ரோஜா வந்து நின்றதும் மேலும் கயல்விழி எதுவும் பேசுவாரோ என நினைத்து வேகமாய் அவளை நெருங்கியவன்,
“ரோஜா உள்ள போ. நான் வரேன்…” என அனுப்ப அனைவரும் தன்னை பார்ப்பதை பார்த்த ரோஜா எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
“எல்லார் முன்னாடியும் அங்கிள்ன்னு கூப்பிடாதன்னு சொன்னேன்ல. திரும்பவும் கூப்பிட்டு வச்சு பாரு எப்படி பார்க்காங்கன்னு…” என்று அவளின் பின்னோடு வந்தவன் லேசாய் கடியவும் தன் மொபைலை நீட்டியவள் அமைதியாகிவிட்டாள்.
அவளை பார்த்துக்கொண்டே மீண்டும் விலாசினிக்கு அழைத்தான். ரோஜாவை பேசுகிறாயா என்பதை போல பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிடவும் தான் மட்டும் பேசி வைத்தவன் ரோஜாவிடம் மொபைலை கொடுத்துவிட்டு,
“உன் ரிங்டோன் வால்யூமை குறைச்சு வை ரோஜா….” என சொல்ல,
“ஏன்?…” என கேட்க,
“எப்பவும் இப்படித்தான் வைப்பியா கும்பலா சுத்துவோம் ஐயோ அம்மான்னு கத்துவோம்னு?…” என அவளின் ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க அவனை முறைத்தவள்,
“அப்பப்ப தோணுற ரிங்டோனை மைண்ட்செட்க்கு ஏத்த மாதிரி மாத்திப்பேன். இப்ப இது…” என்ற அசால்ட்டாய் சொல்ல,
“ஓகே, இப்ப தான் உன் மாமனார், மாமியார் வந்திருக்காங்க. பயந்துட போறாங்க. வால்யும் மட்டும் குறைச்சுக்கோ…” என,
“பயந்துட்டாங்களா?…” என்று வாய் பொத்தி அவள் சிரிக்க அவளை முறைத்தவன்,
“உன் மொபைல என்கிட்டே குடு, நான் பார்த்துக்கறேன்…” என பிடுங்கி வைத்தவன் பின் ஒரு பெருமூச்சுடன்,
“ரோஜா, இப்ப வீட்டில இருந்து வந்திருக்கிறது எதுக்குன்னு தெரியும் தானே? நம்ம கல்யாணத்தை பத்தி பேச. சோ கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லு. புரியுது தானே?…” என கேட்டவனுக்கு வேகமாய் தலையாட்ட,
“உன்னை நம்ப முடியலை. ரோஜா யார்ன்னு கேட்டா மிசஸ் ரோஜா விதுரன்னு சொல்லனும். அதை விட்டுட்டு அம்மாவை கலாய்க்கிற நீ? முதலுக்கே மோசம் பண்ணிடுவ. அவங்களை சமாதானப்படுத்தறதை விட்டுட்டு டென்ஷன் ஆக்க பார்க்கற நீ…” என புகார் படிக்க,
“உங்கம்மா எப்படி கேட்டாங்கன்னு நீங்களும் பார்த்தீங்க தானே? எவ்வளோ நக்கல்? நான் சொல்லனும்னு சொல்லலை. அதுவா தானா வந்துருச்சு. நான் என்ன பண்ண? வேணும்னா நீங்க தனியா சமாதானம் செஞ்சுக்கோங்க…” என்று சொல்ல,
“தனியாவா கல்யாணம் பண்ணேன்? உனக்கு தான தாலி கட்டியிருக்கேன். எதுனாலும் ரெண்டு பேரும் பேஸ் பண்ணுவோம். வா…” என அவன் அழைக்க,
“குளிச்சுட்டு வந்துடட்டுமா? வாமிட், அப்புறம் கொஞ்சம் அன்ஈஸியா இருக்கு. நீங்க பேசிட்டிருங்க…” என்றவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“அம்மா சூப்பரா காபி போடுவாங்க. சூடா இருக்கும் போதே குடிச்சிரு…”
“ம்ஹூம், வரும் போதே குளிக்காம இருந்தது ஒரு மாதிரி இருக்கு. இப்ப இதுவுமா? வேண்டாம், குளிச்சுட்டு ப்ரெஷா வந்து சாமி கும்பிட்டுட்டு காபி எடுத்துக்கறேன். ப்ளாஸ்க் இருந்தா அதுல ஊத்தி வச்சிருங்க குடிச்சுப்பேன்…” என சொல்லி அவனை அனுப்பிவிட்டு குளிக்க சென்றாள்.
