“கண்டிப்பா போகனுமா வெடிங் ரிசெப்ஷன் ரோஜா…” என ஸ்ரீ குழப்பத்துடன் தோழிகளை பார்த்து அமர்ந்திருக்க,
“ப்ச், மேனேஜர் வந்து இவ்வளோ தூரம் இன்வைட் பண்ணிட்டு போய்ருக்கார். போகாம இருந்தா நல்லா இருக்காது. ஏன் ஸ்ரீ இப்டி பன்ற?…” என சங்கவி கேட்க,
“அவ வருவா நீ ஏன் இவளை போட்டு கன்வின்ஸ் பன்றேன்னு இன்னும் குழப்பி விடற? கெட் ரெடி சங்கு…” என ரோஜா கிளம்ப,
“பின்ன என்ன? மிஸ் கூலே சொல்லியாச்சு…” என்று சந்தோஷமாய் தயாராக கிளம்பினாள் சங்கவி.
அந்த ரிசார்ட்டின் மேனேஜர் மகளுக்கு ரிசப்ஷன் அன்று. இவர்களையும் வந்து அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் வந்து அழைத்துவிட்டு சென்றிருந்தார்.
அதற்கு கிளம்புவதற்கு தான் ஸ்ரீநிதி மறுத்து அமர்ந்திருக்க மற்றவர்கள் கிளம்ப ஆரம்பித்தனர்.
“இங்க பாரு ஸ்ரீ, ஜஸ்ட் ஒரு எண்டர்டைன்மென்ட், அவ்வளோ தான். இதுக்கு இத்தனை யோசிப்பியா நீ?…” என ரோஜா அவளை சமாதானம் செய்ய,
“இப்ப நாம வந்ததனால இன்வைட் பண்ணிருக்காங்க ரோஜா. ஒரு கட்டர்சிக்கு. இதுக்கு மெனக்கெடனுமா?…”
ஸ்ரீக்கு அப்போதும் செல்ல மனமில்லை. ஒரு மாதிரியாக உணர்ந்தாள். அவளுக்கு இதெல்லாம் பழக்கமும் இல்லை.
“அதே கட்டர்சிக்கு போய்ட்டு உடனே வந்திருவோம். எப்டியும் சைட் சீயிங் கிளம்பறோம். அதுக்கு முன்ன இன்னைக்கு அங்க போய்ட்டு ஒரு பை மினிட்ஸ்ல ஒரு ஹாய், பாய்ல கிளம்பிட போறோம். கிளம்புய்யா…” என அவளை எழுப்பி கிளப்பியவள் சங்கவி இன்னும் கிளம்பாமல் இருக்க,
“இன்னும் என்னடி உனக்கு? வரமாட்டேன்னு சொன்னவளே வந்துட்டா…” என்று ரோஜா முறைக்க,
“இல்ல இந்த ட்ரெஸ்க்கு பெரிய இயரிங் போட்டா தான் மேட்சா இருக்கும். அதான் தேடறேன்…” என தன் பெட்டியை போட்டு அவள் உருட்ட,
“என் இயரிங் செட்ல ஏதாவது சூட் ஆகுதான்னு பாரு. அவசரத்துக்கு இருக்கட்டும்ன்னு எதையாவது எடுத்து போட்ருப்பேன்…” என்று ஒரு சிறிய பாக்ஸை அவள் பக்கம் தூக்கி வீச அதிலிருந்து இரண்டு தோடுகளை எடுத்து இன்னும் பார்த்துக்கொண்டே தான் நின்றாள் சங்கவி.
“அதுல உனக்கு வேண்டியதை எடுத்துட்டு இன்னொன்னை குடு நம்ம ஸ்ரீக்கு…” என்ற ரோஜா தனது சல்வாருக்கு மேட்சிங் கம்மலை எடுத்து போட்டுவிட்டு முகத்திற்கு டட்சப் செய்ய,
“இந்த மேக்கப் எல்லாத்தையும் உங்க ரெண்டு பேரோட வச்சுக்கோங்கடி. என்னை ஆளை விடுங்க…” என்ற ஸ்ரீ தனது நீண்ட பின்னலை எடுத்து சரி பார்த்தவள் குட்டியை ஜிமிக்கியை மட்டும் போட்டுக்கொண்டாள்.
