“உங்க க்ரூப் இந்த தமிழ்நாட்டுல பெரிய உசத்தினா அது உங்களோட. உங்க தொழில் வட்டத்துல நீங்க பெரிய அதுன்னா என் சைட்ல நான் பெரிய இது தான். சும்மா என்னை அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க…” என்று வாய்க்கு வந்ததை பேச சட்டென அதில் விதுரனுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது.
“நான் பேசுவேன் தான். ஆனா எல்லார்க்கிட்டையும் இந்த பேச்சு எனக்கு வந்திடாது. நீங்க அப்ஜெக்ட் பண்ணாம என்னை பேச வச்சீங்க. உங்களுக்கு என்ன பெரிய இவன்னு?…” என்றவள் நிறுத்தி தன் தலையில் தட்டிக்கொண்டவள்,
“பெரிய இவர்ன்னு நினைப்பா? அந்தளவுக்கு நினைப்பு இருந்தா அது உங்களோட. சோ இந்த மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆடரை எல்லாம் வேற யாருக்காச்சும் போடுங்க. ஓகே. என்கிட்டே உங்க ஆடர்க்கு எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்காது. எல்லாம் ட்ராஷ் தான்…” என்றவள்,
“நான் என் கேபின் போறேன் ஸார்…” என சொல்லி சென்றாள்.
அத்தனை கோபமாக பேசியவள் சட்டென தன் முகபாவனையை மாற்றிவிட்டு ஒற்றை வார்த்தையில் அவனை முதலாளியாய் நிறுத்திவிட்டு சென்றுவிட்டாள்.
அத்தனை கோபம் ரோஜாவிற்கு. அவன் மீது காதலாய் இருந்தும் அவனிடம் தெரிவிக்க கூடாது என்று முடிவெடுத்த பின்னர் அவன் இப்படி அவளை பேசலாமா என கோபம் கோபமாய் வந்தது.
சொல்லவேண்டும் என நினைத்து சொன்ன வார்த்தை அல்ல. அவளறியாமல் சொல்லிவிட்ட வார்த்தை தான். ஆனால் அதற்கு இத்தனை தூரம் தன்னை பேசியிருக்க அவன் என்ன இவனா என்று தான் நினைத்தாள்.
ஒரே நாளில் காதல் உணர்ந்து, கரைந்து, அந்த கனவு கனவாவே கலைந்து மிகவும் களைத்து போனாள் ரோஜா.
“விது…” என்று சக்தி வந்து அழைத்ததும் தான் அவன் உணர்விற்கே வந்தான்.
“சக்தி நான் வந்து தப்பா எதுவும் பேசலைடா…” என்றான் தடுமாற்றத்துடன்.
“அந்த பொண்ணு தெளிவுன்னு நீ தான் சொன்ன. இப்ப நீயே அவளை ஹர்ட் பண்ணிட்ட…” என்றவன் நின்ற இடத்தில் இருந்து கேபினுக்குள் இருந்த ரோஜாவை பார்க்க அவள் கணினியில் ஆழ்ந்தது போல் இருந்தாள்.
“சமாதானம் செய்ய போறியா?…” என்று சக்தி கேட்க,
“ப்ச், நோ நோ, இதுவும் நல்லது தான். இன்னைக்கு விளையாட்டுக்கு பேசி இதுவே. ப்ச், வேண்டாம் இந்த கோபம் கூட நல்லது தான் சக்தி. நானும் நிறைய ஓவர் அட்வான்டேஜ் எடுத்துட்டேன். அதே நேரம் ஈஸியா அப்ரோஜ் பன்ற மாதிரி இடம் குடுத்துட்டேன். சின்ன பொண்ணு விளையாட்டுக்கு பேசறேன்னு இதை பேசறா…”
“விது போகலாமா?…”
“ஹ்ம்ம் எஸ்…” என்று கிளம்பியவன் பார்வை ரோஜாவை திரும்பி பார்க்க முயன்றது. அதனை தவிர்த்து வேகமாய் கிளம்பிவிட்டான்.
