கடை வேலை எல்லாம் எப்போதோ முடிந்து விட்டிருந்தது. திறப்பு விழாவிற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. சங்கவியும் ஸ்ரீநிதியும் இப்பொழுது வேறொரு ப்ராஜெக்டில் இருக்க சந்திப்பது கூட மிக கடினமாக இருந்தது தோழிகளுக்கு.
அன்று ஞாயிற்று கிழமை. சக்தியின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ரோஜா சொல்ல விதுரனுக்கு அவள் முயற்சி புரிந்தது.
“இது நமக்கு தேவையா? ஒருத்தரை டைவர்ட் பண்ணி பிடிக்க வைக்கறது எல்லாம் சரி இல்லை ரோஜா…” என அவனுக்கு தோன்றியதை சொல்ல,
“முதல்ல இப்படி நெகட்டிவா பேசாதீங்க. பெரியவங்க சொல்லுவாங்க கருத்தில் படாதது கண்ணிலும் படாதுன்னு…”
“ம்ஹூம் மாத்தி சொல்ற…”
“பரவாயில்லை. நமக்கு எப்ப எப்படி சொல்ல தோணுதோ அப்படி பாஸிட்டிவா எடுத்துக்கனும். இப்ப என்னை கூட்டிட்டு போங்க…” என்று சொல்ல,
“இதுக்குதான் அவன் கூட அப்பப்ப வீடியோ கால்ல பேசி பேசி பழகினயோ?…” என்றான் விதுரன் சக்தி வீட்டிற்கு சென்றதுமே.
அங்கே சென்றதும் குழந்தை ரோஜாவிடம் அப்படி ஒட்டிக்கொள்ள,
“ரோஜாவை பிடிக்காதவங்க உண்டா என்ன?…” என்று கண் சிமிட்டி அவள் சொல்லியவிதம் அவனின் இதழ்களில் புன்னகையை தோற்றுவிக்க,
“நெக்ஸ்ட்…” என்றான் அவன்.
என் ப்ரெண்ட்ஸ் வீடு தான். போவோமா?….” என்றவள் குழந்தையை கேட்க,
“போலா…” என குழந்தையும் சொல்ல,
“நாங்க போய்ட்டு வரோம் ஆன்ட்டி…” என சக்தியின் தாயிடம் சொல்லி விடைபெற,
“சக்தி வந்தா திட்டுவான்…” என அவர் பயந்து பேசினார்.
“ரோஜா கூட்டிட்டு போனேன்னு சொல்லுங்க…” என்றவள் அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
காரை ஓட்டியபடி ரோஜாவையும், அவளின் மடியில் இருந்த சிறுவனையும் மாறி மாறி பார்க்க,
“என்ன அங்கிள் லுக்கு?…” என்று திரும்பாமலே அவள் கேட்க,
“ஹ்ம்ம், லவ்னாலே சுத்தமா புடிக்காத என்னை என்ன வேலை பார்க்க வைக்கிற தெரியுமா?…” என்றான் சற்று மனத்தாங்கலுடன்.
“இது இரு மனங்களை சேர்த்து வைக்கிற வேலைன்னு நீங்க நினைக்கறீங்க அங்கிள். ஆனா நான் இந்த குழந்தையோட எதிர்காலம் சரியா இருக்கனும்னு நினைக்கறேன். தப்பா?…”
“உன்னை தப்பு சொல்ல முடியுமா?…” என அவனும் பயந்தது போல சொல்ல,
“நாங்க போய் கண்ணனோட அம்மாவை பார்த்துட்டு விளையாடிட்டு தான் வருவோம்…” என்று மடியில் இருந்தவனை கொஞ்ச விதுரன் மனைவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தபடி சாலையிலும் கவனமாய் இருந்தான்.
அவனுக்கு ஒன்று மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அதை எத்தனையோ விதமாக கேட்டும் பார்த்துவிட்டான்.
