“அவளுக்கும் அந்த வீக் எங்கேஜ்மென்ட் போல. நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை இவருக்கு தெரிஞ்சவங்க யாரோ பார்த்திருக்காங்க. கொஞ்சம் நேரம் அதிகமா பேசிட்டு இருந்தோம் சும்மா. கிளம்பறப்போ ஒரு சோஷியல் ஹக் பண்ணிட்டு பை சொல்லிட்டோம்…”
“அதை போட்டோ எடுத்தவரு இவர்கிட்ட காண்பிக்க இவர் என்னடான்னா எல்லாத்தையும் பிரின்ட் போட்டு எடுத்துட்டு கோவில்ல வைஷுவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த இடத்துல போய் அத காமிச்சு அசிங்கப்படுத்திட்டாரு. பணக்காரங்களை வளைச்சு போடறியா அதுவா இதுவான்னு காசை பேசி. ப்ச்…”
“அவளோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவங்க குடும்பத்துல அவ்வளோ பிரச்சனை. பேசி முடிச்ச மாப்பிள்ளை நம்பமாட்டேன்னு போய்ட்டான். குடும்பமே நிலைகுலைஞ்சு போச்சு. அவ அப்பா இறந்தே போய்ட்டாரு. எல்லாம் யாரால?…” என கேட்டவன்,
“உங்க பொண்ணு விதுரன் வீட்டுக்கு போயிருக்கான்னு இந்த போட்டோஸை என் ப்ரென்ட் எனக்கு அனுப்பினான். அப்ப கூட நம்பாம அதை டெலிட் பண்ணிடுன்னு தான் சொன்னேன். நீங்க என்னனா, ச்சே. தற்செயலா ஹாஸ்பிட்டல் போயிருக்கப்போ வைஷு அம்மா இதை என்கிட்டே சொல்லி புலம்பினாங்க. இல்லைனா…” என்றவன் ஒரு நொடி அமைதி காத்தவன் பின்,
“ஸாரி விதுரன், எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லாம் இல்லை. உங்களை மரியாதை குறைவா பேசியிருந்தா ஸாரி…” என்று சொல்லி,
“ரோஜா, உனக்கும் தான். ஸாரி…” என அவளிடமும் திரும்பி கேட்க,
“ஹ்ம்ம், தென்…” என்றான் விதுரன்.
“தல களத்துல குதிச்சுட்டான். சாவுங்கடான்னு சொல்ல முடியாம என்னையும் சேர்த்து சாவடிக்க போறான் இவன்” என கலக்கத்துடன் பார்த்தான் சக்தி அவனை அறிந்தவனாய்.
“உங்க மேல இன்னும் கோபம் குறையாலை. உங்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டனும்னு தான் இப்படி பண்ணேன். மத்தபடி…” என்றான்.
“சரி அதான் பிரச்சனை முடிஞ்சதுல. எல்லாரும் உட்காருங்க…” என ஹரிஷின் தந்தை சொல்ல ஹரிஷ் கீழே வைத்த மாலையை எடுக்க போக,
“வெய்ட் எ மினிட்…”என்றான் விதுரன்.
“டேய் இன்னும் என்னடா உனக்கு?…” என்று சேகரன் குதித்துக்கொண்டு வர,
“இன்னும் ஒரு அடி என் முன்னால வந்த சேகர் செத்துருவான்…” என்றான் கொதிப்புடன் ஒற்றை விரலை நீட்டி.
“எங்கப்பாவை மரியாதை இல்லாம…” என பிரபு வேகமாய் அவன் மீது பாய,
“தம்பி உனக்கு பாய்ன்ட் வரும். வெய்ட் பண்ணு…” என்று அவனை அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவன் ஹரிஷிடம் திரும்பினான்.
“நீங்க இன்னும் அந்த பொண்ணை விரும்பறீங்களா?…” என விதுரன் கேட்க,
“ச்சே ச்சே, இல்லை…” என்று தோள் குலுக்கினான் ஹரிஷ்.
“அப்போ உங்க முன்னால் காதலிக்காக உங்களை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்க வர போற பொண்ணை ஏன் ஸார் இந்த சபைக்கு முன்னால வச்சு அவமானப்படுத்துனீங்க? அதிலையும் இப்ப உங்களுக்கு அந்த பொண்ணு மேல லவ் இல்லாம ஜஸ்ட் ஒரு மனிதாபிமானத்துல…” என்றவனின் கேள்வியில் ஹரிஷ் திணறினான்.
