‘அம்மூ என்னை நம்பு !’ என்று தன் நீண்ட நெடிய உரையை முடித்துகொண்ட வசீகரன் சாரதியோடு ஏலகிரிக்கு கிளம்பிவிட அறையில் தளர்வாக சாய்ந்திருந்த மனைவியிடம் மன்றாடி கொண்டிருந்தார் திருவேங்கடம்.
‘உங்களை என்கூட பேச வேண்டாம்னு சொன்னேன்’ என்று குறையாத கோபத்தோடு நாயகி அவர் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டு சொல்லவும்..,
‘ஆனா என்னால உன்கூட பேசாம இருக்க முடியாதுடி!’ என்று மனைவியின் முகத்தை தன் கரங்களில் அள்ளிக்கொண்ட திரு,
‘ஓகே தப்புதான் ஒத்துக்கறேன் உன்கூட கலந்துக்காம ஜித்துக்கு விதுஷாவை கட்டி வைக்கலாம்னு நான் முடிவு எடுத்தது தப்புதான்.. ஆனா சாகர் அவனோட பிரெண்ட் நம்மகூட சம்பந்தம் செய்துக்க ஆர்வமா இருக்கறதா சொன்னான் அதோட வசீயும் எதுக்கும் பிடிகொடுக்காம போனதால அப்படி சொல்லிட்..’ என்று அவர் முடிக்கும் முன்னமே..
‘நீங்க முதல்ல அவனை வசீன்னு சொல்றதை நிறுத்துங்க..’ என்ற உறுமலோடு கணவனின் கரங்களில் இருந்து விலகினார் நாயகி.
‘என்ன பேசுற அம்மூ யாரோ ஒரு பொண்ணுக்காக என் பிள்ளையை எனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடகூடாதா..?’
‘கூடாது! அதான் அன்னைக்கு தம்பு யாரும் இனி வசீன்னு கூப்பிடகூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொன்னானே அப்பவும் இப்படி கூப்பிட்டா என்ன அர்த்தம்? என் பிள்ளையோட உணர்வை நீங்களே மதிக்க மாட்டேங்கறீங்க.. அதான் எந்த பெண்ணை பத்தியும் தீர விசாரிக்காம என் பிள்ளை வாழ்க்கையை படுகுழியில தள்ள பார்த்திருக்கீங்க.. அன்னைக்கும் அப்படிதான் என் பையனோட உணர்வை நீங்க மதிக்காம நடந்துகிட்டீங்க இப்பவும் அப்படிதான்… என்ன நினைச்சிட்டு நீங்க மூத்தவன் இருக்க இளையவனுக்கு கல்யாணம் பண்ண பார்க்கறீங்க..??’ என்று ஆற்றாமையில் பொங்க
‘அம்மூ எல்லாமே நம்ம குடும்பத்துக்காக…’ என்றவர் மேலும் தயங்க
‘ஹே அம்மூ என்ன பேசுற..?? நான் அப்படியெல்லாம் நினைக்கலைடா வசீயே…’ என்று ஆரம்பித்தவர் மனைவியின் முறைப்பில்,
‘சரி தம்புவே அதெல்லாம் கடந்து வந்துட்டான்.. இன்னும் அதையே நினைச்சிட்டு இருப்பியா ப்ச் விடு அம்மூ ஸாரி.. இனி அப்படி கூப்பிடலை நீ ஏன் இப்படி பிரிச்சு பேசுற’
‘வேற எப்படி பேச சொல்றீங்க..?? பெருசா பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பினா போதாது.. நாங்க தான் வீட்டோட இருக்கோம் நாட்டு நடப்பு எதுவும் தெரியாம இருக்கோம் ஆனா மிலிட்டரில இருந்து இவ்ளோ பெரிய மீசை வச்சு என்ன ப்ரோஜனம் என் பையனோட எதிர்பார்ப்பு என்னன்னு தெரியாம ஊர் மெச்ச கல்யாணம் பண்றதுல அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? எதுக்காக கிடைச்ச பெண்ணை தலையில கட்ட பார்க்கறீங்க.. உங்க விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு என் பிள்ளை அவஸ்த்தை படவா..? ‘
‘இல்லமா தம்பு சொன்ன மாதிரி விதுஷா சாகர் பார்த்து வளர்ந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி வசீயோட எதிர்ப்பார்ப்புல நிச்சயம் இருக்கும் ஆனா அவன் வேலைக்கு போகவேண்டாம் சொல்றது எந்த விதத்துல் நியாயம்?’
