“உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்
விளக்கம்
தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.”
“எங்க தகுதியை நாங்க தீர்மானிச்சுக்குறோம் கா..”, என்ற நந்தினியின் குரலில் சந்திரன் பாதி படியிலேயே நின்றிருந்தான்.
“என்ன குகா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?”
“நீங்க எப்படி பேசுறீங்களோ அப்படி தான நானும் பேச முடியும்.”
“!!”
“என் புருஷனோட தகுதியை நீங்க ஏன் தீர்மானம் பண்ணணும்? எங்களுக்கு முடியுதோ முடியலையோ யாரோட உதவியையும் எதிர்பார்க்காம தான நிக்குறார்.
மாமா சொல்றார்னா பையன் மேல இருக்குற வருத்தத்தில் பேசுறார்னு சொல்லலாம். நீங்க ஏன் கருத்து சொல்லிட்டு வரீங்க?”
ராணிக்கு மனம் நிறைந்து போனது தன்னால் முடியாததை மருமகள் நடத்திக் காட்டுவதில் அப்படி ஒரு திருப்தி. வசந்தன் சின்ன மருமகளைத் தான் முறைத்தபடி அமர்ந்திருந்தார்.
சுரேந்தர் அப்போதும் மனைவியை அடக்க சிறு முயற்சி கூட எடுத்திருக்கவில்லை.
“இதென்ன வம்பா இருக்கு நான் சாதாரணமா உலகத்தில் நடக்குறதை தான சொன்னேன்.”
“உலக நடப்பை உங்க புருஷனுக்கும் புள்ளைக்கும் உதாரணாமா சொல்லணும் என் புருஷனுக்கு இல்லை.”
“கல்யாணம் ஆகி மூணு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளே இந்த புருஷனுக்கு இப்படி சப்போர்ட்.. பார்த்து மா..”
“என் புருஷன் எப்படிபட்டவர்னு எனக்கு தெரிஞ்சா போதும். உங்களுக்கு எல்லாம் நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”
“குகா பெரியவங்கனு மரியாதை இல்லையா சரிக்கு சரி பேசிட்டு இருக்க”, என்ற சுரேந்தரைப் பார்த்தவள்,
“பெரியவங்கனா வயசுல சின்னவங்களை வாழ்த்தி வாழ விடணும் மாமா இப்படி மட்டம் தட்டி பேசி சுகம் காண கூடாது.”
“என்னம்மா ஆம்பளையே எதிர்த்து பேசுறது என்ன பழக்கம்?”, என்ற மாமனாரைப் பார்த்தவள் சற்றே குரலைத் தணித்திருந்தாள்.
“என் புருஷன் எனக்கு ஆம்பளைக்கு அடங்கிப் போகணும் சொல்லி தரல மாமா. தப்புனால் பயப்படாம தட்டிக் கேட்கணும்னு தான் சொல்லிருக்கார்.”
“அது சரி இந்த வெட்டி சவ்டாலுக்கு எல்லாம் எப்போ குறைச்சல் இருந்துருக்கு..
துரையோட சகவாசம் கொஞ்சமாவது உனக்கும் ஒட்டாதா..”
“….”
“உருப்படியான வேலை இல்லை சம்பாத்தியம் இல்லை ஆனால் வாய் மட்டும்..”
“சும்மா சும்மா அதையே சொல்லாதீங்க மாமா..”
“!!!”
“அவரு ஒண்ணும் திருடவோ தப்பான தொழில் செய்வோ இல்லை.. அவருக்கு பிடிச்ச வேலையைச் செய்யுறாரு அது அவ்வளவு பெரிய தப்பா?”
“!!”
“நியாயமா அவரு விருப்பத்தை சொன்னப்போ நீங்க தான் அவரோட விருப்பம் புரிஞ்சு தட்டிக் கொடுத்துருக்கணும்.
யாருமே இல்லாம தனியா நின்னு முட்டி மோதி மேலே வர்றது எத்தனை வலிக்கும்னு எப்போவாவது யோசிச்சுருக்கீங்களா?”
“!!!”
“என்கிட்ட கூட இதுவரை உங்களைப் பத்தியோ மத்தவங்களைப் பத்தியோ ஒரு வார்த்தை பேசினது கிடையாது. எங்க அத்தை அந்த அளவு புள்ளையை நல்லா வளர்த்திருக்காங்க..”
“….”
“ஆனால் அவரைப் புரிஞ்சுக்க தான் இங்கே யாரும் இல்லை.
ஒண்ணு மட்டும் சொல்றேன் என்னை என்ன சொன்னாலும் நான் கேட்டுப்பேன்.. ஆனால் இன்னொரு தடவை என் புருஷனையோ அவரோட வேலையையோ யாரும் எதுவும் பேசாதீங்க.”, என்றவள் அப்படியே மாடிக்குச் செல்ல பாதி படிகளில் நின்றிருந்தவன் அவளை அப்படியே தூக்கியிருந்தான்.
