திருமண மண்டபத்தின் மாடியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் வேக வேகமாய் தங்கள் பொருட்களை எடுத்து அடுக்கி வைத்தனர் ரோஜாவின் தோழிகள்.
“கவி பாஸ்ட், ஸார் வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு. ஆற அமர எடுத்துட்டு இருக்க? நாம இங்க இருக்கறது சேஃப் இல்லை. இங்க பிரச்சனை எப்போ வேணும்னாலும் வெடிக்கும்…” என விலாசினி அவர்களை அவசரப்படுத்த அனைத்தையும் எடுத்து வைத்து பூட்டிய ஸ்ரீ,
“என்ன நடந்ததுன்னு இப்ப யோசிச்சா கூட என்னால நம்ப முடியலை கவி…” என இன்னும் அதிர்வு விலகாத முகமாவனையுடன் சொல்ல,
“நமக்கெல்லாம் தேஜாவூ, ஜமாய்வூ ஸ்ரீ…” என சிரிப்புடன் சொல்ல,
“ரோஜாவோட சேர்ந்து நீயும் கெட்டு போய்ட்ட…” என ஸ்ரீ அவளின் தலையில் தட்டினாள்.
“ஆனா எனக்கு ரொம்ப ஹேப்பி நம்ம பாஸ் vs ரோஜா. இனி செம்மையா போகும்…” என்று சொல்லி குதூகலித்தவள் விதுரனின் நிச்சயதார்த்தம் ஞாபகம் வர,
“ஆனா இன்னைக்கு விதுரன் ஸார்க்கு…” என்றவளின் கையை பற்றி நிறுத்திய விலாசினி எதுவும் சொல்லாதே என்பதை போல கண்ணை காண்பிக்க சங்கவி மௌனமானாள்.
விலாசினி பார்த்தவரை விதுரனை எதோ ஒரு விதத்தில் ஸ்ரீக்கு பிடிக்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டாள்.
இப்பொழுது இதையும் சொன்னால் இன்னும் எதையாவது நினைத்து குழம்ப அது ரோஜாவை அடைந்தால்? அதனால் வேண்டாம் என்று சொல்லி பேச்சை மாற்ற,
“அப்ப இனி நைட்ல உன் ஸ்கர்ட் தப்பிச்சதுன்னு சொல்லு…” என விலாசினியும் கிண்டல் பேச,
“ஸ்கர்ட் போய் இப்ப பாஸ் மாட்டிக்கிட்டார்…” என சங்கவியும் எசை பாட, கீழே கசமுசவென ஒரே சத்தம்.
தங்கள் உடைமைகளுடன் கதவை திறந்துகொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கியவர்கள் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்தனர்.
அடிதடியே ஆகியிருந்தது போலும். ஹரிஷின் அதிகப்படியான பேச்சில் பிரபு ஹரிஷை அடித்திருந்தான். அந்தளவிற்கு ஹரிஷின் குடும்பத்திற்கும் சேகரன் குடும்பத்திற்கும் கை கலப்பாக கூடியிருந்தோர் சேர்ந்து விலக்கிவிட்டனர். சங்கவி அதனை வேடிக்கை பார்க்க,
“ப்ச் இந்த இடத்தை விட்டு போவோம்னா நின்னுட்டு இருக்க. வா முதல்ல…” என அவளை இழுத்துக்கொண்டு வெளியேறினார்கள். அவர்களை கவனித்து பின்னோடே வந்த பிரஷாந்தி ஸ்ரீயின் கைகளை பிடித்து நிறுத்தினாள்.
“நில்லுங்கடி…” என்றவளின் கோபமான பேச்சில் என்னவென பார்க்க தூரத்தே இருந்து விதுரனும் இதனை கவனித்தபடி தான் காரில் சாய்ந்து நின்றான்.
