காலையில் எழுந்ததும் குளித்து கிளம்பி வருவதற்குள் வீட்டு வேலைக்கு வரும் பெண் வந்துவிட,
“நீங்க தான் மைனாவா?…” என கேட்டுக்கொண்டே ரோஜா வந்து அவரிடம் கேட்கவும் அவர் ஒரு சிரிப்புடன் காலை வணக்கத்தை சொல்லிவிட்டு படபடவென வேலை பார்க்க,
“அட இருங்க எதுக்கு இவ்வளோ வேகம்?…” என ரோஜா கேட்க,
“இல்லம்மா, இங்க முடிச்சுட்டு இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு போகனும். அங்க அரைநாள் வேலை. அதான் விடியலுலையே இங்க வந்துருவேன். தம்பி வேண்டாம்னு சொன்னா மட்டும் இருந்துப்பேன்…”
“ஓகே ஓகே…” என சொல்லி அவரை தொந்தரவு செய்யாமல் ரோஜா உள்ளே செல்ல,
“கிளம்பிட்டியா நீ?…” என ஷர்ட்டை டர்க்இன் செய்து கொண்டே அவளின் காதை பிடித்து இழுத்து கேட்க,
“வாயால கேட்டா பதில் சொல்லமாட்டேனா? இப்ப சொல்லவே மாட்டேன்…” என தனது ஹேண்ட்பேக்கை எடுத்து அதில் தேவையானதை எடுத்து போட,
“வா சாப்பிட்டு வந்து இதை எடுத்துக்கலாம். நீ வேற மெதுவா சாப்பிடுவ. அடுத்த வேலைக்கு அவங்க கிளம்பனும்…” என அவளை இழுத்துக்கொண்டு வேகமாய் சாப்பிட அமர அவனை முறைத்துக்கொண்டே சாப்பிட்டாள்.
“சொன்னது ஞாபகம் இருக்கு தானே ரோஜா? அங்க வந்து நீ பழைய மாதிரி இருக்க கூடாது. ஐ மீன், இப்ப நீ நம்ம பில்டிங் ஓனர்…”
“அந்த ஹவுஸ் ஓனர் மாதிரியா?…” என இடக்காய் கேட்டு அவனிடம் முறைப்பை வாங்கியவள்,
“ஹ்ம்ம் சரி சொல்லுங்க. இப்ப சொல்லுங்க எப்படி கேட்கறேன்னு பாருங்க அங்கிள்…” என்று சொல்லவும் ஒரு பெருமூச்சுடன் முதலாளியாய் அவளை நடந்துகொள்ள சொல்லி பாடம் எடுக்க அவள் அனைத்திற்கும் தலையசைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்து,
“மைனாம்மா, கார சட்னி சூப்பரா இருக்கு. இதை ரெண்டு பாக்ஸ்ல போடுங்க. என் ப்ரெண்ட்ஸ்க்கு கொண்டு போறேன்…” என்று அவரிடம் சொல்லிவிட்டு,
“சங்குக்கு கார சட்னினா உயிர் தெரியுமா அங்கிள்?…” என அவனை பாராமலே சொல்லி உள்ளே செல்ல,
“இவளை” என பல்லைக்கடிக்க மட்டுமே அவனால் முடிந்தது.
சற்று நேரத்தில் இருவரும் கிளம்பி நேராக அவர்களின் பில்டிங் வந்துவிட சங்கவியையும், ஸ்ரீநிதியையும் பார்க்க கொண்டு வந்த சாப்பாட்டு பேக்கை தூக்கிக்கொண்டு வேகமாய் இறங்கி ஓடிவிட்டாள் ரோஜா.
“ரோஜா, ரோஜா…” என விதுரனின் அழைப்பு அந்த காலி கட்டிடத்தில் பலமாக எதிரொலித்தது தான் மிச்சம்.