“இவளை திருத்த முடியாது…” என்ற சங்கவி அவளை கண்டுகொள்ளாமல் கிளம்ப,
“போதும்டி, நாம போய்ட்டு வந்து ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பனும். நாளைக்கு ஊருக்கு வேற போகனும். சும்மா பேசி நேரத்தை கடத்தாத சங்கு…” என அவளை கத்திய ரோஜா தனது மற்ற உடைகளை எடுத்து பேக்கில் ஒன்று போல அடுக்கி வைத்தவள் வந்ததும் கிளம்புவதற்கான பொருட்களையும் சேர்த்து தயாராய் வைத்துவிட்டு கிளம்பினாள்.
“உன்கிட்ட இந்த பொறுப்ஸ் மட்டும் எப்டின்னு தான் தெரியலை. மிராக்கிள்…” என சங்கவி அவளை கிண்டல் பேச,
“வாங்கி கட்டாம கிளம்பு…” என அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வர மூவருமாய் பேசி சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டு பார்ட்டி ஹாலை அடைந்தனர்.
“என்ன சொல்லு டே டைம் ரிசப்ஷன் சூப்பரா இருக்கு. சும்மா டிம் நைட்ல ரிசப்ஷன் பண்ணிட்டு ஒரே போர்…” என்றாள் ரோஜா.
“ஆமா, செமடி வொய்ட் கலர் தீம்ல சூப்பரா பண்ணிருக்காங்க இல்ல. நான் டிஸைட் பண்ணிட்டேன். என்னோட மேரேஜ்க்கு இதே தீம் தான். அப்டியே அந்த பக்கம் கடல், இந்த பக்கம் கார்டனோட ஒரு ஓபன் ஹால். சூப்பர்ல…” என சங்கவி வளைத்து வளைத்து அந்த இடத்தினை போட்டோ எடுக்க ஸ்ரீயும் ரோஜாவும் அவளின் ஆர்வத்தில் சிரித்தனர்.
“விட்டா இங்கயே கல்யாணத்தை முடிச்சுருவா போல?…” என ஸ்ரீ சொல்ல,
“மாப்பிள்ளையை தேடிருவோம்…” என்ற ரோஜா சொல்லி திரும்ப யாரின் மீதோ மோதி நின்றவள்,
“பை மிஸ்டேக்கன்…” என்று சொல்லிய ரோஜா நிமிர்ந்தும் பாராமல் ஸ்ரீயுடன் பேசிக்கொண்டே செல்ல அவள் இடித்த விதுரன் முதலில் எரிச்சலுடன் விலகியவன் சட்டென சொல்லியவளின் குரலில் வேகமாய் திரும்பியவன் அங்கே பார்த்தான்.
அடர்ந்த நீலவண்ணத்தில் கற்கள் வேலைபாடுகள் கொண்ட லாங் டாப்பும், அதே நிறத்தில் ப்ளைன் ஸ்கர்ட்டும், தோளில் ரோஜாவர்ண பட்டு துப்பட்டாவுமாக முன்னால் நடந்தவளின் முகம் பார்க்க முயன்று முடியாமல் அவளை தொடர,
“விது பர்ஸ்ட் போய் கிப்ட் பண்ணிட்டு வருவோம்…” என சக்தி அவனை இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.
“டேய் அந்த குட்டிப்பிசாசு…”
“இவன் ஒருத்தன், ஒரு கேமராவுக்கு இத்தனை அலப்பறை. நீ அந்த பொண்ணை பேசினா உடனே சரியாகிடுமா உன் கேமரா? வாடா, சிவேஷ் நமக்காக வெய்ட் பன்றான் பாரு…”
“ரொம்ப முக்கியம் நான் வரமாட்டேன்னு சொல்லியும் என்னை நீ போர்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்ததுக்கு உன்னையே என்ன செய்யலாம்ன்னு இருக்கேன்…” என்று வார்த்தைகளை கடித்து துப்ப,
“அடேய் இது அவன் கல்யாணம்டா. அவனுக்கு புடிச்சிருக்கு. பண்ணிக்கிட்டான். நாளைக்கே ஒரு குழந்தை பிறக்கவும் அவங்கப்பா தான் முதல் ஆளா தூக்கி கொஞ்ச போறாரு. இதெல்லாம் ஓவர்டா…” என சக்தி பேச,
“நீ போய் சிவாவை பாரு. நான் அப்பாவை பார்த்துட்டு வாரேன்…” என்ற விதுரன் சிவேஷின் அப்பாவை அந்த கூட்டத்தில் தேட ஆரம்பித்தான்.