‘ஏங்க அவன் ஒன்னும் எல்லா பொண்ணுங்களையும் வேலைக்கு போக வேண்டாம் சொல்லலையே தனக்கு வரபோற மனைவி போகாம இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறான் இதுல என்ன தப்பு..?? அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணு பாருங்க இவ்ளோ ஏன் எம்எஸ்சி படிச்ச என்னை வேலைக்கு போக வேண்டாம்னு நீங்க சொல்லலாம்.. என் பையன் சொல்லகூடாதா?’
‘ஹே எனக்கு வேற வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிட்டே இருந்தது அதோட உங்கப்பாக்கு முடியாம நீயும் தானே..’
‘இருக்குல்ல’
‘என்னது?’
‘நீங்க என்னை வேலைக்கு போக வேண்டாம் சொன்னதுக்கும் நான் கேட்டுகிட்டதுக்கும் ஒரு காரணம் இருக்குல்ல! அதேபோல நிச்சயம் தம்புக்கும் இருக்கும் அது புரியாம நீங்க கூட்டிட்டு வந்தீங்களே விதுஷாவா மதுஷாவா? அந்த பொண்ணு ஏதோ அமெரிக்கன் கம்பெனில வேலை செய்யறாளாம் அவளுக்கு வேலை நேரமே சாயங்காலத்துல இருந்து காலையில வரையிலயாம்.. ஒருவேளை ஜித்துக்கே அந்த பெண்ணை பார்த்திருந்தாகூட இவன் காலையில வேலைக்கு போயிடுவான் அவ சாயங்காலம் வேலைக்கு போயிடுவா? அப்புறம் எங்கிருந்து அவங்க வாழ? வாழவேண்டிய வயசுல வாழாம ரெண்டு பேரும் வெவ்வேறு திக்குல ஓடி என்னத்தை சாதிக்க போறாங்க..?? உங்களை நம்பி ஒப்படைச்சா என் மூணு பிள்ளைகளோட வாழ்க்கையும் என்னாகுறது..’ என்ற மனைவிக்கு பதில்கூற முடியாமல் திணறிபோனார் திருவேங்கடம்.
ஆனால் நாயகி விடுவதாக இல்லை, ‘அப்பவே என் பையன் இவர் பொண்டாட்டியை மட்டும் இவர் தேர்ந்தெடுக்கலாம் ஆனா நான் தேர்ந்தெடுக்க கூடாதான்னு கேட்டான் ஆனா நான்தான் அப்பா எது செய்தாலும் சரியா இருக்கும்னு சொன்னேன்.. இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீங்க சொன்னா அவன் லவ் பண்ணனும் வேண்டாம் சொன்னா பண்ணகூடாது என்ன நியாயங்க இது? சரி அதெல்லாம் விடுங்க முதல்ல நாம கல்யாணம் எதுக்கு பண்றோம் அதை சொல்லுங்க?’ என்று கணவரை பிடித்து உலுக்கவும் ‘அக்கா’ என்று உள்ளே நுழைந்தார் அபி.
‘வா அபி’ என்ற திரு மனைவியின் மறுபுறம் சென்று அமர.., ஹாட் பேக்கோடு வந்த அபி ‘முட்டியில வீக்கம் இருக்காமே டாக்டர் ஒத்தடம் கொடுக்க சொன்னார்னு ஜித்து சொன்னான் காலை நீட்டுக்கா’
‘என்கிட்டே கொடு அபி நான் பார்த்துக்குறேன்’ என்று திரு கையில் வாங்கிக்கொள்ளவும் ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்’ என்ற நாயகி ஹாட்பேக்கை பிடுங்கி அபியிடம் கொடுக்க..,
‘என்ன மாமா அக்கா இன்னும் சமாதானம் ஆகலையா?’ என்றார் சிரிப்போடு..