“இதுக்கு பதில் இல்லாம நீங்க தாலியை தொட முடியாது…” என்றவன் அவனை தாண்டி மேடையை பார்த்து,
“சங்கவி…” என அழைக்க அவன் சைகையில் சொல்லியதை சரியாக புரிந்து கொண்டவள் யாரையும் சட்டை செய்யாமல் திருமாங்கல்யத்தை எடுத்து விதுரன் புறம் வீச சரியாய் கேட்ச் பிடித்தான்.
தாலியை கையில் வாங்கிய நொடி பார்வை ரோஜாவை தன் மனதிற்குள் அள்ளிக்கொண்டது. முடிவெடுத்துவிட்டான்.
அந்த நொடி தனக்கு நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தம், தன் தாய், தந்தை, தனது குடும்பம் எதுவும் அவனின் நினைவில் இல்லை. மனது முழுவதும் ரோஜா ரோஜா ரோஜா மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள்.
அங்கு அப்படியே அவளை விட்டு செல்ல கூடாது என முடிவெடுத்தவன் மனது அவளை தன் மனைவியாய் முழுமனதுடன் வரித்துக்கொண்டது.
“பிரபு, போலீஸ்க்கு கால் பண்ணுடா…” என சேகரன் சொல்ல,
“எல்லாம் வீடியோவா ரெக்கார்ட் ஆகிட்டு தான் இருக்கு. நான் கூட மான நஷ்ட வழக்கு பதியலாம். எனக்கொரு நியாயத்தை சொல்லிட்டு அப்பறமா இந்த கல்யாணத்தை நடந்துங்கன்னு சொல்லுவேன். நான் யாருன்னு இங்க இருக்கற உங்களுக்கு தெரியாம இருக்கலாம். சேகரனுக்கு நல்லாவே தெரியும்…” என சொல்ல,
“உன்னை என்ன பண்ணினோம்?…” என ஹரிஷ் கேட்க, கீழே கிடந்த புகைப்படத்தில் ஒன்றை எடுத்தவன்,
“இதோ இது போதுமே? இது காண்பிப்பேன். என்னை என்னோட பர்சனலை இப்படி வெட்ட வெளிச்சமாக்கிட்டாங்கன்னு…” என்று சொல்ல,
“எங்களுக்கு தெரியாத போலீசா?…” என சேகரன் துள்ள,
“மாமா, கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? அவர் என்ன சொல்றாருன்னு கேட்போம்…” என நிர்மல் தான் அனைவரையும் அடக்கினான்.
“என்ன மனுஷங்கய்யா நீங்க? உங்க வீட்டு பொண்ணை தன்னோட முன்னால் காதலிக்காக அசிங்கப்படுத்திருக்கான் அவனை சமாதானம் செஞ்சு திரும்ப பொண்ணை கட்டி வைக்கனும்னு பார்க்கறீங்க? எந்த நம்பிக்கையில் கட்டி வைப்பீங்க?…” என கேட்டு ஹரிஷை பார்த்து,
“நாளைக்கே உங்க மேல வேற ஒரு கோபம் வந்து அதை புரிய வைக்கறேன்னு இன்னொருத்தனோட இதே மாதிரி. ச்சீ. இவன் செய்வான். கண்டிப்பா செய்வான். இவனை போய் நம்பி ஒரு நல்ல பொண்ணு வாழ்க்கையை பாழாக்க பார்க்கறீங்க?…”
“விதுரன், உங்க லிமிட் தெரிஞ்சு பேசுங்க. நான் இவர் மேல உள்ள கோபத்துல இவர் பண்ணின தப்பை சுட்டிக்காட்ட தான் இப்படி பண்ணேன்…” என ஹரிஷும் இப்பொழுது கோபமாக,
“லிமிட்டா? சம்பந்தமே இல்லாம என்னை அசிங்கப்படுத்தறப்ப உன் லிமிட் எங்கடா போச்சு நாயே. அந்த லிமிட் டேஷ் அப்ப உன் லவ்வர் வீட்டுக்கு குசலம் விசாரிக்க போயிருந்துச்சா?…” என்று எள்ளலாய் கேட்க அவனின் சட்டையை பிடித்த ஹரிஷ்,
“அவளை பத்தி பேசின பார்த்துக்கோ. ஏதோ போனா போகுதுன்னு உனக்கு மன்னிப்பு கேட்டா ரொம்பத்தான் பன்ற? என்னமோ ரோஜாவை நிஜமாவே லவ் பன்ற மாதிரி…”
“லவ், நீ லவ் பண்ணின லட்சணம் தான் இப்ப தெரியுதே. அந்த பொண்ணுதான் முக்கியம்னா ஏன் இன்னொரு பொண்ணை அவ எதிர்காலத்தை நாசம் பண்ண பார்க்கற? அவளையே கல்யாணம் பண்ண வேண்டியது தானே?…” என்றவன் கூட்டத்தினரை பார்த்து,
“எல்லாரும் நல்லா கேளுங்க, இன்னைக்கு இன்னொரு பொண்ணுக்காக தான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணையே இப்படி பன்றான்னா தாலி கட்டின பின்னால இவன் என்னவெல்லாம பண்ணுவான்? இன்னொருக்க யார் மேலையாவது கோபம் வந்துச்சுன்னு திரும்பவும் இந்த பொண்ணை தீக்குளிக்க செய்வான். மாட்டானா இல்லையா?…”
விதுரன் கேட்ட கேள்விக்கு அங்கே யாருக்கும் மறுத்து பதில் சொல்ல திராணி இல்லை. பிரபு தான் கோபமாய் பேச வர திவ்யா தடுத்துவிட்டாள்.
