விதுரன் வீட்டை அடையும் முன்பே விலாசினி ரோஜாவிற்கு வாங்கிய பொருட்களுடன் அங்கே காத்திருந்தாள். அவள் வந்து பத்து நிமிடத்திற்கெல்லாம் விதுரன் வந்துவிட்டான் ரோஜாவுடன்.
“ரொம்ப நேரம் வெய்ட் பன்றீங்களா விலாசினி?…” என அவளை காக்க வைத்துவிட்டோமோ என்னும் பாவனையுடன் கேட்க,
“ச்சே ச்சே அப்படி இல்லை ஸார். இப்பதான், ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்…” என்றவள் ரோஜா இறங்குவதை பார்த்ததும் சென்று அணைத்துக்கொண்டாள்.
“ரொம்ப ஹேப்பி செல்லக்குட்டி, உன்னை இப்படி பார்க்க…” என சொல்லியவள் இருவருக்கும் தனது வாழ்த்தை சொல்ல,
“வாசல்லையே வச்சு பேசனுமா? உள்ள போவோமே…” என்று வந்தான் சக்தி.
“இந்தாடா கீ…” என்ற விதுரன் கண்ணை காண்பிக்க,
“இவன் போக்கே சரியில்லை…” என முணங்கியபடி கதவை திறந்து உள்ளே செல்ல,
“இரு ரோஜா…” என்று அவளை பிடித்து தன்னுடன் நிறுத்தியவன் சக்திக்காக காத்திருந்தான். விலாசினிக்கு ஏன் நிற்கிறான் என்றே புரியவில்லை.
“ஸார் நான் லக்கேஜை உள்ளே வைக்கட்டுமா?…” என்றதும் சரி என தலையசைத்தான்.
அவள் கொண்டு வந்த பைகளை உள்ளே சோபாவில் பரப்பியவள் திரும்பி பார்க்க சக்தி ஆரத்தி தட்டுடன் வந்தான்.
“என்ன ஸார் இது?…” என விலாசினி கேட்க,
“அவனுக்கு எதுவும் குறையா இருந்திட கூடாதாம். வரப்பவே சொல்லிட்டான் என்ன பண்ணனும்னு…” என்று சொல்ல ஆச்சர்யமாக இருந்தது விலாசினிக்கு.
“ஓகே குடுங்க நான் எடுக்கறேன்…” என தனது கை பையை கீழே வைத்துவிட்டு வாங்கிக்கொள்ள சக்தியும் அவளுடன் வெளியே சென்றான்.
விலாசினி கையில் ஆரத்தி தட்டுடன் வந்ததும் சக்தி அதில் இருந்த கற்பூரத்தை பற்ற வைக்க அதனை பார்த்த ரோஜா விதுரனிடம்,
“நான் தான் ஏற்கனவே வந்திருக்கேனே இங்க. இப்ப எதுக்கு இதெல்லாம்?…” என கேட்க,
“அது ரோஜாவா வந்திருக்க. ஆனா இப்ப…”
“இப்ப மட்டும் ரோஜா இல்லாம கூஜாவா? பாருங்க எல்லாரும் பார்க்கறாங்க…” என்றாள் அக்கம் பக்கத்தினர் வெளியே எட்டிப்பார்த்தை கண்டு.
காரில் பேசவே மாட்டேன் என்பதை போல அமர்ந்திருந்தவளை கொஞ்சம் கொஞ்சமாய் பேசியே இயல்பிற்கு திருப்பியிருந்தான் விதுரன்.
சக்திக்கே ஆச்சர்யம் விதுரன் ரோஜாவிடம் பேசியதை கேட்டு. இத்தனை பேச்சுக்கள் பெண்களிடம் இருந்ததே இல்லை அவனுக்கு. விட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.
“இப்ப என் மனைவி ரோஜா. அவளுக்கான வரவேற்பு எந்த விதத்திலும் குறையாகிட, இல்லாம போய்ட கூடாது பாரு…” என புன்னகையுடன் சொல்ல,
“அசத்தறீங்க அங்கிள்…” என்றாள் ரோஜாவும் சற்று குறும்புடன். அதை ஏற்றுகொள்வதை போல தனது ஷர்ட் காலரை உயர்த்து கண் சிமிட்டியவனை பார்த்து இன்னமும் பிரமிப்பாகவே இருந்தது ரோஜாவிற்கு அவனின் இந்த பரிமாணம்.