‘இல்ல’ என்று ஹாட்பேக்கை வாங்கி மனைவியின் காலை பிடித்து தன் மடியில் வைத்து ஒற்றடம் கொடுக்க ஆரம்பிக்கவும்..,
‘மாமா நைட்க்கு சப்பாத்தி போடட்டுமா இல்ல ஆப்பமா என்ன பண்ணட்டும்’
‘நீ எதுவும் செய்யாத நான் பார்த்துக்குறேன்’
‘என்ன பார்த்துப்பீங்க? நீங்க பார்த்தவரை போதும் இனி நீங்க ஒன்னும் பார்க்க வேண்டாம்… எல்லாமே நாங்க பார்த்துக்குறோம்’
என்.. என்னது..?? என்று பதறியவருக்கு மனைவியின் பாராமுகத்தை தாங்கும் சக்தி எப்போதுமே இருந்ததில்லை. ‘ப்ளீஸ் அம்மு உனக்கு நான் செய்யற ஆப்பமும் குருமாவும் பிடிக்குமே’ என்றிட
‘நான்தான் வேண்டாம் சொல்லிட்டேனே விடுங்க’
‘அக்கா என்னக்கா இது அதான் மாமா சொல்றாரே நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிற..??’
‘நீ அமைதியா இருடி! இவ்ளோநாள் இவர் செய்யற எல்லாமே சரியா இருக்கும்னு நம்பிவிட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது.. என் பையன் கேட்கிற தகுதியோட ஒரு பெண்ணை பார்க்க முடிஞ்சதா இவரால?’
பொறுமை இழந்த திரு, ‘ஏன்டி நான் தெரியாமதான் கேட்கிறேன் பார்க்கிற பொண்ணுங்ககிட்ட எல்லாம் அவன் சொன்ன தகுதி இருக்கா இல்லையான்னு கேட்டா பெண்ணை பெத்தவன் என்னை செருப்பால அடிக்கமாட்டான்… சரி அதுகூட பரவால ஒருவேளை அவன் நம்ம பையனுக்கு குழந்தை கொடுக்குற தகுதி இருக்கான்னு திருப்பி கேட்டா என்ன பண்ணுவ..??’ என்றிட..,
‘ஆமாக்கா தம்பு முதல்ல அப்படி சொல்லவும் நானும் மாமா மாதிரிதான் நினைச்சேன்.. யாராவது நம்மளை திருப்பி கேட்டா என்ன பண்றதுன்னு ஒருநிமிஷம் அரண்டு போயிட்டேன்’
‘வாயை மூடுடி’ என்று தங்கையிடம் கர்ஜித்தவர்,
‘என்ன பேசுறீங்க நீங்க..?? எனக்கு என் பையனை தெரியும் தம்பு இன்னைக்கு அவன் மனசுல இருக்க மொத்தமும் சொல்லலை இதெல்லாம் தாண்டி அவன் மனசுல ஏதோ இருக்கு.. அவன் சொன்னதோட அர்த்தம் நிச்சயம் தப்பா இருக்காது அதை புரிஞ்சுக்காம நீங்களே இப்படி பேசலாமா?’
‘அம்மூ எனக்கும் தம்புவை புரியுது ஆனா எப்படி என்னன்னு சொல்லி பொண்ணு கேட்கிறதுனு தெரில..’
‘போதும் இனி நீங்க இதுல தலையிடாதீங்க.. என் பையனுக்கு நானே பொண்ணு பார்த்துக்குறேன் அதுவும் அவன் கேட்ட சகல தகுதியோட..’ என்றவர் திரு அங்கேயே நிற்பதை கண்டு,
‘போங்க போய் இன்னும் அரைமணி நேரத்துல ஆப்பம் கொண்டு வந்தா சாப்பிடுறேன் இல்ல..’ என்று அவர் முடிக்கும் முன்னமே சமையலறைக்குள் நுழைந்திருந்தார் திருவேங்கடம்.