அதற்குள் கயல்விழி காபியுடன் வர வெளியே வந்தவனுக்கு முதலில் நீட்டியவர் பின் அனைவருக்கும் கொடுத்துவிட்டு ரோஜாவை பார்வையால் தேட,
“குளிச்சுட்டு வருவாம்மா…” என்றான் அவனாகவே.
அதன் பின் எதுவும் கேட்கவில்லை. அமைதியாக காபியை குடிக்க சடகோபன் தான் பேச்சை தொடங்கினார்.
“என்ன பண்ணலாம்னு இருக்க விது?…” என கேட்க கயல்விழி மகனை பார்த்தார்.
“என்ன பண்ணலாம்ன்னா? நீங்க தான் சொல்லனும்ப்பா. என்ன நான் பண்ணனும்னு….” என்றான் பிடிகொடுக்காதவனாய்.
“விதுரா, உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எங்களுக்கு சொன்னா தானே புரியும். இப்படி அமைதியா இருந்தா எப்படி? கல்யாணம் எங்களுக்கு சொல்லாமலே பண்ணிக்கிட்ட. உன் வாழ்க்கையை கூட நீயே ஆரம்பிச்சுட்ட…” என கயல்விழி கோபமாய் கேட்க,
“அம்மா, அம்மா நான் எந்த தப்பும் பண்ணலையே. உங்க எல்லோர்க்கிட்டையும் சொல்லாம கல்யாணம் பண்ணேன் தான். ஆனா தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணேன். இப்ப வாழவும் ஆரம்பிச்சுட்டோம். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு…”
“இப்படிலாம் நீ பேசினதில்லையே விதுரா? செஞ்சதை நியாயப்படுத்த பார்க்கற…” என கயல்விழியும் பேச மற்றவர்கள் அமைதியாகினர்.
“நான் தப்பு பண்ணலைன்னு சொல்றேன், தப்பு பண்ணினா தான் அதை நியாயப்படுத்தனும். சக்தி சொல்லிருப்பான் தானே எப்படி ஒரு சூழ்நிலையில் எங்களுக்கு கல்யாணம் ஆச்சுன்னு. என்னால ரோஜாவை அங்க அப்படி பார்க்க முடியலை. என்னோட சம்பந்தப்படுத்தி என்னை வச்சே அவளை அசிங்கப்படுத்திட்டாங்க…”
“அதுக்கு கல்யாணம் தான் தீர்வா விதுரா?…”
“ரோஜாவை பொறுத்தவரை அவ விஷயத்துல நான் எடுத்த முடிவு தான் ஹண்ட்ரட் பர்சென்ட் கரெக்ட். அதுக்கு மேல சரியாய் தப்பான்னு ஆராய எனக்கு விருப்பம் இல்லை…” என்றவனை கண்கள் கலங்க கயல்விழி பார்த்தார்.
