“அகர் ஆப்கோ கிஸிசே பாத் கர்னா ஹே தோ அபி கர்லீஜியே.. பர்வத் கி ராஸ்தே மே சிக்னல் தோடா முஷ்கில் தா ! ஹமே வாபஸ் ஆனேகேலியே சுபஹ் ஹோங்கி” (யாருக்காவது கால் பண்ணி பேசணும்னா இப்பவே பண்ணிக்கோங்க மலையேற ஏற சிக்னல் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் நாம கீழ இறங்க அதிகாலையாகிடும்) என்று வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தன்முன் குழுமியிருந்தவர்களிடம் கூறிய வசீகரனுக்கு அழைப்பு வர அருகே இருந்தவனிடம்,
‘மச்சி ரிச்சர்ட்டோட கால் வருது நான் பேசிட்டு வரேன் அதுக்குள்ள அங்க அன்னதானம் கொடுத்துட்டு இருக்காங்க பாரு இவங்களை சாப்பிட வச்சுடு அப்புறம் லகேஜ்ல தேவையானதை மட்டும் எடுத்துக்க சொல்லு’
‘டேய் டேய் மச்சான் எங்க என்னை விட்டுட்டு போற? இங்க்லீஷ்னா பரவால்ல எனக்கு உன் அளவு ஹிந்தி வராது… இவனுங்களுக்கோ தமிழ் இங்க்லீஷ் ரெண்டும் புரியல அப்புறம் எப்படி புரிய வைக்க?’ என்றான் விஜயசாரதி
‘மச்சி நான் அவங்களை சாப்பிட வைச்சுடறேன் ஆனா தடி எதுக்குடா?’ என்று அங்கே மூங்கில் கம்போடு மலையேறி கொண்டிருந்தவர்களை கண்டு சாரதி கேட்க ,
‘டேய் இந்த மலை ஏறுறது அவ்ளோ சாதாரணம் இல்ல மச்சான்.. வழி ரொம்பவே கஷ்டமானதா இருக்கும்.. தண்ணி சுலபமா கிடைக்காது போன முறை பகல்ல ஏறினதால பல பசங்க முடியாம ரொம்ப சோர்ந்துட்டாங்க இவங்கள்ல சிலர் வயசானவங்க அதான் இந்தமுறை நைட் ப்ளான் பண்ணினேன் உனக்கும் இது முதல்முறை தானே மேல ஏற ஏற குளிர் அதிகமாகும்.. கல்யாணம் வேற நெருங்கிட்டு இருக்கு ஸ்வெட்டர் எடுத்து வச்சிட்டல அஷ்மிதாக்கு சொல்லிட்ட தானே..?’
‘ப்ச் இதைவிட அதிக குளிர் எல்லாம் பார்த்து இருக்கேன்டா இது எனக்கு நாலாவது முறை பழகிடுச்சு மலையை நெருங்கறப்போ ஈசனை தவிர வேற எதுவும் மனசுல இருக்காது அவர் அருள் இருந்தா மட்டுமே இங்க வரமுடியும் சொல்லுவாங்க உனக்கே புரியும் வா பார்த்துக்கலாம்’
‘என்னடா பக்தி பழமா மாறிட்ட ஈசன் அருள்னு என்னென்னமோ சொல்ற காலேஜ்ல நீ இப்படி இல்லையே மச்சி’ என்று அதிசயமாக நண்பனை பார்க்க,
‘சேச்சே அப்படி எல்லாம் இல்ல மச்சான் நானும் பல இடங்களுக்கு போயிருக்கேன் ஆனா இங்க வரும்போது மட்டும் மனசு என்னமோ ரொம்ப லேசான மாதிரி இருக்கும் அதுவும் சுத்தமான மூலிகை காத்து அப்புறம் பாசிடிவ் வைப் ப்ச் எப்படி சொல்ல அது ஒரு டிஃப்ரென்ட் பீல்டா இன்னைக்கு உனக்கே புரியும்’
‘சரி மச்சி! நீ சொன்ன மாதிரி செய்யறேன் மத்ததெல்லாம் நீ கால் முடிச்சிட்டு வந்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடு’
‘சரி நீயும் வீட்டுக்கு பேசிடு’ என்றவன் சற்று தள்ளி ரிச்சர்ட்க்கு அழைத்து ‘Hey Richard what’s up?’ (எப்படி இருக்க?)