இவன் மேலே வரும் நேரம் சங்கவி, ஸ்ரீநிதியை கட்டிக்கொண்டு குதித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா. அவளின் செயலில் புன்முறுவல் தோன்றினாலும் அதனை மறைத்துக்கொண்டு அங்கே சென்ற விதுரன்,
“ரோஜா…” என அழைத்ததும்,
“நீங்க உங்க ரூம்ல இருங்க அங்கிள்…” என சொல்லியவள் நாக்கை கடித்துக்கொண்டு,
“அச்சோ, ஓகே ஓகே, இனி சொல்லலை. நீங்க ரூம்ல இருங்க. வரேன்…” என்றவள் அவர்களிடம் பேச்சில் நுழைய இருவரும் விதுரனை சங்கடத்துடன் பார்த்தனர்.
“குட்மார்னிங் ஸார்…” என்று அவர்கள் சொல்ல,
“குட்மார்னிங் ஸார்…” என ரோஜாவும் வேண்டுமென்றே சொல்லி விதுரனின் ரத்தவோட்டத்தை அதிகப்படுத்தினாள்.
“இவளை கூட்டிட்டே வந்திருக்க கூடாதோ? பேசாம அப்பாவோட அந்த ப்ராஞ்ச்க்கு அனுப்பிருக்கனும்.” என தன்னறைக்கு வந்தமர்ந்தவனுக்கு வேலையே ஓடவில்லை.
கோபமாய் ஸ்ரீநிதிக்கு போன் செய்து அன்றைய வேலையை கேட்டவனின் குரலில் அதிகப்படியான உஷ்ணத்தை உணர்ந்த ஸ்ரீநிதி அதை பற்றி பேச அவனறைக்கு சென்றாள்.
ரோஜாவும் உடன் வர ஸ்ரீநிதி சொல்லியதை உன்னிப்பாய் கவனித்தவள் அதில் தனது கருத்துக்களையும் சொல்ல விதுரனுக்கு எரிச்சல் உண்டானது.
“இது உன் வேலையா?…” என ஸ்ரீநிதி முன்னாலே ரோஜாவை கேட்க,
“இதுவும் என் வேலை தான்…” என ரோஜாவும் பதிலுக்கு சொல்ல,
“ஸார் நான் இதை சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என சொல்லிவிட்டு ஸ்ரீநிதி அங்கிருந்து கிளம்பிவிடவும் ரோஜா முறைத்தாள் விதுரனை.
“என்ன பன்றீங்க அங்கிள்? வரப்ப என்ன சொல்லி கூட்டிட்டு வந்தீங்க?…” என்று கோபமாய் கேட்க,
“அதே தான் நானும் சொல்றேன். ஸ்ரீநிதி இங்க வேலை செய்ய வந்தவங்க. இங்க ப்ரெண்ட்ஷிப் ரெண்டாவது தான். இந்த சேஞ்சஸ் எல்லாம் பண்ண தான் அவங்களுக்கு சம்பளம். அதையும் நீ பார்த்தா? அப்பறம் அவங்களுக்கு என்ன வேலை?…” என்று விதுரனும் கோபம் காட்ட,
“ப்ராஜெக்ட் பன்றவங்க டிஸைன் காண்பிக்க தான் செய்யுவாங்க. நம்ம கடைன்னு வரப்போ அங்க என்ன மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு பைனல் டிசிஷன் நாம தான் எடுக்கனும். ஐ மீன் நீங்க சொன்ன மாதிரி இந்த கடையோட முதலாளியா நானும் எனக்கு பிடிச்சதை சரின்னு தோணினதை சொல்லலாம் தானே? அந்த ரைட்ஸ் இருக்குது தானே?…” என்று அவனை வாயடைக்க செய்ய,
“ஹேய் லிட்டில் டெவில், நான் அந்த அர்த்தத்துல சொல்லலை…” விதுரன் பேச்சின் திசை மாறுவதில் திகைக்க,
“என்னை தலையிட கூடாதுன்னு என் ப்ரென்ட் முன்னாடியே நீங்க சொன்ன நாளைக்கு நீங்க இல்லாதப்ப நான் சஜஷன் சொன்னா அதை அவ ஏத்துப்பாளா? ஸார் வரட்டும், மோர் வரட்டும்னு தான் நிப்பா. கடை வேலையும் நிக்கும் இந்த ஸார் வர வரைக்கும். ஐ டோண்ட் கேர் சொல்லவா?…” என்றவளின் படபடப்பில் தலையில் கை வைத்துவிட்டான்.
