கொண்டு ஓடிவிட்டாள் அபூர்வா.
“இதோ இந்தா வந்துட்டா…” என அவளை கை காண்பித்ததும் லேசாய் வியர்த்து மூச்சு வாங்க வந்து நின்றவளை பார்த்த மகிழ்,
“இவ என்ன ஓட்டப்பந்தயத்துல கப்பு வாங்க மறந்தவ மாதிரி பே-ன்னு வந்து நிக்கிறா?…” என்ற மகிழ் அங்கே அபூர்வாவின் பின்னால் இருந்து மந்தகாச புன்னகையுடன் வந்த வாசுதேவகிருஷ்ணனை பார்த்ததும் அர்த்தமாய் விமலாவை பார்த்து புன்னகைத்தாள்.
அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்த அபூர்வா விமலாவை நெருங்கி நிற்க, இதழ்களுக்குள் அதக்கிய புன்னகையுடன் வந்தவன்,
“முடிஞ்சதா? கிளம்பலாம் தானே?…” என்று கேட்க,
“நீங்க போங்க தம்பி, நாங்க வரோம்…” என்று விமலா சொல்ல,
“நீங்களும் தம்பின்னு தான் சொல்லுவீங்களா?…” என்று இழுத்தாள் மகிழ்தினி.
“ஆமா, ஏன்?…” என புரியாமல் விமலா பார்க்க,
“அவங்க வாசுன்னு தான் கூப்பிடுவாங்க. இப்போ தான் தம்பி. அப்படித்தானே அண்ணி?…” என்று விமலாவை “அப்படித்தான் என சொல்” என்னும் வலியுறுத்தல் அதில் இருக்க,
“அப்படின்னா அப்படித்தான். ஆமா ஆமா…” என அவனின் அண்ணியாய் சரியாக அவனின் கோட்டின் மீதே ரோட்டை போட்டாள் விமலா.
[the_ad id=”6605″]
“நீங்க போங்க, வரோம்…” என்று அவனை அனுப்பிவிட்டு அபூர்வாவை தன் புடவையை மாற்றி வர சொல்லிவிட்டு தாங்கள் தேர்ந்தெடுத்த புடவைகளை எடுத்துக்கொண்டு பெண்கள் மூவரும் கீழே இறங்கினார்கள்.
அதுவரை பூங்கோதை எந்த புடவையையும் பார்க்காமல் படபடப்பாய் இருக்க மருமகன் இறங்கி வந்ததும் தான் நெஞ்சில் கையை வைத்து மூச்சை விட்டார். அதையும் அவன் கண்டுகொள்ள புடவை பார்ப்பதை போல குனிந்துகொண்டார் அவர்.
“விமலா வாசுக்கிட்ட முகூர்த்த புடவையை எடுத்து காமி. அவனுக்கு புடவை பிடிச்சிருக்கான்னு…” என அன்புக்கரசி சொல்ல,
“நான் தான் கட்டியே பார்த்துட்டேனே? எனக்கு பிடிச்சிருக்கு…” என்றான் பட்டென்று.
“ஐயோ இவங்களை பேசாம இருங்க சொல்லுங்களேன் அக்கா. பாருங்க என்ன பேசறாங்கன்னு?…” என அபூர்வா விமலாவின் காதில் கிசுகிசுக்க அவள் நினைத்ததை போல தான் அன்புக்கரசியும் கேட்டார்.
“ஏன்டா என்ன எடுத்திருக்கோம்னே தெரியலை. அதுக்குள்ளே பார்த்துட்டேன் பிடிச்சிருக்குன்னா?…” என்று யோசனையாய் கேட்க,
“வந்தப்பவே பார்த்திருப்பாரா இருக்கும் அத்தை…” என விமலா சமாளித்தாள்.