ஆனால் அன்று இரவும் முழுவதும் உறக்கம் என்பதே இல்லை. கண்ணை மூடினால் கோபாவேசமான ரோஜாவின் கலங்கிய முகமே அவனை இம்சித்தது.
ரோஜா என்னும் கலகலப்பான பெண்ணிடம் இப்படி ஒரு பரிமாணத்தை அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
அவனின் மனமோ, “அப்பப்பா எத்தனை கோபம், எத்தனை உணர்ச்சிகள் அந்த முகத்தில்?” என்று நினைத்துக்கொண்டே இருந்தது.
மறுநாள் வழக்கம் போல ரோஜா வேலைக்கு வந்துவிட அங்கே வந்து விதுரனிடம் வழக்கம் போல அன்று நடக்கும் வேலைகளை அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
என் வேலையை நான் பார்க்கிறேன் என்னும் பாவனை மட்டுமே. அதில் கொஞ்சமும் முதல்நாள் சண்டையிட்ட எந்த சுவடும் இல்லை. அவன் கேட்டதற்கும் பாசாங்கில்லாமல் அவள் பதிலளிக்க அயர்ந்துபோனான் விதுரன்.
எந்த விதத்திலும் கூடுதலாய் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச முடியவில்லை. அதிலும் ஸ்ரீநிதி இல்லாத நேரம் கூட பேச முயன்றாலும் பார்வையிலேயே கத்தரித்தாள் ரோஜா.
அந்த வாரம் முழுவதும் அப்படியே செல்ல மனதளவில் விதுரனுக்கு சற்று சோர்வாய் இருந்தது ரோஜாவின் கோபம்.
“என்ன நீ பத்துநாள் பழகிய பெண்ணிடம் இத்தனை எதிர்பார்க்கிறாய்? இதுவா நீ? போனால் போகட்டும் விடு” என ஒரு மனம் சொன்னாலும் “ஒரு நல்ல பெண்ணை காயப்படுத்திவிட்டாய் நீ” என்று இன்னொரு மனம் இடித்துரைத்தது.
இது வேலைக்காகாது என நினைத்தவன் மறுநாள் விடுமுறை. அதற்கு மறுநாள் ரோஜா வந்தவுடன் அவளிடம் பேசி சமாதானம் பேசி அவளுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்று முடிவுடன் தான் உறங்கவே சென்றன.
அன்று ஞாயிற்று கிழமை. சக்தியுடன் மால் ஒன்றிற்கு சென்றிருந்தான். எதிர்பாராத விதமாக காபி ஷாப்பினுள் நுழைந்தவன் அங்கே ஸ்ரீநிதியை பார்த்ததும் ரோஜாவும் இருக்கிறாளா என்று தேட அவள் இருந்தாள்.
“சக்தி ரோஜா இருக்கா, வா ஒரு ஹாய் சொல்லிட்டு வருவோம்…” என்று அழைக்க,
“ஹலோ ஸார் ஹவ் ஆர் யூ…” என கேட்க ஒரு நொடி யார் என்று யோசித்தவன் சங்கவி அருகே ஸ்ரீநிதி வந்து நிற்கவும்,
“என்னோட ப்ரென்ட் தான் ஸார். ஐ மீன் எங்க ப்ரெண்ட் அன்ட் ஹவுஸ்மேட்…” என்று சங்கவியை அறிமுகம் செய்ய அது ஏன் என்று மறுநாள் தான் புரிந்தது அவனுக்கு.
“ஹலோ…” என்றவன் ரோஜாவை பார்க்க இப்பொழுது அவளும் பார்த்துவிட்டாள்.
“ப்ரெண்ட்ஸ் தானே நீங்க? ஏன் தனித்தனி டேபிள்ள?…” என்று கேட்டவனின் அருகே வந்த ரோஜா,
“ஹாய் ஸார்…” என சொல்லவும் அவனும் பதிலுக்கு சொல்லி,
“ஷாப்பிங்கா?…” என்றான் பொதுவாய்.
