“இதை சொல்ல கூடவா டைம் பார்ப்பாங்க? ஓகே அழகுன்னு நான் சொன்னது உன்னையும் தான். நீயும் கூட தான், பர்ஸ்ட் டைம் சேரில பார்க்கறேன் உன்னை. ஹ்ம்ம் இத்தனை நாள் ஏன் நீ அழகுன்னு எனக்கு தெரியாம போச்சு?…” என சீண்ட,
“நான் காலையில இருந்தே சேரி தான் கட்டியிருந்தேன். என்னவோ இங்க வந்த பின்ன கட்டின மாதிரி பேசறீங்க…” என்று கிண்டல் பேச,
“சத்தியமா என்னோட மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகவே இல்லை தெரியுமா? உன்னை கல்யாணம் பண்ணினப்போவும் உன் முகம் மட்டும் தான் தெரிஞ்சது. உன்னை கார்ல பார்க்கறப்போ, பக்கத்துல உட்கார்ந்திருந்தப்போன்னு உன் முகத்தை மட்டுமே பார்த்தேனா, நீ என்ன ட்ரெஸ் பண்ணியிருக்கன்னு நோட் பண்ணவே இல்லை…”
அவளிடம் சொல்லிக்கொண்டே அவளை அங்குலம் அங்குலமாய் அவனின் விழிகள் ஆராயும் பார்வை பார்க்க அவனின் பார்வையால் சட்டென புகுந்த நாணத்தின் வேகத்தில் அவனின் கண்ணை மூடினாள் ரோஜா.
“ஓகே பாலை குடி, ரூம்க்கு போவோம்…” என்று சொல்ல வேக வேகமாய் குடித்து முடித்தவள் எழுந்து உள்ளே சென்றுவிட அவளின் படபடப்பை கண்டு புன்னகைத்தவன் நிதானமாய் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வீட்டின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு தங்கள் அறை வாயிலில் வந்து நின்று கட்டிலில் படுத்திருந்த ரோஜாவை பார்த்தபடி நின்றான்.
மனதில் அலையடிக்கும் உணர்வு. ஆணவனுமே சற்று தடுமாறி நின்றான். சில நொடிகள் நிமிடங்களில் வந்து நிற்க மெதுவாய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.
தான் பேசாதவரை ரோஜாவும் எதுவும் பேசமாட்டாள் என்றுணர்ந்தவன் அவளின் அங்கிள் என்னும் அழைப்பு ஞாபகம் வர முகத்தில் பூத்த புன்னகையுடன்,
“என்ன ரோஜா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கலை?. அப்படியே படுத்துட்ட?…” என கேட்டுக்கொண்டே வாட்ரோபை திறந்து தனக்கு மாற்றுடை எடுத்தவன்,
“நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வரேன். அதுக்குள்ளே நீயும் மாறிக்கோ…” என சொல்லிவிட்டு பாத்ரூமினுள் நுழைந்து கொள்ள அப்போதுதான் ரோஜாவிற்கு மூச்சு சீரானது.
மெதுவாய் கண் திறந்து அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.
“அடேய் அங்கிள் உன் லுக்கே சரியில்லை. என்னை ரொம்ப சோதிக்கிற. என்ன பண்ணுவேன் நான்?…” என புலம்பியவள் அடுத்து என்ன செய்வானோ என அப்படியே அமர்ந்திருக்க விதுரன் உடைமாற்றி வந்தேவிட்டான்.
ஸ்லீவ்லெஸ் பனியன், ஷார்ட்ஸில் வந்தவன் முகத்தை துடைத்தபடி இவளருகே வந்தான்.
“இன்னுமா நீ மாத்திக்கலை? நான் லைட்டா குளிச்சுட்டே வந்துட்டேன். ட்ராவல் பண்ணினது ரொம்ப அன்-கம்பர்டபிளா இருந்துச்சு. அதான்…” என்றவன் அவள் பேசாமல் அமர்ந்திருந்ததை பார்த்து வந்த சிரிப்பை இதழ்களுக்குள் மென்றான்.