‘fantabulous dude !’ (நல்லா இருக்கேன்)
‘great! when the crew is starting… Is all the norms okay for them?’ (குழு எப்போ கிளம்பறாங்க விதிமுறைகள் எல்லாம் அவங்களுக்கு சம்மதமா?)
‘Yeah! they are absolutely up for it! and they are of eleven one amongst them is a police another a doctor.. will be more easier for you’ (எல்லாருக்கும் பரம சம்மதம் மொத்தம் பதினொரு பேர் வராங்க அதுல ஒரு போலீஸ் டாக்டர் இருக்காங்க உனக்கு ஈஸியா இருக்கும்)
‘yup! that’s cool .. okay send me their particulars will make sure of the requires and the budget which is of dollars’ (நிச்சயமா! சரி அவங்க விவரம் அனுப்பு நான் இங்க தேவையானதை எல்லாம் முடிச்சிட்டு உனக்கு அனுப்புறேன் பணம் டாலரில் செலுத்த வேண்டும்)
‘hm within a couple of days’ (ரெண்டு நாளில் அனுப்புறேன்)
hey is there any stipulation like the food, places etc (அவங்களுக்கு சாப்பாடு, பார்க்கும் இடங்கள் ஏதாவது குறிப்பா இருக்கா )
‘No no dude not much! but it would be better if the food is not that spicy’ (அப்படி எதுவும் இல்ல சாப்பாடு மட்டும் அதிக காரமில்லாம பார்த்துக்கோ )
‘No worries will take care’ நான் பார்த்துக்குறேன் என்று மேலும் சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு வைத்தவன் திருவேங்கடம் அகிலாண்டநாயகியின் ஒரே மகன் வசீகரன். முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் ஒற்றை மகனை ஆசையாசையாக வளர்த்த திருவேங்கடம் அவனுக்கு சிறப்பான பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை அனைத்தும் தேர்வு செய்து படிக்க வைத்து வழிகாட்டினார்.
ஆனால் படிப்பு முடித்து தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தவன் ட்ரைனிங் முடிந்து ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின் வேலையை விட்டுவிட்டான்.
ஏன் என்று கேட்ட திருவிடம் அவனது ஒரு வருட சம்பளத்தை கொடுத்தவன் உங்களுக்காக ‘நீங்க சொன்ன ஸ்கூல், நீங்க தேர்ந்தெடுத்த படிப்பு, வேலைன்னு இருந்தது போதும் இதுக்குமேல என்னால இந்த வேலை பார்க்க முடியாது..!’
‘ஏன்..??’
‘அப்பா எனக்கு மத்தவங்க போல நைன் டூ பைவ் ஜாப் செட் ஆகாது.. என்னோட பேஷன் புரிஞ்சிக்கோங்க நிச்சயம் இந்த வேலையில இருந்தா என்னால ஆத்மார்த்தமா செய்ய முடியாது.. இப்போ என்ன நீங்க கேட்ட மாதிரி உங்க திருப்திக்காக எல்லாமே செய்து ஏர் ஃபோர்ஸிலும் இருந்துட்டேன் காலம் முழுக்க நீங்களும் உங்க சர்கிள்ல என் பையன் இந்த கேடர்ல இருந்தான்னு பெருமை பேசிக்கலாம் ஆனா இதுக்கு மேல எனக்கு பிடிச்சதை தான் நான் செய்வேன் என்றவனுக்கு பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவது புதுவிடயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது என்று அவன் தேடுதலே வேறு! ஆனால் அங்கே அவனுக்கு கிரவுண்ட் வொர்க் கொடுத்து ஓரிடத்தில் கட்டி போட்டு ஒரே மாதிரியான பணியை செய் என்றால் எப்படி முடியும்..??’