“நியாயமா உங்க தங்கச்சிக்காக நீங்க பேசிருக்கனும். ரோஜாவுக்கு அண்ணனா ஹரிஷ் சட்டையை புடிச்சு அடிச்சு துவைச்சிருக்கனும். அதுக்கு தைரியமில்லை. இப்ப அவர் பேசறார். நீங்க கொஞ்சம் சும்மா இருங்க…” என்று தடுத்துவிட மௌனமானான்.
“இப்ப இது எதுக்கு உங்களுக்கு? தாலியை குடுங்க…” ஹரிஷ் கையை நீட்ட,
“இங்க இந்த மேரேஜ் நின்னா எனக்கு ஒண்ணுமில்லை. ஆனா ரோஜாவுக்கு. அப்ப நீ கல்யாணம் பண்ணுவியா?…” என்று இறுமாப்பாய் சொல்ல,
“வொய் நாட்? நான் தான் கல்யாணம் பண்ண போறேன். என்னோட சேர்த்து வச்சு பேசின தானே? இப்ப அவ மரியாதைக்கு நான் பொறுப்பு. அவ எதிர்காலத்துக்கு நான் பொறுப்பு. இனி ரோஜா என்னோட ரோஜா…” என்றவனின் ஒவ்வொரு வார்த்தையும் ரோஜாவினுள் ஆழமாய் இறங்க கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
அங்கிருந்தவர்கள் இவன் என்ன பேசுகிறான் என்பதை உணரும் முன்னர் விதுரன் ரோஜாவை சமீபித்திருந்தான் யாரும் வந்து தடுக்கும் முன்.
“டேய்…” என வளர்மதி கத்த அவரை திரும்பி,
“நீயெல்லாம் தாயா?” என பார்த்தவன்,
“மூச், பொம்பளைன்னு பார்க்க மாட்டேன்…” என ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க,
“அம்மா, அடிச்சிருவான்மா நிஜமாவே. மூர்க்கன். நீ பின்னால வா…” என்ற பிரஷாந்தியின் எச்சரிக்கையில் விதுரனை பார்க்க அவன் ரோஜாவின் கையை பிடித்தான்.
“ரோஜா உனக்கு சம்மதமா? இல்லைனாலும் சொல்லு. ஆனா இவனை மேரேஜ் பண்ணிக்காத. சொல்லு, உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா?…” என சொல்ல அவள் கண்ணீருடன் தலையசைக்க கண்ணீரை துடைத்தவன்,
“முழு மனசோட உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன் ரோஜா. எந்த நிர்பந்தத்தோடவும் இல்லாம உனக்காக…” என சொல்லி அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான்.