“என்ன ரோஜா?…” என கேட்டபடி அவளின் முகத்தை நிமிர்த்த டக்கென்று சுதாரித்தவள்,
“இல்லை இந்த ஜ்வல்ஸ், ஹேர் எல்லாம், என் மேக்கோவர் எல்லாமே ரிமூவ் பண்ணனும் முதல்ல…” என சொல்லவும்,
“இவ்வளோ தானே நான் ஹெல்ப் பன்றேன்…” என்றவன் அவள் தடுக்கும் முன்னே தனக்கு நெருக்கமாய் அமர்த்தி ஒவ்வொன்றாய் களைய ஆரம்பித்தான்.
அத்தனை நிதானம், ஒன்றொன்றிக்கும் அவன் எடுத்துக்கொண்ட நேரம் அவளை அவஸ்தையில் ஆழ்த்த,
“ஓகே பர்ஸ்ட் இதை எடுத்திடறேன்…” என அவளின் தலையலங்காரத்தை கலைத்தவன் பின் அவளின் நகைகளை கழற்றினான். அவன் கழற்றி வைத்தவற்றை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் ரோஜா.
“அதை நாளைக்கு யார்ட்டையாச்சும் குடுத்தனுப்பி உன் அப்பாக்கிட்ட சேர்த்திடலாம் ரோஜா…” என்றான் அவன். அவள் அதற்குதான யோசிக்கிறாள் என நினைத்து சொல்ல,
“எதுக்கு? அவர் இதை வச்சு பார்லரா ஆரம்பிக்க போறார்?…” என கேட்க,
“பார்லரா?…” என விதுரன் குழம்ப,
“ஆமா, இது நான் எனக்கு மேக்கப் பண்ண வந்த லேடிட்ட சொல்லி கொண்டுவர சொன்னது. சும்மா எல்லாமே விஸ்கி செலெக்ட் பண்ணினதா இருக்கு. இரிட்டேட்ட்டிங். அதுக்குதான் வெடிங்க்கு இமிடேஷன் ஜ்வேல் சொல்லிட்டேன். இப்ப இதை அவங்களுக்கு எப்படி சேர்க்க?…” என்று கவலையானவளை பார்த்து அடிப்பாவி என வாயை பிளந்தான் விதுரன். (uniforumtz.com)
“விஸ்கி?…” என்றான் புரியாமல்,
“என் கூட பிறந்தவ. என்னோட அக்கா…” என்றதும் அதை தொடர பிடிக்காமல் அவன் மௌனமாக,
“குடுக்கனுமே?…” என அவனின் முகத்தை திரும்பி பார்த்து அவள் சொன்னதும் சரி என தலையசைத்தவன் அவளை தன் பக்கம் மெல்லமாய் திருப்பி அமர வைத்தான்.
இறுக்கமாய் பின்னியிருந்த ஜடையை அவிழ்த்து தலை முடியை நன்றாக விரித்துவிட்டான். அலங்காரம் ஏதுமின்றி அமர்ந்திருந்தவள் அழகு அவனின் மனதை அள்ளி செல்ல புன்னகையுடன் அவளையே பார்த்தபடி இருக்க,
“என்னாச்சு மூஞ்சியில தொப்பை வைச்ச ஹேண்ட்சம்க்கு?…” என்று குறும்புடன் ரோஜா கேட்க,
“அவ்வளோ குண்டாவா இருக்கேன்? என்ன தொப்பை தொப்பைன்னு கலாய்க்க?…” என அவளின் காதை பிடித்து திருக,
“குண்டா இல்லை. உங்க கன்னம் மட்டும் சும்மா பன்னு மாதிரி புஸுபுஸுன்னு பப்ளியா இருக்கு. அப்டியே கிள்ளனும்னு தோணுது…” என்றவளுக்கு கன்னத்தை வாகாய் காண்பிக்க கொஞ்சம் தயங்கி அவனின் கன்னத்தை பிடித்து பட்டும் படாமல் கிள்ளினாள் ரோஜா.
அவளின் கையை எடுக்க விடாமல் தன் கன்னத்தோடு வைத்து அழுத்தியவன் தன் இதழ்களுக்கு நகர்த்தி அவளின் கையில் முத்தமிட சட்டென இழுத்துகொண்டாள் அவள்.
“ஓகே, இப்ப போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரியா ரோஜா?…” என சொல்லவும்,
“ஹ்ம்ம் போறேன், இந்த சேரி…” என்று காண்பிக்க,
“அதையும் அனுப்பிடலாம். உனக்கு விலாசினி எடுத்து வந்த ட்ரெஸ இப்போ போட்டுக்கோ…” என சொல்லி அதில் இருந்த ட்ரெஸ்களை பார்வையிட்டான் இரவு உடை எதில் இருக்கிறதென.