“இல்லை ஸார், இவரை மீட் பண்ண வந்தோம்…” என்று தனக்கு பின்னால் நின்ற ஹரிஷை காண்பிக்க,
“இவர் விதுரன். இப்ப இவரோட பில்டிங்ல தான் இன்டீரியர் பன்றோம்…” என அறிமுகப்படுத்தியவள்,
“இவர் மிஸ்டர் ஹரிஷ், என்னை கல்யாணம் செஞ்சுக்க போறவர். இந்த மந்த் எண்ட் எங்களோட மேரேஜ்…” என்று சொல்லி விதுரனின் முகம் பார்க்க அவனோ மகிழ்ச்சியுடன்,
“வாவ் மை ஹார்ட்லி விஷஸ். ரோஜா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க ரொம்ப லக்கி…” என ஆத்மார்த்தமாக அவன் சொல்லிய விதத்தில் உடைந்துதான் போனாள்.
“போடா அங்கிள், உனக்கு கொஞ்சமும் ரொமான்ட்டிக் சென்ஸ் இல்லாதவ தான் பொண்டாட்டியா வருவா. இதுதான் என் சாபம். உனக்கு, அவளோட உன்னோட பர்ஸ்ட் மீட் கொலாப்ஸ் ஆகனும். அவளுக்கு உன் மேல காரணமே இல்லாம சும்மா சும்மா கோவம் வரனும்.” என்று மனதிற்குள் அவனுக்கு ஏகப்பட்ட சாபங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தாள்.
அவனோ ஹரிஷுடன் அத்தனை ஆர்வமுடன் பேசியவன் ரோஜாவிற்கும் வாழ்த்தை சொல்ல உடன் சக்தியுமே கூறினான்.
ஆனால் ஹரிஷை பாவமே என்று பார்க்க அதை ரோஜா பார்த்துவிட ஐயோ நாளைக்கு இதுக்கு வச்சு செய்வாளோ? என்ற பார்வையுடன் அவன் நகர்ந்துவிட விதுரனும் சென்றுவிட்டான்.
ஸ்ரீ மட்டும் ரோஜாவின் முகத்தில் வந்துபோன உணர்வுகளை அவதானித்தபடி தான் இருந்தாள். மனதிற்குள் கவலையாகவும் அதே நேரம் தோழி இனி நன்றாகவும் இருக்க வேண்டிக்கொண்டாள்.
ஹரிஷ் அத்தனை இனிமையானவனாக இருந்தான். ரோஜாவின் பேச்சிற்கு எல்லாம் புன்னகையுடனே அவன் இருக்க இவனை விட ஒரு பெஸ்ட் சாய்ஸ் ரோஜாவிற்கு இல்லை என்று அவனை சந்தித்த சில நிமிடங்களில் தோன்றிவிட்டது.
மறுநாள் அலுவலகம் வந்த விதுரன் ரோஜா இருக்கும் கேபினை பார்க்க அங்கே ரோஜா அமர்ந்திருக்கும் இடத்தில் சங்கவி அமர்ந்திருந்தாள். வேகமாய் அங்கே சென்றவன்,
“ஸ்ரீநிதி, ரோஜா எங்க?…” என கேட்க சங்கவி அவனிடம் ஒரு கவரை நீட்டியவள்,
“ஸார் இனி ரோஜாவுக்கு பதில் நான் தான் வொர்க் பண்ண போறேன். ரோஜா ரிலீவ் ஆகிட்டா…” என்றதும் முகம் கடுகடுக்க,
“வாட் நான்சென்ஸ்? யாரை கேட்டு டிஸைட் பண்ணினாங்க உங்க கம்பெனில. இதை நான் சும்மா விடமாட்டேன்…” என்று கத்த,
“ஸார் உங்களுக்கு மெயில் அனுப்பிட்டதா சொன்னாங்க. போன் பண்ணப்போ நீங்க பிக் பண்ணலைன்னு…”
“பண்ணலைன்னா அவங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணுவாங்களா? உங்களை இங்க அப்பாய்ன்ட் பன்றதுக்கு முன்னாடி இப்படின்னு சொல்லியிருக்கனும் தானே? நீங்களும் வந்ததும் வேலையை பார்க்கறீங்க? இது என்ன உங்க ஆபீஸா?…” என்று வறுத்தெடுக்க ஸ்ரீநிதி அரண்டுவிட்டாள்.