அவன் நினைத்தபடி ஒரு மூலையில் அவர்களின் குடும்பம் முகத்தில் வெறுமனே ஒட்ட வைத்த புன்னகையோடு தனித்து அமர்ந்திருந்தனர். விதுரன் அவர்களை நெருங்கவுமே சிவேஷின் தந்தை சேத்தன் ரெட்டி அவனின் கைகளை பிடித்துக்கொண்டார்.
“பாபு…” என அவர் அவனின் கைகளை பிடித்துக்கொண்டார்.
ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த சிவேஷும் கேரளாவை சேர்ந்த வர்ஷாஸ்ரீயும் ஒரே கல்லூரியில் படித்த பழக்கம் காதலாக மாற இன்று இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவர்களின் திருமண வரவேற்பு.
வர்ஷாவின் வீட்டில் காதலுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருக்க சிவேஷ் தான் பலவாறு போராட வேண்டியதாக இருந்தது.
வேறு வழியில்லாமல் மகனுக்காக ஒப்புக்கொண்டாலும் பெரிய குடும்பம் என்கிற அந்தஸ்தும் சொந்த பந்தங்களின் அதிருப்தியுடனும் முழுமனது இன்றி இந்த திருமணத்தை நடத்தி வைக்க சம்மதித்தனர்.
விதுரன், சக்தி மூலமாக கூட சிவேஷின் மனதை மாற்ற பார்த்தார் சிவேஷின் தந்தை. அவன் பிடிவாதமாக இருந்ததால் சக்தி கூட அவனின் விருப்பம் என்று சொல்ல விதுரன் தான் குதித்தான்.
“என்ன பெரிய காதல் பொடலங்கா காதல். இன்னைக்கு வந்த அந்த பொண்ணு முக்கியமா போய்ட்டா இவனுக்கு…” என சிவேஷை வறுத்தெடுத்தான் நேரிலேயே.
“லவ் டா மச்சான்…” என்றவனின் பேச்சில் எரிச்சலாகி,
“என்னவோ செஞ்சுக்கோ. உங்கப்பாம்மாவை கஷ்டப்படுத்தாம இரு…” என்று சொல்லி அவனின் தந்தையிடம் சொல்ல சக்திதான் பேசினான் ரெட்டியிடம்.
“எப்படியும் அவன் அந்த பொண்ணை விட்டு வேற கல்யாணம் செய்ய போறதில்லை. ஆனா அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சே தீருவான். நீங்க தான் முடிவு செய்யனும் அங்கிள்…” என்று சொல்ல விட்டான்.
எப்படியும் அவனாக திருமணத்தை முடிப்பதை விட மரியாதைக்காக வேண்டி அவரே எடுத்து நடத்துவதாக சொல்லி திருமணம் திருப்பதியில் நடந்துவிட்டது ஒரு வாரம் முன்பே. இன்று கேரளாவில் அவர்கள் சொந்தபந்தங்களுக்காக ஒரு ரிசப்ஷன்.
சேத்தன் ரெட்டியிடம் தெலுங்கில் உரையாடிக்கொண்டிருந்தவனின் பார்வை மேடையில் நின்ற சக்தியிடம் சென்றது.
சக்தி கை நீட்டி கூப்பிட, அங்கிருந்து சிவேஷும் அவனை அழைக்க விதுரன் இவர்களிடம் விடைபெற்று அங்கே சென்றான்.
“சரியான மிளகாய்டா நீ. பாரு ஆந்திராக்காரன் மூஞ்சில ஜீரா வழியுது. நீ என்னன்னா காரத்தை கடிச்சவனாட்டம் நிக்கிற…” என சக்தி அவனின் காதில் முணுமுணுக்க,
“ஹாய் அண்ணா…” என்றாள் வர்ஷா.