என் பையனுக்கு பெஸ்ட் கிடைக்கனும்னு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்துதானே செய்தேன்.. அவனுக்கு மட்டுமா உங்க எல்லாருக்குமே அப்படிதானே! யாருக்கும் நான் குறை வைக்கலையே என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த திருவேங்கடத்தையும் குறை சொல்வதற்கு இல்லை.. முழுக்க முழுக்க குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தும் மனிதர் அவர்களுக்காகவே அனுதினமும் யோசிப்பவர்.
அதனாலேயே வேலையை விட்டு வந்த வசீகரன் தன் அடுத்தகட்ட நகர்வுகளை நிதானமாக கையாண்டான். முதலில் சில வருடங்கள் சென்னையில் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றியவன் அதன்பின் சொந்தமாக sparkling adventures என்ற கம்பெனி தொடங்கி தனக்கு பிடித்த மலை ஏற்றத்தையே (Trekking) தொழிலாக கொண்டு கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருபவன் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பதோடு நம்பகமான நிறுவனம் என்ற பெயரையும் பெற்றிருப்பவனின் நிறுவனம் பல இளைஞர்களிடையே பிரபலம்.
மலையேற்றம் செய்வதற்கான முறையான பயிற்சியும் உரிமமும் பெற்றிருப்பவன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா ஆந்திராவிலும் பலமுறை ட்ரெக்கிங் செய்துள்ளான். மலையேற்றம் குறித்த சிறப்பு பயிலரங்கங்கள் எடுப்பவன் வித்யாசமான கலாச்சாரங்களை முயன்று பார்க்கும் அயல்நாட்டினருக்கும் அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனங்களுடன் டைஅப் வைத்து இதுவரை நான்குமுறை வெளிநாட்டினரை தமிழகத்திற்கு வரவழைத்து இருக்கிறான். ஆனால் இவை எதுவும் திருவேங்கடத்திற்கும் பசுபதிக்கும் தெரியாது.. இருவருடங்கள் பணிபுரிந்தவன் நிறுவனத்தில் இருந்து விலகி நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் ப்ராஜக்ட்களை செய்து கொடுக்கிறான் என்று தான் தெரியும்.
என்னதான் திருவேங்கடம் வெளியில் பார்ப்பதற்கு கண்டிப்பானவராக இருந்தாலும் ஒரே மகன் மீது கொள்ளை ப்ரியம் கொண்டிருப்பவர் அவன் நலன் மட்டுமே அவருக்கு பிரதானம். அதனாலேயே முன் ஏர் எப்படியோ அப்படிதானே பின் ஏறும் இருக்கும் என்று தம்பி மகன்களை முன்னிருத்தி திருவேங்கடம் பேசவும் பலகட்ட வாக்குவாதத்திற்கு பின் விஜயசாரதி பணிபுரியும் நிறுவனத்தில் சேர்ந்ததன் மூலம் அவரது கோபத்தை தனித்திருந்தான் வசீகரன் ஆனால் இப்போது அதையும் விட்டுவிட்டதன் மூலம் நிலையாக ஒரு வேலையில் இல்லாது இருப்பது தெரிந்தால் வீட்டில் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என்பதால் அதை தெரிவிக்கவில்லை.
ஆனால் நாயகிக்கும் அபிராமிக்கும் முதல்முறை வெளிநாட்டினரை அவர்கள் ஊருக்கே அழைத்து வந்து அங்கிருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்ததில் முதலில் அதிர்ந்தவர்கள் பின் வசீகரனின் மிரட்டலில் வழிக்கு வந்திருந்தனர். அதேநேரம் அண்ணன் தம்பிகள் மூவருமே இவ்விடயத்தில் கூட்டு! வசீயுடன் பலமுறை சர்வஜித் மலையேற்றம் சென்றுள்ளான் மாதம் இருமுறை அலுவலக வேலை என்று கூறி தமையனின் வழிகாட்டுதலோடு தன் அலுவலக நபர்களை அழைத்து சென்றுவந்துள்ளான்.