‘சரிக்கா நான் போய் மாமாக்கு ஹெல்ப் பண்றேன்’
‘அதெல்லாம் வேண்டாம் நீ ப்ரணவ வரசொல்லுடி’ என்றார் குறையாத கோபத்தோடு
எதுக்குக்கா..??
‘கூப்பிட போறியா இல்லையா..??’ என்றதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மகனோடு வந்தார் அபி…
‘கண்ணா ஒரு நோட்புக், பேனா எடுத்துட்டு வாப்பா’ என்றதும் மறுபேச்சு பேசாமல் அவர் கேட்ட பொருட்களுடன் பிரணவ் அமர்ந்ததும்.
‘உங்க அண்ணன் சொன்னதை எல்லாம் லிஸ்ட் போடு’ என்றார்.
‘என்ன லிஸ்ட் அம்மும்மா’
‘அதுதான் ராஜா அவனுக்கு வரபோற மனைவி குடும்பத்துக்கு மதிப்பு கொடுக்கணும், கல்யாணத்தின் மேல நம்பிக்கை இருக்கணும், குடிக்க கூடாதுன்னு அவன் சொன்ன எல்லா கண்டிஷனையும் லிஸ்ட் போடு’
‘எதுக்குக்கா?’
‘உனக்கு வேற தனியா சொல்லனுமா..??’ என்றவர் ‘நீ எழுது கண்ணா..’ என்று மகனின் எதிர்பார்ப்புகளை பட்டியலிட தொடங்கினார்.
‘இல்ல அவனுங்க சரக்கு பார்ட்டி கேட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன் …’
‘வாட்?’
‘ஸாரி ஸாரி மச்சி உன்னை கேட்காம ஒத்துகிட்டது தப்பு தான் ஆனா எனக்கு அடுத்தவாரம் முழுக்க டைட் ஸ்கெட்யூல் அதான் இன்னைக்கே..’ என்று தயங்க வசீயிடம் கனத்த மௌனம்
வசீகரன், சாரதியின் நண்பர் கூட்டம் சற்று பெரியதே அதில் ராகேஷ், விஷால், விவேக், சாரதி மற்றும் வசீகரன் மிகவும் நெருக்கமானவர்கள்… திருவிற்கு வசீயின் நட்பு வட்டம் குறித்து தெரியுமென்பதாலும் அனைவருமே நன்கு படிக்க கூடியவர்கள் என்பதாலும் படிக்கும் காலத்தில் மாதம் ஓரிரு முறை வசீ நண்பர்களுடன் ஏலகிரிக்கு செல்வதை திரு தடுப்பதில்லை. அங்கே அவர்களின் கெஸ்ட் ஹவுசில் தங்குபவர்களை கவனிக்க சொல்லி தன் ஆட்களிடம் சொல்லி விடுவார்.
‘ஏய் இரு இரு அதென்னா வந்துடுறோம்னு சொல்ற அப்போ நீ இன்னும் குடிக்கறதை விடலையா..?’
‘டேய் என்னடா இது என்னை மொடா குடிகாரன் மாதிரி பேசுற? நான் சும்மா சோஷியல் டிரிங்கிங் தான்.. அவனுங்களுக்கு வாங்கி கொடுத்துட்டு நான் அமைதியா உட்காந்தா ஓட்டி எடுத்துடுவாங்கடா’
‘டேய் அன்னைக்கு அஷ்மிதாவை பேசி முடிச்சப்பவே இதை விட்டுடுவேன் சொன்ன இப்போ என்ன மாத்தி பேசுற..??’
‘இல்லைன்னு சொல்லலை மச்சான் … நான் என்ன செய்ய வேலை பார்க்கிற இடத்துல அதிக ப்ரெஷர்டா’
‘குடிக்க சாக்கு சொல்லாத..’
‘மச்சி நீ ஈஸியா சொல்லிடுவ ஆனா எல்லாரும் கேவலமா ஒரு லுக் விடுவாங்க பாரு அப்படியே செத்துடலாம் போல இருக்கும்..’