“மச்சான்…” என்ற சிவேஷிடம் கை குலுக்கியவன் வர்ஷாவிடம் புன்னகைத்துவிட்டு கொண்டு வந்த கிப்டை அவர்களிடம் சேர்ப்பித்துவிட்டு கீழே இறங்கிவிட்டான்.
“மச்சான் கார் சொல்லிட்டேன். ஒரு ரவுன்ட் வெளில போய்ட்டு வாங்க. சாப்ட்டு போங்கடா. ஈவ்னிங் மீட் பன்றேன். இங்க தான் ரூம் புக் பண்ணிருக்கோம்…” என சிவேஷ் சொல்ல,
“எங்களுக்கு தெரியும்…” என்றான் விதுரன்.
“இவன் ஒருத்தன் என்னவோ இவனுக்கு புடிச்சு கல்யாணம் செஞ்சு வச்ச மாதிரி பிஹேவ் பண்ணுவான்” என்று சக்தி புலம்ப,
“ப்ச், ஹேப்பி மேரீட் லைப் மச்சான்….” என்று சிவேஷை அணைத்து சொல்லிய விதுரன்,
“அப்பாம்மாவை பாரு…” என்று சொல்லிவிட்டு வர்ஷாவிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.
“டேய் சிவா…” என சக்தி சமாதானமாய் ஆரம்பிக்க,
“எனக்கு தெரியாதாடா? நாளைக்கே ஒரு போன் பண்ணினா நார்மலாகிடுவான். விடு. நீ போ…” என சொல்லி அனுப்பிவிட்டு அடுத்த விருந்தினர்களை கவனிக்க ஆரம்பித்தான் சிவேஷ்.
விதுரன் ஹாலை விட்டு வெளியேறி கார்டனில் சற்று தூரமே வந்து அமர்ந்து கொண்டான்.
தனது மொபைலை எடுத்து பேசியவன் மறுநாள் சென்னை வந்துவிடுவதாக சொல்லி வைக்க அவனின் பின்னால் அந்த சிரிப்பு குரலில் யோசனை கலைந்தவன் காதுகளில் அவனை கேட்காமலே அந்த சொற்கள் சேர்ந்தன.
“பாரு சங்கு, எவ்வளோ ஹேப்பி அந்த பொண்ணு முகத்துல. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்ச சந்தோஷம். அதுவும் பேமிலியே சேர்த்து நடத்தி குடுத்திருக்காங்க…” என்ற ரோஜா,
“இதுக்குத்தான் சொல்றது லவ் மேரேஜ் தான் பெஸ்ட். நமக்கான வாழ்க்கையை நாமலே தேர்ந்தெடுக்கறது. அதுல சந்தோஷமோ, கஷ்டமோ நாமளே பேஸ் பண்ணிக்கனும். சும்மா வீட்டுல பார்த்து முடிச்சு வைக்கிற மேரேஜ்ல பிரச்சனைன்னா கூட நாம சொல்லாமலே பஞ்சாயத்து பன்றோம்ன்னு கிளம்பி வருவாங்க…”
“நம்மளை எதையும் முடிவெடுக்கவோ அந்த பிரச்சனையை சமாளிக்கவோ விடமாட்டாங்க. நாங்க வந்துட்டோம், நாங்க பார்த்துக்கறோம்ன்னு நம்மளை சின்ன பிள்ளை மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற நமக்கு அதை சரி பண்ணிக்க மட்டும் தெரியாதுன்னு எப்படி நினைக்கறாங்க?…”
ரோஜா மனம் போன போக்கில் பேசிக்கொண்டிருக்க அப்பொழுதுதான் விதுரன் அவர்களை முறைப்பதையே சங்கவி பார்த்தாள். இன்னும் அவன் ரோஜாவின் முகத்தை பார்க்கவில்லை.
