சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. ரோஜா நின்றுகொண்டிருந்த பஸ் ஸ்டாப்பில் நிழல்குடைக்கு தாண்டியும் சாரல் அவளை நனைக்க கிடுகிடுவென நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தாள்.
பஸ் எதுவும் வருவதை போல தெரியவில்லை. ஆட்டோ எல்லாம் ஆட்களுடன் கடந்து செல்ல வெறும் ஆட்டோவாக வந்தாலும் எதுவும் நிற்காமல் சல்லென்று செல்ல, நின்று கேட்கும் ஆட்டோக்கள் இவள் செல்லும் பகுதிக்கு வர மறுத்தனர்.
ஓலா, ஊபர் என்று எதிலும் கார் ஆட்டோவென்று இல்லாமல் போக நொந்துகொண்டாள் தன்னையே. உடை வேறு பெரும்பாலும் நனைந்துவிட்டிருந்தது.
இன்னும் இரு நாட்களில் ஊர் செல்ல வேண்டும். அன்று காலை தான் பிரஷாந்தி அழைத்து ‘தான் வந்துவிட்டேன். நீ இன்னும் வரவில்லை?’ என்று ஒரு மூச்சு ரோஜாவின் பிபியை ஏற்றியிருந்தாள்.
“அத்தான் வந்திருக்காங்க. உன் கல்யாணத்துக்கு தானே வந்திருக்காங்க. நீ தான நாங்க வரும் போது அவங்களை வரவேற்கனும். நீயே இல்லை. என்ன நினைப்பாங்க?…” என்று ரோஜாவிடம் பேசி வளர்மதியிடம்,
“பாருங்க ரோஜா இல்லாதது கூட பிரச்சனை இல்லை. இவர் வராருன்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை அவர்கிட்ட போன் பண்ணி இப்படி வர முடியலை மாமா. மன்னிச்சுக்கோங்க. சீக்கிரமே வந்திடறேன்னு சொல்லியிருக்கனுமா வேண்டாமா? என்ன பொண்ணு இவ? என் புருஷனுக்கே மதிப்பில்லை. அவர் வேற சங்கடத்தோட அவங்கம்மா வீட்டுக்கு போய்ட்டார்…”
இப்படி பேசி பேசி வீட்டை ரெண்டாக்கி வைத்திருந்தாள் பிரஷாந்தி. இரண்டு நாள் கழித்து செல்லவிருக்கும் ரோஜாவை மறுநாளே கிளம்ப சொல்லிவிட்டார் வளர்மதி.
பிரஷாந்தியின் கணவன் நிர்மல் வேண்டுமென்று அப்படி செய்யவில்லை. தனிமை விரும்பி. வந்ததும் நேராக பிரஷாந்தியை கொண்டு வந்து அவளின் அம்மா வீட்டில் கல்யாண வேலைக்கென விட்டுவிட்டு தனது தாய், தந்தை உறவினர்களை பார்ப்பதற்காக ஈரோடு சென்றுவிட்டான்.
மற்றபடி எந்த கோபமோ சங்கடமோ இல்லை. விட்டால் போதும் என்பதை போல தான் பிரஷாந்தியை தள்ளிவிட்டு சென்றது.
தன் வீட்டிற்கு போகவேண்டும் என்றாலும் அலுத்து முகத்தை சோகமே உருவாக வைத்துக்கொண்டு ஊரில் அனைவரும் விசாரிக்கும் படி வைத்துவிடுவாள். அதனை கொண்டே அவன் பிரஷாந்தியை தன்னோடு அழைத்து செல்லாமல் இருந்தது.
இங்கு வந்தாலே இது தான் அவள் வேலை. ஆனால் எல்லா நேரமும் நிர்மலிடம் அந்த இணக்கத்தை காண முடியாது. அவன் சொல்வதை தான் அவள் கேட்டாக வேண்டும் என்னும் அளவிற்கு அத்தனை கடுமையானவன் கூட.
எப்பொழுதும் அந்தளவிற்கு மாமனார் குடும்பத்துடன் அத்தனை ஒட்டுதல் இருக்காது அவனுக்கு.