குழந்தை பற்றி அவன் பேசும் நேரமெல்லாம் அவளிடம் எந்த பதிலுமே வராது. அந்த பேச்சுவார்த்தையில் சிறு தலையசைப்பு கூட இராது அவளிடத்தில். ஏனென்று புரியாவிட்டாலும் அதன் பின் அப்படி பேசுவதை வைத்துக்கொள்ளவில்லை.
கீழே அப்பார்மென்ட் வாசலில் இறங்கிக்கொண்டவள் விதுரனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு மேலே வந்தாள்.
“எங்க போவாம்? நம்ம எங்க? ஆர் வீட்டு?…” என்றான் அந்த நான்கு வயது குழந்தை.
“வீட்டுக்கு போகவும் நீயே பார்த்துப்ப…” என்று சொல்லவும் அவளின் கை பிடித்து மெதுவாய் பேசிக்கொண்டே அவன் வர வாசலில் நின்று பெல் அடித்ததும் வந்து கதவை திறந்தது சங்கவி.
ரோஜாவை பார்த்ததும் ஆர்ப்பாட்டத்துடன் அணைத்தவள் அவளின் கையில் ஒரு குழந்தையை பார்த்ததுமே அவளுக்கு பிடித்துவிட உடனே தூக்கிக்கொண்டவள்,
“யாரோட குழந்தைடி, செம்ம க்யூட்டா இருக்கு…” என சொல்லி உள்ளே வர,
“ரோஜா வந்தாச்சா?…” என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீநிதி தலையில் டவலை கட்டிக்கொண்டு வந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்தாள்.
“வா ரோஜா. பரவாயில்லை, இவ்வளவு நாள் கழிச்சு வர உனக்கு டைம் கிடைச்சதே…” என வேகமாய் வந்து அவளை அணைத்த பின் சங்கவியின் கையில் இருந்த குழந்தை,
“அம்மா…” என்று அழைத்ததும் வேகமாய் திரும்பி பார்த்தவள் சிரிப்பு அப்படியே உறைந்துபோனது உதட்டிலேயே.
“ஹேய் டேக்ஸ் உனக்கு தெரியாதுல, இது நம்ம சக்தி ஸாரோட குழந்தை. ச்சே அவர் அண்ணன் குழந்தை போல. ஆனா அவரை தான் அப்பான்னு கூப்பிடுது. ரொம்ப ஸ்வீட்…” என்ற ரோஜா,
“பார்ரா உன்னை பார்த்ததும் அம்மான்னு சொல்றதை…” என அதிசயிப்பதை போல வேண்டுமென்றே ரோஜா பேச சங்கவியிடமிருந்து இறங்கிய குழந்தை ஸ்ரீயின் கால்களை கட்டிகொண்டது.
“அம்மா, தூக்கு, அம்மா தம்பி தூக்கு…” என்று அவனின் குரல் ஸ்ரீக்கு அழுகையை உண்டு பண்ண மிகவும் பலவீனமாய் உணர்ந்தாள் தன்னை.
“இதுக்காகத்தான இவனை பார்க்கவே கூடாதுன்னு இருந்தேன். என்னை எல்லாரும் சேர்ந்து கார்னர் பன்றாங்க” என நெஞ்சம் விம்ம துடித்தவள் அவனின் கைகளை எடுத்துவிட்டு வேகமாய் நகன்றுவிட குழந்தையும் அழ ஆரம்பித்தது.