“ரோஜா அங்க பாரு அங்க இருக்கறவன் நீ பேசறதை கேட்கறான்னு நினைக்கறேன். உன்னை முறைக்கிறான்…” என்று மெல்லிய குரலில் சொல்ல அந்த நேரம் சக்தி சிவேஷின் தம்பியுடன் வந்து தெலுங்கில் பேசிக்கொண்டே வந்து அமர,
“தெலுங்குடி. தமிழ் தெரியாதா இருக்கும். தெரிஞ்சிருந்தா கூட என்ன இப்போ?…” என ஸ்ரீ சொல்ல ரோஜா அமைதியாக இருக்காமல்,
“தென்பாண்டி தெலுங்கே என் சிங்கார கொழுந்தேன்னு பாட வேண்டியது தான்…” என அவள் பாட வேறு செய்ய பல்லை கடித்தான் விதுரன்.
அவள் பாடவும் பெண்கள் இருவரும் சிரிக்க பொறுக்கமாட்டாமல் எழுந்து வந்தவன் வேகத்தில் சங்கவியும் ஸ்ரீயும் எழுந்து நிற்க அவர்களை பார்த்து ரோஜாவும் எழுந்து திரும்பி பார்த்தாள்.
அவள் திரும்பிய வேகத்தில் விதுரன் அவளின் அருகில் வந்தவன் அவளை பார்த்து திகைத்தான். “இவள் இடித்தா நான் விழுந்தேன்?” என்ற பாவனை அவனின் முகத்தில். கேள்வியாய் தன்னை பார்த்தவளிடம்,
“ஹேய் யூ, வாட் யூ சே? வாட் யூ சே?…” என்று ரோஜாவை பக்கமாய் நெருங்கியேவிட்டான்.
சட்டென அவன் கோபத்துடன் எழுந்து வருவான் என்று அம்மூன்று பெண்களும் நினைக்கவே இல்லை. சட்டென அவன் வந்து நின்றதும் அவர்களும் எழுந்துவிட கூட்டம் அங்கே இல்லாமல் இருக்க யாரின் கவனத்தையும் கவரவில்லை.
நடந்து செல்லும் தூரத்தில் கடல். அதனால் ஒரு பொக்கேவுடன் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்து இங்கே அமர்ந்து கொண்டார்கள் பெண்கள்.
சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க ரோஜாவின் குரலிலேயே அவளை கண்டுகொண்டான் விதுரன். அப்பொழுதே சென்று அவளை பேசிவிடத்தான் நினைத்தான்.
ஆனால் சக்தியுடன் சிவேஷின் தம்பி வந்ததும் எழ இருந்தவன் அமர்ந்துகொள்ள அவன் பேசி சென்றதும் சக்தி அவனிடம் பேச்சுக்கொடுக்க விதுரன் அதை கவனிக்கவே இல்லை.
அவன் தான் ரோஜாவின் பேச்சை கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்தானே?
பல்லை கடித்துக்கொண்டு ரோஜாவை மட்டும் அவன் பார்க்க சக்தி விதுரனை நெருங்கி,
“வாட் இஸ் திஸ் விது?…” என்று அவனை அழைத்த சக்தி ஸ்ரீயை பார்த்ததும் ஒரு நொடி திகைத்து பின் அவளை கண்டுகொள்ளாமல் நின்றான்.
“ஷட் அப் சக்தி…” என்று நண்பனை அடக்கிய விதுரன்,
“டெல் மீ…” என்று அடிக்குரலில் அவன் சீற,
“நத்திங் ஸார். லுக்கிங் குட்ன்னு சொன்னேன்….” என்ற ரோஜா,
“ஒஹ் காட், நீங்க தெலுங்கு வாழால. ஆனா நான் தமிழ் வாழா. தெலுங்கு லேது. தமிழ் மட்டுமே ரா…” என்று வாய்க்கு வந்தபடி பேச,
“ரோஜா அவரே கோபமா இருக்காரு. நீ காமெடி பன்ற…” ஸ்ரீ அவளை பிடிக்க,
“நீ சும்மா இரு டேக்ஸ். லுக்கிங் குட்ன்னு தானே சொன்னேன். ஐ லவ் யூன்னா சொன்னேன். இந்த பெத்த ஷாக் ஏனாம்? ஓவரா பன்றாரு. நாம நமக்குள்ள தான பேசினோம். இவரை யார் பார்க்க சொன்னா?…” என அவள் சொல்ல திகைத்தவன் முகம் கோபத்தை எடுக்க அதையெல்லாம் ரோஜா கண்டுகொள்ளவில்லை.
