அனைவரும் சாப்பிட அமரும் வரை ரோஜா வெளியே வரவே இல்லை. விதுரனுக்கு தன் மீதே அத்தனை கோபமாய் வந்தது.
எதுவோ ஒன்றை உணர்த்த எதையோ பேசி அவளை காயப்படுத்திவிட்டோம் என்பது மட்டும் புரிந்தது. வாழ வந்த ஒரு நாளிலேயே அவசரப்பட்டு பேசுகிறோமே யோசியாமல் என்று வருந்தியவன் அவளை சிறிது நேரம் தனியாக விட்டுவிட்டு வெளியே வந்தான்.
“சொதப்புறியே விதுரா” என தன்னையே நொந்து கொண்டவனாய் சாப்பிட கூட செல்லாமல் சோபாவில் சென்று அமர சடகோபன் கயல்விழியை அர்த்தமாக பார்த்தார்.
கயல்விழி ரோஜா வராததையும் மகன் வெளியே சோர்ந்து வந்து அமர்ந்ததையும் பார்த்துவிட்டு அவனருகே சென்று அமர்ந்தார்.
“விது…” என்ற அழைப்பில் கண் திறந்தவன்,
“சொல்லுங்கம்மா…” என,
“சாப்பிட வா, கிளம்பனும் இல்லையா?…” என ஞாபகப்படுத்த,
“நீங்க சாப்பிடுங்கம்மா. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு…”
“வீட்ல இருக்கறதே நாலு பேர் தான். இதுல ஆளுக்கொரு நேரமா? என்ன இது விது?…” என்று கண்டன குரலில் கேட்க,
“ஓகே, நான் ரோஜாவை கூட்டிட்டு வரேன்…” என்று உள்ளே சென்றவன் அங்கே மொபைலை பார்த்துக்கொண்டிருந்தவளிடம் சென்று,
“ரோஜா, வா சாப்பிடலாம். இப்ப நாம கிளம்பனும்…” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மறுக்க கூட முடியவில்லை.
“நமக்காக அங்க பெரிய வீட்ல எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க…”
“பெரிய வீடு…” சற்று கலக்கம் கூட வந்தது அவளின் முகத்தில்.
அங்கும் சென்று தன்னை பாவம் பார்த்து திருமணம் செய்ததாக இவன் சொல்லிவிட்டால்? அதுவும் பேச்சுக்கேனும். அதை தன்னால் தாங்க இயலுமா? என யோசித்தபடி அவனை பார்க்க அவளின் பார்வையை கொண்டு அவளின் மனதை படித்தவன் வேகமாய் நெருங்கி அணைத்துக்கொண்டான்.
“என்ன பார்வை இது ரோஜா? அப்படியே அறுக்குது என்னை. சத்தியமா சொல்றேன். பாவம் பார்த்து கல்யாணம் பன்ற அளவுக்கு நீ ஒன்னும் குறைந்தவ இல்லை. என்னால நீ அங்க கலங்கி நிக்கிறதை பார்க்க முடியலை. அணைச்சு நான் இருக்கேன்னு சொல்லத்தான் தோணுச்சு. பாவம் பார்த்தா இப்படி தான் தோணுமா ரோஜா?…” என விதுரன் சொல்லவும்,
“நிஜமா?…” என கேட்டு அவனின் இறுக்கத்தின் நெருக்கத்தை கூட்டினாள் அவள்.
