பிரஷாந்தியின் கன்னத்தை பார்த்தவருக்கு அத்தனை ஆத்திரம் கிளர்ந்தது. விதுரனை அடித்து துவம்சம் செய்துவிடும் வேகம் அவரின் நடையில்.
நேரடியாக பிரின்ஸிபால் அறைக்கே சென்றுவிட அங்கே இவரின் திடீர் வருகையும் கோபமும் புரியாமல்,
“யார் ஸார் நீங்க?…” என்றவர் பிரஷாந்தியை பார்த்ததும் என்னவென புரிந்து போனது.
“என்னம்மா இப்ப எதுக்கு உன் அப்பாவை வர சொல்லியிருக்க?…” என கேட்க,
“என்ன ஸார், என் முன்னாடியே என் பொண்ணை மிரட்டற மாதிரி பேசறேங்க?…” என சேகரன் குதிக்க,
“ஸார், கொஞ்சம் அமைதியா பேசுங்க…” என்ற பிரின்ஸிபால்,
“சொல்லுங்க எதுக்காக இப்ப இத்தனை கோபமா வந்திருக்கீங்க?…” என அமைதியாக கேட்க,
“பதறிப்போய் வந்திருக்கேன் ஸார். பெத்தவன் நான் இப்படி வராம வேற எப்படி வருவேனாம்?…” என மேஜை மீது தட்டி அவர் கேட்க,
“ஸார் இங்க இதையெல்லாம் பண்ண கூடாது. பிரச்சனை என்னன்னு சொல்லுங்க…” என பிரின்ஸிபால் தன்மையாய் கேட்க.
“என்ன சொல்ல சொல்றீங்க ஸார்? என் பொண்ணு தேடி தேடி இந்த காலேஜ் வந்தா. இங்க பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லை. பாருங்க எப்படி அடிச்சிருக்கா அவன். இப்ப இதுக்கு ஒரு முடிவு கிடைக்காம நான் போக மாட்டேன்…” என்று திமிராய் சேகரன் அமர்ந்துகொள்ள,
“யாரம்மா உன்னை அடிச்சது?…” என்று அதிர்ச்சியாய் கேட்க பிரஷாந்தியின் முகத்தை ஆராய்ந்தது அவரின் பார்வை. கன்னம் சற்று வீங்கி தான் இருந்தது.
“சொல்லும்மா என்ன பிரச்சனை?…” என கேட்க,
“விதுரன் தான் அடிச்சார்…” என்று மட்டும் தான் சொன்னாள் அவள். வார்த்தைகளை மிக கவனமாக எண்ணி எண்ணி பேசினாள்.
“என் பொண்ணை பார்க்கலாம்னு இன்னைக்கு வந்தேன் ஸார். வந்து பார்த்தது இப்படி ஒரு கோலத்துல. ஏற்கனவே காலேஜ்ல அரசல் புரசலா ஏதோ பேசறாங்கலாமே? இது நல்லா இல்லைங்க. எனக்கு இதெல்லாம் புடிக்காது. பொண்ணு கலங்கி போச்சு…” என்று மகளை பார்த்துக்கொண்டே தகப்பனாய் அவர் பேசி பிரசாந்தி மனதிற்குள் தகப்பனை பாரட்டிக்கொண்டாள்.
அவள் சொல்லியதும் இது தானே? தானாக அழைத்தால் பிரச்சனையாகும் என்று தானே அவரிடம் அழுது பேசி சேகரனகாவே வந்ததை போல பிரின்சிபாலிடம் சொல்ல வைத்தது.
“விதுரனா?…” என்ற அதிர்ச்ச்யில் இருந்து மீளாமல் அவர் பிரஷாந்தியை பார்க்க அவள் கண்ணீருடன் தான் நின்றிருந்தாள்.