‘நீ ஏன்டா அவனை பாதர் பண்ற? ஒரு முறைன்னு தான் எல்லா தப்புமே ஆரம்பிக்கும்… ஆனா அதோடு நிற்காது.. கூட்டமா சேர்ந்து சிலர் ஒரு விஷயம் செய்தா அது சரின்னு ஆகிடாது அதை செய்யாம இருக்கிறதால நாம தப்புன்னு ஆகிடாது நமக்கு விருப்பமில்லாததை, ஏற்பில்லாததை சூழல் மேல பழிபோட்டு செய்யகூடாது… சோஷியல் டிரிங்கிங்ன்னு இப்போ ஆரம்பிச்சு இருக்கவன் அதை கொஞ்சம் கொஞ்சமா பழகி பின்னாளில் முழுநேரம் குடிக்காம இருப்பன்னு என்ன நிச்சயம்…’
‘என்னோட லிமிட் எனக்கு தெரியும் மச்சான் கட்டுபாடோடு இருப்பேன்..’
‘எப்படி இத்தனை வருஷமா கெடுதல்னு நம்பியிருந்த நீயே மனக்கட்டுப்பாடு இல்லாம ரெண்டு சிப் மூணு சிப்னு சொல்லி சப்பகட்டு கட்டிட்டு இருக்க இதுல இதுக்கு மேல போகமாட்டேன்னு வேற வியாக்கியானம் பேசிட்டு இருக்க போடா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க உன் பேச்சை எல்லாம் தண்ணில தான் எழுதி வைக்கணும்..’
‘ப்ச் என்னை உனக்கு தெரியாதா..??’
‘அப்புறம் ஏன்..??’
‘வேற என்னடா செய்ய சொல்ற? மாசத்துக்கு எப்படியாவது ரெண்டு மூணு பார்டி வைக்கறானுங்க எல்லாரும் குடிக்கிறப்போ நாம ஜூஸ் எடுத்துட்டு ஒதுங்கினா பாப்பான்னு கிண்டல் பண்றானுங்க… அதோட நிறுத்தினா பரவால்ல பேச்சு எங்கயோ தொடங்கி எங்கயோ முடியும் கடைசில அவனுங்க சரி நான் தப்புங்கிற மாதிரி ஆகிடுச்சு அடுத்த நாலு நாள் ஆபிஸ்ல எல்லாரும் என்னை பார்த்த பார்வை இப்பவரை மறக்க முடியாதுடா… அதான் எதுக்கு வம்புன்னு சும்மா ஒரு க்ளாஸ் எடுத்துட்டு ரெண்டு சிப் அவ்ளோதான்…’
‘என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன் நீ டீடோட்டலர்னு சொல்லிதானே ப்ரோஃபைல் ரெடி பண்ணின அப்போ இது தப்பில்லையா..??’
‘என்னடா நீ கல்யாணத்துக்கு பின்னாடி பொண்டாட்டி பேர் சொல்லி தப்பிச்சுபேன் இதுதான் கடைசி பீர் சரியா?’
‘இல்ல உன்னை நம்புறதுக்கு இல்ல ஆஷ்மிகிட்ட சொன்னது ஒன்னு செய்றது ஒண்ணுன்னு இருக்ககூடாது.. ட்ரான்ஸ்பரன்ஸி இருக்கணும்… நீ என்ன சொன்னாலும் சரி இது நம்மை மட்டும் பாதிக்க போறதில்லை.. என்னை பொறுத்தவரை நமக்கு வரபோற லைஃப் பார்டனருக்கு நாம கொடுக்க போற மிகபெரிய கிஃப்ட் என்ன தெரியுமா..?
‘மச்சி இப்போ பணம் இருந்துட்டா போதும் எதையும் வாங்கிடலாம்னு நினைக்கிறோம் ஆனா இழந்த காலங்கள், ஆரோக்கியம்னு சிலது இருக்கு அதெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது. நான் தண்ணி அடிக்கிறது மட்டுமே சொல்லல எல்லா விதத்துலயும் தான் சொல்றேன்… அடுத்தவங்க கட்டாயத்துக்காகன்னு தொடங்கின பழக்கம் உனக்கு மட்டும் கெடுதலில்ல உன்னை நம்பி வரபோற பொண்ணு உன்னோட பிள்ளைகள்னு எல்லாருக்குமே பிரச்சனை புரிஞ்சுக்கோடா…’
‘கண்டிப்பா மச்சான் இதான் கடைசி.. அதோ அங்க நிக்கிறாங்க பார்’ என்றதும் பல்லைகடித்து கொண்டு வசீ சாரதி சொன்ன இடத்தில் தன் புல்லட்டை நிறுத்த ஆஷ்மியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு.