அதில் ஒன்றை பார்த்து எடுத்தவன் ரோஜாவிற்கு தர திரும்பி பார்க்க அவள் எங்கே இல்லை.
“அதுக்குள்ளே போய்ட்டாளா?” என நினைத்தபடி கட்டிலில் அதை போட்டவன் தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு அவளின் வருகைக்காக காத்திருக்க மொத்த புடவையையும் கையில் அள்ளிக்கொண்டு வந்தாள் ரோஜா.
“ட்ரெஸ் மறந்துட்டேன்…” என்று வந்து நின்றவளின் தோற்றம் மொத்தமாய் அவனை சாய்க்க புன்னகையுடன் அவளை நெருங்கினான்.
“எப்பவும் இப்படித்தான் மறந்து போவியா லிட்டில் டெவில்?…” என கேட்டு காதோரம் விழுந்திருந்த அவளின் கூந்தலை சுருட்டி பிடித்து இழுக்க,
“வலிக்குது, விடுங்க, ஏற்கனவே இங்கயும் வலிக்குது. ப்ச், ட்ரெஸ் எடுத்துக்கறேன்…” என அவனை விலக்க,
“வலிக்குதா லிட்டில் டெவில்? அன்னைக்கு யாருமே உன்னை அடிச்சதில்லைன்னு என்கிட்டே சொன்னியே…” என கேட்டுக்கொண்டே அவளின் கன்னத்தை வருட அவன் கேட்டதில் உள்ளம் கலங்கியவள்,
“கோவமா அடிச்சா இப்படித்தான் எரியுமா? ப்ச், ரொம்ப எரியுது. அன்னைக்கும் ஒரு நாள் அடிச்சுட்டாங்க தெரியுமா? ஆனா வலிக்கலை. இப்ப. ப்ச்…” என்றாள் முகத்தை சுருக்கியபடி.
விதுரனுக்குமே மனம் தாளவில்லை. வளர்மதியின் ஐந்து விரல்களும் அப்படியே பதிந்திருந்தது ரோஜாவின் இரு கன்னத்தில். மாற்றி மாற்றி வருடிக்கொண்டே அவன் நிற்க,
“யூ ஆர் அமேஸிங் லிட்டில் டெவில். நீங்களும் ஏசிங்னு சொல்லேன்…” என்றவனின் சிரிப்போடு அவளை இறுக்க மிரண்டவள்,
“அங்கிள் என்னடா பன்ற விடு விடு” என்றவளின் ஆர்ப்பாட்டமான அட்டகாசத்தை அவள் மீதான ஆகர்ஷிப்பில் முறியடித்தான் அங்கிள் அங்கிள் என்றவளின் திணறலான முணங்கல் அவனின் முத்தங்களுக்குள் புதைந்து கரைந்தே போனது.
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
நிமிடங்கள் கரைந்து கண் திறந்து பார்த்தவள் தன்னை அணைத்து படுத்திருந்தவனின் மேல் தலையணை கொண்டு மொத்தினாள்.
“உங்களை போய் ஜெம்ன்னு நினைச்சுட்டேன்…” என்று சொல்ல அவளின் அடிகளை வாங்கிக்கொண்டவன்,
“உன்கிட்ட நான் ஜிஞ்சர் சாப்பிட்டேன்னு சொல்லவே இல்லையே லிட்டில் டெவில்…” என்று சிரிக்க எழுந்தமர்ந்துகொண்டாள் ரோஜா.
“நான் லிட்டில் டெவில்னா நீங்க எல்ஈடி பல்ப்…” என சண்டை போடுவதை போல சொல்ல,
“வாட்?…” என்றான் விதுரன் ஒரு பக்கம் கையை ஊன்றி அவளை பார்த்து சாய்ந்தபடி.