“உனக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணனும்னு நம்ம மொத்த குடும்பமும் ஆசை பட்டோம் தெரியும் தானே? இப்படி அத்தனையையும் சுக்கு நூறா உடைச்சுட்ட நீ…” என சொல்ல,
“அம்மா ப்ளீஸ், உங்களுக்கு பிடிக்கலன்னா கண்டிப்பா நாங்க பெரியவீட்டுக்கோ, ஊருக்கோ வரலை. கூப்பிட்டா வரோம். இல்லையா ஒரு நாள், விஷேசம்னா வரோம். எங்களுக்கு அது போதும். நான் வாக்கு குடுத்திருக்கேன் ரோஜாவோட சந்தோஷமான வாழ்க்கைக்கும், அவ மரியாதைக்கும் எந்த குறைவும் வராதுன்னு…”
“இப்ப எங்க மரியாதை போச்சே. இதை ஏன் யோசிக்கலை நீ? நம்ம குடும்பத்தை பத்தி தெரியும் தானே விதுரா? நீ பண்ண காரியத்தால இன்னும் எத்தனை பேர் பேச்சுக்களை தாண்டி வரனும் தெரியுமா? உனக்கு தங்கச்சிங்க இருக்காங்க, ஞாபகம் இருக்கா?…”
கயல்விழி இதை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே ரோஜா குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
தங்கள் அறைக்குள் வேகமாய் பொட்டு வைத்து தலையை வார ஆரம்பித்துக்கொண்டிருக்க மாமியார் அத்தனை பேசிவிடவும் கைகள் அப்படியே நின்றது அவளுக்கு.
இதற்கு தன் கணவன் என்ன பதில் சொல்ல போகிறான் என்பதற்காக மூச்சை கூட இழுத்து பிடித்தவளாய் அசையாமல் நிற்க விதுரனோ வார்த்தை தவறி முதல் நாளே மனைவியின் மனத்தாங்கலுக்கு ஆளானான்.
“அவ பாவம்மா, நேத்திக்கு நான் மட்டும் அங்க இல்லனா அவ லைஃபே போய்ருக்கும்…” என கயல்விழியிடம் விதுரன் சொல்லிக்கொண்டிருக்க உள்ளே இருந்த ரோஜாவிற்கு சட்டென மனது உடைந்தது. லேசாய் கண்கள் கரித்துக்குக்கொண்டு வர,
“பாவமா நானா? பாவம் பார்த்தா என்னை கல்யாணம் பண்ணின? பாவம் பார்த்தா என்னோட நேத்து அப்படி இழைஞ்ச? பாவம் பாக்கற அளவுக்கா நான் மோசமா போய்ட்டேன்?” என நினைத்தவளுக்கு விதுரன் மேல் ஆத்திரமாக வந்தது.
“இவன் தாலி காட்டாம இருந்திருந்தா கூட ஹரிஷை நான் மன்னிச்சிருக்கவும் மாட்டேன், திரும்ப அவன் என் கால்ல விழுந்தாலும் ஏத்துட்டிருக்கவும் மாட்டேன். போடா அங்கிள். நீயும் வேண்டாம் உன் பாவமும் வேண்டாம்” என நினைத்தாள் ரோஜா.
அவர்களிடம் சென்று எதுவும் பேச விரும்பவில்லை. பிடிக்கவும் இல்லை. அமைதியாக தலையை சீவியவள் வேறொரு உடையை அணிந்து கொண்டு தனது மொபைலை மட்டும் எடுத்து கொண்டவள் வெளியே வந்து நேராக கயல்விழியை பார்த்து,
“எல்லாத்துக்கும் தேங்க்ஸ், நான் கிளம்பறேன்…” என்று சொல்லவும் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு சட்டென நிசப்தம் சூழ்ந்தது.
“ரோஜா?…” என விதுரன் அவள் விளையாடுகிறாளோ என்று பார்க்க அவள் முகத்தில் தீவிரபாவனை தான். அத்தனை இருக்கமாய் இருந்தது. மனது பிசைந்தது அவளின் உணர்வற்ற முகபாவனையில்.