“அது மட்டுமில்லை, அவங்க என் ப்ரெண்ட்ஸ், அவங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணாம இருக்க முடியாது. உங்க முதலாளி கெத்தை எப்ப காண்பிக்கனுமோ அப்ப காண்பிங்க. சும்மா எல்லா இடத்துலையும் தூக்கி சுமக்கனும்னு இல்லை…”
ரோஜா பேச பேச அதிகமாய் மூச்சு வாங்குவதை பார்த்தான் எழுந்து வந்தவன் அவளை,
“ஹேய் ரிலாக்ஸ் ரோஜா…” என்று அணைத்துக்கொள்ள,
“ப்ச், விடுங்க, மூச்சு வாங்க பேச வச்சிட்டு வந்து ஹக் பண்ணினா? நான் கோவமா இருக்கேன்…” என்றவளுக்கு தண்ணீரை எடுத்து தர,
“ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுது உனக்கு? வந்தது என் கூட. என்னை விட்டுட்டு நீ அவங்களோட கொஞ்சிட்டு இருந்தா எனக்கு டென்ஷன் ஆகாதா?…”
“அதுக்கு ஸ்ரீயை பேசுவீங்களா? அவ பாவம்…” ரோஜா பரிந்து கொண்டு வர,
“அதுவும் கல்யாணத்துக்கு பின்னால பர்ஸ்ட் டைம் இங்க வரோம். சேர்ந்து வரனும்னு நான் நினைச்சேன். நீ அதை கொஞ்சமும் புரிஞ்சுக்கலை…”
“புரிஞ்சுக்கலைன்னா என் கிட்ட முதல்ல சொல்லியிருக்கலாம் தானே? நீங்களா மனசுக்குள்ள நினைச்சா எனக்கெப்படி தெரியுமாம்?…” என சொல்லியவள்,
“ஐயோ போச்சு அவங்க சாப்பிட்டாங்களா என்னன்னு தெரியலை. ஸ்ரீ கண்டிப்பா சாப்பிட மாட்ட பாருங்க உங்களால…” என சொல்லி,
“நான் அங்க போகட்டுமா?…” என கேட்டு நிற்க அவளின் தலையில் மிதமாய் முட்டியவன்,
“போ…” என்று புன்னகைக்க,
“அங்கிள்னா அங்கிள் தான்…” என அவனின் கன்னம் கிள்ளிவிட்டு அங்கே ஓட புன்னகையுடன் சென்று தன்னிருக்கையில் அமர்ந்தான் விதுரன்.
ரோஜா சொல்லியதை போலவே ஸ்ரீயும், சங்கவியும் ரோஜா கொண்டு வந்ததை தொடக்கூட செய்யாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்க,
“டேக்ஸ், என்ன பன்ற? சங்கு உனக்காக தான்டி கொண்டு வந்தேன். சாப்பிடாம வேலையை கரைச்சு குடிக்கறதை போல மூழ்கி போய் இருக்கீங்க? எனக்கே படமா?…” என்று கேட்க,
“வேண்டாம் ரோஜா, வரப்போ சாப்பிட்டு தான் வந்தோம்…” என்று ஸ்ரீநிதி நிமிராமல் சொல்ல,
“நீ சாப்ட்டியான்னு கேட்கலை. சாப்பிடுன்னு சொன்னேன். அவர் ஏதோ டென்ஷன்ல பேசினா? நமக்கென்ன புதுசா இது?…”என்று சொல்லியும் இருவரும் அப்படியே இருக்க,
“ஒரு சீக்ரெட் சொல்லவா?…” என கிசுகிசு குரலில் ரோஜா ஆரம்பிக்க சங்கவி சட்டென நிமிர்ந்து ஆர்வமாய்,
“என்ன என்ன?…” என கேட்கவும் ஸ்ரீநிதி ரோஜாவை அறிந்தவளாய் வேகமாய் எழுந்து வந்து அவளின் வாயை மூட,
“அவளை சொல்ல விடு ஸ்ரீ…” என சங்கவி அவளின் கையை எடுத்துவிட வர இருவருக்கும் இடையில் ரோஜா தான் மாட்டிக்கொண்டு பேச முடியாமல் திணற, விதுரன் ரோஜாவிடம் சொல்லிக்கொண்டு வேறு கிளைக்கு செல்ல ஆயத்தமாகி வர,
“என்ன இது?…” என்றவனின் குரலில் மூவரும் அபாவ்ட்டன் போட்டனர் ஒரே போல.