சங்கவி வாயே திறக்கவில்லை. அவன் எதற்கு இத்தனை கோபம் கொள்கிறான் என்று புரியாமல் மிரண்டு நிற்க,
“விது என்ன பன்ற நீ?…” என சக்தி வேகமாய் அவனது அவனை பிடித்துக்கொண்டவன்,
“ஸாரி கேர்ள்ஸ். யூ கேரி ஆன்…” என்று சொல்லி அவனை இழுத்துக்கொண்டு விதுரன் அறைக்கு செல்ல அவனை விசித்திரமாக பார்த்தபடி ஸ்ரீநிதி அசையாமல் நின்றாள்.
“இப்ப நீ பன்றது தான் நான்சென்ஸ். இது அவங்களோட வொர்க். ஆபீஸ்ல சொல்ற இடத்துக்கு போகவேண்டியது அவங்களோட ஜாப். பைதவே அந்த மெயிலை நான் நேத்தே ரிஸீவ் பண்ணிட்டேன். அவங்களோட பேசவும் செஞ்சாச்சு…” என்றவன்,
“இன்னொன்னு இது நாம அவங்களுக்கு குடுத்திருக்கும் ப்ராஜெக்ட். யாரை அனுப்பனும், அனுப்ப கூடாதுன்னு டிஸைட் பன்ற அத்தாரிட்டி அவங்களுக்கு தான் இருக்கு. நமக்கு இல்லை. புரியுதா?…” என கேட்க விதுரனுக்கே தனக்கு ஏன் அத்தனை கோபம் வந்ததென்று புரியவில்லை.
கண்ணை மூடிக்கொண்டவன் தலையை பிடித்துக்கொண்டு மேஜையில் சாய அவனை பார்த்தபடி இருந்த சக்திக்கு மேலும் குழப்பம் கூடியது.
“விது, ரோஜாவுக்கு மேரேஜ். நேத்து நாம மீட் பண்ணினோம். நீயும் விஷ் பண்ணின தான? சில நேரம் கல்யாணம்னா பொண்ணுங்க ஜாபை ரிஸைன் பன்றது யூஸ்வல் தானே? இதுக்கு நீ இத்தனை ரியாக்ட் பண்ணனுமா?…” என கேட்க,
“எஸ், எஸ். ரோஜாக்கு மேரேஜ். ஓகே, என்கிட்டே சொல்லாம அவங்க வொர்க் பன்ற ஸ்டாப்பை மாத்தினதுல கோபம் வந்திருச்சு. அதோட ரோஜாவுக்கு இங்க எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு தானே? இப்ப இந்த பொண்ணுக்கு அதை ஸ்டடி பண்ணவே நேரம் சரியா இருக்கும். கொஞ்சம் வேலை டிலே ஆகும்ன்ற கோபத்துல தான். ஓகே…” என்று சொல்லியவனை கவலையோடு பார்த்தான் சக்தி.
விதுரனின் இந்த குணம் அவனுக்கு புதிது. இத்தனை முரண்பாட்டுடன் அவனை பார்த்ததில்லை.
ரோஜா ஏதோ விதத்தில் அவனுள் மிகப்பெரும் தாக்கத்தை விதைத்திருக்கிறாள் என்று மட்டும் புரிந்து கொண்டவன் இருவரின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் ஆழ்ந்தான்.