சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த வசீ உணர்வற்ற முகத்தோடு அமர்ந்திருந்த தாயை பார்த்தவன், ‘ம்மா சிலவிஷயம் எல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது கல்யாணமும் அப்படிதான் வாழ்க்கை முழுக்க வர துணை என்னோட சுக துக்கம் எல்லாத்துலயும் பங்கெடுக்க போற உறவு அதை நீங்க சொல்றதுக்காக அவசரப்பட்டு முடிவு பண்ணமுடியாது புரிஞ்சுக்கோங்க’
‘தம்பு இதுநாள் வரை பொண்ணுக்கு அப்பா அம்மா , அண்ணன் தம்பி இருக்கணும், தூரமா இருக்க கூடாது அது இதுன்னு எவ்வளவோ கண்டிஷன் சொன்ன இப்போ என்னன்னா பெண்ணுக்கு தகுதி வேணும்னு சொல்ற..?? இது என்ன புதுக்கதை நாங்க என்னன்னு சொல்லி பொண்ணு கேட்க..? அப்படி கேட்டா என்ன நினைப்பாங்க’
‘அதெல்லாம் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் நானே பேசிப்பேன் நீங்க பொண்ணு மட்டும் பாருங்க’ எனவும் அபிராமிக்கு பதறி போனது…
‘என்.. என்ன நீ அந்த பொண்ணுகிட்ட… தம்பு அப்போ நூர்த்துகணக்கான பொண்ணுங்ககிட்ட இப்படிதான் சொல்லி வச்சியா?’ என்று அச்சத்தோடு பார்க்க..,
ம்மா என்று அழுத்தமாக தாயை பார்த்தவன் ‘அப்படி இல்ல … யார்கிட்டயும் சொல்லலை அவங்ககூட பேசி பார்க்கும்போதே எனக்கு செட் ஆகுமா ஆகாதான்னு தெரிஞ்சிடும்’
‘என்ன பேசுற..?? கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க அடிப்படையா கேட்கிற விபரம் எதையும் பார்த்து ஒரு பொண்ணு உன்னை கட்டகூடாதுன்னா என்ன அர்த்தம்? இவன் நம்மளை வச்சு காப்பாத்துவானான்னு கூட தெரியாம ஒரு பொண்ணு எப்படி உன்னை நம்பி தன்னை ஒப்படைப்பா..?? அப்படி ஒப்படைக்கிற பொண்ணுகிட்ட நீ என்ன தகுதி எதிர்பார்க்கிற?’ என்று பொறுமை இழந்து திரு கேட்க..,
‘ஏன் அன்னைக்கு நீங்க அம்மாவை பிடிச்சிருக்குன்னு தாத்தாகிட்ட பொண்ணு கேட்டு போனபோது அம்மா என்ன உங்களை கேள்வியா கேட்டாங்க..??’ என்றிட
‘இல்லை’
‘எந்த நம்பிக்கையில அம்மா உங்ககிட்ட தன்னோட வாழ்க்கையை ஒப்படைச்சாங்களோ அப்படி ஒரு பொண்ணுதான் எனக்கு வேணும்’
‘டேய் ப்ரோ அப்போ பிள்ளையார் போலவே அம்மும்மா மாதிரி பொண்ணு வேணும்ன்னு அண்ணா சொல்றாங்களா..??’
‘தெரியலையேடா..’ என்று அவன் உதட்டை பிதுக்க…,
‘தம்பு அந்த காலம் வேற இந்த காலம் வேற..’ என்ற அபியிடம்..,
‘ஏன் அபிம்மா அப்போ எந்த கேள்வியும் கேட்காம கல்யாணம் பண்ணின உங்களை சித்தப்பா என்ன விட்டுட்டா ஓடிட்டார்..’ என்று எதிர்கேள்வி கேட்க…
“என்ன பேசுற தம்பு மாமாகூட வந்தவரை பார்த்தப்போ இவர்தான் எனக்கு எல்லாமேன்னு தோனுச்சு வசதி இருக்கா, என்ன வேலை, வருமானம் எதுவும் கேட்க தோணலை.. இரண்டு பேரும் எங்கப்பாகிட்ட பேசிட்டு இருந்தாங்க நானும் அக்காவும் உள்ள இருந்தோம் அப்பா கூப்பிட்டு அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டப்போ டக்குன்னு சரி சொல்லிட்டேன்”
‘ஏன் அபிம்மா..??’