“நீ உண்மையா தான் சொல்றியா?…”
“ஆமாம் ஸார், அவரோட கிளாஸ் ரூம்க்கு வர சொன்னார். சீனியர்ன்னு என்னன்னு கேட்க போனேன். அப்போ தான் அடிச்சுட்டார்…” என்று மொட்டையாக விவரமாக சொல்லாமல் சொல்ல தலையை சுற்றியது அவருக்கு.
விதுரனுக்கு உடனே அழைத்தவர் தன்னறைக்கு வர சொல்ல அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அவனும் வந்துவிட்டான்.
வாட்டசாட்டமான தோற்றத்துடன் அவன் வந்து நின்றதும் வேகமாய் எழுந்த சேகரன் அவனின் சட்டையை போய் பிடிக்க பட்டென்று அவரின் கையை பற்றி,
“என்ன ஸார், எதுக்காக இங்க வர சொன்னீங்க? யார் இவர்? என் சட்டையை பிடிக்கார்?…” என்று கேட்டுக்கொண்டே சேகரனின் கைக்கு அழுத்தம் கொடுக்க,
“விட்டுருங்க ப்ளீஸ், என் அப்பா அவர். என்னை பார்க்க வந்திருக்கார். வந்தப்போ என்னை அடிச்சது தெரிஞ்சு இங்க வந்துட்டார்…” என்று விதுரனிடம் பிரஷாந்தி அழ அப்போது கூட அவள் மீது எந்த சந்தேகமும் வரவில்லை அவனுக்கு.
சட்டென சேகரனை விட்டவன் நேராக சென்று பிரின்ஸிபால் அருகில் நிற்க அவரோ இதனை எப்படி கையாள்வது என்ற படபடப்புடன் பார்த்தார்.
“நீங்க பிரஷாந்தியை அடிச்சீங்களாமாம் விதுரன். உண்மையா?…” அவருக்கு நம்பிக்கையே இல்லை. அதனால் அப்படி கேட்க,
“ஆமாம் ஸார், அந்த பொண்ணு நான் சொன்னதை கேட்கலை. அடிச்சேன்…” என்று கூடுதலாய் பிரஷாந்தியின் திட்டத்திற்கு பெரும் பாதை போல அவனும் பேச,
“பார்த்தீங்களா ஸார், இவன் என் பொண்ணை மிரட்டிருக்கான். கேட்கலைன்னதும் அடிச்சிருக்கான். எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கனும்?…” என்று அவர் குதிக்க,
“ஆமாம் மிரட்டினேன். இப்ப என்ன உங்களுக்கு? இதை தெரிஞ்சுக்க தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?…” என கேட்கவும் பிரஷாந்திக்கு குளுகுளுவென இருந்தது. ஆஹா என மகிழ்ந்து போனாள்.
“பார்த்தீங்களா அவனே ஒத்துக்கிட்டான். இவன் பேசற பேச்சிலேயே தெரிய வேண்டாமா? இவனோட தராதரம். முதல்ல இவனை சீட்டை கிழிச்சு துரத்துங்க. இனி இங்க இவன் படிக்க கூடாது. எங்கயும் படிக்க கூடாது…” என்று அதிகாரமாய் சொல்ல,
“அதை நீங்க சொல்ல கூடாது ஸார். அப்படி எல்லாம் பண்ணவும் முடியாது….” என்று பிரின்ஸிபால் சொல்லவும்,
“ஓஓஹோ, அப்ப நான் சேர்மனை பார்த்து அவர்கிட்ட சொல்றேன். அவரை வர சொல்லுங்க. இப்ப இங்க சேர்மன் வந்தாகனும். நான் பேசியாகனும்…” என்று சேகரன் ஒற்றை காலில் நிற்பதை போல நிற்க,
“அப்படி எல்லாம் நீங்க நினைச்சதும் நடந்திடாது ஸார்?…” என்று அவரும் பேச,
“எம்மனசு கொதிக்குது ஸார், என் பொண்ணை காதலிக்க சொல்லி மிரட்டிருக்கான். அடிச்சிருக்கான். போயும் போயும் இவனெல்லாம் என் பொண்ணுக்கு இணையா? இவன் தகுதிக்கு என் பொண்ணு கேட்குதா? எவ்வளவு தைரியம் இவனுக்கு? இவனுக்கு நான் யாருன்னு காண்பிக்காம நான் விடமாட்டேன்…”
சேகரன் சொல்ல சொல்ல விதுரனுக்கு குழப்பமாக இருந்தது. பிரஷாந்தியை பார்க்க கெஞ்சலுடன் அவனிடம் அழுகையுடன் பார்வையால் மன்றாடினாள் அவள்.