“வாட் நான்சென்ஸ்? அதுக்கு என்ன வேணா பேசுவியோ?…” என விதுரன் பேச,
“ஐயோ தமிழ் பேசறார்…” என்ற சங்கவி ரோஜாவை விட்டு இரண்டடி தள்ளி போக அவன் பேசியதில் திகைத்தாலும் ரோஜா விடவில்லை.
“எது நான்சென்ஸ்? நான் உங்கள குட் லுக்கிங்ன்னு சொன்னதா? இல்ல உங்க லுக்கிங்கா?…”
“என்ன பொண்ணு நீ? நேத்து என் கேமராவை லாஸ் பண்ண. இன்னைக்கு என் மூட் ஸ்பாயில் பன்ற. உன்னை…” என்று பல்லை கடிக்க முதலில் ரோஜாவிற்கு சட்டென பிடிபடவில்லை.
அதன் பின்னர் தான் முதல் நாள் நடந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது. அவனை கீழே தள்ளிவிட்டதும், பின் கேமராவை தண்ணீரில் இருந்து எடுத்து தந்ததும் ஞாபகத்திற்கு வர,
“நான் என்ன வேணுமின்னே தள்ளி விட்ட மாதிரி பேசறீங்க? நீங்க யார் வராங்க வரலைன்னு கவனிக்காம நின்னா நான் என்ன பண்ணுவேன். நான் ஒரே மாதிரி நேரா தான் ஓடிட்டு இருந்தேன். ஊடால வந்தது நீங்க தான். என்னை சொல்லாதீங்க…”
“இப்ப கொஞ்சம் நேரம் முன்ன கூட நீ என்னை இடிச்ச தான? ஒரு சாரி கூட கேட்காம போன. இதானா உன் மேனர்ஸ்?…” என்று விதுரன் அவளை வெகுவாய் சீண்டி விட,
“எனக்கு மேனர்ஸ் இருக்கா இல்லையான்னு நீங்க கவலைப்பட வேண்டாம் மிஸ்டர் பெர்பெக்ட். நான் என்ன வேணும்னே இடிச்சேனா? தவறுதலா நடந்தது. அதுக்கு நான் என்ன பண்ண? அதான் சொன்னேன்ல மிஸ்டேக்ன்னு. உங்களுக்கு அது போதும்…” என்றாள் ரோஜா சற்றும் கோபமில்லாத அலட்சிய குரலில்.
“உன்கிட்ட எதிர்பார்க்க கூடாதுதான். முன்ன பின்ன பார்க்காத என்கிட்டே குட் லுக்கிங்ன்னு வந்து சொல்ற நீ. நீ பேசுவ. நேத்துல இருந்தே நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பன்ற. ஸ்டேஜ்ல கூட நீ என்னை பார்த்த தான? என்ன என்னை பாலோ பன்றியா?…” என்று வேறு பேச உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு வந்தாலும் வெளியில் முகத்தை சலனமின்றி அப்பாவியை போல வைத்துக்கொண்டாள் ரோஜா.
இவனை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தவள் அவனின் கோபத்தை இன்னுமே தூண்ட முகத்தை சிரித்தபடி வைத்த ரோஜா குரலை தழைத்து கொண்டு,
“இங்க பாருங்க பெர்பெக்ட் நீங்க தமிழா இல்லாம வேற லாங்க்வேஜா இருந்தாலும் சொல்லிருப்பேன். என்ன ஒன்னு எங்கள்ல யார் பர்ஸ்ட் சொல்லன்னு தான் டிஸ்கஸ் பண்ணதுல லேட் ஆகிடுச்சு. அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க. கேட்டுட்டீங்க. எனிவே மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்ட்சம், பை. சி யூ லேட்டர்…” என சொல்லி ரோஜா கிளம்பி விட விதுரனின் முகம் அக்னியாய் தகித்தது.
“யூ, யூ லிட்டில் டெவில்…” என்று புசுபுசுவென மூச்சு விடத்தான் முடிந்தது அவனால்.