“ஆமா லிட்டில் டெவில், எல்டி. நான் எல்டினா நீங்க எல்ஈடி…”
“என்னை பார்த்தா பல்ப் மாதிரியா இருக்கு?…” என்றவன் அவள் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தில் விரல் நுழைத்து அவளை தன்னருகே இழுத்தவன்,
“உன் வாய் இருக்கே, என்னதான் பன்றது இதை. இந்த பேச்சு என்னை அப்படியே கட்டி வச்சிருக்கு லிட்டில் டெவில்…” என்றவன் மீண்டும் தனது தேடலை அவளிடம் துவங்க பார்க்க ஒரே தள்ளில் எழுந்தவள்,
“கொன்னுடுவேன். போயா….” என்று மிரட்டி குளியலறை சென்றுவிட முகத்தில் நிறைவுடனான புன்னகையுடன் மனதில் ரோஜாவின் வாசனையுடன் ஒரு தலையணையை கட்டிக்கொண்டு கண்களை மூடியவன் சற்று நேரத்தில் உறங்கியும் விட்டான்.
குளித்துவிட்டு வெளியே வந்தவள் உறங்கும் அவனை பார்த்துவிட்டு காதலை கண்களில் தேக்கி,
“நீ மட்டும் வராம போயிருந்தா என்னாகிருப்பேன் அங்கிள்?…” என கேட்டவள் அவனை எழுப்பினாள்.
“ப்ச், தூங்குடா…” என இழுத்து உறங்க வைக்கத்தான் பார்த்தான் அவன் கண்களை திறவாமல்.
நாள் முழுவதும் சுற்றிய அலுப்பும், களைப்பும் அவனை எழ விடாமல் செய்ய வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றாள் ரோஜா.
லேசாய் தலை வலிப்பதை போல இருக்க வயிறு வேறு பசித்தது. மீண்டும் அவனை எழுப்பவும் மனம் வரவில்லை.
பயமாக இருந்தாலும் மெதுவாய் கதவை திறந்து பார்க்க நல்லவேளையாய் அனைத்து விளக்குகளையும் அவன் அமர்த்தி வைக்கவில்லை. ஹப்பாடா என்னும் பெருமூச்சுடன் தலையில் கட்டியிருந்த டவலை கழற்றி துவட்டியபடி கிட்சனுக்குள் நுழைந்தாள்.
முதன் முதலில் வந்த பொழுது காபி போட அவன் என்ன செய்தான் என்பதை கண்ணை மூடி யோசித்தவள் விஷுவலாய் கண்முன்னே கொண்டு வந்தாள்.
அதை போல பாலை காய வைத்து காபியை கலந்து குடித்து பார்த்தவளுக்கு அடுத்த வாய் வாயில் வைக்க முடியவில்லை. கீழே ஊற்றவும் மனதில்லை.
“உவ்வே, என்ன காபி இவ்வளோ கேவலமா இருக்கு? அதே மாதிரி தான போட்டேன். பால் ஊத்தி அதே அளவு காபி பவுடர், சுகர்ன்னு. எங்க மிஸ் பண்ணேன்?…” என யோசித்தவள் காபி ஆறவும் பசிக்கு எதுவோ ஒன்று என அப்படியே தொண்டையில் சரித்துக்கொண்டாள்.
இரண்டு வாழை பழங்களை உள்ளே தள்ளியவள் காபி போட்டதை கழுவி வைத்துவிட்டு வந்ததை போல சென்று படுத்ததும்,
“எங்க போன ரோஜா?…” என்றான் அவளின் அருகாமையில்.
அவனின் கை வளைவிற்குள் தன்னை ஒப்புக்கொடுத்தவள் அவனின் மார்பில் முகம் புதைத்து கண்களை மூடிக்கொண்டாள்.
ரோஜாவுக்கு காலையில் நடந்த எதையும் நினைக்க மனது விரும்பவில்லை. விதுரன் தன்னை அழைத்து வந்ததில் இருந்து சற்று முன் நடந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவளுக்கு இவனுடனான வாழ்வு இன்று தான் தொடங்கியதா தனக்கு என நினைத்து நினைத்து உவகையுடன் ஆச்சரியமும் கொண்டாள்.
விதுரனின் ஒரு கை விரல் அவளின் கன்னத்தை மெதுவாய் வருடியபடி இருக்க நேரம் செல்ல செல்ல யோசனைகளை விடுத்து மெதுவாய் உறங்க ஆரம்பித்தாள்.
வெகு சிரமப்பட்டு கண் விழித்தவளுக்கு கண்கள் அப்படி எரிந்தது. யாரோ தன்னை பார்த்துவிட்டு சென்றதை போன்ற உணர்வு தோன்ற போர்வையை கழுத்துவரை இழுத்து போர்த்தியவள் காதில் வெளியே ஏதோ வாக்குவாதம் நடக்கும் சத்தம் கேட்டது.