என்னவோ சரியில்லை என்று மட்டும் அவனுக்கு புரிய பிரின்சிபாலும் விதுரனின் அதிர்ந்த முகத்தை பார்த்துவிட்டு பிரச்சனையை சுமூகமாய் முடிக்க சேகரனை கொஞ்ச தனியாய் அழைக்க,
“இவனோட என் பொண்ணை தனியா விட்டுட்டு வரவா?…” என அவர் மேலும் பேச,
“ப்ச், ஸார் கேமரா இருக்கு. அதுவும் என்னோட ரூம். எதுவும் ஆகிடாது…” என சொல்லி உள்ளிருக்கும் இன்னொரு அறைக்கு அழைத்து செல்ல சென்ற நொடி விதுரனின் கையை பிடித்துவிட்டாள்.
“விது ப்ளீஸ், எங்கப்பாவுக்கு யாரோ இங்க இருந்து ராங் ந்யூஸ் அனுப்பிருக்காங்க. நாம லவ் பன்றோம்னு. அதுவும் நேத்து நீங்க என்னை அடிச்சது வேற அவர் பார்த்துட்டு நீங்க என்னை மிரட்டினதா நினைச்சுட்டார். இங்க பிரச்சனையை பேசி தீர்த்துட்டு என்னை ஊருக்கு கூட்டிட்டு போக போறார்…”
“அது உன் பிரச்சனை நான் என்ன பண்ண முடியும்? போதாததுக்கு உங்கப்பா நான் என்னவோ உன்னை போர்ஸ் பன்ற மாதிரி பேசறார். என்ன நடக்குது இங்க?…” என்று அவன் கோபமாய் பேச,
“சத்தம் போடாதீங்க ப்ளீஸ். ப்ளீஸ். இங்க இருந்து என்னை கூட்டிட்டு போனா யாருக்காச்சும் என்னை கல்யாணம் பண்ணி வச்சுடுவார். என்னால அதை ஏத்துக்கவே முடியாது. செத்துருவேன் நான்…”
“ஆர் யூ மேட்…” என்று விதுரன் எரிச்சலாக,
“உண்மை தான். உங்களை மறக்கவே எனக்கு நாளாகும். இதுல கல்யாணம் எல்லாம் என்னால முடியாது. ப்ளீஸ் நீங்க தான் என்னை காப்பாத்தனும்….”
“வாட்? நானா?…” என்று யோசனையுடன் பார்க்க,
“ஆமா, நீங்க தான். நீங்க நினைச்சா முடியும். ஒரே ஒரு பொய் சொல்லி என்னை அவரோட அனுப்ப முடியாதுன்னு சொல்லுங்க. அது போதும். நான் இங்கயே ஏதாவது வேலைய பார்த்து படிச்சுப்பேன். ப்ளீஸ் சொல்லுங்க….”
“இதென்ன விளையாட்டா போச்சா? அப்படி சொன்னா நான் கமிட் பண்ணிக்கிட்ட மாதிரி ஆகிடும். நோ வே…” என்றவனின் காலை அவள் பிடிக்க,
“எழுந்திரு முதல்ல என்ன பேச்சு இதெல்லாம். உனக்கு பார்த்து என்னால என் லைஃபை காம்ப்ளிகேட் பண்ணிக்க முடியாது…” என்று பிடிவாதமாய் மறுக்க அவனின் கையை பிடித்து கண்ணீருடன் இவள் மன்றாட சரியாய் வெளியே வந்த சேகரன்,
“டேய்…” என்று விதுரன் மேல் பாய,
“ஒழுங்கா நிக்கவே மாட்டீங்களா? எப்ப பாருங்க மேல பாய்ஞ்சு வந்து விழுந்துட்டு…” என்று அவரை தள்ளி நிறுத்தியவன் இன்னும் நிதானத்தில் இருக்க பிரஷாந்திக்கு படபடப்பாய் இருந்தது.