விதுரனின் கோபத்தை பார்த்த சக்தி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க இப்பொழுது கோபமெல்லாம் அவன் மீது திரும்ப,
“சக்தி…” என பல்லை கடிக்க,
“பின்ன என்ன? பார்க்க பொண்ணை எல்லாம் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சினேல. அதான் உன்னை வச்சு செஞ்சுட்டு போகுது அந்த குட்டி பொண்ணு…” என்று சிரித்தவன்,
“மூஞ்சியில தொப்பை வச்ச ஹேண்ட்சம். அங்கிள்ன்னு சொல்லாம சொல்லிட்டு போறாடா…” என ரோஜாவை போலவே சொல்லி சிரிக்க,
“ஸ்டாப் இட் சக்தி…” என்றான் கடுப்புடன்.
“நீ நல்லவன்தான்ப்பா. உங்க வீட்டுல பாக்கற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. யார் வேண்டாம்ன்னா. அதுக்குன்னு சும்மா ஒரு பொண்ணு பார்த்துட்டா உடனே பொங்கிடறது. உனக்கு லவ் மேரேஜ் வேண்டாம்ன்னா தாராளமா இருந்துக்கோ. அதையே பார்க்கறவங்கட்ட எல்லாம் ஏன் எதிர்பார்க்கற?…” என கேட்க,
“போடா…” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான் விதுரன். கோபம் மட்டும் குறையவே இல்லை.
ஆனால் அவனை அந்த வாங்கு வாங்கிவிட்டு வந்த ரோஜாவோ அத்தனை இலகுவாக இருந்தாள்.
“ஏன்டி ரோஜா இப்டி பேசிட்டு வந்த? அவன் என்ன நினைப்பான்?…” என சங்கவி கத்த,
“எவன் என்ன நினைச்சா என்ன? ஜஸ்ட் பார்க்க டீஸன்ட்டா இருக்கானேன்னு சும்மா ஒரு இன்ட்ரெஸ்ட்டா பார்த்தா ஓவரா சீன் போட்டான்ல. அதான்…” என சொல்ல,
“நாம முதல்ல கிளம்புவோம். கிளம்பற நேரத்துல டென்ஷன் பண்ணிட்டான்…” என ஸ்ரீ சொல்ல மூவரும் தங்கள் அறைக்கு சென்றதும் வேகமாய் உடைகளை மாற்றி கிளம்பி விட்டனர் ஊர் சுற்றி பார்க்க.
அன்று முழுவதும் அத்தனை உற்சாகமாய் சென்றது அவர்களுக்கு. விதுரன் என்பவனை மொத்தமாய் சுத்தமாய் மறந்துவிட்டிருந்தாள் ரோஜா.
மறுநாள் காலை ட்ரெயினில் அவர்கள் சென்னையை நோக்கி செல்ல அவர்களுக்கு முன்னரே அவர்களின் அடுத்த வேலையை தயாராக வைத்திருந்தது.
“ஒரு நாள் லீவ் போடலாம்ல. இன்னைக்கு தான் வந்தோம். நாளைக்கு ஒரு நாள் ரெஸ்ட் குடுத்தா என்னவாம். உடனே ரிப்போர்ட் பண்ணனுமா?…” என சங்கவி உருண்டு கொண்டே கேட்க,
“அந்த ஒரு நாள் தான் இது…” என்று ஸ்ரீ கிண்டல் பண்ண,
“அங்க இருக்கற வரைக்கு எப்ப போவோம் போவோம்ன்னு சொல்லிட்டு இங்க வந்து குய்யோ முய்யோன்னு கத்துறது. போடி…” என அவளின் மேலே விழுந்தாள் ரோஜா.
“என்ன உன் அக்கா போன் பண்ணலையா?…” என்றதும்,
“பண்ணுவா பண்ணுவா…” என்று சொலும் பொழுதே அவளுக்கு போன் வந்து விட்டது பிரஷாந்தியிடமிருந்து.
பிரஷாந்தி ரோஜாவின் உடன் பிறந்த சகோதரி. வீட்டின் முதல் பெண். இரண்டாவது வாரிசு.
ரோஜாவின் குணத்திற்கு அப்படியே நேர் எதிர் குணம். அந்த குணம் ரோஜாவின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும்?