“சக்தியோட அண்ணாவும் ஜெகனும், ஸ்ரீநிதி அக்கா ஸ்ரீவித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்க. பேஸ்புக் பழக்கம் பிரெண்ட்ஷிப்ல ஆரம்பிச்சு லவ்ல முடிஞ்சு கல்யாணத்துக்கு வந்து நின்னுச்சு…”
“வாவ் லவ் ஸ்டோரி…” என ரோஜா ஆர்வமாக அவளை முறைத்தவன்,
“ஜெகன் அந்த பொண்ணை பார்க்க அவங்க ஊருக்கு அடிக்கடி போக வர இருந்தான். அப்படி போறப்போ தான் அவங்கப்பா பார்த்துட்டு ஸ்ரீவித்யாவுக்கு நிச்சயம் பண்ணனும்னு முடிவு பண்ணினப்போ ஜெகன் அவங்கம்மாப்பாவோட போய் சம்பந்தம் பேசினதுக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார் அவங்கப்பா…”
“சோ சேட்…” என்று நிலைமை புரியாமல் உச்சுக்கொட்ட இதற்கு மேல் சொல்ல முடியாதென்று விதுரன் எழுந்து கொள்ள அவனை பிடித்து மீண்டும் அமர வைத்தவள்,
“சரி சரி இனி நான் வாயே திறக்க மாட்டேன்…” என்றவள் அவனின் ஒரு கையை எடுத்து தனது வாயை மூடிக்கொண்டு தனது கைகளை கட்டிக்கொண்டு சமத்தாய் அமர்ந்து கொள்ள அதில் சிரித்தவன்,
“கேடி எல்டி…” என அவளின் கன்னத்தை கிள்ளிவிட்டு பேச்சை தொடர்ந்தான்.
“அப்பா மறுத்ததும் இவங்க என்ன பண்ணன்னு புரியாம கிளம்பி வந்துட்டாங்க. நாங்க காலேஜ்ல படிச்சுட்டு இருந்தோம் அப்போ. வித்யா போன் பண்ணி அழ ஜெகன் சக்திட்ட பேசறப்போ விஷயத்தை சொல்ல சக்தி எதையும் யோசிக்காம போய் வித்யாவை கூட்டிட்டு வந்து அவங்க சொந்தங்கள் சிலரோட சேர்ந்து சென்னைல வச்சு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டான்…”
“அது ஸ்ரீநிதி வீட்ல ரொம்ப பெரிய பிரச்சனையை கொண்டு வந்துருச்சு. ஆசிர்வாதம் வாங்க போன இடத்துல ஸ்ரீநிதி அப்பா தவறிட்டாருன்ற விஷயமே தெரிஞ்சது. அடிச்சு துரத்தாத குறை தான். அவங்களும் அப்போ படிச்சிட்டு இருந்த பொண்ணு. எத்தனை முயற்சி செஞ்சும் இவங்களை ஸ்ரீநிதி வீட்ல ஏத்துக்கலை…”
“வித்யாவ அது ரொம்ப பாதிச்சது. முழுமனசா ஜெகனோட வாழ விடலை. ஒரு குழந்தையும் ஆனதும் கூட எதையோ பறி குடுத்ததை போலதான் இருந்தாங்க. இதுவே நாளாக நாளாக அவங்க உடல்நலனை பாதிச்சு ஒருநாள் அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க. இதை கேள்விப்பட்டு ஆபீஸ்ல இருந்து வர வழியில ஜெகனுக்கு ஆக்ஸிடென்ட்…”
“இப்ப ஒரு கை, கால் இழந்து வீட்ல இருக்கான். லவ் எந்தளவுக்கு இவங்க வாழ்க்கையில் விளையாடிருச்சு பார்த்தியா? ரொம்ப நாள் அதுல இருந்து வெளிவரவே இல்லை. குழந்தை வளர ஆரம்பிக்கவும் தான் சக்தி அம்மா ஸ்ரீநிதியை கேட்போமா என கேட்டதும் முதல வேண்டாம்னு சொன்னவன் அப்புறம் சரின்னான்…”