“கண்ணா ஏன் அழறீங்க?…” என அவனின் உயரத்திற்கு தரையில் மண்டியிட்டு ரோஜாவும் அமர்ந்து அவனின் கண்ணீரை துடைக்க,
“அம்மா, பேசல, தம்பி தூக்கல. அம்மான்னா கோவாம் தம்பி கோவாம். அம்மான்னா தம்பிட்ட கோவாம்?…” என்றவனின் வார்த்தையில் அத்தனை தெளிவு. பிசிறு தட்டாமல் அவன் கேட்ட கேள்விகள் ரோஜாவையும் கலங்கடிக்க,
“நீ கேட்கிறது புரியுதே கண்ணா. எனக்கும் தெரியாதே அம்மான்னா எப்படி இருப்பாங்கன்னு. எப்படி பேசுவாங்கன்னு. இப்படித்தான் இருப்பாங்களோன்னு?…” என்று லேசாய் கலங்கிய கண்களுடன் ரோஜாவும் பேச,
“லூசாடி நீ, குழந்தை தான் தெரியாம பேசறான். நீயும் சேர்ந்து கண்ணை கசக்கிட்டு. சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்துல…” என்று சங்கவி தான் பேச்சை மாற்ற,
“சும்மா ஜஸ்ட் ஒரு பீலிங்…” என்று கண்களை ஒற்றி கொண்டவள்,
“என்ன லஞ்ச் ரெடியா? இன்னைக்கு குட்டி பாஸ்க்கும் இங்க தான் லஞ்ச். ரெடி தானே? எங்க நம்ம குக்கிங் எக்ஸ்பர்ட்?….” என்று வேலைக்கார பெண்ணை தேட,
“நீ அவளை கண்டுக்காத, தானா வருவா. ஏதோ அப்சட்ல இருக்கா…” என்று ரோஜாவை அழைத்து சென்றவள்,
“ஸார் வருவாருன்னு பார்த்தா அவர் வரவே இல்லை. ஓகே, அவருக்கும் சேர்த்து தான் செஞ்சது. போறப்போ பேக் பண்ணிக்கோ…” என்றவள் பேசிக்கொண்டே இருக்க ரோஜாவிற்கும் கண்ணனுக்கும் பதில் சொல்லவே நேரம் சரியாக இருந்தது.
அறையில் ஸ்ரீநிதி தலையில் கை வைத்தபடி சோகமாய் அமர்ந்திருந்தாள். கண்ணை மூடினால் கூட கண்ணன் தான் தெரிந்தான்.
சில நாட்களாகவே வீட்டில் அவனிடம் பேசுகிறார்கள் என்று தெரியும் தான். அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக அவனின் வீடியோஸ் சிலவற்றை அனுப்ப, அவன் தாய் என நினைத்து தன்னை சொல்லி கொஞ்சுவதை அனுப்ப என்று ஸ்ரீயை கரைக்க தான் பார்த்தனர்.
ஸ்ரீநிதியின் அம்மாவிற்கு மூத்தமகளின் மகனை அப்படியே விட மனமில்லை. அதிலும் சக்தியின் அம்மா பேசிய திருமண பேச்சில் முழுவதுமாய் அவர்களுக்கு துணையாய் நின்று மகளை தான் வறுத்துக்கொண்டிருந்தார்.
இப்பொழுது செண்டிமெண்டாக குழந்தையை வைத்து ஆரம்பித்திருக்கிறார்கள். கரைக்க கரைக்க கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தையின் அன்பு அவளை கரைய வைத்தது. ஆனாலும் பிடிவாதம் தந்தையை கொண்டு.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் ரூம்ல இருப்ப? வந்தது பிடிக்கலைனா சொல்லு நான் கிளம்பறேன்…” என்று ரோஜா சொல்ல வேகமாய் அவளிடம் வந்த ஸ்ரீ தோழியை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
மனதின் வெகு வருடங்களுக்கான அழுத்தம். அழட்டும் என்று ரோஜாவும் அவளை தடுக்காமல் இருக்க ரோஜாவை தேடி வந்த கண்ணன்,
“அச்சோ அம்மா அழா, நோ அழா…” என்று சொல்லி ஸ்ரீயின் உடையை பற்றி தன்னுயரத்திற்கு இழுத்தது. உடனே அமர்ந்தவளின் கன்னத்தின் கண்ணீரை பிஞ்சு கரங்களால் துடைக்க உடைந்துபோனாள் ஸ்ரீநிதி.