“ரோஜா என்ன பேசற?…” என மீண்டும் அவளின் கை பிடித்து கேட்டவனின் கையை மெதுவாய் விலக்கியவள்,
“கிளம்பறேன்னு சொன்னேன். உங்க ஹெல்ப் எல்லாத்துக்கும் தேங்க்ஸ்…” என்றாள் மீண்டுமாய். அவளின் இத்தனை நேர இலகு தன்மையும் குறும்பும் முகத்தில் துளியளவும் இல்லாமல் ஒரு நிமிர்வு அவளிடம் பரவி இருக்க யோசனையுடன் பார்த்த கயல்விழி,
“எங்கம்மா போற?…” என கேட்க,
“நான் இதுக்கு முன்னால இருந்த வீட்டுக்கு போறேன். இனி இங்க இருக்க எனக்கு விருப்பமில்லை. யாரும் பாவம் பார்த்து எனக்கு வாழ்க்கையை பிச்சையா போட வேண்டாம்…” ரோஜா வெடுக்கென்று சொல்ல அப்படி இல்லை என்று அவளை சொல்ல வந்த விதுரனை பார்வையில் எட்டி நிறுத்த அவன் அதை கண்டுகொள்பவனா?
“ரோஜா என்ன இதெல்லாம், அது ஒரு பேச்சு, நான் அந்த மீனிங்ல சொல்லலை. புரிஞ்சுக்கோ…” என கெஞ்சவே செய்ய கயல்விழிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை மகன் பேசியது. ஆனாலும் அப்படியே விடமுடியாதே.
“எது? இப்ப என்ன சொன்னீங்க? இங்க என் முன்னால நின்னு சொல்லுங்க, வாங்க” என கோபமாய் அவன் முன்னால் திரும்பி நேருக்கு நேர் கோபமாய் நின்றாள்.
“கேட்டுக்குள் வா” என சிறுபிள்ளையை குச்சியை வைத்து மிரட்டுவதை போல அவள் அழைத்ததும் விதுரனும் பச்சை பிள்ளையாய் அவள் சொன்னதை செய்ய கயல்விழி ஆவென பார்த்தார்.
“அம்மா, சின்ன பிள்ளைய மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க. என்ன செஞ்சேன்னு சொல்லுங்க. என்ன செய்ய கூடாதுன்னு சொல்லுங்க. இப்படி வா ன்னு சொல்ற இடத்துல நிறுத்தாதீங்க” என்று பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எதற்கோ தாய்க்கு பாடம் சொல்லிக்கொடுத்தான் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்று.
இன்றானால் மனைவி சொல்லவும் அவன் வந்து சென்ற நின்ற விதம் கயல்விழியை ஆச்சர்யமூட்டியது.
விதுரனுக்கோ, “கொஞ்சமாவாடா பேசின, மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு, கூப்பிடறா போ.” என்ற டயலாக் அசந்தர்ப்பமாக மூளைக்குள் கேட்டது.
“கயல் இப்ப நீ தான் முடிவு பண்ணனும். இப்ப அந்த பொண்ணு யாரோ இல்லை. உன்னோட மருமக. கயல்விழி குடும்பத்து மருமக கல்யாணம் முடிஞ்சு வந்த மறுநாளே வாழ பிடிக்கலைன்னு போனா ஊர் பேச மாட்டாங்களா? அதை விடு உன் மகனை பாரு, கலங்கி போய்ட்டான்…” என்று சடகோபன் அழுத்தமாய் சொல்ல கயல்விழிக்கு என்ன முடிவெடுப்பதென்று ஒரு நொடி தான் யோசித்தார்.
“இங்க பாரு பொண்ணே…” என்றதும் விதுரனை விட்டுவிட்டு நேரடியாக மாமியாரை பார்த்து திரும்பி நின்றாள் பேசுங்கள் என்பதை போலே.
“உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு இந்த உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு. எங்களுக்கும் இப்ப வேற வழி இல்லாம பேசறதா நினைக்காத. இருந்தாலும் இப்போ. ஹ்ம்ம், என்னோட ரிலேட்டிவ்ஸ்ட்ட இருந்து போன் மேல போன் இந்த கல்யாணத்தை பத்தி. அவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டாமா? இப்ப நீ கிளம்பினா…” என தன் கெத்தை விடாமல் பேசியவரின் வார்த்தையில் பொதிந்திருந்த அர்த்தத்தில் பல்லை கடித்தாள் ரோஜா.