*********************************************
அதேநேரம் அங்கே வயதான மூவர் சாரதியிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுகொண்டிருந்தனர்.
‘ஆப்கோ ஏ பெஹ்லி பார் ஹே க்யா..??’ (இதுதான் நீங்க இங்க முதல்முறையா வருவதா?)
‘டேய் வசீ எதுக்குடா இவனுங்ககூட என்னை கூட்டிட்டு வந்த? சாப்பிட சொன்னா ஹிந்தி பேசியே சாவடிக்கிரானுங்களே..’ என்று நொந்து கொண்டவன் அருகே ‘பைஹா இதர் தேக்கோ’ என்றவனிடம்,
‘டேய் வளர்ந்து கெட்டவனே ஏன் தமிழ்நாட்டுக்கு வர நீ தமிழ் கத்துட்டு வர மாட்டியா நாங்க ஹிந்தி கத்துக்கணுமா… எனக்கு ஹிந்தி தெரியாது போடா’ என்று முறைக்க,
வசீகரனின் கல்லூரி தோழன் அவன் பணியாற்றி கொண்டிருக்கும் நிறுவனத்தில் தான் வசீகரன் சில காலம் பணியாற்றினான். அவனுக்கும் மலையேற்றத்தில் பிடித்தம் உண்டு என்பதால் அவ்வப்போது அவனுடன் இணைந்து கொள்வதுண்டு..
அனைவரும் உணவை முடித்து வசீகரனுக்கு காத்திருக்க அவனோ வாட்ஸ்அப்பில் வந்த விபரங்களை பார்த்தவன் ‘வேலைக்கு செல்லும் பெண் வேண்டாம்’ என்ற மெசேஜை அனுப்பிவிட்டு குழுவினரிடம் வந்திருந்தான்.
‘ஏ ஹே வெள்ளியங்கிரி பர்வத் இஸே தக்ஷின்கைலாஷ் பீ கெஹதா ஹே!’ என்று தென்கையிலையின் அடிவாரத்தில் நின்று மலையை சுட்டி காட்டியவன், (இதுதான் வெள்ளியங்கிரி மலை இதை தென்கைலாயம் என்றும் சொல்லுவாங்க)
‘இஸ்மே ஜானேகேலியே ஹமே கம்சே கம் சாத் சே ஆட் பஜே லகேங்கி… ஸியாதா சாமான் மத் லோ பாணிக்கா போத்தல் ஔர்…’ என்றவன் சாரதி கையில் இருந்த மூங்கில் தடியை வாங்கி ‘பெஹெலே இஸ்கோ பக்கட்’ என்று வாங்கி வந்த மூங்கில் கம்புகளை தன் குழுவினரிடம் கொடுக்க, (இந்த மலையில் ஏறி இறங்க குறைந்தது ஏழில் இருந்து எட்டு மணிநேரம் வரையாகும்.. தேவையான தண்ணீர் எடுத்துக்கோங்க அப்புறம் இந்த தடி ரொம்ப அவசியம்)
‘ஏ கிஸ்லியே பஹாய்ஜான்’ என்று ஒருவன் கேட்க, ‘எதுக்குண்ணா?’