“என்னன்னு கேட்டா பதில் சொல்லனும்…” என விதுரன் மீண்டும் கேட்க ஸ்ரீநிதி சொல்லாதே என்பதை போல ரோஜாவை கண்களால் சைகை காண்பிக்க சங்கவி ரோஜாவை பார்க்க,
“கொண்டு வந்ததை சாப்பிட மாட்டேன்னு சொன்னாங்க. அதான் ஒரு சீக்ரெட் சொல்லலாமேன்னு சொன்னேன். ஸ்ரீ சொல்லாதன்னு வாயை மூடிட்டா. சங்கு சொல்லுன்னு வந்தா. அதான்…” என ரோஜா போட்டுடைக்க,
“சீக்ரெட்டா?…” என்றவனிடம்,
“எல்லாம் நம்மளை பத்தி தான்…” என்று இலகுவாக அவனின் தலையில் குண்டை தூக்கி போட,
“வாட்?…” என்று அதிர்ந்தவன் எதை சொல்ல போகிறாளோ என ரோஜாவை முறைத்தவன்,
“சாப்பிட்டு வேலையை பாருங்க. உங்களுக்காக தானே பேக் பண்ணி கொண்டு வந்தா…” என்று சங்கவிக்கும், ஸ்ரீநிதிக்கும் சொல்லியவன்,
“இங்க வா, நீ…” என்று அவளின் கை பிடித்து அழைத்துக்கொண்டு கீழ் தளம் சென்றவன்,
“அந்த ரகசியத்தை எல்லாம் சொல்ற அளவுக்கு ரோஜா சின்னபிள்ளை இல்லை அங்கிள்…” என அவனை போலவே ரகசியம் பேச ஊஃப் என மூச்சை இழுத்துவிட்டவன்,
“உன்னை என்ன சொல்றதுன்னு சத்தியமா புரியலை. சரி நான் அப்பாவை பார்த்துட்டு மத்தியானம் வரேன். லஞ்ச் நான் வரப்போ கொண்டு வந்திருவேன். சேர்ந்து சாப்பிடலாம்…” என சொல்லவும் தலையாட்டி அவனை வழியனுப்பி வைத்தவள் தோழிகளுடன் ஐக்கியமாகினாள்.
வெகு நாட்களுக்கு பின்னர் மூவரும் சேர்ந்திருக்கும் தருணம். ஒரே கொண்டாட்டமாக நகர்ந்தது. அதிலும் வேலைகள் அதன்பாட்டில் நடக்க ரோஜா தங்கள் பெரியவீட்டு அனுபவங்களையும், அருப்புக்கோட்டை பயணத்தையும், கயல்விழியுடனான இணக்கத்தையும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
மதியம் விதுரனிடம் சேர்ந்து உணவை உண்டவள் அவன் வேலையில் ஆழ்ந்துவிட ரோஜா தோழிகளுடன்.
கிளம்பும் நேரமும் ஸ்ரீநிதி, சங்கவியுடன் பேசிக்கொண்டே அவர்களுடன் வீட்டிற்கு கிளம்பி விதுரனின் பிபியை இன்னும் ஏற்றினாள்.
“பழக்க தோஷம்…” என்று சொல்லி அசடு வழிய இப்படி செய்தால் இந்த கிளைக்கு அழைத்து வரமாட்டேன் என்றவனின் மிரட்டலுக்கு உடன்படுவதை போல அவள் அப்பாவியாய் முகத்தை வைக்க அவளின் முயற்சியில் அவன் தான் கோபத்தை கை விடவேண்டியதாக போனது.
இப்படி விதுரனின் திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சுவாரஸியமாக அனுபவிக்க கற்றுகொடுத்தாள் ரோஜா.