இதுவரைக்கும் நினைத்தது நடந்தது. இனி நடக்குமா என தான் பயமாக இருந்தது. விதுரன் என்ன பேச போகிறான் என்று பார்த்து இருக்க சேகரன் கோபத்தில் அவளின் அனைத்து குட்டுக்களையும் உடைத்தெறிந்தார்.
“பார்த்தீங்களா? என் பொண்ணை மிரட்டிட்டு இருக்கான். இப்பவும். என் பொண்ணு வரப்ப இவனை நினைச்சு பயந்துட்டே வந்துச்சு. அப்பா அவன் முரடன், என்னை பயங்காட்டி என்ன வேணா பண்ணுவான், அங்க நான் வரலைன்னு…”
சேகரன் சொல்லவும் வேகமாய் அவளை திரும்பி பார்த்த விதுரனின் கண்கள் கனலை காக்க அத்தனை கீழாய் பார்த்தான் அவளை. சட்டென குனிந்து கொண்டாள் பிரஷாந்தி.
“போச்சு அத்தனையும் போச்சு” என பயந்துகொண்டே தந்தையை பார்க்க அவரோ ஆட்டமாய் ஆடினார்.
“இதுக்கு மேல பொறுமையா எதுவும் பண்ண முடியாது. இனி இவன் இங்க இருக்கவே கூடாது. சேர்மனை கூப்பிடுங்க. இத நான் சும்மா விட போறதில்லை. திமிர காட்டுறானா?…” என்று சொல்லி கூச்சலிட,
“இப்ப என்ன சேர்மனை பார்க்கனும். அவ்வளவு தானே? பாருங்க…” என்ற விதுரன் பிரின்சிபாலை பார்க்க அவர் விலகி நின்றார்.
சட்டையை மடித்து கை வரை உயர்த்தியவன் தோரணையாய் வந்து பிரின்ஸிபால் சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு,
“சொல்லுங்க சேகரன், என்ன விஷயம்?…” என்று அதுவரை நடந்தவற்றை எல்லாம் ஒற்றை வார்த்தையில் ஒன்றுமில்லாததாய் மாற்ற அதிர்ந்து நின்றனர் சேகரனும் பிரஷாந்தியும்.
“நீ நீ இது…” என சேகரன் திணற,
“நீங்க வெளில இருங்க. பேசிட்டு கூப்பிடறேன்…” என்ற விதுரன் பிரின்சிபாலை அனுப்பிவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்,
“ஹ்ம்ம் இப்ப சொல்லுங்க, எப்படி எப்படி நான் உங்க பொண்ணை மிரட்டுனேன்? அதுக்குத்தான் அடிச்சேன். அப்படித்தான?…” என்று தெனாவெட்டாய் கேட்க,
“இல்லைன்னு சொல்லுவியா நீ? இது உன் காலேஜா இருக்கலாம். ஆனா உன்னை நான் சும்மா விடமாட்டேன்…” என்று சூளுரைக்க,
“யோவ், சொல்ல சொல்ல கேட்காம பேசிட்டே இருக்க? லோசா நீ? இத்தனை தூரம் தைரியமா நான் பேசறப்பவே உனக்கு புரிய வேண்டாமா? தப்பு என் பேர்ல இல்லைன்னு. உன் பொண்ணுதான் என்கிட்டே…”
“டேய், வாய மூடு, என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும். நீ தான இப்பவும் மிரட்டின. நீ பேச்சை மாத்தினா நான் நம்பிருவேனா? எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்கு. என் வளர்ப்பு அப்படி. ஆனா நீ உன்னை வளர்த்த…” என்று சொன்னதையே சேகரன் சொல்ல பட்டென்று எழுந்த விதுரன்,
“அவ்வளவு தான் உனக்கு. உன் பேரு சேகரன் தான? இப்படியே ஓடிப்போய்டு. கொலைவெறில இருக்கேன்….” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“உன்னை கம்பி எண்ண வைக்கவா?…” என்று வீரவசனம் பேச,
“சத்தியமா உன் மேல செம்ம கோவம் வருது. ஆனா உனக்குத்தான் தெரியலை உன்னை உன் பொண்ணு காமெடி பீஸா யூஸ் பண்ணிருக்கான்னு. முதல்ல அவளை நாலு சாத்து சாத்தி என்னன்னு கேட்டா அவளே சொல்லிருவா…” என்று விதுரன் சொல்ல சொல்ல பிரஷாந்தி பயந்து போனாள்.