“என்னன்னு தெரியலை ஆனா அவர் பேசினது அவரோட கண்ணுல கள்ளமில்லாம இருந்தது எல்லாம் சேர்த்து ஏதோ ஒரு நம்பிக்கை அது கொடுத்த தைரியத்துல சரி சொல்லிட்டேன்”
‘என்ன நம்பிக்கை’
‘நிச்சயம் இவர்கூட இருக்கப்போ என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு முழுசா நம்பினேன் தம்பு’
‘அதுல இப்போவரை ஏதாவது குறை இருக்கா அபிம்மா’
‘இல்லைப்பா நான் நினைச்சதைவிட ரொம்ப சந்தோஷமா வச்சிருக்கார் உன் சித்தப்பா..’
‘எஸ் இதுதான் எனக்கும் வேணும்’
‘என்னது..??’
‘நீங்க சொல்ற அந்த நம்பிக்கை என்னை கட்டிக்க போற பெண்ணுக்கும் வேணும்…! மத்த உறவைவிட இந்த உறவுல நம்பிக்கை ரொம்ப முக்கியம்மா அதைதான் நான் எதிர்பார்க்கிறேன்’ என்றவன் கலக்கத்தோடு தன்னை பார்த்திருந்த நாயகி அருகே அமர்ந்து…
“இதோ பாருங்கம்மா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே கண்டிப்பா பண்ணிப்பேன் ஆனா எனக்கு டைம் வேணும் தப்பான நபர்கிட்ட வாழ்க்கையை ஒப்படைச்சிட்டா அப்புறம் மீதமிருக்க வாழ்க்கை நரகமாகிடும்மா… முதல்ல நான் கட்டிக்க போற பெண்ணுக்கு கல்யாணம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கணும் அடுத்து என்மேல அதோடு சேர்ந்து வரக்கூடிய உறவுகளின் மீது மரியாதை இருக்கணும் நீங்க சொல்ற காதல், புரிதல் இருக்கோ இல்லையே இன்னைய தேதியில சக மனுஷன் மேல அடிப்படையான அன்பும் அவன் உணர்வுகளை மதித்து பரஸ்பர மரியாதையோடு இருந்தாலே போதும்மா சந்தோஷமா வாழ்ந்துடலாம்”
‘என்னப்பா பேசுற? எனக்கு புரியலை’ என்று பரிதவிப்புடன் நாயகி..
“சரிம்மா உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன்..” என்றதும் அனைவரின் பார்வையும் அவன் மீது படிந்தது.
‘முதல்ல நீங்க ரெண்டு பேரும் என்னை அப்படி வளர்க்கலை அடுத்து எனக்குன்னு சில மாரல்ஸ் இருக்கு’
“நீ சொல்லவேண்டியதில்லை எங்க பிள்ளையை பத்தி எங்களுக்கு தெரியும் நீ சொல்ல வந்ததை தெளிவா சொல்லு’ என்றார் திரு.
ஓகே என்று பெருமூச்செறிந்தவன் ‘நான் ஒரு டீட்டோட்டலர்! அப்போ எனக்கு வரப்போறலைஃப் பார்ட்னர் அதேபோல இருக்கணும்னு நான் எதிர்பார்க்கிறது தப்பா..??’
‘டீடோட்டலர்கும் பொண்ணுங்களுக்கும் என்ன கரண் சம்பந்தம்?’
‘இருக்கு சித்தப்பா! நீங்க கொண்டு வந்த பொண்ணுங்கள்ல சிலருக்கு சிகரெட் பழக்கமும் இன்னும் சிலருக்கு குடிபழக்கமும் இருக்கு..’
‘என்னாது பொண்ணுங்க குடிப்பாங்களா..??’
‘ஆமாம்மா என்னால எப்படி அதை ஏத்துக்க முடியும்?’
‘என்னடா சொல்ற இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?’
‘சித்தப்பா இதுமட்டுமில்லை நான் அந்த பொண்ணுங்ககிட்ட பேசினதாலதான் இன்னும் பலவிஷயம் புரிஞ்சது..’
‘என்னப்பா ??’
‘நான் பார்த்த பெண்கள்ல இருபது பேர்க்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்ல, கமிட்மென்ட்க்கு யாரும் தயாராயில்லை.. நீங்க சொன்னீங்களே லிவிங் இன் ரிலேஷன்ஷிப் அதுல இருக்காங்க.. ஊருக்காக, பெரியவங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உடனே டிவோர்ஸ் பண்ணிடுவாங்களாம்’
ஏன்?