‘போ போய்ட்டு சீக்கிரம் வா’
‘மச்சான் மச்சான் ஆஷ்மி வீடியோ கால் பண்றாடா இங்க இருக்கிறதை பார்த்தா அவ்ளோதான் கல்யாணத்தையே நிறுத்திடுவா ப்ளீஸ் மச்சி’ என்று பணத்தை அவனிடம் திணித்தவன் ‘நீயே போய் அவனுங்களை கூட்டிட்டு வா’
‘என்னது நானா? அதெல்லாம் முடியாது’
‘டேய் டேய் ப்ளீஸ்டா சத்தியமா இனி தண்ணியடிக்க மாட்டேன் நான் சீக்கிரம் பேசிட்டு வந்துடுறேன் இப்போ காப்பாத்து மச்சான்’ என்றதும் வசீயின் புருவமத்தி முடிச்சிட்டது.
‘என்னடா யோசிக்கிற நிச்சயம் இனி எந்த காரணமும் சொல்லமாட்டேன் நம்புடா’
‘அப்போ ஆதாரத்தோடு சத்தியம் பண்ணு’
எப்படி..??
‘இப்படி’ என்று தன் கைபேசியில் கேமராவை வசீ ஓடவிட அடுத்தடுத்து ஆஷ்மியின் அழைப்பு வரவும் வேறுவழியின்றி வசீயிடம் வாக்குமூலம் கொடுத்தவன் அடுத்த சிலநொடிகளில் விலகி சென்று ஆஷ்மிதாவிற்கு அழைக்கவும் தன் ராயல் என்ஃபீல்டில் இருந்து இறங்கிய வசீகரன் மதுபான கடைக்குள் நுழைந்திருந்தான்.
*********************************
இரவு பெண்கள் கூட்டம் ரிசார்ட்டின் தோட்டத்தில் கேம்ப் ஃபையரில் ஆட்டம் பாட்டம் என்று களைகட்ட செய்திருக்க பல வருடங்கள் கழித்து அனைவரும் ஒரே இடத்தில் குழுமவும் தூக்கம் தூர போனதில் வார்த்தைகள் தீருமளவு பேசிக்கொண்டிருந்தனர்.
‘வசீகரா என் நெஞ்சினிக்க… உன் பொன் மடியில் தூங்கினால் போதும்… அதே கணம் என் கண்ணுறங்கா… முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..‘
என்று இழையாளின் கைபேசி இசைத்திட நள்ளிரவு நேரம் சுற்றிலும் கருமை சூழ்ந்திருக்க ரிசார்ட்டில் மீன் பொரிக்கும் வாசம் எழ பெண்களின் பார்வை இழைமீது படிந்தது.
‘ஹே எலை இன்னுமா இந்த பாட்டை விடல நீ..’ என்ற ரூபா கேட்கவும்..,
‘ஆமாம்மா..’ என்றவள் பார்கவியிடம் மேலும் சில நொடிகள் பேசிமுடித்து திரும்பிட, ‘என்னடி இன்னுமா நீ இந்த ஸாங்கை விடல’ என்றனர் மீண்டும்…
‘இதெல்லாம் கல்ட் கிளாசிக் ! ஹாரீஸ் மியூசிக் மெஸ்மரைஸ் பண்ணும் அதுவும் ப்ளூட் சவுண்ட்ஸ் ஒரு மேஜிக் பண்ணும் பாரு’ என்றவள் பாடல் குறித்து பேசிக்கொண்டே செல்ல,
‘மச்சி எவ்ளோ ரொமாண்டிக்டி நீ! ஆனா இதுவரை யாரையும் லவ் பண்ணலைங்கிறதை நம்பவே முடியல என்றாள் ரூபி.