‘ஏ பர்வத் மே ஜானா பஹுத் முஷ்கில் காம்தா! ராஸ்தே இத்னா ஸீதா நஹி ஹே! இஸ்லியே இஸ்கா ஸரூரத் படேங்கி’ (இந்த மலையேறுவது கொஞ்சம் கடினம் வழி கரடுமுரடா இருக்கும் அதனால இது உங்களுக்கு அவசியம் தேவைப்படும்) என்றவன் அவர்களின் உடமைகளை அங்கிருந்த அறையில் பூட்டிவிட்டு அத்தியாவசியமானதை மட்டும் எடுத்து கொள்ள சொல்லி ‘சிவாய நமஹ’ என்றவாறு தன் குழுவினருடன் கிளம்பி இருந்தான்
***********************************
இங்கே பெண் குறித்த விபரங்களை மகனுக்கு அனுப்பிய திருவேங்கடம் அவன் பதிலுக்காக இரண்டு மணிநேரமாக காத்திருந்தவர் பின் கைபேசியை சார்ஜரில் போட்டுவிட்டு உணவை முடித்தவர் தம்பியுடன் அன்றைய கணக்கு வழக்கை பார்த்தவாறு வசீகரனுக்காக காத்திருக்க தொடங்கிவிட்டார்.
அவர் நண்பர் சாகரிடம் இருந்து அழைப்பு வரவும் பேசி முடித்து வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தவர் மகனின் பதிலில் சீற்றம் கொண்டு உடனே அவனுக்கு அழைக்க அதுவோ அணைத்து வைக்கபட்டிருந்தது.
ஜித்து உன் பெரிம்மாவை கூப்பிடு என்றவர் தன் எதிரே வந்து நின்ற நாயகியை கடிய முடியாமல் பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தார். பின்னே மகன் மட்டுமல்ல மனைவியும் அவருக்கு ப்ரியமானவளே!
கோபமாக இருக்கையில் எங்கே வார்த்தைகளை சிதற விட்டுவிடுவோமோ என்று மனைவியிடம் அதிகம் பேசமாட்டார் அதனால் ‘தம்பி என்ன விஷயம்னு நீங்களாவது சொல்லுங்க..??’ என்று கணவரின் கோபத்தை கண்டு நாயகி பசுபதியிடம் படபடத்தார்.
“இனி நான் பொண்ணு பார்த்து எங்கயும் அசிங்கப்பட தயாரா இல்லை அவனையே ஏதாவது பெண்ணை கூட்டிட்டு வர சொல்லு ஆசிர்வாதம் பண்றேன்” என்று திரு பொதுவாக அனைவரையும் பார்த்து கடுகடுக்க…,
“ஆத்தாடி அக்கா மாமா என்ன இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு தம்பு அப்படி என்ன சொல்லி இருப்பான்” என்று அபி காதை கடிக்க,
‘இவ வேற சும்மா இருடி’
‘நீங்க சொல்லுங்க தம்பி’
“அண்ணி கரண்க்கு பெண்ணோட போட்டோவும் டீடெயில்ஸ்ஸும் மெசேஜ் பண்ணி இருந்தேன் அதுக்கு அவன் அனுப்பின ரிப்ளை பார்த்துட்டு தான் அண்ணா கோபமாகிட்டார்…”
‘அப்படி என்ன அனுப்பினானோ..’ என்று பரிதவிப்போடிருந்த நாயகியிடம், ‘அக்கா இப்போ ஏதாவது புது கண்டிஷன் போட்டிருப்பானோ அதான் மாமா டென்ஷன் ஆகிட்டார் நினைக்கிறேன்’
‘அப்படியெல்லாம் இருக்காது அபி இருந்தா முதல்ல என்கிட்டே தானே சொல்லுவான்…’ என்றவர்
‘நீங்க சொல்லுங்க..?’
‘அண்ணி அந்த பொண்ணு விதுஷா மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்குது…’
‘அதுதான் தெரியுமே தம்பி! இவ்ளோ நாள் தம்பு கேட்ட மாதிரிதானே பொண்ணுங்களை பார்த்துட்டு வரோம் அதுல என்ன பிரச்சனை’
‘அதில்லண்ணி பிரச்சனை’
‘வேற என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க’ என்று அபி பரபரத்தார்.