“அம்மா சொதப்புறீங்க, இவ வேற எதையாச்சும் புரிஞ்சுப்பா” என விதுரன் அதிர அவன் எண்ணியது போலதான் ரோஜாவும் பேசினாள்.
“சொல்லுங்க, இப்ப உங்க மகன் சொன்னாரே பாவம் பார்த்து கல்யாணம் செஞ்சேன்னு. அதையே சொல்லுங்க…” என்று அழுத்தமாய் சொன்னவளை திருப்பிய விதுரன்,
“நான் என்ன பேசறேன், நீ என்ன பேசற? நான் சொல்ல வாராத புரிஞ்சுக்கவே மாட்டியா? ஜஸ்ட் ஷட் அப் ரோஜா…” என்றான் அவனும் கோபம் கொண்டவனாக. ஆனாலும் ரோஜா நிறுத்தவில்லை. பேசினாள் இன்னுமே.
“பாவம் பார்த்து கட்டிட்டு வந்த பொண்ணு போறேன்னு சொன்னா, அதான் பாவம் பார்த்து அனுப்பி வச்சுட்டோம்ன்னு. இருக்க வச்ச பாவம் உங்களுக்கு வேண்டாம் எனக்கும் வேண்டாம்…” படபடவென பொறிந்த மருமகளை கயல்விழி அவரறியாமல் மெச்சுதலாய் பார்க்க அவள் மாமியாருடன் முறைத்துக்கொண்டு நின்றாள்.
“ரோஜா…” என்ற விதுரனின் அழைப்பை அலட்சியம் செய்தவள் தன் முடிவில் உறுதியாய் நின்றாள்.
“அப்படியெல்லாம் நீ போக முடியாதும்மா, நீ எங்க வீட்டு மருமக, அதுவும் எங்க குடும்பத்தோட முதல் மருமக….” என கயல்விழி உறுதி வாய்ந்த குரலில் சொல்ல அவரை ஆச்சர்யமாக பார்த்தவள்,
“இப்ப தான் சொன்னீங்க உங்க மகன்கிட்ட வெளில தலைகாட்ட முடியாது, நாலு வீட்டு வாசப்படியை தாண்டனும்னு. எனக்காக எந்த பாடரையும் நீங்க தாண்டி வர வேண்டாம். நான் யாருக்கும் எந்த சிரமமும் குடுத்து பழக்கம் இல்லை…”
“ரோஜா…” என கயல்விழி முதல் முறையாக அவளின் பெயரை உச்சரிக்க அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை ரோஜா. மொத்த கோபமும் விதுரன் மீது தான் அவளுக்கு. கூடவே கொஞ்சம் மாமியார் மீதும்.
பாவம் என்ற வார்த்தை ரோஜாவை வெகுவாய் சீண்டி இருக்க அத்தனை கோபம் அவளுக்கு.
எந்த விதத்திலும் தன் குடும்பத்தை கொண்டு தன்னை அவர்கள் நடத்துவதை கொண்டு பரிதாபமாக பார்ப்பதை வெறுப்பவள் இன்று மனம் விரும்பியவனே இப்படி பேச மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.
“இங்க பாரு ரோஜா, அப்படி எல்லாம் உன்னை போக விடமாட்டேன். சும்மா சும்மா எதாச்சும் பேசின பார்த்துக்கோ. இப்போ என்ன பாவம்னு சொன்னதுக்கு ஸாரி. நான் தான் பாவம் என்னை சுத்தி இத்தனை பேர் இருந்தும் என்னை புரியவைக்க இத்தனை படறேன்ல. நான் தான் பாவம்…” என்று கத்தியவன் ரோஜாவின் கைகளை தன்னோடு பிணைத்துக்கொண்டான்.