இன்று அதனை வைத்தே பிரஷாந்தி ஒரு பிரச்சனையை வந்து இறங்கிய அன்றே செயல்படுத்தியிருக்க வளர்மதி பேசி தீர்த்துவிட்டார் ரோஜாவை.
காலை மொபைலை சற்று தூரமே வைத்து காபியை குடித்துக்கொண்டிருந்தவள் அருகே வந்த சங்கவி பேசிவிட்டாயா என்று கேட்க வாயை திறக்கும் முன்பே ஒற்றை விரலால் பேசாதே என சைகை காட்டி தன்னருகே அமர வைக்க வளர்மதியின் பேச்சு ஸ்பீக்கர் போடாமலே போனை தாண்டி வெளியே கேட்டது.
“அடிப்பாவி, அவங்க தனியா பேசிட்டிருக்காங்காடி…” என்று வியந்து பார்க்க இவள் அந்த போனை எடுத்து,
“ப்ச் மாம்…” என்று சொல்லி மீண்டும் கீழே வைத்துவிட அதனை ஸ்ரீயிடம் சொல்வதற்கு வேகமாய் எழுந்து உள்ளே ஓடினாள் சங்கவி. அதற்குள் வளர்மதி ஓய்ந்திருக்க இப்பொழுது எடுத்து காதில் வைத்தவள்,
“இப்ப என்ன சொல்ல வரீங்க மாம்?…” என்றாள் ஒற்றை வாக்கியத்தில்,
“நீ நாளைக்கே கிளம்பி வர. கார் அனுப்பவா இல்லை ப்ளைட்ல புக் பண்ணவா?…” என கேட்க,
“நானே நாளைக்கு வரேன். கார் அனுப்புங்க. இங்க என் திங்க்ஸ் இருக்கு…” என்று சொல்லிவிடவும் தான் அமைதியானார்.
ப்ளைட் என்றால் சட்டென்று போய்விடலாம் தான். அதில் ரோஜாவிற்கு விருப்பமில்லை. கார் என்றால் நிதானமாக செல்லலாமே. அதற்கு தான் காரை அவள் தேர்ந்தெடுத்தது.
இப்பொழுது நினைத்தாலும் மனது அத்தனை சோர்வடைந்தது. வெகு நேரம் நின்றது வேறு கால் வலிக்க செய்ய அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
பதினொன்றரை மணிக்கே வானம் மேகமூட்டத்துடன் ஆதவனை அணைத்து பிடித்திருக்க வெளிச்சம் மாலை நேரத்தை ஒத்திருந்தது.
தங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்து இரு மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற பெண்மணிக்கு திருமண அழைப்பிதல் வைப்பதற்காக சென்றிருந்தாள் ரோஜா.
காலை கிளம்பும் முன்பே இருட்டிக்கொண்டிருந்த வானத்தை பார்த்துவிட்டு ஸ்கூட்டியை தவிர்த்து ஓலா கேப் புக் செய்து அவர் வீட்டிற்கு சென்று அழைத்துவிட்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருக்க மழையில் அந்த ஆட்டோவும் மக்கர் ஆகிவிட நல்ல வேளையாய் கிளம்பும் முன் ஸ்ரீ கொடுத்தனுப்பிய குடையின் உபாயத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள்.
மேலும் கால்மணி நேரம் கடந்திருக்க மழை வெறிக்கும் வழியை தான் காணவில்லை. தன்னை கடந்து செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி அவள் நிற்க அவளின் முன்னால் வந்து நின்ற காரை அசுவாரஸியமாய் பார்த்தவளின் கண்கள் சட்டென்று விரிந்தது.
“ஹாய் ரோஜா…” என காருக்குள் இருந்து அழைத்தான் விதுரன்.
எட்டு நாட்கள் ஆகிற்று அவனை பார்த்து. ஒரு நொடி அவனை பார்த்ததும் மகிழ்ந்தவள் அடுத்த நிமிடம் முறைப்புடன் முகம் திருப்பிக்கொள்ள அவளின் செயலில் புன்னகைத்தவன்,
“பேசமாட்டீங்களா ரோஜா மேடம்?…” என கேட்டு காரை விட்டு இறங்கி வர,
“நீங்க ஏன் வரீங்க?…” என்றாள் சட்டென பிடிவாதத்தை விட்டு.
