“சக்தி நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன். லஞ்ச் வேண்டாம். நீ பாரு…” என்றவன் தானும் கண்ணை மூடிக்கொண்டு உறங்க முற்பட சக்திக்கு மனது அமைதி இல்லாமல் தவித்தது.
கிளம்பி வந்ததோ விதுரனின் திருமண நிச்சயத்திற்கு. இங்கே திருமணத்தையே நடத்திக்கொண்டான் நண்பன். அதுவும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில். அன்று அதிகாலை இரண்டு மணிவாக்கில் சென்னையை விட்டு கிளம்பினார்கள் சக்தியும் விதுரனும்.
அதில் கயல்விழிக்கு ஏக கோபம். இப்படி செய்கிறானே மகன் என்று. ட்ரைவரை வைத்துக்கொண்டு தான் வர வேண்டும் என்ற கட்டளையுடன் அவனை கிளம்ப வைத்தார்.
சரி என கிளம்பியதும் விதுரனுக்கு அழைத்தவர் வரும் வழியில் திருப்பூரில் உள்ள மாமா ஒருவரின் வீட்டில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு பின் அவரையும் அழைத்துக்கொண்டு ஈரோட்டிற்கு மாலை நேரம் கிளம்பினால் போதும் என சொல்லிவிட மறுக்காமல் ஒத்துக்கொண்டான்.
“இதுக்கு கொஞ்சம் நேரம் கழிச்சு கிளம்பி நேரா ஈரோட் போய்றலாம். இங்க இருந்து அங்க, அங்க இருந்து பொண்ணு வீட்டுக்கு…” என சக்தி சொல்ல,
“நேத்தே கிளம்பி வர சொன்னாங்க. போக முடியலை. அட்லீஸ்ட் சீக்கிரமாவது போகலாம்…” என்று சொல்லிவிட்டான் விதுரன்.
திருப்பூரை நெருங்கியதும் ஒரு கடையில் டீ சாப்பிட வண்டியை நிறுத்தியவர்கள் டீ குடிக்க,
“ஹேய் சக்தி, இந்த பொண்ணுங்க இங்க என்ன பன்றாங்க?…” என விதுரன் கேட்டதும் திரும்பி எதிர் திசையில் பார்த்தான் சக்தி. அங்கே சங்கவியும், விலாசினியும் நின்றுகொண்டிருந்தனர்.
சங்கவி இவனை பார்த்ததுமே எங்க பாஸ் என்று சந்தோஷத்தில் கூச்சல் போட்டவள் அவனை பார்த்து கையசைத்தாள். சாலையை கடந்து அருகே வந்தவன்,
“இங்க என்ன பன்றீங்க?…” என கேட்க அவன் சந்தோஷத்துடன் பேசிவிட்டதில் மகிழ்ந்து போன சங்கவி,
“ஸார், இங்க தான் ரோஜாவுக்கு மேரேஜ். உங்களுக்கு தெரியாதா?…” என கேட்க,
“இல்லையே, இன்னைக்கு மேரேஜ்ன்னு தெரியும். ஆனா இங்கன்னு தெரியாது…” என்றவனிடம்,
“அப்போ நீங்க எப்படி இங்க?…” என கேட்டவள்,
“இவ விலாசினி. அன்னைக்கு ஷாப்பிங் மால்ல பார்த்திருப்பீங்க. எங்க ஹவுஸ்மேட் தான்…” என அறிமுகப்படுத்த அதை ஏற்றவன்,
“இன்னைக்கு எனக்கு எங்கேஜ்மென்ட், பொண்ணு ஈரோடு. அதான் இந்த பக்கம் வந்தோம்…” என்றவனுக்கு வாழ்த்தை சொல்லியவள்,
“வினி ரோஜாவுக்கும் ஹரிஷ்க்கும் கிப்ட் பண்ண ரிங் வாங்கியிருந்தா. அது காலையில எடுத்து பார்த்துட்டு இருந்தப்ப கீழே விழுந்து அதுல உள்ள ஸ்டோன் விழுந்துடுச்சு. போதாததுக்கு எடுக்க முன்ன ரோஜாவோட அக்கா வேகமா வந்தவங்க அதை மிதிச்சுட்டாங்க. அதை மாத்தி புதுசு எடுக்கலாம்னு தான் நாங்க வந்தோம்…”
“அதுக்கு இப்பவே அவசரமா? நாளைக்கு கூட எடுத்து குடுக்கலாம் இல்லயா?…” என சக்தி சொல்ல,
“இல்லை ஸார், கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கு சென்னைக்கு ப்ளைட் புக் பண்ணிட்டா. வீட்டுக்கு போய் நாளைக்கு கிளம்ப பார்க்கனும்னு. நாளைக்கு பாரின் போய்டுவா. அடுத்து எப்ப ரோஜாவை மீட் பண்ண? அதான் குடுத்தே ஆகனும்னு என்னையும் கூட்டிட்டு வந்துட்டா…”
“எதுல வந்தீங்க?…”
“ஆட்டோல தான் ஸார். அதான் இப்ப அங்க போகனும்…” அனைத்தும் சங்கவியே பேச விலாசினியை பேசவே விடவில்லை அவள்.