இனியும் இப்படியே விட்டால் தன் தந்தையை பேசி பேசி தன் பக்கம் திருப்பி விடுவானோ என்று சுதாரித்தவள்,
“வேண்டாம்ப்பா, இனி நாம இங்க இருக்க வேண்டாம். போகலாம். இனி இங்க நான் படிக்க விரும்பலை. இது அவன் காலேஜ்ன்ற திமிர்ல தான் இப்படிலாம் பன்றான். போலாம்ப்பா. எனக்கு பயமா இருக்கு…” என மெல்லிய குரலில் தந்தையிடம் அழுதுகொண்டே சொல்ல,
“அப்பா இருக்கேன் பாப்பா, பயப்பட கூடாது…” என்று என்று மகளை சமாதானம் செய்தவர்,
“என் பொண்ணுக்காக நான் போறேன். இல்ல உன்னை பொலி போட்ருவேன்…” என்று மிரட்ட,
“உன்னால ஆனத பார்த்துக்க போ…” என்று எரிச்சல் மிகுதியில் அவன் சொல்ல மெதுவாய் திரும்பி பிரஷாந்தி பார்க்க,
“நீயெல்லாம் ஒரு பொண்ணு. ச்சீ” என்று பார்த்தவனின் பார்வையில் பிரஷாந்தி தான் வெகுண்டது.
அவள் தீட்டிய திட்டம் அவளுக்கே விடிந்ததை எண்ணி குமையாத நாள் இல்லை. அன்றே கல்லூரியை விட்டு அவள் சென்றுவிட பிரின்ஸிபால் விதுரனின் தாய்மாமாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவர் அழைத்துவிட்டார்.
“ஏன்டா மாப்ள ஒரு போன போட்ருந்தா வந்திருப்பேன்ல. வந்து அவன பொளந்துருக்க மாட்டேனா?…” என்று ஆதங்கமாய் பேச,
“விடுங்க மாமா, நான் பேசிட்டேன். உங்க சேரை நான் யூஸ் பண்ணிட்டேன்…” என்று விதுரன் சங்கடமாய் சொல்ல,
“அடேய் அது நம்ம காலேஜ்டா. உன்னோடது. உனக்கில்லாத உரிமை யாருக்கு உண்டு சொல்லு…” என்று அவனை சமாதானம் செய்தார்.
வீட்டினருக்கு விஷயம் தெரிந்தாலும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் அவனின் இறுக்கம் இன்னும் அதிகமாகியது. சாதாரணமாக கூட யாரும் தன்னிடம் பேச அவன் அனுமதித்ததில்லை.
ரோஜாவிடம் மொத்தமாய் சொல்லி முடித்து அவளின் முகத்தையே அவன் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“என்ன ரோஜா எதுவுமே பேசலை?…” என படபடப்பாய் கேட்க,
“அவ்வளோ தானா? முடிஞ்சதா?…” என்று கதை கேட்பதை போல அவள் சொல்ல,
“நான் சொல்றது உனக்கு கதை போல இருக்கா?…” என்று அவன் ஆதங்கமாய் கேட்க அவனின் ஆதங்கம் அவள் தான் சொல்லியதை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்பதனால்.