“அதுக்கு காரணம் ஸ்ரீநிதி பேமிலி கூட கஷ்டத்துல இருந்தாங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணின மாதிரியும் ஆச்சு. குடும்பத்தை பார்த்த மாதிரியும் ஆச்சு. குழந்தைக்கு ஒரு துணை கிடச்சது போலவும் ஆச்சுன்னு பல கணக்கு போட்டு போன்ல ஸ்ரீநிதி அம்மாவை கரைச்சு சம்மதிக்க வச்சு போனா அங்க தான் பெரிய பிரச்சனையே…”
“பொண்ணு கேட்டு போனவங்க கொண்டு போன தட்டு வரிசைகளை தூக்கி வெளில எறிஞ்சுட்டாங்க ஸ்ரீநிதி. வீட்டுக்குள்ள இருந்த சக்தியை கையை புடிச்சு வெளில இழுத்துட்டு போய் கீழே தள்ளிவிட்டு அசிங்கப்படுத்திட்டாங்க. குழந்தை முகத்துக்காக கூட பார்க்கலை…”
“ஸ்ரீ பக்கம் இருந்து பார்த்தா அவளோட வலி புரிஞ்சிருக்கும். அவளுக்கு அந்த இழப்பு எத்தனை கொடுமையா இருந்திருக்கும். அப்போ அவ செஞ்சதில என்ன தப்பு இருக்கு? அதுவும் வாட் இஸ் திஸ்? குழந்தைக்காக கல்யாணம்? ரெடிகுலஸ்…” என்று ரோஜா முகத்தை சுளிக்க,
“அப்ப இருந்து இப்ப வரைக்கும் சக்தி கல்யாணம் பண்ணிக்கலை தெரியுமா? எந்த பொண்ணை பார்த்தாலும் வேண்டாம்னு சொல்றான்…” என விதுரன் பூடகமாக சொல்ல,
“யூ மீன்…” என்று அவனை யோசனையுடன் ரோஜா பார்க்க,
“எக்ஸாக்ட்லி. அவனுக்கு ஸ்ரீநிதியை பிடிச்சுருக்கு. ஆனா அவமானப்படுத்திட்டாங்கன்ற கோபமும் இருக்கு. அதை விட குழந்தைக்கிட்ட அம்மா ஸ்ரீநிதின்னு சொல்லி சொல்லியே அவன் அம்மா விதைச்சுட்டாங்க. இப்ப அம்மா எப்ப வருவாங்கன்னு கேட்டுட்டே இருக்கான் குழந்தை. யாரைன்னு சொல்ல இதுல?…”
“அண்ணனுக்காக அவன் ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக சக்தி ரிஸ்க் எடுக்க அது இன்னொரு குடும்பத்தை ஆட்டி வச்சுடுச்சு. இப்ப அதோட பாவம் இவனோட வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிடுச்சு…” என்று சொல்லி முடிக்க,
“இதுல யாரும் எதுவும் பண்ண வேண்டாம். என்ன நடக்குமோ தானாவே நடக்கும்…” என பெரிய மனுஷியாய் ரோஜா சொல்ல,
“அது எப்படி தானா நடக்கும்?…”
“ஏன் நம்ம கல்யாணம் நடக்கலையா? அது மாதிரி தான்…” என சொல்லிவிட்டு நாக்கை கடித்தவள் சட்டென கண்ணடிக்க,
“இப்பலாம் இந்த கண்ணு என்னை பார்த்தாலே ஒரு நிலையில நிக்க மாட்டிக்கு எல்டி…” என்று அவள் சொல்ல வந்ததன் முழு சாராம்சத்தையும் புரியாமல் விதுரன் பேசினான்.
ரோஜா தன்னை முன்பே விரும்பியிருப்பாள் என்ற எண்ணம் துளியும் எழவில்லை அவனுக்கு. தன்னை போல் தான் அவளும் அமைந்த வாழ்க்கையை முழு மனதுடன் ஏற்றுகொண்டு சந்தோஷமாய் வாழ்கிறாள் என்று நினைத்துக்கொண்டு இருந்தான்.