“ஸாரை பார்த்த வரைக்கும் போதும் ரோஜா, இங்க என்னை பாரு. இப்ப உனக்கு நாத்தனார் முறைக்கு நான் தான் ஆலம் சுத்தறேன்…” என்றவள் இருவருக்கும் சுற்றி பொட்டு வைக்க,
“பரவாயில்லை, உங்களுக்கு தெரியாதோன்னு நினைச்சேன். கரெக்ட்டா செய்யறீங்க…” என சக்தி சொல்ல,
“யாருக்கும் தெரியும் தெரியாதுன்னு நாமளா ஒரு கற்பனையில் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது. தெரியாம இருக்கும்னு நீங்க எப்படி நினைச்சீங்க சக்தி ஸார்?…” என கேட்டது ரோஜாவே.
“ஆஹா பார்ம்க்கு திரும்பிட்டாங்க ரோஜா. நான் தெரியாம சொல்லிட்டேன்மா…” என்று சொல்ல அது என்பதை போல அவனை பார்த்தவள் சிரிக்க,
“இனி ஸார் எல்லாம் வேண்டாம். அண்ணான்னு கூப்பிடு…” என சொல்ல,
“ஹலோ இங்க ஒருத்தி தட்டோட நிக்கறேன், நீங்க பேசி பாசத்தை பெட்ரோல் ஊத்தி வளர்த்துட்டு இருக்கீங்க?…” என்று விலாசினி சண்டைக்கு வருவதை போல வர விதுரன் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க,
“நாத்தனாருக்கு அவ தான் ஸார் குடுக்கனும். நீங்க நீட்டினா எப்படி?…” என விலாசினி வம்பிழுக்க ரோஜாவிற்கு முகம் கலங்கி போனது.
“என்கிட்டே எதுவும் இல்லடி வினி…” என்று குரலுடைந்து சொல்ல பதறி போனாள் விலாசினி.
“ஹேய் உன்னை நார்மலாக்க பேசினா பீல் பண்ணுவியா? அடி வாங்குவ. நான் கேட்டா உனக்கெல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்றதை விட்டுட்டு அழுதுட்டு நிக்கற…” என அதட்டியவள் அவர்களை தாண்டி ஆலத்தை கீழே ஊற்ற செல்ல,
“இரும்மா…” என்ற சக்தி தந்து பையில் இருந்து பணத்தை ரோஜாவிடம் நீட்டியவன்,
“இதை குடு, நீ குடுத்தா என்ன? நான் குடுத்தா என்ன?…” என்று சொல்ல,
“எப்ப இருந்துடா இது?…” என்று கேலி பேசினான் விதுரன்.
“நீ குடும்மா…” என்று அவளின் கையில் பணத்தை திணிக்கவும்,
“அப்பப்பா, நான் கேட்டது அதுவும் இப்ப தப்புதான். ஆளாளுக்கு பொழியாதீங்க…” என்ற விலாசினி சென்றுவிட்டாள்.
“உள்ள வாங்க ரெண்டு பேரும்…” என்று சக்தி வழி விட ரோஜாவின் கைகளை பற்றியபடி இருவரும் ஒரே போல் அடியெடுத்து வைத்து உள்ளே வந்தனர்.
அவளை நேராக பூஜை அறைக்கு கூட்டிக்கொண்டு வந்தவன் அவளை விளக்கேற்ற சொல்ல அவன் சொல்லியதை போல செய்தாள் ரோஜா.
அதற்குள் விலாசினி தான் கொண்டு வந்த பைகளை சோபாவில் இருந்து விதுரன் சொன்ன அறைக்கு மாற்றி இருந்தாள். பின் ரோஜாவுடன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சக்தி விதுரனை வெளியே அழைத்து வந்தான்.