“ரோஜாவும், விதுரனும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பன்றாங்களா?…” என கேட்க,
“அதை எங்கக்கிட்டே ஏன் கேட்கறீங்க? எல்லாருக்கும் புரியற மாதிரி தானே ஸார் பேசினார்…” என சங்கவி துடுக்காய் கேட்க,
“நான் கேட்டதுக்கு பதிலை சொல்லாம என்ன பேசற நீ? என் தங்கச்சியோட எதிர்காலம் அது. அதை பத்தி எனக்கு கவலை இருக்கும் தானே? அவன் முரடன். அவன்கிட்ட அவ…”
“அட நிறுத்துங்கங்க, உங்க அக்கறையை தான் நாங்க பார்த்தோமே உங்க வீட்ல வச்சே. சும்மா அக்கறைன்னு தூக்கிட்டு வராதீங்க. நல்லா இல்லை. நீங்க எது பேசனும்னாலும் ஸார் அங்க நிக்கிறார். அவர்கிட்ட பேசுங்க…” என்று பொரிந்த சங்கவி அவளின் கையை வேகமாய் தட்டிவிட மூவரும் காரை நோக்கி நடந்தனர்.
பிரஷாந்தி விதுரனை பார்க்க அவனோ கை முஷ்டியை முறுக்கியபடி இவளை முறைக்க,
“ஏற்கனவே அப்பா முன்னாடியே என்னை அப்படி அடிச்சான். இன்னொருக்க இவன்கிட்ட வாங்கனுமா?” என நினைத்தவள் கன்னத்தை தன்னிச்சையாய் பிடித்தப்படி மண்டபத்திற்குள் சென்றாள்.
அங்கே திவ்யா நடப்பவற்றை அசூயையுடன் பார்த்துக்கொண்டு நிற்க அவளிடம் கேள்விகள் எதுவும் கேட்க முடியாமல் தன் கணவனும் அருகே நிற்பதை பார்த்து தாயுடன் சேர்ந்து நின்றாள்.
இல்லை என்றால் கூட திவ்யாவிடம் சட்டென பேசிவிடமுடியாது. திவ்யாவிற்கு பிரஷாந்தி என்றாலே ஆகாது. அவளின் பாசாங்கு பிடிக்காது. அதனால் ஓரிரு வார்த்தைகளுடன் தவிர்த்து விடுவாள்.
இங்கே மண்டபத்தின் வெளியே காரின் அருகே வந்தவர்களை பார்த்த விதுரன் சக்தியை திரும்பி பார்த்தான்.
ஜன்னலோரம் ரோஜா சாய்ந்திருக்க மறு புறம் கதவை திறந்தவன் ஒரு சீட்டை நகற்றி அதன் பின்னால் அவர்கள் அமர வழி செய்தான். ஏழுபேர் அமரக்கூடிய கார். அதனால் இடம் பற்றிய கவலை இல்லை.
“நீங்க சென்னை எப்படி போறீங்க?…” என கேட்டவன் விலாசினியை பார்த்து,
“உங்களுக்கு ப்ளைட் எப்போ?…” என கேட்டு தெரிந்து கொண்டவன்,
“ஓகே, அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே சென்னை வந்திடறீங்களா?…” என கேட்டதும் சக்தி கண்டிப்பாக வரமாட்டார்கள் என்று நினைத்தான். அவன் நினைத்ததை போலவே தான் ஸ்ரீ பேசினாள்.
“இல்ல ஸார், நாங்க ஏற்கனவே ட்ராவெல்ஸ்ல புக் பண்ணியிருந்தோம். இது ஏற்கனவே பண்ணினது தான். மேரேஜ் முடியவும் பஸ்ல போய்டலாம்னு. அதுக்காக தான் ரோஜா வீட்டுல இருந்து வரப்போவே நாங்க லக்கேஜோட வந்துட்டோம். ப்ளீஸ் ஸார், தப்பா நினைக்க வேண்டாம்…” என்று சொல்லிவிட்டாள்.
ஸ்ரீக்கு சக்தியுடன் செல்வதில் விருப்பமே இல்லை. அதனால் உடனடியாக மறுத்துவிட்டாள்.
“ஓகே, அப்போ வாங்க நானே பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பன்றேன்…” என சொல்ல,
“ஸார் நீங்க ஈரோட்டுக்கு…” என்று சொல்லிய சங்கவி நாக்கை கடித்துக்கொள்ள,
“தத்தி” என மானசீகமாய் தலையில் அடித்தாள் விலாசினி.