“பசிக்குது அங்கிள், பேசி பேசி காபி போய்ருச்சு…” என்றதும் சிரித்தபடி இருவரும் எழுந்து சாப்பிட அமர வைத்தீஸ்வரி கொடுத்துவிட்டிருந்ததை பிரிக்க அதன் சுவை திறந்ததும் பரவிய மணத்தில் இன்னும் பசியை அதிகப்படுத்தியது.
“வாவ் இட்லி, மீன் குழம்பு…” என்றவளின் கண்கள் விரிய விதுரனுக்கும் எடுத்து வைத்து தனக்கும் போட்டுக்கொண்டு சாப்பிட்டவள் தாங்கள் தங்கியிருந்த வீட்டில் சமைக்கும் பெண்ணின் சமையல் வகைகளை சொல்லிக்கொண்டே உண்டாள்.
“போய் தூங்கட்டா? ஃபுல்லா ஆகிடுச்சு…” என கண்களை சொருக,
“சாப்பிட்டதும் படுத்த பிச்சுடுவேன்…” என்றவனிடம்,
“பிச்சுக்கோங்க…” என கன்னத்தை காண்பிக்க,
“ஒன்னு சொல்ல முடியலை உன்னை. வந்து வச்சுக்கறேன். இப்ப போய் உட்கார். வெளில ஒரு வாக் போவோம்…” என்று அறைக்குள் நுழைய,
“என்னது நடக்கனுமா? நான் மாட்டேன்…” என சொல்லிக்கொண்டே அவனின் பின்னால் செல்ல போக அவனோ அறையின் கதவை சாற்றிவிட்டான்.
“அங்கிள், கதவை திறங்க…” என அவள் எத்தனை அடித்தும் திறக்காமல் போக கடுப்புடன் சென்று அமர்ந்துகொண்டாள்.
பத்து நிமிடத்திற்கு பின்னால் வெளியே வந்தவன் அவளின் கோபம் உணர்ந்து சிரிப்புடன் நெருங்க வேகமாய் எழுந்தவள்,
“என்னால இதுக்கு மேல நடக்க எல்லாம் முடியாது? நான் என்ன அவ்வளோ குண்டாவா இருக்கேன்?…” என்றவள்,
“முதல்ல ராஜமாதாவை வெய்ட்டை குறைக்க சொல்லுங்க. அவங்க தான் செம்ம வெய்ட். என்னால தாங்கவே முடியலை…” என்று பொரிய,
“அப்ப நான் வெய்ட்டை குறைக்க வேண்டாம்னு சொல்ற. தாங்க முடியுது…” என்றவனின் விஷமமான கேள்வியில் சட்டென்று திணறி நாணத்தை சூடியவள்,
“போயா அங்கிள்…” என்று அவனை தள்ளிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட அவனின் சிரிப்பு சத்தம் இவளை துரத்தியது.
“அங்கிள் ரொம்ப பேட்…” என சொல்லிக்கொண்டே இரவு உடைக்கு மாற அந்த உடையை எடுத்துக்கொண்டு திரும்பியவள் அங்கே விதுரனின் புகைப்படத்தில் தான் எழுதிய எழுத்துக்கள் எதுவும் இல்லாமல் அதில் வேறு வரையப்பட்டிருக்க,
“அடப்பாவி அங்கிள், நீயாய்யா அன்னைக்கு நான் சொன்ன ஐ லவ் யூவுக்கு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சது?…” என சிரித்து கொண்டவள் அதனருகே சென்று பார்த்தாள்.
அவள் எழுதியவை அனைத்தும் அழிக்கப்பட்டு லிப்ஸ்டிக் கொண்டு சிறிதும் பெரிதுமாய் இதழ்கள் வரையப்பட்டு இருந்தது. அதில் ஓரிடத்தில் இதழ்களுக்கு மத்தியில் விதுரன் ரோஜா என்றும் எழுதப்பட்டிருக்க மொத்த இதழ்களின் மத்தியில் சிரித்த முகத்துடன் விதுரன்.