“ஏன்டா விது, இந்த மேரேஜ் நிக்க வைக்க நீ எந்த பிளானும் பண்ணலை தான?…” என நெஞ்சை பிடித்துக்கொண்டு கேட்க,
“உனக்கு ஏன்டா என் மேல டவுட்டாவே இருக்கு? நம்பவே மாட்டியா நீ?…” என பல்லை கடிக்க,
“நீ பன்றதெல்லாம் நெஞ்சு வலிக்குதுடா. வர வழியில கோவிலுக்கு போற. ஆரத்தி எடுக்க சொல்ற. பூஜை ரூம்ல விளக்கேத்த சொல்ற. என்னமோ ப்ரீ பிளான்ட் மாதிரியே இருக்கு…” என்று சொல்ல அவனை முறைத்தவன்,
“ம்ஹூம் இல்லை சக்தி. எங்க கல்யாணம் எப்படி வேணா நடந்திருக்கலாம். ஆனா ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. அதுல எந்த மாற்றமும் இல்லை. நாளைக்கே எங்க கல்யாணத்தை வீட்டுல ஏத்துக்கிடலாம் கண்டிப்பா ஏத்துப்பாங்க. ஆனா அப்போ இதையெல்லாம் செய்ய முடியாது தானே?…” என்றவன்,
“இன்னைக்கு இந்த நாள், நாங்க எத்தனை தவமிருந்தாலும் திரும்ப எங்களுக்கு கிடைக்காத ஒரு நாள். இதை எக்காரணத்தை கொண்டும் நான் ஸ்பாயில் பண்ணிக்கமாட்டேன். எப்ப நினைச்சாலும் இன்னைக்கான சந்தோஷம் தான் எங்களுக்கு ஞாபகம் இருக்கனும். முக்கியமா ரோஜாவுக்கு. காலையில் நடந்த எதுவும் அவளோட மைண்ட்ல இருக்கவே கூடாது…”
“அம்மா இருந்தா இதை எல்லாம் செஞ்சிருப்பாங்க தானே? ரோஜாவுக்கும் கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருக்கும். இப்ப இதை பண்ணாம விட்டுவிட்டு கொஞ்சம் நாள் கழிச்சு எல்லாம் சரியான பின்னே ஐயோ இது நமக்கு அமையலையேன்னு வருத்தபட கூடாது பாரு…”
“எனக்குமே இப்ப ஃபுல்ஃபில் ஆன மாதிரி இருக்குதுடா. சின்ன சின்ன விஷயம் தான். காலத்துக்கும் நினைச்சு பார்த்து ஒரு சின்ன சிரிப்பை தரும். நாளைக்கு என் பிள்ளைகளுக்கு எங்க கல்யாணம் பத்தி தெரியும் போது சந்தோஷமான நினைவுகள்ன்னு இதை சொல்லி சந்தோஷப்பட்டுப்போம்…” என்று சொல்ல,
“நீ இவ்வளோ திங்க் பண்ணியிருக்க, என்னால இன்னும் நம்ப முடியலைடா…” சக்தி வியந்து பேச,
“இதுல என்ன இருக்கு? ஒரு கல்யாணம் ஆனா இதெல்லாம் இருக்கும் தானே? அதை நான் செஞ்சா தப்பா?. ஒரு விஷயத்தை செய்யும் போது அதோட தாக்கம் எப்படி இருக்கும்னு தெரியாம நான் பண்ணலை. அதுக்காக உட்கார்ந்து கவலைப்படற அளவுக்கும் இதுல எதுவும் இல்லைன்னு நினைக்கறேன்…”
“அம்மா வந்தா என்ன சொல்ல போற? அந்த நினைப்பே இல்லையா? எனக்கு பதட்டமா இருக்குடா. உன்னை பார்த்தா கொஞ்சமும் பயப்படறவன் மாதிரி தெரியலையே…” என சக்தி கேட்க,
“பயப்படற அளவுக்கு நான் என்ன பண்ணேன்? ரோஜாவை கல்யாணம் பண்ணது என்ன அவ்வளவு பெரிய தப்பா? இல்லவே இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் ரோஜாவை பார்த்தப்ப துடிச்சிட்டேன் தெரியுமா? அவனுங்களை நல்லா சாத்தியிருந்தா எனக்கு மனசு ஆறிருக்கும்…”
“ஓகே, அதை விடு, இப்ப நான் கேட்டதுக்கு பதில்? எனக்கு கால் பண்ணினா நான் என்ன சொல்ல?. போதாததுக்கு நீ இங்க பாலும் பழமும் சாப்பிடற மூட்ல இருக்க…” சக்தி விடாமல் அங்கேயே சுற்றினான்.
“அதுக்காக கன்னத்துல கையை வைச்சுட்டு நானும் ரோஜாவும் இப்பவே சோகமா உட்கார்ந்திடனுமா? எப்படியும் நாளைக்கு வந்திருவாங்க அம்மாவும் அப்பாவும். பெரிய சித்தப்பா மட்டும் வர வாய்ப்பிருக்கு. மத்தவங்க எல்லாரும் பெரிய வீட்டுக்கு போய்ருவாங்க. பஞ்சாயத்து அங்க வச்சு தான் இருக்கும்…”
“ரொம்ப கூலா இருக்கடா…” என சொல்லும் பொழுதே விதுரன் சொன்ன பெரிய சித்தப்பா அவனுக்கு அழைத்திருந்தார்.