“எடுத்து முடிச்சாச்சுன்னா கிளம்பலாம்…” என பூங்கோதை சொல்ல,
“இன்னும் முடியலை. இங்க சட்டை துணி எல்லாம் நல்லா இருக்கு. இந்த குவாலிட்டி நம்மூர்ல கிடைக்கனுமே? அதனால கொஞ்சம் இருங்க…” என விமலா சொல்ல,
“இன்னும் உனக்கு எடுக்க என்ன இருக்கு?…” என மருதவேல் வேகமாய் வர,
“உனக்கெதுக்குப்பா? பொம்பளைங்களுக்கு ஆயிரம் தேவைப்படும். இன்னைக்கு ஒருநாள் தானே? இரு…” என அன்புக்கரசி சொல்லவும் தான் அடங்கி உட்கார்ந்தான். ஆனாலும் மனைவியை முறைத்துக்கொண்டு தான்.
வாசுதேவகிருஷ்ணனும் ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு தன் மொபைலை பார்வையிட்டுக்கொண்டு இருக்க யாரோ தன்னை விடாமல் பார்வையால் தொடர்வதை உணர்ந்தவன் சட்டென அபூர்வாவை பார்த்தான். அடுத்து தன் தந்தையை. ம்ஹூம் இருவருமே பார்க்கவில்லை.
பின் யாராக இருக்கும் என மெதுவாய் கைகளை நெட்டி முறிப்பதை போல நெளிந்து கொடுத்தவன் துழாவலில் மீனென முனீஸ்வரன் தான் சிக்கினார். இவன் பார்த்ததும் என்ன என்று உதடசைத்து கேட்க அவன் கண்டுகொண்டதில் அடித்துப்பிடித்து கடையை சுற்றி பார்ப்பதை போல பார்க்க ஆரம்பித்தார் அவர்.
“என்னமோ கெமிஸ்ட்ரி ஓடுதுடா வாசு சார்க்கும், நம்ம டார்லிக்கும் நடுவுல…” என்று விஷ்வா சொல்ல அந்நேரம் வசீகரனுக்கு சூர்யாவிடமிருந்து அழைப்பு.
“என்னடா கிளம்பிட்டியா நீ? என்ன பன்ற?…” என வசீகரனிடம் கேட்க,
“உனக்காக உன் லவ்ஸை தான் பார்த்துட்டே இருக்கேன். ஆனாலும் உன்னை நினைச்சு தேடும் கண் பார்வை தவிக்கன்னு பாடாதது தான் குறை உன் முனீஸ்…” என்று வசீகரன் சொல்ல,
“அந்த அங்கிள்த்ரெட் தொல்லை தாங்கலை. இதுக்குத்தான் நீ ஊருக்கு போனா நான் போன் பன்றதே இல்லை…” என சூர்யா காண்டாக,
“வந்து ஒரு ஹாய் சொல்லிட்டு போனா குறைஞ்சா போய்டுவ?…” என அவனை கலாய்க்க,
“நீ காஞ்சிபுரத்துல இருக்கற வரைக்கும் டைவார்ஸ்ஸ்ஸ்டா உனக்கும் எனக்கும்…” என்று சொல்ல,
[the_ad id=”6605″]
“என்னங்க பன்றீங்க?…” என அனு சூர்யாவை கேட்கும் குரல் வர,
“வசீட்ட பேசறேன்டா டார்லிங் முனீஸ்….” என வாய் தவறி சொல்லிவிட்டு,
“ஐயோ அனு, அனு, வாய் தவறி சொல்லிட்டேன்…” என கதறுவது கேட்டு விஷ்வாவிடம் சொல்லி வசீகரன் சிரிக்க,
“நீங்கலாம் நல்லா வருவீங்கடா. எனக்கு கால் பண்ணாத. இப்ப இருந்து நீ ப்ளாக் லிஸ்ட்…” என்று சூர்யா கோபமாய் போனை கட் செய்துவிட விஷ்வாவும், வசீகரனும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.
அதே நேரம் புகழ் கடைக்குள் நுழைய அவனை முறைப்புடன் பார்த்த முனீஸ்வரன் அவர்கள் இருவரையும் காட்டி,
“எனக்கு வியாபாரம் நடந்த மாதிரித்தான். கூட்டிட்டு போய்டு. இல்லைனா உள்ள வச்சு எல்லாரையும் பூட்டிட்டு போய்டுவேன் பார்த்துக்க…” என்று எகிற,
“என்னது கடையை பூட்ட போறீங்களா?…” என அவரருகே வந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.