அவளின் பின்னால் அவன் சத்தமின்றி வந்து நின்று அணைப்பதற்குள் அவனை உணர்ந்தவள் கையில் இருந்த உடைகளை கீழே போட்டுவிட்டு இடுப்பில் கை வைத்து,
“என்னமா வரைஞ்சிருக்கீங்க அங்கிள், சூப்பர். உங்களுக்குள்ள எதுவோ இருக்கு…” என சொல்ல அவளை அப்படியே கட்டிக்கொண்டவன்,
“இன்னும் நிறைய இருக்கு. ஆனா தெரிஞ்சுக்க நீ தான் மாட்டேன்ற. எப்ப தெரிஞ்சுக்க போற லிட்டில் டெவில்?…” என அவளின் கன்னத்தில் முத்தமிட,
“ப்ச் அங்கிள் வெய்ட் பண்ணுங்க இதோ வரேன்…” என்றவள் அவனை உதறிவிட்டு அறையில் அங்குமிங்குமாய் சுற்ற,
“என்ன தேடற ரோஜா?…” என்றான் சட்டென விடுபட்ட மயக்கத்தின் மிச்சம் இன்னும் முகத்தில் வீற்றிருக்க அவளை கை நீட்டி அழைக்க,
“ப்ச், கொஞ்சம் இருங்க. எங்க போக போறேன்?…” என அவனை கடிந்தவள்,
“ஹைய்யா இந்தா இருக்கு…” என்று தனது போனை எடுத்து வர,
“இப்ப எதுக்கு போன்? இந்நேரம் யார்ட்ட பேச போற?…” என விதுரன் கேட்க,
“யார்ட்டையும் இல்லை. இதை அப்படியே போட்டோ எடுத்து என் ஸ்டேட்டஸ்ல வைக்க போறேன். மை ஸ்வீட் அங்கிள்ன்னு…” என்று சொல்லி போட்டோ எடுக்க போக,
“ஏய்…” என அதிர்ந்தவன் பாய்ந்து வந்து அவளை பிடிப்பதற்குள் அவள் சுற்றிக்கொண்டு செல்ல,
“வேண்டாம் ரோஜா, சொல்றதை கேளு. போட்டோ எடுக்காத….” என அவளை சுற்றினான்.
“அங்கிள் அசையாம ஒரு இடத்துல நில்லுங்க. சரியா கேப்சர் ஆக மாட்டேங்குது. ஒரே ஒரு போட்டோ. என் ஞாபகத்துக்காவது…”
“அதெல்லாம் முடியாது. உன்னை நம்ப மாட்டேன்…” என்றவன் அவளுடன் அறைக்குள்ளேயே சடுகுடு ஆட என்ன முயன்றும் ரோஜாவை பிடிக்க முடியாமல் போக போட்டோவை கழற்றிவிட்டான் கடைசியாய்.
“இதெல்லாம் அநியாயம் அங்கிள்…” என அவனருகே கோபமாய் அவள் வர போட்டோவை கீழே வைத்தவன் அவளை பிடித்துக்கொண்டான்.
“எதையுமே சீரியஸா பார்க்க மாட்டியா நீ? இதை வச்சா…”
“வச்சா?…” என அவளும் அவனை போலவே சொல்ல,
“உன்னை என்ன தான் பன்றது லிட்டில் டெவில்?…” என்ற சன்னமான முணங்கலுடன் அவளை சிணுங்க வைத்து தங்களுக்கே உரித்தான பிரத்யோக உலகில் அவளோடு சிறகை விரித்து பறந்தான்.
அவனின் மோனநிலையை மீண்டும் கலைக்கும் விதமாய் அவனின் தோள்களை படபடவென தட்டிய ரோஜா,
“அங்கிள் அங்கிள்…” என படபடக்க,
“என்னாச்சு ரோஜா?…” என்று பதறி விலகினான் என்னவோ என்று.
“நல்ல நேரம் பார்த்த வாக்கிங் போறதை பத்தி. இவ்வளோ நேரம் இந்த ரூம்ல ஓடி புடிச்சோம் தானே? அதுக்கும் இதுக்கும் சரியாகிடுச்சு. இனி உன்னை பேசவே விட கூடாது…” என்றவன் அவளின் இதழ்களை முற்றுகையிட கண்மூடி மயங்கினாள் ரோஜா.