“என்னை நம்ப மாட்டியா?…” என்று கேட்டவனின் குரலில் இருந்த தவிப்பு புரிந்தாய் பார்த்தவள்,
“உங்களுக்குத்தான் லவ்விங் நோ லைக்கிங் ஆச்சே. அதான் டவுட்டா இருக்கு…” என சிரித்தவளின் கண்களில் இருந்த கண்ணீர் மணிகள் மின்ன அதை தனது கன்னத்தில் ஒற்றிக்கொண்டவன்,
“பேசி பேசித்தான் கவுத்துட்ட என்னை…” என்று கிறக்கமாய் அவனின் குரல் கரகரக்க,
“இப்ப வெளில போயேதான் ஆகனுமா?…” என ரோஜா அவனின் காதில் கிசுகிசுக்க மயக்கம் தெளிந்தவன்,
“ம்ஹூம், வா வெளில போவோம். இங்க இருந்தா சரிவராது…” என்றவனின் படபடப்பில் சிரித்தவளின் தலையில் குட்டியவன்,
“ஆமா, எதுக்கு என் தலையில ஹேர்கிளிப் போட்ட நீ?…” என கேட்க,
“உங்க முடி என்னை தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. அதான் கிளிப் போட்டேன்…” என்றவளின் இடையில் கை கொடுத்து தன்னருகே இழுத்தவன்,
“எங்க எப்படி டிஸ்டர்ப் பண்ணுச்சுன்னு ஒரு டெமோ பார்ப்போமா லிட்டில் டெவில்? எனக்கு தெரியலை எப்படி எல்லாம் டிஸ்டர்ப் ஆகிருப்பன்னு பார்க்கனும் நான்…” என்றவனை,
“விது…” என்ற தாயின் குரல் அவனை மீண்டும் தரை இறக்க,
“ஆஹ், கொஞ்சம் நேரம் விடமாட்டாங்க. சரி வா…” என அவளை அழைத்தவன் தன்னை மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள ரோஜாவிற்கு அவனின் செயலில் அப்படி ஒரு சிரிப்பு.
“உன்னை நம்ப முடியாது, அதான்…” என சொல்லியதும் ரோஜா இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.
“இருங்க மொபைலை சார்ஜர்ல போட்டுட்டு வரேன்…” என சொல்லி போட்டுவிட்டாள்.
“கயல், இனி நீ தான் விதுரனோட ரோஜாவையும் பார்த்துக்கனும். சின்ன பொண்ணு. கொஞ்சம் கொஞ்சமா நம்ம குடும்ப வழக்கப்படி அவளை மாத்தலாம். இப்ப நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்…” என சொல்ல,
“அம்மா…” என வந்தவன் ரோஜாவை அமர சொல்லி தானும் அவளருகே அமர்ந்து கொண்டான்.
அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருக்க கயல்விளிதான் மீண்டும் பேச்சை அங்கே ஆரம்பித்தார்.
“விது அங்க பெரியவீட்டில இருந்து நம்ம கடைக்கு போறதை பத்தி இப்போவாவது நீ யோசிக்கலாம் தானே?…” என கேட்க,
“நோ ம்மா, அதுக்கு வாய்ப்பே இல்லை. வேணும்னா அங்க ஒரு ஒன்வீக் போல இருக்கறோம்…” என்று சொல்ல,
“விது, இப்ப நீ தனியா இல்லை. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உன் வொய்ப் எப்படி இங்க தனியா இருப்பா?. அதனால நீ எல்லோரோட பெரிய வீட்டுல இருக்கறது தான் சரி…” என கயல்விழி பிடிவாதமாய் சொல்ல,
“அம்மா சொல்றதை கேளேன் விது?…” என்று மணிவாசகமும் சொல்ல விதுரன் ரோஜாவை பார்த்தான்.
அவள் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை போல சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் மனதிற்குள் சற்று நடுக்கமே.
இங்கு ஏற்கனவே சரியில்லாத நிகழ்வுகள் தன்னாலும் நடந்துவிட்டது. இந்த கசப்புடன் அங்கே சென்றால் ஒன்ற முடியுமா என நினைத்தவளுக்கு கவலையும் கூடியது.
அதை அவளின் முகம் காட்டவில்லை என்றாலும் விதுரனின் சாப்பாட்டு தட்டின் அருகே இருந்த அவளின் விரல்கள் நடுங்கியதில் புரிந்து கொண்டான்.
அவனுக்குமே சிறிது நாள் சென்று அங்கு சென்று இருக்கலாம் என்ற எண்ணம். கூடவே இங்கிருந்து முதலில் ரோஜாவை புரிந்துகொண்டு, தன்னை புரிய வைக்கவேண்டும் என்ற எண்ணம் வேறு. அதற்கான தனிமையை தேர்ந்தெடுத்தான் அவன்.