அவனின் குடும்பத்தினரிடம் அன்பு பாராட்டுவதாக இருக்கட்டும், வார இறுதியில் விதுரனுக்கு ஞாபகப்படுத்தாமல் கயல்விழிக்கு அழைத்து ஞாபகப்படுத்துவதாக இருக்கட்டும், அவரின் மூலம் விதுரனை அழைத்துக்கொண்டு பெரியவீட்டிற்கு சென்று கும்மாளமிடுவதாக இருக்கட்டும் ரோஜா ஒவ்வொன்றிலும் அவனை அதிகமாய் ஆகர்ஷித்தாள்.
அடுத்த சில நாட்களுக்குள் ஒருநாள் அவர்களின் ரிஷப்ஷன் வேறு கோலாகலமாய் நடந்தேறியது. தெரியாதவர்களுக்கும் ரோஜா தெரிந்தவள் ஆனாள்.
விதுரனுக்கு மட்டுமின்றி அவனின் குடும்பத்திற்கும் மிக மிக இன்றியமயாதவளாகி போனாள். குடும்பத்தில் அவளுக்கு தெரியாததென்று எதுவும் நடக்காது.
“ரோஜா உனக்கு விஷயம் தெரியுமா?” என்று ஆரம்பித்து அவளிடம் பேசி பேசி அவளின் மறுபேச்சில் மயங்கி போகாதவர் இல்லை.
அன்று வார இறுதி. ஆனால் கடையில் புது பர்னிச்சர்கள் வந்து இறங்குவதாக இருக்க சக்தியையும் அழைத்துக்கொண்டு விதுரன் கடைக்கு சென்றிருந்தான். வருவதற்கு மாலையாகிவிட்டது.
வந்த பின்னர் தான் மதிய உணவே உட்கொண்டவன் சிறிது நேரம் சென்று படுப்பதாக சொல்லி சென்றவன் மீண்டும் எழுந்து வர அனைவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர் இரவு உணவிற்கு.
உணவு தனியாய் வைக்கப்பட்டிருக்க வட்டமாக இளைஞர் பட்டாளம் மடியில் தலையணையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். விதுரனும் வரவும் அவனையும் விளையாட்டில் அழைக்க அவன் மறுத்து சோர்வுடன் வந்து மணிவாசகம் அருகே அமர்ந்தவன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொருவரிடமும் தலையணை மாறி வந்து நிற்கும் பொழுது அவரவர் அந்த குடுவையில் உள்ள சீட்டை எடுத்து அதில் உள்ளபடி செய்ய ஆர்ப்பாட்டமாக சென்றுகொண்டிருந்தது.
ரோஜாவிடம் இம்முறை வந்து தலையணை விழ எல்லோரும் போட்ட சத்தத்தில் கயல்விழி,
“ஷ் மெதுவா, அதை என்னன்னு அவ பார்க்கட்டும்…” என்று மருமகளுக்கு வந்த சீட்டை பார்க்க அதிலோ பாடவேண்டும் என எழுதி இருந்தது.
“கூச்சப்படாம பாடு ரோஜா…” என வைத்தீஸ்வரி சொல்ல,
“எனக்கென்ன கூச்சம்?…” என்றவள் விதுரனை பார்த்து,
“ராரா சரசக்கு ராரா…” என்று கட்டை குரலில் பாட அனைவரும் அதை ஏற்கமுடியாது என்று ஆட்சேபிக்க விதுரனுக்கு சிரிப்பு தாளவில்லை. வாய்விட்டு அவன் சிரித்து,
“அதான் வரலைன்றால, விடுங்கடா…” என அவனும் கேலி குரலில் சொல்ல அவனை மிதப்பாய் பார்த்தவள்,
“யார் சொன்னா வராதுன்னு?…” என்று கேட்க ‘அப்போ பாடேன்’ என்றவனின் பார்வையில் இருந்த கேலி புன்னகையில் ஆழ்ந்தவள் முகம் சட்டென மென்மை பூசியது. அவளின் முகப்பாவனையில் அனைவரும் அமைதியாக அவளின் குரல் தேனினும் இனிமையாய்.