“ஓகே ஓகே, வாங்க நான் ட்ராப் பண்றேன்…” என்று விதுரன் சொல்லவும் இருவருக்கும் சந்தோஷமானது. காரை திருப்பி கொண்டு வர சொல்லி விதுரன் கை காண்பிக்க,
“இது தேவையில்லாத ஆணி…” என்றான் சக்தி அவனிடம்.
“நானே புடுங்கிக்கறேன்…” என்றான் விதுரனும். அவனை முறைக்க,
“போடா, இவ்வளோ தூரம் வந்துட்டு அட்லீஸ்ட் பார்த்துட்டாவது போவோமே. ஒரு விஷ் பண்ண மாதிரியும் இருக்கும். அன்னைக்கு அடிபட்டதோட போனவ, மனசுக்கு ஒரு மாதிரியாவே இருந்துச்சு. இப்ப பார்த்தா கொஞ்சம் ஃபீல் ஃப்ரீயா…” என சொல்ல சக்தி அடுத்து வாயே திறக்கவில்லை.
சங்கவிக்கு விதுரன் இத்தனை இலகுவாய் தன்னிடம் பேசிவிட்டதே அத்தனை குதூகலமாய் இருந்தது. ஏனெனில் ஸ்ரீ விதுரனை ஒரு முசுடு, கோபக்காரன் என்னும் வகையில் உருவகப்படுத்திவிட்டிருக்க அப்படித்தான் விதுரனும் இத்தனை நாள் நடந்துகொண்டான்.
இன்று ஸ்ரீயிடம் சென்று பெருமையடிக்க முடிவு செய்தவள் காரிலும் வளவளத்துக்கொண்டே சங்கவி வர விதுரனும் சலிக்காமல் பதில் பேசினான். கார் மண்டபத்தை நோக்கி பயணித்தது.
————————————————————————–
இதோ இன்னும் சில நிமிடங்களில் இன்னொருவனின் மனைவியாக போகிறாள் ரோஜா. மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்தாள்.
முகத்தில் எந்த உணர்வும் இல்லை. வெட்கமோ, பதட்டமோ, எரிச்சலோ, எதிர்பார்ப்போ எதுவும் இல்லை. கடனே என்றும் இல்லை.
எதோ ஒரு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க அவர் சொல்வதை சிரத்தையாய் செய்துகொண்டிருந்தாள். அவளின் முகம் பார்த்த ஸ்ரீக்கு வருத்தமாய் இருந்தது.
“கொஞ்சம் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கோ ரோஜா…” என அவளிடம் மெல்லிய குரலில் கிசுகிசுக்க,
“ப்ச், அதெல்லாம் முடியாது. சிரிப்பு வரலை…” என சொல்லிவிட்டாள்.
வாசலில் வரவேற்பதற்கென சொந்தங்களை நிறுத்திவிட்டு மணமக்கள் அருகில் நின்றுகொண்டிருந்தனர் அவர்களை பெற்றவர்கள்.