‘ஏன்னா அந்த ரிலேஷன்ஷிப் தான் முக்கியமாம்.. அவங்க ரொம்ப சுதந்திரமா இருக்காங்களாம் யாரும் கேள்வி கேட்பதில்லையாம்.. அதோட பெரியவங்க நடத்தின கல்யாணம் தோற்ற பிறகு அந்த பெண்ணை பெருசா கேள்வி கேட்க மாட்டாங்களாம் அதனால பேருக்கு ஒரு கல்யாணம் செய்துட்டு டிவோர்ஸ் பண்ணிடுவாங்களாம்’ என்றிட வாயடைத்து போயினர் பெற்றோர்.
இதை விடுங்க கோயம்பத்தூர், திண்டுக்கல்ல இருந்து சென்னைல வேலை செய்யற கிட்டத்தட்ட நாலு பொண்ணுங்க ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொன்னீங்களே அவங்க எல்லாம் நேரம் வரப்போ சொல்லிக்கலாம்ன்னு சொல்லி லவ் பண்ற பையனை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருக்காங்க’
‘என்னடா சொல்ற..??’
‘இன்னும் சிலர் நான் ஹான்ட்ஸம்மா இருக்கேன், என்னோட செலரி பேக்ரவுன்ட் எல்லா தெரிஞ்சிட்டு கல்யாணம் செட் ஆகாது வேணும்னா பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ல (FWB) இருக்கலாம்னு சொன்னாங்க…’
“பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்டா அப்படின்னா என்னபா” என்று புரியாமல் பெற்றோர் கேட்க…
“அது எப்படி சொல்றது.. உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா ஒரு பையனும் பெண்ணும் பிரெண்ட்ஸ்ன்னு சொல்லிப்பாங்க ஆனா அவங்களோட உறவு அதையும் தாண்டி எல்லா எல்லையையும் கடந்தது”
‘அப்படின்னா..??’
‘எப்படி சொல்றது என்று ஒரு நொடி நிதானித்தவன் .. ம்மா அந்த பொண்ணுக்கு ப்ரெண்டா மட்டுமில்லாம தாலி கட்டாத புருஷனாவும் இருப்பான்.. அதேபோல அவனுக்கு அந்த பொண்ணு மனைவியாவும் இருப்பா ஆனா அவங்க பிரெண்ட்ஸ் இப்ப புரியுதா..?? என்றதும்
‘ஆமாம்மா சிலர் கல்யாணம் ஆன பிறகும் அவங்க குடிக்கிறதுக்கு தடை சொல்ல கூடாதாம்.. வீக்எண்ட்ல பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போய் ஒண்ணா சேர்ந்து குடிப்பாங்கலாம் நானே கொண்டு போய் விடணுமாம்’ என்றதும் சிவ சிவா என்று அரண்டு போனார் நாயகி.
‘ம்மா கடைசியா நீங்க சொல்லி ஒரு பெண்ணை சென்னைல பார்த்தேனே நியாபகம் இருக்கா..?’
‘ஹ்ம்ம் ஐடில வேலை செய்யற பொண்ணுதானே!’
‘ஆமா அந்த பொண்ணு என்ன சொன்னா தெரியுமா..??’
‘என்ன சொன்னா..??’
‘கல்யாணத்துக்கு அப்புறம் அவ பர்சனல் ஸ்பேஸ்ல நான் தலையிட கூடாதாம் என்னோட பெர்சனல் குள்ள அவ வரமாட்டாளாம்.. அவ இஷ்டத்துக்கு என்னனாலும் பண்ணுவாளாம் நான் அதை ஏன்னு கேட்க கூடாதாம் அதேபோல என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணும்னாலும் பண்ணலாமாம் அவளும் கேட்க மாட்டாளாம்…”
‘என்னடா சொல்ற அப்புறம் எதுக்கு கல்யாணம் ?’
‘அதைவிட முக்கியமான விஷயம் பெங்களூர்ல ஏழு பொண்ணுங்க பார்த்தேனே அதுல நாலு பேர் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம்..’
‘என்னது நிஜமாவா சொன்னாங்க? ஏன்டா இப்படி ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கலையா இல்ல என்ன காரணம் தம்பு’ என்ற நாயகிக்கு மயக்கம் வராத குறைதான்.