“அம்மா, இப்ப நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி. நான் கட்டுப்படறேன். ஆனா எந்த சூழ்நிலையிலையும் நான் ரோஜாவை விட்டு விலகமாட்டேன். அதை நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. எனக்கு நீங்களும் வேணும். என் மனைவியும் வேணும்…” என்றவன் பேச பேச கலங்கும் கண்களை மறைத்துக்கொண்டு வேறுபுறம் திரும்பி நின்றாள்.
“ரோஜா இங்க பார், என்னை பாரு…” என அவளை தன் பக்கமாய் திருப்பியவன்,
“இன்னொரு தடவை என்னை விட்டு போறேன்னு பேசு, நடக்கறதே வேற. சும்மா சும்மா சொன்ன வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் படிச்சு பேசின அதுக்கும் நடக்கறதே வேற. புரியுதா?…” என கேட்க,
“எத்தனை புரியுதா? விடுங்க என்னை…” என அவனின் கையை தட்டிவிட்டு கயல்விழியை பார்க்க அதற்குள் ஆடர் செய்திருந்த உணவுகள் வந்துவிட்டது.
“விதுரா, முதல்ல சாப்பிடுவோம். சாப்பிட்டு நம்ம வீட்டுக்கு கிளம்புவோம். எல்லாரும் உங்களுக்காக காத்திட்டு இருக்காங்க…” என சொல்ல இப்பொழுது பயங்கர டென்ஷன் ரோஜாவிற்கு.
“அப்ப கூட்டிட்டு போகனும்னு முடிவோட வந்துட்டு தான் இத்தனை ஆர்க்யூமென்ட்டா?…” என்று மெதுவாய் விதுரனிடம் கேட்டு கயல்விழியை பார்க்க அவர் அவளைத்தான் பார்த்தபடி நின்றார்.
முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. அதே நேரம் வேண்டா வெறுப்பாகவும் பார்க்கவில்லை.
“ரோஜா நீ உள்ள வா…” என அவளை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் செல்ல கயல்விழி சடகோபன் பக்கம் திரும்பினார்.
“உங்க பையன் இப்பவே பொண்டாட்டி தாசன் ஆகிட்டான்…” என கயல்விழி சொல்ல,
“அவ பொண்டாட்டி ஆகமுன்ன இருந்தே உன் மகன் அங்கிள்தாசன் ஆகிட்டான் இத உன்கிட்ட சொல்லவா முடியும்” என்று நினைத்துக்கொண்டே சிரித்து வைக்க,
“என்னை பேசறா, பார்த்துட்டு நிக்கிறான் பாருங்க?…” என காண்பித்தார்.
அறைக்குள் நுழைந்ததும் தலையை பிடித்துக்கொண்டு ரோஜா கட்டிலில் அமர்ந்துவிட அவளுக்கு காபி ஊற்றி வைத்திருந்த ப்ளாஸ்க்குடன் வந்தான் விதுரன்.
கப்பில் காபியை ஊற்றி கொண்டு வந்து வைக்கவும் எந்தவித பசாங்கும் இன்றி எடுத்துக்கொள்ள புன்னகைத்தான் விதுரன் “என்னவென” இவள் பார்ப்பதை புரிந்து,
“நான் ஏன் வேண்டாம்னு சொல்லனும்? என்ன தப்பு பண்ணேன்? பாவம் பார்த்து கட்டினேன்னு சொன்னது நீங்க. அப்ப இதெல்லாம் எனக்கு செய்யறதுல தப்பில்லை. செய்யாம விட்டா தான் தப்பு…” என காபியை குடிக்க,
“அதுசரி…” என்றவனை முறைத்தவள்,
“அதுவும் இல்லாம மிரட்டி கல்யாணம் செஞ்சீங்க…” என்று வேறு சொல்ல
“யாரு நீ? நீ? நீ பயந்து போய்…” என்று நக்கலாய் பார்க்க,
“ஆமா, ரொம்ப பயந்து தான் சரின்னேன். விட்டா நானே வந்து சொல்லி என்னை கல்யாணம் செஞ்சீங்கன்னு சொல்லுவீங்க போல? மிரட்டுனீங்க தான?…” என மிரட்டலாய் இவள் கேட்க,
“ஆமா மிரட்டத்தான் செஞ்சேன். அப்ப தான என்னை கல்யாணம் பண்ணிப்ப. அதுக்குத்தான். என்ன செய்வ?…” என்றவனின் தெனாவெட்டான பேச்சில் கடுப்பானாள்.