பிரஷாந்தி ஸ்ரீயை “அங்கே நிற்காதே, உறவினர்கள் மட்டுமே மணப்பெண்ணுடன் நிற்கவேண்டும்” என்று அங்கேயும் தன் அதிகாரத்தை காண்பிக்க ரோஜா அப்படித்தான் நிற்பாள், உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என ஸ்ரீயை பிடிவாதமாய் தன்னுடன் இருத்திக்கொண்டாள்.
அங்கே வைத்து முறையிட முடியாததால் பல்லை கடித்துக்கொண்டு தள்ளி நின்று கொள்ள அதனை கண்டு வளர்மதி வந்து கேட்க,
“அவ ப்ரெண்ட்ஸ் தான் பக்கத்துல நிக்கனுமாம். ரோஜா சொல்லிட்டா…” என லேசாய் கண்ணை கசக்க,
“ப்ச், இங்க வச்சு அழுது எல்லாரும் என்னனு கேட்க வச்சிடாத பாப்பா. விடு அவ இஷ்டப்படி…” என சொல்லிவிட்டு செல்ல பிரஷாந்திக்கு சப்பென்று ஆனது. அவளின் முகத்தை பார்க்காமல் ஸ்ரீ ரோஜாவையே பார்த்துக்கொண்டிருக்க அப்போது தான் ஹரிஷை கவனித்தாள்.
ரோஜா ஏன் அப்படி இருக்கிறாள் என்று ஸ்ரீக்கு நன்றாக தெரியும். ஆனால் ஹரிஷும் இறுக்கத்துடன் உணர்வுகளை தொலைத்த முகமாய் அமர்ந்திருந்தான்.
மனதிற்குள் எதுவோ சரியில்லை என்று மட்டும் நினைத்த ஸ்ரீ நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே மண்டபத்து வாயிலை கண்டு ஸ்தம்பித்து போனாள்.
அங்கே விதுரனின் கார். காரில் இருந்து சங்கவியும், விலாசினியும் இறங்கி கொண்டிருந்தனர். இதனை எதிர்பார்க்கவே இல்லை ஸ்ரீ.
சங்கவி சக்தியிடம் பேச்சுவாக்கில் கல்யாணத்திற்கு எப்பொழுது வருகிறீர்கள் என கேட்டதற்கு “வேறு விசேஷம் அதே தேதியில், வரமுடியாது” என சொல்லியிருக்க இப்பொழுது வந்திருப்பதை பார்த்து அசையாமல் நின்றாள்.
வருத்தமெல்லாம் ரோஜா இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாளோ என அவளை பார்க்க ரோஜாவும் சரியாக அந்நேரம் அங்கே தான் பார்த்தாள். மண்டபத்தில் கட்டியிருந்த ஸ்டீரியோவில்,
மாங்கல்யம் தந்துனானேனா மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்
வானே வானே வானே நான் உன் மேகம் தானே
என்ற பாடல் சத்தமாய் இசைக்க டி.இமானின் இசையில் ஸ்ரேயாகோஷால் உருகி கரைய ரோஜாவின் கைகள் வேலை நிறுத்தம் செய்ததை போல அப்படியே இருந்தது.
அவளின் பார்வை சென்ற திசையை கண்ட ஹரிஷின் விழிகள் மின்னின அவன் நினைத்ததும் எதிர்பார்த்ததும் இதை தானே? விதுரன் வரவில்லை என்றாலும் தான் நினைத்ததை நடத்தியிருப்பான்.
அவனுக்கு விதுரன் வந்தாலும் வரவில்லை என்றாலும் ஒன்று தான். ஆனால் வந்துவிட்டது இன்னும் நல்லது தான் என நினைத்தவன் வன்மமாய் சேகரனை பார்த்தவன் கண்கள் அவரின் அதிர்ந்த முகத்தில் இடுங்கின.
சங்கவி, விலாசினியுடன் பேசி சிரித்தபடி அவன் நடந்து வந்து கொண்டிருக்க அவனுடன் சக்தியும். சங்கவி அழைத்து வந்து முன்னால் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.