‘இல்லம்மா என்னை பிடிச்சிருக்காம் ஆனா கெரியர் முக்கியம் குழந்தைக்கான கமிட்மென்ட் எடுக்க முடியாதாம்..’
‘யாரும் குழந்தை பெத்துக்கமாட்டேன் சொன்னா மனித இனம் என்னாகும்?’ என்ற கேள்வியோடு பசுபதி பார்க்க….
‘அதுதான் ai இருக்கே! இப்போ எல்லா பீல்ட்லயும் மனுஷங்களை ரீப்ளேஸ் பண்ணிட்டு இருக்கேபா’ என்று சர்வஜித் சொல்ல அடுத்த கேள்வி கேட்க முடியாத நிலையில் நின்றார்.
**********************************************
அடுத்து இன்னும் சிலர் பப்புக்கு போவாங்களாம் அவங்களுக்கு நானும் கம்பெனி கொடுக்கனுமாம்…’
‘இன்னும் சிலருக்கு பாய் பெஸ்டி (Boy bestie) இருக்காங்களாம்..’
‘புதுபுதுசா சொல்றியேபா எனக்கு ஒன்னும் புரியலை’
‘அதாவது அவங்களுக்கு ஃபேமிலி புருஷனைவிட பாய் பெஸ்டிதான் முக்கியமாம் கல்யாணத்துக்கு அப்புறமும் அவன்கூட வெளில போவாங்களாம் டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்களாம் நான் எதுவும் கேட்க கூடாதாம்..’
‘என்னது வெளியே போறது, நேரம் செலவிடுறதா அப்போ புருஷன்னு நீ எதுக்கு..??’ என்றார் அபிராமி
‘அதுக்கு பதில் அந்த பொண்ணுங்கதான் சொல்லணும்’ என்றான் அமைதியான குரலில்.
‘அம்மூம்மா அண்ணா சொல்றது எல்லாமே உண்மை தான்! எங்க காலேஜ் பொண்ணுங்க சிலர் லவ்ங்கிற பேருல பசங்களை atm மாதிரி யூஸ் பண்றாங்க அண்ணா சொல்ற பாய் பெஸ்டி கல்ச்சரும் இருக்கு.. என்ன இந்த பொண்ணுங்க உண்மையா இருக்க பசங்களை விட்டுட்டு மோசமானவனை நம்புவாங்க’ என்று ப்ரணவ் சொல்லவும்
‘ஆமா பெரிம்மா fwb இப்போ ரொம்ப சர்வசாதாரணமாகிடுச்சு என்கூட வேலை செய்ற பசங்க எல்லாருமே கல்யாணமான்னு தெறிச்சு ஓடுறாங்க..’ சர்வஜித்தும் அதை ஆமோதித்தான்.
‘ம்மா சிலர் கல்யாணத்துக்கு அப்புறம் இரண்டு பக்க பெற்றோரும் வேண்டாம் நாம தனியா போயிடனும்னு சொல்றாங்க’ என்றதும் ஒருநொடி அதிர்ந்தாலும் மறுநொடியே…
“இருக்கட்டுமே தம்பு தனியா இருக்கிறதால நீ எங்க பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா..? எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தா போதும்.. உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்” என்றவர் தன்னையறியாமல் கலங்கிய விழிகளுடன் திருவின் தோள் சாய அவரும் மனைவியை தட்டி கொடுத்தார்.
‘ம்மா இன்னும் சொல்லனும்னா சொல்லிட்டே போகலாம்… இதுல ரொம்ப ஆச்சர்யபடுற விஷயம் என்னன்னா தன்னை பத்தி வெளிப்படையா சொன்ன எந்த பொண்ணுமே என்னோட குணம் எப்படி நான் எப்படி பார்த்துப்பேன்னு கேட்கவே இல்ல, பதிலா எவ்ளோ சேலரி, பேங்க் பேலன்ஸ், கார், சொத்து, அப்பம்மா கூட இருப்பாங்களா, வெளிநாடு போகணும் கல்யாணத்தை எந்தளவு கிராண்டா நடத்துவேன், எந்த ஸ்டைலிஸ்ட், மேக்கப் ஆர்டிஸ்ட்..’ என்று அவன் பேசிக்கொண்டே செல்ல..
‘போதும் போதும் தம்பு நிஜமாவே பொண்ணுங்க இப்படிதான் இருக்காங்களா நம்ப முடியலை..’