“சொல்லுறாங்க விலாவரியா. நேத்து ஹஸ்பண்டா என்னை அப்ரோச் பண்ணது ஓகே தான், இருந்தாலும் எனக்கு சம்மதமான்னு கேட்கனுமே. ஏன் கேட்கலை?…”
“ஹேய் லிட்டில் டெவில், கேட்டேன் தானே?…” என்று அத்தனை நேர டென்ஷன் மறந்து சிரிக்க,
“கேட்கவே இல்லை. இருக்கட்டும் இன்னொருக்க நீங்க இப்படி வந்தா நேத்து நான் போட்டு குடிச்ச மாதிரி ஒரு காபியை போட்டு உங்களுக்கும் மூக்கை பிடிச்சு ஊத்தி விட்டு வாமிட் பண்ண வச்சுடுவேன். ஆமா…” என்றவளின் பேச்சில் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“நீ வாமிட் பண்ணதுக்கே இன்னும் எனக்கு காய்ச்சல் வரலையேன்னு சந்தோஷப்படு. முதல்ல சாப்பிட்டு கிளம்புவோம். சரியா?…” என அவளின் கன்னம் பற்றி கேட்க மனமே இல்லாமல் சரி என்றாள் ரோஜா.
“இங்க பாரு ரோஜா, அவங்க பெத்தவங்க. அவங்களோட எதிர்பார்ப்பு கலைஞ்சு போன கோவத்துல நாலு வார்த்தை பேசத்தான் செய்வாங்க. நாம தான் புரிஞ்சுக்கனும்…” என்றவன் அதனுடன் நிற்காமல்,
“நேத்து மண்டபத்துல உன் வீட்டில பேசலையா? அதை விடவா?…” என்று வேறு வாயை விட அவனை மனம் அதிர பார்த்த ரோஜா,
“அப்ப நான் பொறுமையா போன மாதிரி நீயும் பொறுமையா பேச்சை வாங்கிட்டு போன்னு சொல்றீங்களா?….” என்று கேட்டவளை பார்த்து தடுமாறியவன் தன்னையே நொந்துகொண்டு,
“அப்படி இல்லை ரோஜா…” என்று விளக்கம் கொடுக்க போக,
“எக்ஸ்ப்ளைன் எதுவும் வேண்டாம்…” என்று சொல்லியவள் அமைதியாகிவிட அதன் பின்னர் அவளை சகஜமாக்கவே முடியவில்லை அவனால். ஏதோ சட்டென பாரம் ஏறிய உணர்வு.
ரோஜாவிற்கு மனதினுள் முள்ளாய் உறுத்தியது எதுவோ ஒன்று. அந்த எண்ணமே அவளை கயல்விழியுடன் ஒன்ற விடவில்லை.
பெரிய வீட்டிற்கு கிளம்பினார்கள். அங்கு செல்லும் வரை தான் ரோஜா விதுரனின் கைக்குள் இருந்தாள். வீட்டை ஆடிந்ததும் அத்தனை கும்பலும் சூழ்ந்து கொள்ள கதை கேட்கும் படலத்தில் சளைக்காமல் பங்கு கொண்டாள்.
“அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு” என அசராமல் வாய் ஓயாமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் ரோஜா.
“அம்மாடியோ தப்பிச்சேன்” என நிம்மதியுடன் பார்த்தான் சக்தி.