“அதை நான் மேனேஜ் பண்ணிப்பேன். இப்ப சென்னை தான் போறோம்…” என்றவன் ஸ்ரீயை பார்க்க,
“இல்லை ஸார், எங்களை ட்ராப் பண்ணிட்டு திரும்ப நீங்க கோவை போய் வினியை ட்ராப் பண்ணனும். எதுக்கு இத்தனை அலைச்சல்?…”
“என்ன ஸ்ரீ, போறது சென்னைக்கு. நான் நாளைக்கு ஊருக்கு போறதால என்னால டிலே பண்ண முடியாது. ஆனா உங்களுக்கு என்ன? டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு கார்ல போகலாமே?…” என்று வினி சொல்ல விதுரனுக்கு புரிந்தது ஸ்ரீ வரமாட்டேன் என்பதன் காரணம்.
அமைதியாக நின்றான் எதுவும் சொல்லாமல். சக்திக்கு இவளை அப்படி கெஞ்சி கூட்டிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என எரிச்சலாய் வந்தது.
“ஓகே இருங்க ஒரு ஆட்டோ பார்க்கலாம்….” என விதுரன் ரோட்டை பார்க்க,
“டேய் பிரச்சனை ஆக போகுதுடா. ஆனாலும் மண்டபத்துக்கு முன்னால வச்சு இத்தனை தைரியம் ஆகாதுடா. முதல்ல இந்த இடத்தை விட்டு மூவ் ஆவோம்…” என சக்தி எச்சரிக்க,
“ஸ்ரீ அட்லீஸ்ட் கொஞ்சம் தள்ளி பஸ் ஸ்டாப் எங்கையாவது போய் உனக்கு டாக்சி புக் பண்ணலாம். என்ன இப்படி அடம் பன்ற?…” என்று விலாசினி சொல்லவும் வேறு வழியின்றி ஸ்ரீ ஏறி அமர்ந்தாள்.
நடப்பதை பார்த்தபடி இருந்தாலும் ரோஜா எதிலும் தலை கொடுக்கவில்லை. மனது அத்தனை வலித்தது. தன் தாய் பேசிய வார்த்தைகள் அருவருப்பை தர இவர்கள் தானே என்னை வயிற்றில் சுமந்து பெற்றார்கள், பின் ஏன்? என்ற எண்ணமே அவளை சுழற்றிக்கொண்டு இருந்தது.
அங்கிருந்து நேராக திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கே வண்டியை விட சொல்லியவன் ஸ்ரீ, சங்கவி இருவரையும் சென்னை சென்றதும் போன் செய்யுமாறு சொல்லி அனுப்பியவன் வினியை அழைத்தான்.
“நீங்க ஊருக்கு போனதும் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே? உங்கட்ட தான் இப்போதைக்கு கேட்க முடியும்…” என கேட்டவனிடம்,
“ஐயோ செய்னா செய்ய போறேன் ஸார். என்ன ஹெல்ப்? சொல்லுங்க…” என கேட்க,
“நீங்க ரோஜாவோட ஒண்ணா ஒரே வீட்ல இருந்திருக்கீங்க. இப்ப நாங்க ஊருக்கு போகுமுன்ன நீங்க சென்னை ரீச் ஆகிடுவீங்க தானே? ரோஜாவுக்கு தேவையான ட்ரெஸ், மத்த எக்ஸட்ரா இப்படி அவளுக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும். நான் வந்து அங்க இருக்கற சுட்சுவேஷன்ல கண்டிப்பா போய் வாங்க முடியாது…”
“புரியுது ஸார்…”
“எப்படியும் நாளைக்கு எங்க வீட்டில இருந்து வந்திருவாங்கன்னு நினைக்கறேன். அதனால எதுக்குமே பாஸிபிள் இல்லை…”
“நீங்க எதையும் நினைக்க வேண்டாம், நான் எல்லாமே வாங்கிடறேன். வீட்ல கூட அவளோட திங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. அது…”
“நோ நோ, வேண்டாம். அது எதுவும் வேண்டாம்…” என்றவன் அவளின் அக்கவுன்ட் நம்பரை தனது மொபைலில் பதிந்துகொண்டவன் அவளுடன் காரில் ஏற கண்ணை மூடி சாய்ந்திருந்தாள் ரோஜா.