“பரவாயில்லையே பேசியாச்சு. இந்த முத்தை உதிர்க்க இத்தனை பாடா?…” என்று சிரித்து,
“என்ன இங்க நிக்கறீங்க?…” என்றதும் ‘இனி என்று பார்க்க போகிறோமோ? கடைசி சந்திப்பாக இருந்தாலும் ஒரு முகத்திருப்புதலுடன் ஏன் போக வேண்டும்?’ என நினைத்தவள்,
“என்னோட வொர்க் பண்ணின ஆன்ட்டிக்கு இன்விடேஷன் வைக்கலாம்ன்னு போயிருந்தேன். திரும்பி வரப்ப மழை பிடிச்சுக்கிச்சு. அதான் இங்க பஸ், இல்ல ஆட்டோவுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்…” என,
“ஓகே வாங்க என் கார்லையே ட்ராப் பன்றேன்…” என்று அழைக்க,
“இல்லை பரவாயில்லை. தேங்க்ஸ்…” என்றாள் ரோஜா.
“ஓஹ், கமான் ரோஜா, நான் அன்னைக்கு உங்களை ஹர்ட் பன்ற மாதிரி பேசியிருந்தா இருந்தா ஸாரி. இப்ப மேடம் கூல் ஆகிட்டீங்களா?…” என்றதும் அவனின் பாவனையில் மெல்ல சிரித்தவள் முகத்தின் புன்னகையே அவனுக்கு போதுமானதாக இருக்க,
“எனக்கெல்லாம் இன்விடேஷன் இல்லையா உங்க மேரேஜ்க்கு?…” என்றதும்,
“நீங்கலாம் வருவீங்களா என் மேரேஜ்க்கு?…” என்றாள் பதிலாக.
“கார்ல போய்ட்டே பேசலாமே? மழை இன்னும் வேகமெடுக்க தான் செய்யுது. குறையும் வழி இல்லை…” என சொல்ல பிகு செய்யாமல் ஏறிக்கொண்டாள் ரோஜா. காரை கிளப்பியவன்,
“தென், என்னைக்கு ஊருக்கு கிளம்பறீங்க?…” என கேட்க அவன் முயன்று தன்னை பன்மையில் விளிப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தும் மறுக்காமல் அப்படியே இருக்கட்டும் என்று கேட்டுக்கொண்டாள்.
“போகனும், நாளைக்கு நைட்…” என்று சொல்ல,
“இன்னும் கொஞ்சம் சிரிக்கலாமே, இது ரோஜா ஸ்மைல் கிடையாதே?…” என அவளை இலகுவாக்க பேச,
“எங்க ஓபி அதிகமா சிரிக்க கூடாதுன்னு ஆடர் போட்டிருக்கார். அட்வான்டேஜ் எடுத்துப்பேனாம்…” என்று அவனை வார்த்தையால் குட்ட,
“ஓபி?…” என்றான் புரியாமல்.
“ஓல்ட் பாஸ்…” விளக்கம் தந்தாள்.
“ஓஹ், ரோஜா மேடம்க்கு எப்ப டிபி ஓபி ஆனேன்?…” என்று பளிச்சென்று கேட்க அன்று தான் பேசியதை கேட்டிருக்கிறான் என்று புரிந்துகொண்டவள்,
“இது மட்டும் பேட் இல்லையாமா?…” என்று அத்தனை நேர மிடுக்கை விட்டு அவனிடம் சண்டைக்கு நிற்க கார் சாலை போக்குவரத்து நெரிசலில் மழையின் உதவியோடு எறும்பென ஊறிக்கொண்டு சென்றது.
சண்டைகள் அத்தனையும் மறந்து சகஜமாய் அவனுடன் பேச ஆரம்பித்துவிட்ட குதூகலத்தில் விதுரன் மகிழ்ந்து போனான். அவனுக்கு அவளின் இந்த இயல்பான துடுக்கான பேச்சே போதும் என்று இருந்தது.