சட்டென வாயிற்றை பிடித்துக்கொண்டு அவள் சிரிக்க ஏனென்று புரியாமல் அவளையே பார்த்திருந்தான்.
“கடைசில அந்த ஐடியா பார்ட்டி நீங்க தானா? இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. ஒரே காலேஜ், ஜஸ்ட் பார்த்திருப்பீங்க. இல்லைனா இந்த பிரச்சனை தெரிஞ்சிருக்கும்னு தான் நினைச்சேன்…”
“எனக்கு புரியலை. என்னன்னு சொல்லு…” என்றவனிடம்,
“உங்க காலேஜ்ல நீங்க சொன்ன அந்த இன்சிடன்ட் நடந்ததும் விஸ்கியை அன்னைக்கே அப்பா கூட்டிட்டு ஊருக்கு வந்துட்டார். வந்து ரெண்டு நாள்ல அவ ப்ரெண்ட்கிட்ட போன்ல பேசினப்போ நான் கேட்டேன்….”
“என்னன்னு?…”
“உங்களை உண்மையா லவ் பண்ணிருப்பா போல. அழுதா…” என்றதும் முகம் சுளித்தவன் எரிச்சலாக,
“ஹ்ம்ம், அப்ப கொஞ்சம் அப்படித்தான் இருப்பேன். ஆனா அப்படி கோபப்படறது ரொம்ப கம்மி தான்…”
“அதை தான் மெயின் பாய்ண்டா விஸ்கி யூஸ் பண்ணிருக்கா. கடைசியில உங்கள நினைச்சு பயந்தா மாதிரி அப்பாக்கிட்ட ஓவரா ஸீன் போட அப்பா நீங்க பிரச்சனை பண்ணிருவீங்கன்னு நினைச்சு அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை பண்ணிட்டார்…” என இலகுவாய் சொல்லி,
“நிஜமாவே ஈகோ இருக்கா என்ன? நான் பார்த்ததில்லை…” என்று கண் சிமிட்டி அவள் சொல்லவும் மனது லேசான உணர்வு. அவளை இழுத்து தோள் சாய்த்துக்கொண்டவன்,
“ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?…” என்று நெகிழ்வான குரலில் சொல்ல,
“ஆனா எனக்கு கோவம் தான். நீங்க ஏன் அமைதியா வந்தீங்க அவ அத்தனை பேசியும்?…” என்று சிணுங்க,
“நீ கேட்டியா?…” என்றதற்கு தலையசைத்தவள்,
“அவ பேசினது எனக்கு பிடிக்கலை. நான் வந்தா இன்னும் பேசுவா நானும் பேச வேண்டியதாகிடும். அதுவும் உங்க முன்னாடி. அதான் எதுவுமே பேசாம வந்துட்டேன்…” என்ற ரோஜாவின் குரலில் தன் அக்காவின் செயலினால் உண்டான குன்றல் அவளின் குரலில் தெரிந்தது.
“ஹேய் ஈஸி லிட்டில் டெவில்…” என அவளை தேற்றும் குரலில் அவன் சொல்ல எதுவும் பேசாமல் அமைதியாய் மடி சாய்ந்துகொண்டாள்.
ஆனால் அந்த அமைதி விதுரனுக்கு வாய்க்க பெறாது. பிரஷாந்தி பற்றி சுயநலம் பிடித்தவள் என்பதும் தான் தப்பிக்க என்ன வேண்டுமானாலும் செய்பவள் என்று மட்டுமே அவன் நினைத்திருந்தான்.
ஆனால் ரோஜாவிடம் அவள் செலுத்திய அதிகாரங்கள் பற்றி தெரியவரும் பொழுது அவனின் மனநிலை?