மற்றவர்களை வைத்துக்கொண்டு அவளிடம் பேச அவனின் மனம் இடமளிக்கவில்லை. முதலில் விலாசினியை இறக்கிவிட்ட பின்பு இதனை பேசலாம் என அவன் நினைக்க அதன் படி அவளை அனுப்பியவன் அவளின் அக்கவுண்டிற்கு கணிசமான தொகையை அனுப்பினான்.
மீண்டும் விதுரன் கண் விழிக்கும் நேரம் இரவு கவிழும் அறிகுறியுடன் வானம் இருள தொடங்கி இருந்தது.
ரோஜா அவனின் மடியை விட்டு எப்போதோ எழுந்திருந்தாள் போலும். அவளின் கண்கள் ஜன்னல் வெளியை வெறித்தபடி இருந்தது.
விதுரனின் பார்வை கணவனாய் அவளை தீண்ட தாலி கட்டிய நிமிடத்திலிருந்து ரோஜாவை மனைவியாய் உணர ஆரம்பித்திருந்தான்.
தாலி என்ற ஒன்று கட்டும் வரை கூட அவளை மனைவியாக்கிய பின்பு எந்தவித சஞ்சலமோ, அவசரப்பட்டுவிட்டோமோ என்று எந்த எண்ணமும் இல்லை. உண்மையை சொல்லபோனால் மனதளவில் மகிழ்ச்சியுடன், நிறைவாய் தான் உணர்ந்தான்.
திருமண பந்தம் என்னவென அறியாதவன் அல்லவே. கணவனாய் மனைவியை கொண்டாட தான் ஆசை கொண்டான்.
இப்பொழுது அவனுக்கு வீட்டை சமாளிப்பதை பற்றி பெரிதாய் நினைக்கவில்லை. பார்த்துக்கொள்ளலாம், என்ன நடந்தாலும் ரோஜாவை விட்டு கொடுப்பதாய் இல்லை என ஸ்திரமான முடிவில் இருந்தான்.
என்னவாகினும் இப்பொழுது இவள் என மனைவி. அதை போல இப்பொழுதும் உரிமையுடன் மெதுவாய் அவளின் கை பற்றியவன் அவளை,
“ரோஜா…” என அழைக்க அவனின் தொடுகையிலே தன்னுணர்வு பெற்றவள் திரும்பி பார்த்தாள்.
“பீலிங் பெட்டர்?…” என கேட்க அவள் தலையை மட்டுமே அசைக்க கண்களில் அவன் தேடிய அந்த துள்ளல் அறவே இல்லை. ஒரு பெருமூச்சுடன்,
“சக்தி, காரை ஏதாவது ரெஸ்டாரண்ட்ல நிறுத்த சொல்லு…” என சொல்ல,
“ஏன்டா நீ சொன்னா இவர் கேட்க மாட்டாரா? நம்ம கடையோட ட்ரைவர் தான்டா…” என அலுத்துக்கொண்டான்.
“இன்னும் சென்னை போக எவ்வளோ நேரம் இருக்கு?…” என கேட்க,
“இன்னும் ரெண்டு மணி நேரத்துல போய்டலாம் ஸார்…” என்றான் அவன்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஹைவேய்சில் ஒரு ஹோட்டல் தென்பட சக்தி இறங்கி சென்று பார்த்துவிட்டு வந்தான்.
“போகலாம்டா…” என்றதும் ரோஜாவை பார்த்தவன்,
“இறங்கு ரோஜா…” என,
“எனக்கு எதுவும் வேணாம் ஸார்…” என்று மறுத்தவளை கடுமையாக பார்த்தவன்,
“இப்ப நான் உன்னோட ஹஸ்பண்ட்…” என்றான் அழுத்தமாய்.
“ரொம்ப முக்கியம், டேய் முதலல் இறங்குங்க. நீ சொல்லலைனா ரோஜாவுக்கு நீ அவ புருஷன் தான்னு தெரியாதாக்கும்? ஏன்டா?…” என்றவன்,
“ரோஜா, நீ காலையில சாப்டியா?…” என கேட்க இல்லை என தலையசைத்தாள்.
“நீ போ சக்தி, நான் கூட்டிட்டு வாரேன்…” என அவனை அனுப்ப மிரட்டாம கூட்டிட்டு வா என்பதாக சக்தி பார்த்துவிட்டு செல்ல போடா என அவனை விரட்டினான்.