ரோஜாவின் வீட்டை நோக்கி காரை திருப்ப அந்த வழியில் செல்ல முடியாதென்று தடுப்பு வைத்திருந்தனர்.
“இஃப் யூ டோண்ட் மைண்ட், நீ என் வீட்டுக்கு வாயேன். மழை வேற. இங்க இருந்து பக்கம் தான். இந்த ட்ராபிக்ல உன்னை கொண்டு போய் விடறதும் கஷ்டம். மழை விட்டா தான் ட்ராபிக் நார்மல் ஆகும்…” என்று சொல்லவும் யோசித்தவள்,
“இல்லை, போய் பேக்கிங் எல்லாம்…” என்று தயங்க,
“ஒரு கப் காபி குடிச்சுட்டு எனக்கு இன்விடேஷன் வைச்சு இன்வைட் பண்ணிட்டு போவியாம்…” என்று அவன் ஒருமைக்கு தாவியிருந்தான் அவனறியாமல்.
சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே காரை தன் வீட்டின் பக்கம் திருப்பியிருக்க அவனை முறைத்தவள்,
“நான் வரேன்னே சொல்லலையே. நீங்களா முடிவு பண்ணினா நான் எதுக்காம்?…”
“மௌனம் சம்மதம்ன்னு சொல்லுவாங்க இல்லையா? அது இதுக்கும் கூட பொருந்தும் ரோஜா மேடம்…” என்று சொல்லி சிரிக்க அவனின் சிரிப்பில் ஒரு நிமிடம் லயிக்க இருந்தவள் மனதை ஒருமுகப்படுத்தி அவனை மனம் கவர்ந்தவன் என்னும் பார்வையில் இருந்து விரட்டியடித்தவள் அந்த இடத்தில் அவனை தனது முன்னால் முதலாளி என்று கொண்டு வந்து இருத்தினாள்.
அடுத்த பத்து நிமிடத்திற்கும் குறைவாக தன் வீட்டிற்கு வந்து விட்டிருந்தவன் உள்ளே அழைத்து வந்து ஒரு டவலை அவளிடம் நீட்டினான்.
“நியூ ஒன் தான். இன்னும் யூஸ் பண்ணலை…” என்று சொல்லி தர அதனை அபப்டியே அவனின் முகத்தில் விட்டெறியும் வேகம் பிறந்தது.
இருந்தாலும் குளிர் வேறு வாட்ட அதனை தனக்கு போர்த்தியவள் பற்கள் குளிரில் தந்தியடிக்க உதடு நடுங்கியது.
“ரொம்ப குளிரா இருக்கா ரோஜா…” என்றவன் இன்னொரு டவலையும் தந்து,
“பர்ஸ்ட் அந்த ரூம்ல போய் ப்ரெஷ் ஆகிக்கோ. நான் உனக்கு சூடா காபி போடறேன்…” என சொல்ல இயல்பான எச்சரிக்கை குணம் தலை தூக்க,
“நீங்க காபி எப்படி போடறீங்கன்னு நானும் கத்துக்கறேனே. ஏனா எனக்கு ஹாட் வாட்டரை ஹாட்டாக்க தெரியும். அதை அப்படியே விட்டா கூல் ஆகிடும்ன்ற வரைக்கும் நல்லாவே தெரியும்…” என்றாள் புன்னகையுடன்.
“ஓகே, கம்…” என்று சிறு தோள் குலுக்களில் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான் கிட்சனிற்கு.
முதன் முதலில் வந்ததை விட இப்பொழுது அதில் சில மாற்றங்கள் ஆகியிருந்தது அந்த சமையலறை. அப்பொழுது தான் வீட்டையும் கவனித்தாள். ஏறக்குறைய இண்டீரியர் முடிந்ததை போல இருந்தது அந்த வீடு.