“ஸாரிடா ஐம் சோ ஸாரி கண்ணா, யாருக்கோ தண்டனை குடுக்கறதா நினைச்சு உன்னை தள்ளி வச்சுட்டேன்….” என்று அவளின் அழுகையில் குழந்தையும் மிரண்டு அழ,
“அம்மா அழா, கண்ணா அழா…” என்று திரும்ப சொல்லவும் வேகமாய் தன் கண்ணீரை துடைத்த ஸ்ரீ,
“இல்ல அம்மா அழலை. பாரு அழலை…” என்று அவனை கட்டிக்கொண்டவள் அவனுக்கு முத்தங்களை வாரி இறைக்க கண்ணனுக்கு மூச்சு முட்டியது.
“ஹ்ம்ம், ம்மா…” என்று திணறவும் தான் அவனை விடுவித்து நிமிர்ந்து ரோஜாவை பார்த்தாள். ரோஜா இவளை அமைதியாக பார்த்தாள் சங்கவியோ அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“ஸ்ரீ உனக்கு கல்யாணம் ஆகி இத்தனை பெரிய பையன் இருக்கன்னு சொல்லவே இல்ல. நீயெல்லாம் ஒரு ப்ரெண்ட். அதுவும் குழந்தையை இரக்கமே இல்லாம விட்டுட்டு வந்திருக்க. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி? ராட்சசி. அதுவும் யாரை…” என்ற சங்கவி மேலும் என்ன பேசியிருப்பாளோ என்னவோ,
“அடியேய் சங்கு, கொஞ்சம் அடக்கி வாசி. குழந்தை இருக்கான். சாப்பிட்டு அவனை தூங்க வச்சு அப்பறமா கதை பேசுவோமா?…” என்ற ரோஜாவின் கூற்றில் குழந்தையை பார்க்க அவனோ ஸ்ரீயின் கழுத்து வளவில் பாங்காய் சாய்ந்து இருந்தான்.
“அடேய் குட்டிப்பையா வா என்னோட. உன் அம்மா கூட டூ விடு…” என்று அவனை அள்ள குழந்தை மாட்டேன் என்று துள்ள,
“அவன்தான் வரமாட்டேன்னு சொல்றான்ல. விடுடி…” என்று ஸ்ரீ பாய்ந்து வாங்கிக்கொள்ள,
“அதுசரி, புதுசா இன்னைக்குத்தான் பாசம் பொங்குது உனக்கு…” என்று கடுப்பாய் சங்கவி சொல்ல,
“சங்கு…” என்ற ரோஜாவின் குரலில்,
“ஊதலை, போதுமா…” என்று வாயை மூடிவிட்டு வெளியே சென்றுவிட ஸ்ரீநிதி அமைதியாய் குழந்தையுடன் வந்தாள்.
மூவருமாக குழந்தையுடன் சேர்ந்து சாப்பிட ஸ்ரீ அவனுக்கு ஊட்டிக்கொண்டே தானும் உண்டாள்.
அக்கா குழந்தை என்ற பாசம் ஒருபுறம் இருந்தாலும் அவளுள் உள்ள தாய்மை தன் மகனாக நினைக்க வைத்தது.
சாப்பிட்டு முடித்த சில நிமிடத்தில் சங்கவி ரோஜாவுடன் விளையாடி களைத்ததில் குழந்தை உறங்கிவிட உள்ளே படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தாள் ஸ்ரீநிதி.
“என்ன முடிவு பண்ணியிருக்க?…” என்று ரோஜா கேட்டதும்,
“அப்ப உனக்கும் எல்லாம் தெரியுமா? நான் தான் அவுட்டா? இனி நானும் என் லைப்ல உங்களை ஆட்டைக்கே சேர்க்க மாட்டேன். போங்கடி. நல்ல ப்ரெண்ட்ஸ் வந்து வாய்ச்சாளுங்க எனக்குன்னு…” என்று கோபித்துக்கொண்டு விலாசினிக்கு அழைக்க அவளோ எடுக்கவே இல்லை.