‘இல்லம்மா எல்லா பொண்ணுங்களும் இப்படி இல்லை ஒட்டுமொத்தமா அப்படி சொல்லவும் முடியாது.. ஆனா இப்படியும் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கு! என்ன ஒன்னு இந்த ரெண்டு வருஷத்துல அந்த சதவிகிதம் ரொம்பவே கூடியிருக்கு அதான் பிரச்சனை’
‘இதனாலதான் பொண்ணுக்கு தகுதி இருக்கனும்னு சொன்னியாப்பா..??’
‘நிச்சயமாம்மா நான் அதை எதிர்பார்க்க கூடாதா..?? ஆனா ஒருவிஷயம் நான் பேசினவரை எந்த பெண்ணும் தன்னோட நிலையை மறைக்க முயற்சிக்கலை அதுக்கே அவங்களை பாராட்டலாம்.. ஃபைன் அவங்க லைஃப் அவங்க விருப்பபடி வாழறாங்க அதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. அது தப்பு சரின்னு சொல்ல நான் யாருமில்லை எனக்கு செட்டாகலை அவ்ளோதான்! அதேநேரம் என் குழந்தையை சுமக்க போற பொண்ணுக்கு தகுதி இருக்கனும்னு நினைக்கறது என்னோட உரிமை! ஏன்னா இது என் லைஃப் என் விருப்பம்.. இதுல யார் என்னோட பயணிக்கணும்னு நான்தான் முடிவு பண்ணனும்’ எனவும் அனைவருக்கும் அவன் கூற வருவது தெளிவாக புரிந்தது.
‘திருமண பந்தத்தை மதிக்காம பப்புக்கு போயிட்டு ஸ்மோக் பண்ற குடிக்கிற பொண்ணு எப்படி அடுத்த தலைமுறையை நல்லவிதத்துல வளர்க்க முடியும்? இப்போ தப்பெல்லாம் சரியாகிடுச்சு சரின்னு இருந்ததெல்லாம் க்ரிஞ்சாகிடுச்சு… வாழ்க்கை பற்றின புரிதலே இல்லாம தன் போக்கில் வாழற பொண்ணுங்ககிட்ட என் வாழ்க்கையை ஒப்படைக்க நான் தயாரா இல்லை.. கல்யாணத்துக்கு உண்டான மரியாதை கொடுக்கணும் பரஸ்பர மதிப்பும் அடிப்படையான அன்பும் எதிர்பார்க்கிறேன்ம்மா அதனால தான் இந்த டைம் எடுத்துக்குறேன்’
‘உங்களுக்கு என் பிரென்ட் ராகேஷ் நியாபகம் இருக்குல்ல’
‘அவனை எப்படி மறக்க முடியும்..? கல்யாணமான ரெண்டே நாளுல பொண்டாட்டி இறந்ததால அவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா?’ என்றார் அபி
‘ஆமா அபிம்மா அந்த பொண்ணு ஒருத்தனை காதலிச்சிட்டு அப்பா அம்மா வற்புறுத்தலுக்காக ராகேஷை கல்யாணம் பண்ணிட்டு இவன்கூடவும் வாழமுடியாம காதலனை மறக்க முடியாம தற்கொலை செய்துடுச்சி.. புதுப்பெண் என்பதால சட்டம் இவனுக்கு எதிரா இருக்கவும் அவன் வார்த்தைகள் எதுவும் எடுபடலை கடைசியா அந்த பொண்ணு அவ பிரென்ட்க்கு அனுப்பின வாய்ஸ் நோட் அடிப்படையில அவளோட சாவுக்கு இவன் காரணமில்லைன்னு ப்ரூவ் பண்ணி வெளியில வந்தவன் கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுத்து போயிட்டான்.. அதனாலேயே நீங்க பார்க்கிற பொண்ணுக்கு முதல்ல ஏதாவது லவ் இருக்கான்னு தெரிஞ்சுப்பேன்… ‘ என்று தன் பேச்சு முடிந்தது என்பது போல வசீகரன் தண்ணீரை எடுத்து பருகினான்.
சிலநேர அமைதிக்குபின் ‘சரிப்பா எங்களுக்கு புரியுது இனி உன் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்.. அவசரப்பட்டு வாழ்க்கையை இழந்துட கூடாதுன்னு நினைக்கிற உன்னை வற்புறுத்த மாட்டேன்… ஆனா சீக்கிரமே உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைக்கனும்னு வேண்டிகிறோம்’ என்றனர் பெற்றோர்.