வெள்ளை நிற காட்டன் ஷர்ட்டும், அடர் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தவனின் தோற்றம் ரோஜாவை அப்படியே அள்ளிச்சென்றது. அவளின் பார்வை உணர்ந்தோ என்னவோ அவன் ரோஜாவை பார்த்த நொடி,
“நீதானே பொஞ்சாதி, நானே உன் சரிபாதி” என்னும் வரிகள் ஹரிஹரனின் வார்த்தையில் இசைக்க ரோஜாவை பார்த்து விதுரன் கை அசைக்க ரோஜாவின் கண்கள் வேறெங்கும் பார்க்கவில்லை.
ஹரிஷையும் பார்த்து கட்டை விரலை உயர்த்தி தன் வாழ்த்தை சொல்ல சங்கவியிடம் தலையசைத்து அனுப்பினான். அவர்கள் இருவரும் மேடைக்கு வந்ததும் ஸ்ரீ சங்கவியை பிடி பிடியென பிடித்தாள் அவள்.
“எதுக்குடி இப்ப அவரை இங்க கூட்டிட்டு வந்த?…” என்று யாரும் கேட்டுவிடாமல் திட்ட,
“பார்த்தா அப்படியே வரதுக்கு என்ன?…” என்று எரிந்துவிழ,
“நாங்களா பார்க்கலை. ஸார் தான் ரோட்ல நிக்கறதை பார்த்துட்டு டிராப் பன்றதா கூட்டிட்டு வந்தார். அவருக்கு திருப்பூர்ல தான் மேரேஜ்னு தெரியாதாம். இன்னைக்கு மேரேஜ்ன்னு மட்டும் தான் தெரியும்னு சொன்னார். அதான் உள்ள வந்து விஷ் பண்ணிட்டு போங்கன்னு கூட்டிட்டு வந்தேன்…” என சொல்ல இனி என்ன நடக்க போகிறதோ என பயத்துடன் இருந்தாள் ஸ்ரீ.
“இப்ப எதுக்கு இத்தனை ரியாக்ட் பன்ற ஸ்ரீ?…” என வினி யோசனையுடன் பார்க்க,
“அய்யோ அங்கிள் இத்தனை ஸ்மார்ட்டா ஏன் வந்த?” என புலம்பியவள் அவனை பார்த்தபடி இருந்தாள் அவன் மீண்டும் தன்னை பார்க்கும் வரை. அவன் தான் சக்தியுடன் பேசிக்கொண்டு இருந்தானே.
“ம்ஹூம் ரோஜா ஸ்டெடி. இப்பத்தான் நீ உசுப்பேத்தற அங்கிள்ட்ட உம்முன்னும், கடுப்பேத்தற விஸ்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்படி இருந்தா வாழ்க்கை கும்முன்னு ச்சே ஜம்முன்னு இருக்கும்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் மீண்டும் விதுரனை சரணடைந்தது ரோஜாவின் விழிகள்.
“என்ன ரோஜா உங்க ஸார் வருவாருன்னு நீ எக்ஸ்பெக்ட் பண்ணலையா?…” என ஹரிஷ் கேட்க திடுக்கிட்டு திரும்பியவள்,
“ஹ்ம்ம் ஆமாம், வரமாட்டார்ன்னு தான் நினைச்சேன்….” என்று சொல்ல,
“எப்படியோ கொண்டு வந்து சேர்த்திருச்சு இந்த விதி விதுரனை…” என சொல்ல அவனின் வார்த்தைகளில் எதுவோ பொதிந்திருப்பதை போல அவனை பார்த்தவள்,
“வாட் யூ மீன் ஹரிஷ்?…” என்றாள் குழப்பமாக.
“வெய்ட் & ஸீ…” என்றவன் விதுரனையும் சேகரனையும் மாறி மாறி பார்க்க சக்தி விதுரனிடம்,
“விது அங்க பாரு…” என காண்பிக்க அங்கே நின்றவளை பார்த்தவன் பார்வை கூர்மையாக,
“பிரஷாந்தி தானே?…” என கேட்க அவளருகே இருந்த சேகரனை பார்த்தவன்,