“அவளை ஏன் டிஸ்டர்ப் பன்ற? இந்நேரம் நல்லா தூங்கிட்டு இருப்பா. பேசாம இருக்க மாட்ட…” என்று ரோஜா சங்கவியின் மொபைலை பறிக்க,
“அராஜகம் பன்றீங்கடீ. நானும் சொல்லாம் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையோட உங்களுக்கு ஷாக் குடுத்தா தான் என மனசு ஆறும்…” என்று வாய்க்கு வந்ததை சங்கவி பேச ஸ்ரீயும், ரோஜாவும் சிரித்துவிட்டனர்.
“சொல்லிட்டு சபதம் போடற நீ?…” என்ற ஸ்ரீ பின் சுருக்கமாய் தங்கள் குடும்பத்தை சொல்லியிருக்க சங்கவி ஆவேன பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“பொண்ணு கேட்டு வந்தன்னைக்கு கூட குழந்தையை பார்த்தா மனசு மாறிடுமேன்னு தான் அவன் பக்கம் திரும்பாம இருந்தேன். அதுவும் அப்பாவோட இறப்பு, வித்யாவோட இறப்புன்னு எல்லாமே என்னை யோசிக்கவிடலை. யோசிச்சாலும் அந்த முடிவு தான் எனக்கு வந்திருக்கும்…”
“இப்ப கொஞ்சம் நாளா இவனை வச்சு என்னை கார்னர் பன்றாங்க. ரொம்ப நெருக்கறாங்க. சக்தியை கல்யாணம் செய்யனும்னு வாய் வார்த்தையா சொல்லலை. ஆனா கண்ணன் அம்மா அம்மான்னு என்னை தேடறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியலை ரோஜா…”
“கொஞ்சம் நாளா சக்தியை பார்க்க வேண்டியதில்லாம நிம்மதியா இருந்தேன். உண்மையில் உங்க ஷாப் இண்டீரியர் முடியவும் ரொம்ப ப்ரீயா பீல் பண்ணினேன். ஆனாலும் என்னால முடியலை. கண்ணன் என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பன்றான்…”
“அவனை நினைக்காம இருக்கவும் முடியலை. அவனை விலகவும் முடியலை. இப்போலாம் அவனோட அடுத்த வீடியோவை என் தம்பி எப்போ அனுப்புவான்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டேன் என்னை அறியாமலே. என் மகன்ற ஒரு உரிமையே உண்டாகிடுச்சு. ஆனா அதுக்காக கல்யாணம் அதுவும் அந்த குடும்பத்தோட…”
“என்னால சக்தியை மேரேஜ் பண்ணிக்க முடியவே முடியாது. அந்த வீட்டுக்குள்ள வாழவும் முடியாது. அங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் குடும்பம் இப்படி ஆனதுக்கு காரணம் அவங்கன்ற நினைப்பே எல்லாரோட நிம்மதியையும் பறிச்சிடும்…” என தன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி முடிக்க,
“சரி இப்போ கண்ணனை என்ன பண்ணுவ? அவனுக்கு என்ன பதில் சொல்லுவ?…” சங்கவி கேட்க,
“நானா அவனை என்னை அம்மான்னு கூப்பிடுன்னு சொன்னேன்? என்னை வச்சு அவங்க குழந்தையை ஏமாத்தி இப்ப அவன் நான் இல்லைன்னா…” என்று நினைக்கும் பொழுதே அவளுக்கு நெஞ்சடைத்தது.
“குழந்தைக்காக சக்தியும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்கறதா அவங்கம்மா சொல்றாங்க…” ரோஜா சொல்லவும் ஒரு நிமிடம் யோசித்த ஸ்ரீ,
“ஒரு விஷயம் வேணும்னா சொல்லலாம், பேசாம நான் கண்ணனை தத்தெடுத்துக்கறேன். சக்தியை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லிடு. இதை மட்டும் எனக்காக பேசு ரோஜா. இப்ப என்னாலையும் கூட கண்ணா இல்லாம இருக்க முடியாது. ப்ளீஸ்…”
“வெல், சூப்பர்ப் ஸ்பீச்…” என்று கை தட்டிக்கொண்டே சக்தி வர அவனுடன் விதுரனும்.