“ஏன் ஸார் இருட்டுக்குள்ள காபி போடறீங்க?…” என்று விளக்கை போட,
“கரண்ட் இல்லையா?…” என்றவள்,
“இன்வெட்டார் இருக்குமே?…” என மீண்டும் கேட்க பாத்திரத்தில் பாலை ஊற்றியவன்,
“கொஞ்சமாவது என்னை பேச விடனும் ரோஜா. நீயே கேள்வி கேட்டு பதில் சொல்ல முன்ன இன்னொன்னு பேசற. பாவம் ஹரிஷ்…” என்று சிரிக்க,
“ரொம்ப பாவம் தான்…” என்று ரோஜாவும் நொடித்தாள்.
கிடைக்காத ஒன்றிற்கு என்றுமே ஏங்கியதில்லை அவள். ஆனால் காதல் என்று வந்த பின்னால் வேண்டாம் என்று முழுமனதுடன் முடிவெடுத்த பின்னால் கூட ஏனோ கிடந்து அடித்துக்கொண்டே இருந்தது அவளுள்ளம்.
“இண்டீரியர் ஆல்மோஸ்ட் ஓவர். காபி குடிச்சுட்டே நீ வீட்டை சுத்தி பாரு. ஏதாவது சஜஸ்ஷன் இருந்தா கூட சொல்லு. லைட்டிங்க்ஸ் எல்லாம் மாத்தலாம்ன்னு யுபிஎஸ் வையரிங் எல்லாம் டிஸ்கனக்ட் பண்ணி வச்சாச்சு. அதான் பவர் இல்லை. பட் பவர் வந்திரும். மழை விட்டதும். இப்ப கூட இங்க ஸ்டே பண்ணலை நான். நைட் பெரிய வீட்டுக்கு போய்ருவேன்…”
அவன் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அதனை கேட்டுக்கொண்டிருந்த ரோஜா அவன் என்ன செய்கிறான் என்று அவள் கவனித்துக்கொண்டே இருந்தாள் அவன் காபி போடும் விதத்தை.
இரண்டு கப்களில் ஊற்றியவன் சிறியதை தனக்கு எடுத்துக்கொண்டு கொஞ்சம் பெரிதாய் இருந்த கப்பை அவளுக்கு நகர்த்தினான்.
“டேக் இட்…” என,
“என்னை பார்த்தா குடிகாரி மாதிரியா இருக்கு?…” என்று சட்டென அவள் கேட்ட விதம் இவனுக்கு புரையேறிவிட,
“வாட்?…” என்றான் வேகமாய்.
“இல்லை இப்படி அரைப்படி கப்புல காபி குடுக்கறீங்க. என்னை பார்த்தா காபி குடிகாரி மாதிரியா இருக்கு…” என்று இப்பொழுதும் முறைத்துக்கொண்டே கூற,
“மை காட்…” என்று சொல்லி சிரித்தவன்,
“வா ஹால்க்கு போவோம்…” என்று அழைத்து வந்து அமர வைத்தவன்,
“உனக்கு குளிருமேன்னு தான் நிறைய போட்டேன். சூடா குடிக்க குடிக்க கொஞ்சம் நல்லா இருக்குமேன்னு. வேண்டாம்ன்னா சொல்லு. பாதி எடுத்து வைச்சிடலாம்…” என்று கப்பை எடுக்க போக,
“ஒன்னும் வேண்டாம். இதுவே போதும். போட்டதை வேஸ்ட் பண்ண வேண்டாம்னு தான்…” என்று போனாள் போகிறதென்பதை போல காபியை எடுத்துக்கொள்ள சிரிப்புடன் அவளெதிரே அமர்ந்து கொண்டான்.
வெளிச்சதிற்காய் வாசல் கதவை திறந்து வைத்திருக்க காற்று வீட்டினுள் வரை வீசி சென்றது.
குளிருக்கு இதமாய் சுவையாய் காபி. அன்று போல் இன்றும் அவள் ஆழ்ந்து மூச்சை இழுத்து ரசித்து குடிப்பதை அத்தனை ரசனையுடன் பார்த்தவன்,
“உன்னை மாதிரி யாரும் காபி குடிச்சு நான் பார்த்ததில்லை…” என்று சிரிக்க,