“போச்சு, போச்சு. அங்க ப்ராப்ளம் ஸ்டார்ட் ஆகிடுச்சு…” என சொல்ல,
“மொபைலை ஆஃப் பண்ணு. எடுக்கவே எடுக்காத. அதுதான் உனக்கு நல்லது…” என்று சொல்ல அழைப்பு நின்றது.
“ஓகே நான் கிளம்பறேன்…” என சக்தி சொல்லி ரோஜாவிடம் சொல்லிக்கொள்ள உள்ளே வர,
“ஓகே ஸார் நானும் கிளம்பறேன். அம்மா கால் பண்ணிட்டாங்க…” என்று விலாசினியும் எழுந்துகொள்ள அவள் வேலையை பற்றிய தகவல்களை வாங்கிக்கொண்ட விதுரன்,
“தேங்க் யூ சோ மச் விலாசினி, உங்களுக்கு அங்க என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு ஒரு கால் பண்ணுங்க. ஹெல்ப்னு கூட நினைக்க வேண்டாம். ஒரு பிரதரா நினைச்சு கேட்கலாம்…” என்றான் எந்த வித அலட்டலுமின்றி.
“சூர், உங்ககிட்ட கண்டிப்பா கேட்கறேன்…” என அவள் சொல்ல,
“எப்படி போறீங்க?…” என கேட்டு தாங்கள் வந்த காரில் அவளை அனுப்ப முடிவு செய்து,
“சக்தி நீ என் பைக்கை எடுத்துக்கோ…” என சொல்ல சக்தியும் சரி என,
“நான் போற வழி தானே? கார்லையே போகலாம். எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. பேசிட்டே போய்டுவோம்…” என விலாசினி சொல்ல அதுவும் சரி என்றுவிட்டான் சக்தி.
“ஓகே ரோஜா, டேக் கேர், புடவையை மாத்திக்கோ. உன்னோட ட்ரெஸ் எல்லாம் அந்த ரூம்ல வச்சுட்டேன்…” என சொல்ல விதுரனும் அப்பொழுது தான் தன் மனைவியை தலைமுதல் பாதம் வரை பார்த்தான். முதல் முதலாய் புடவையில் பார்க்கிறான் அவளை.
மீண்டும் விதுரனிடம் சொல்லிக்கொண்டு சக்தியும், விலாசினியும் கிளம்ப விதுரனும், ரோஜாவும் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர,
“நீ உள்ள போ, நான் கேட் லாக் பண்ணிட்டு வரேன்…” என அவளை அனுப்பியவன் தனியாக இருக்க பயப்படுவாளே என வேகமாய் பூட்டிவிட்டு உள்ளே வர அவள் பூஜையறையில் நின்று கொண்டிருந்தாள்.
“ஏன் இங்கயே நின்னுட்ட ரோஜா? இரு வரேன்…” என்றவன் இருவருக்கும் பாலை காய்ச்சி எடுத்து வந்தவன் வாழை பழங்களையும் கொண்டு வந்து வைத்தான்.
“சாப்பாடு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்ட. இதை சாப்பிடு. பாலை குடி…” என்று டீப்பாயில் வைத்துவிட்டு அவளின் கை பிடித்து அழைத்து வந்து அமர்த்தினான்.
“இல்ல பசி இல்ல…” என சொல்லியவளுக்கு உள்ளூர படபடப்பாக இருக்க அவளை பார்வையில் உணர்ந்தவன் முகம் புன்னகை பூசியது.
“பரவாயில்லை, பசிக்கு சாப்பிடலைனாலும் எனக்கு கம்பெனி குடு…” என்று சொல்லவும் மறுக்காமல் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டவள் அதை உரித்து சாப்பிட,
“புடவை உனக்கு அழகா இருக்கு லிட்டில் டெவில்…” என்றான் அவனும் சாப்பிட்டுக்கொண்டே.
“என்ன?…” என்றவளுக்கு விக்கல் வர,
“ஹேய் மெதுவா மெதுவா…” என்று அவளின் தலையில் தட்டியவன் குடிக்க தண்ணீர் தர வாங்கி குடித்தவள் அவனை முறைத்தாள்.
“சாப்பிடறப்ப ஏன் இப்படி சொல்றீங்க? விக்கல் வந்துருச்சு…” என்று அவனை குறைபட,