“இல்லைம்மா, அது சரிவராது. என்னால அங்க இருந்து கடைக்கு போக வர ம்ஹூம். கண்டிப்பா ஒத்துவராது. கொஞ்சம் நாள் போகட்டுமே. நாங்க வீக்கென்ட் ஆனா அங்க தான வர போறோம்…” என்று முடித்துவிட கயல்விழிக்கு அதிர்ச்சி.
தான் இத்தனை சொல்லியும் பிடிவாதமாய் மறுத்ததோடு மருமகள் முன்பு தலையிறக்கமாக போனதே என்று நினைத்தவருக்கு உணவு இறங்கவே இல்லை.
இதே இவர் தான் இத்தனை அலைச்சல் வேண்டாம் என்று சொல்லிய மகனுக்கு மறுக்காமல் இந்த வீட்டை வாங்கி அமர்த்தியது.
“சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்ற ரிங் டோன் சத்தத்தில் அனைவரும் ஒரே சேர ரோஜாவை பார்க்க அவளோ வேகமாய் எழுந்து சார்ஜரில் இருந்த போனை எடுக்க போக கயல்விழி முகமே மாறிவிட்டது.
அவருக்கு இது தனக்கான பாடலாக அந்த சூழ்நிலைக்கு தோன்றிவிட அவளை கண்டிக்கவும் முடியாமல் கடியவும் முடியாமல் பல்லை கடித்தார்.
“இவ வேணும்னு தான இப்படி செட் பண்ணிருக்கா?…” என்று கோபமாய் சடகோபனிடம் சொல்ல அவரருகே அமர்ந்திருந்த சக்தி சத்தமில்லாமல் பிளேட்டை தூக்கிக்கொண்டு கிட்சனிற்குள் சென்று விட்டான்.
“புயல் போற போக்குல என்னையும் வாரி சுருட்டினாலும் சுருட்டிரும். ஒரு வாய் சோறு தின்ன முடியுதா இவங்க கூட. ஆனாலும் தங்கச்சி மாமியாருக்கு ரொம்ப டஃப் குடுக்குது போல. ஒரு ரிங் டோன் தான், ஆன்ட்டி பொறுமை மொத்தமும் க்ளோஸ்…” என சொல்லிக்கொண்டே சாப்பிட,
“இங்க என்னடா பன்ற?…” என விதுரன் வந்து பிளேட்டை போட,
“பார்த்தா தெரியலை….” என சொல்லி தானும் போட்டுவிட்டு கையை கழுவினான்.
“கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி போகனும்டா விது. இனி தான் நீ…” என்றவனின் பேச்சை நிறுத்தியவன்,
“நான் பார்த்துக்கறேன். நீ விடு…” என அசால்ட்டாய் சொல்ல,
“நீ பார்த்ததை தான் கொஞ்சம் முன்னால நான் பார்த்தேனே, ரோஜா கிளம்பின வேகத்தை. போடா டேய், இது என்ன உன் கடைன்னு நினைச்சியா? இது கடையுமில்லை. நீ முதலாளியும் இல்லை….”
“என்ன நக்கலா?…”
“இல்லடா விது, இது உன் வீடு. இங்க நீ புருஷர். இந்த இடம் தான் ரொம்ப திரில்லிங்கான இடம். கரணம் தப்பினா கண்டம் தான் மவனே. பொழைச்சுக்கோ…” என்று சொல்லி சக்தி ஓடிவிட,
“இவன் வேற பிபியை ஏத்திவிட்டுட்டு போறான். ப்ச்…” என்று கயல்விழி முகம் பார்க்க அவர் இன்னும் சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
“கயல் சாப்பிட்டு கிளம்ப வேண்டாமா? இப்படி உட்கார்ந்தா எப்படி?…” என சடகோபன் சொல்ல,
“இல்லை எனக்கு போதும்…” என்று கயல்விழி எழுந்துகொள்ள பார்க்க,
“அப்ப எனக்கும் போதும்…” என சடகோபனும் எழுந்து விட்டார். அவரின் ப்ளேட்டிலும் உணவு பாதி அப்படியே இருக்க,