“இவ்ளோ நாள் இல்லாம கரண் இனி வேலைக்கு போற பெண்ணை பார்க்காதீங்க வேலைக்கு போகாத பெண்தான் வேணும்னு சொல்லிட்டான்” என்றதுமே அரண்டு போனார் அகிலாண்டநாயகி.
பின்னே முதல்முறை உனக்கு பெண் பார்க்க போகிறோம் என்று வசீகரனிடம் சொன்னதுமே ‘திருமணமா?? யாரை கேட்டு முடிவு செஞ்சீங்க என்னோட பிரைவசி போயிடும்.. யாருக்கும் பதில் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை.. நானே இப்போதான் ஓரளவு ஸ்டெடி ஆகியிருக்கேன் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு அதுக்குள்ள என்னால யார்கூடவும் எதுவும்.. ஐ மீன் நான் தனியாவே இருந்துட்டேன்ம்மா என்னால.. எனக்கு மத்தவங்ககூட ரூம் ஷேர் பண்ணி பழக்கமில்லை.. ‘ என்றதுமே தூக்கிவாரி போட்டது பெண்களுக்கு.
‘என்னக்கா இது ரூமே ஷேர் பண்ணமாட்டேன் சொல்றவன் எப்படி கல்யாணம், குழந்தை அப்போ உனக்கு இந்த ஜென்மத்துல பேரன் பேத்திக்கு ப்ராப்த்தம் இல்லையா..??’ என்று கேட்க நாயகிக்கு பேச்சே எழவில்லை.
‘தம்பு’ என்ற தாயின் கலங்கிய முகத்தை கண்டவன்,
‘ம்ப்ச் ம்மா நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் அத்தனை சாதாரணம் கிடையாது.. எனக்கு என்ன இப்பதானே இருபத்தஞ்சாகுது லைப்ல எவ்வளவோ இருக்கும்மா அதுக்குள்ள கல்யாணங்கிறது ஒரு பெரிய ஸ்பீட் ப்ரேக்! யாரு என்னன்னே தெரியாத ஒரு பெண்ணோட நம்ம லைப்பையே ஷேர் பண்றதுங்கிறது அவ்ளோ ஈஸி இல்லம்மா… எனக்குன்னு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு நிறைய அச்சீவ் பண்ணனும்.. அதைவிட என்னோட லைப் பார்ட்னர் பற்றின எதிர்பார்ப்பு இருக்கு .. ஆனா அதுக்கு இது நேரமில்லை இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்” என்றதும் தான் சமாதானமானார் நாயகி.
நினைவில் அமிழ்ந்திருந்த நாயகியிடம், ‘க்கா இதென்னக்கா புது பூகம்பம்’ என்ற அபியின் விழிகளிலும் கலக்கம்.
இறுதியாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்த திருவேங்கடம், “என்னால இவன் எதிர்பார்ப்புக்கு இனி பெண் பார்க்க முடியாது அவனையே பார்த்துக்க சொல்லுங்க இல்ல யாரையாவது லவ் பண்ண சொல்லி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர சொல்லுங்க…”
‘லவ்வா..??’ என்ற அனைவரின் முகத்திலும் அத்தனை அதிர்ச்சி.
பின்னே ஒருவருடத்திற்கு முன் வசீகரனிடம் ‘யாரையாவது லவ் பண்ணினா சொல்லுப்பா நாங்க அப்பா கிட்ட பேசி அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்’ என்றதற்கு,
‘ம்மா லவ்ங்கிறது ஸ்லோ பாய்சன் மாதிரி நம்மோட நேரம், சந்தோசம், நிம்மதி, லட்சியம், உறவு, உயிர்னு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நம்மகிட்ட இருந்து பிரிச்சு மொத்தமா நம்மையே அழிச்சிடும்.. மூளை இருக்கவன் யாரும் லவ் பண்ண மாட்டான்மா.. எனக்கு அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கு நகருங்க’ என்றதில் விழிபிதுங்கி போயினர் அன்னையர்.