அதை ஆசிர்வதிக்க கூட்டத்தில் பலர் பூக்களை அவர்கள் மீது தூவி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதிலேயே அதை தடுக்க முடியாமல் தடுமாறி குடும்பத்தினர் நிற்க அதை பொறுக்காத ஹரிஷ்,
“அப்போ லவ் தான் போல? நான் தான் உங்களை நல்லவங்கன்னு தப்பா நினைச்சுட்டேன்…” என்று சொல்ல ரோஜாவுடன் அவளின் கை பிடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்தவன் பளாரென அறை விட்டவன்,
“நீ பேசின பேச்சுக்கு உன்னை சும்மா விட்டுட்டு போனா நான் மனுஷேனே இல்லைடா. இனி என்னை பத்தியோ என் வொய்ப் பத்தியோ பேசின இந்த ஊர்ல உன்னை தொழில் பண்ண விடாம பண்ணிடுவேன்…” என்றவன்,
“உனக்கொரு ப்ரீ அட்வைஸ், பேசாம நீ அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது தான் பெட்டர். இன்னொரு பொண்ணுக்கு இந்த நிலைமை வர கூடாது பாரு…” என்று சொல்ல,
“இத்தனை பேர் இருக்கீங்க? என் பொண்ணை இவன் இழுத்துட்டு போறானே என் தலையில கல்லை தூக்கி போட்டுட்டாளே?…” என வளர்மதி அழுது ஊரை கூட்ட அவரை தாங்கி பிடித்த பிரஷாந்தி பார்வை விதுரனிடமும், தங்கையின் கழுத்தில் இருந்த தாலியிடமும் இருக்க உள்ளம் கொதித்தது.
அதை கண்டுகொள்ளாத விதுரன் சக்தியை காரை எடுக்க சொல்லி அனுப்பிவிட்டு அங்கிருப்பவர்களை பார்த்தான்.
“தயவு செய்து இங்க இருக்கறவங்களாம் பொம்பளை பிள்ளை பெத்துக்காதீங்க. நாளைக்கு அதுக்கும் இந்த நிலமையில தான் கொண்டு வந்து நிறுத்துவீங்க…” என்று அனைவரையும் பார்த்து அவன் சொல்ல,
“வாழ்த்துக்கள் ரோஜா…” என அருகே வந்தாள் அண்ணி திவ்யா.
“திவ்யா…” என்ற பிரபுவின் அதட்டல் கூட அங்கே எடுபடவில்லை.
“ரொம்ப சந்தோஷம் ரோஜா, உனக்கு எப்போ என்ன பேசனும்னாலும் நீ என்கிட்டே பேசு. யாருக்கும் பயப்படாத. இப்ப கிளம்பு. சந்தோஷமா கிளம்பு…” என சொல்ல அவளை போல நிர்மலுக்கு சட்டென வந்து பேச மனது இடம் கொடுக்கவில்லை. விதுரனை ஒரு தலையசைப்பில் ஏற்றுக்கொண்டான்.
“நிர்மல் அண்ணாவை போல நீங்களும் இனி அண்ணா தான் எனக்கு. ரோஜாவை பார்த்துக்கோங்க. இங்க இருக்கறவங்களை நினைச்சு வொரி பண்ண வேண்டாம். நீங்க கிளம்புங்க. இங்க யார் உங்களை தடுக்கறான்னு நான் பார்க்கறேன்…” என்ற திவ்யா கணவனை பார்க்க அவன் முறைக்க அவனுக்கு மேல் பார்த்தாள் அவள்.
“திவ்யா என்ன இது?…” என நிர்மல் சொல்ல,
“இவங்களை எந்த பிரச்சனையும் இல்லாம அனுப்பனும். அனுப்பு…” என்றாள் அதிகாரமாய்.
சேகரன் மற்றவர்களாக இருந்தால் துவம்சம் செய்துவிடுவார். ஆனால் மருமகள் அதிலும் இருக்கப்பட்ட மருமகள் வேறு. பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக நிற்க அவரின் அமைதியில் மற்றவர்களும் அமைதியாகினர்.
“நீங்க கிளம்புங்க…” என்றதும்,
“தேங்க்ஸ்ம்மா…” என்றான் விதுரன். அவர்கள் பின்னே ஓடிவந்தாள் விலாசினி.
“ஸார், கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க வந்திடறேன்…” என சொல்ல விதுரனுக்குமே அவளிடம் பேசவேண்டி இருந்தது.
“மண்டபத்திற்கு வெளில இருக்கோம். ஸ்ரீநிதி, சங்கவியையும் கூட்டிட்டு வாங்க. இனி இங்க இருக்க வேண்டாம்…” என்று சொல்லி ரோஜாவுடன் சென்றான்.
யாரையும் திரும்பியும் பார்க்காமல் விதுரன் பிடித்திருந்த தன் கையில் பார்வையை பதித்தபடி அவனுடன் நடந்தாள் ரோஜா.