மற்றவர்கள் இருப்பதை உணார்ந்து தன் கையாலேயே வாயை மூடிக் கொண்டவளாய் அவனையேப் பார்த்திருந்தாள்.
அறைக்குள் வந்தவன் அவளை அப்படியே கட்டிக் கொள்ள இத்தனை நாள் இல்லாத கணவனின் அதிரடியில் சற்று பயந்து தான் போனாள் நந்தினி.
“என்னங்க…”
“…”
“கொஞ்சம் இங்க பாருங்க..”
“என்னடி வேணும் உனக்கு..”
“பயமா இருக்கு..”
“கீழே அந்தப் பேச்சு பேசிட்டு உனக்கு பயமா இருக்கா?”
“எனக்காக பேசினதுக்கு உண்மையில் நீ சொன்னது தான் என்னோட நிலைமை அன்பா ஆறுதலா நம்பிக்கையா இரண்டு வார்த்தை தான் நான் எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைச்சது இல்லை.
சொல்லப் போனால் உன்கிட்ட இருந்து இதெல்லாம் நான் எதிர்பார்த்ததே இல்லை.
பெத்தவங்க கூட பிறந்தவனுக்கே புரியாத என் மனசு எங்கேயிருந்தோ வந்துருக்குற உனக்கு எப்படி புரியும்னு தான் நினைச்சேன்.
எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..
கண்டிப்பா உன்னை ராணி மாதிரி வாழ வைப்பேன் டி. எப்போனு கேட்டுடாத எனக்கே தெரியாது.”
“இதுக்காக தான் தேங்க்ஸா?”
“ம்ம்..”
“அதை வேற மாதிரியும் சொல்லலாம்..”
“இவ்வளவு நேரம் சொல்லல??”
“அடச்சே…ஐ லவ் யூ சொல்லுங்க..”
“அதை தானேடி இவ்வளவு நேரமும் சொன்னேன்..”
“கடவுளே உங்களோட..”, என்றவள் கணவனின் பேச்சில் மேலும் மேலும் சிவந்து போனாள்.
“நிஜமாவே உனக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிக்குது?”
“ஏன் னா நீங்க என் புருஷன் அதனால தான்..”
“அதுதானா?”
“பொதுவா கல்யாணம்னு சொன்னாலே எல்லா பொண்ணுக்கும் ஒரு எதிர்பார்ப்ர்ப்பு இருக்கும் தான். ஆனால் நான் என்ன நினைச்சேன் தெரியுமா?”
“??”
“எங்க பெரியம்மா பணத்துக்காக தான் இதை பண்றாங்க அப்படியிருக்க அவங்க பார்க்குற மாப்பிள்ளை மட்டும் எப்படியிருப்பான்.
ஒண்ணு குடிகாரனா இல்லை முரடனா இருப்பான்னு தான் நினைச்சேன்.”
“…”
“நீங்க வேற பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்களா..
உங்களுக்கு ஏற்கனவே யாரையோ பிடிச்சுருக்கு கல்யாணத்தனைக்கு சொல்லாம கொள்ளாம ஓடி போயிருவீங்கனு நினைச்சேன்.”
“அடிப்பாவி!!”
“உங்களைப் பத்தி எதுவும் தெரியாதுலங்க அதனால.. பத்திரிக்கையில் பார்த்து தான் உங்க பேரே எனக்குத் தெரியும்.”
“”…”
“இப்படியிருந்த எனக்கு முதல் நாள் உங்களோட பேச்சு நடவடிக்கை எல்லாமே ரொம்ப பிடிச்சு போச்சு. என்னைத் திட்டுவீங்க கோபபடுவீங்கனு எல்லாம் ரொம்ப பயம் இருந்தது. ஆனால் நீங்க அப்படியெல்லாம் பண்ணவே இல்லை..”
“எப்படியோ உனக்கு நான் தான்னு தலைவிதி இருந்துருக்கு..”
“சரி சரி முறைக்காத.. ஆமா கேட்கணும்னு நினைச்சேன்..
ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா நீ.. இவ்வளவு ஒல்லியா குட்டியா இருக்க..”
“இங்கே வந்தப்பறம் தான் மூணு வேளை சாப்பாடு சாப்டுறேன்..”, என்றதும் பதட்டமாய் அவளின் தலையை நிமிர்த்தினான்.
“காலையில் எழுந்து வேலையெல்லாம் முடிச்சு காலேஜ் கிளம்பவே நேரமாயிடும் அதுக்குள்ளே அண்ணனும் பெரியம்மாவும் சாப்பிடுருவாங்க.
மதியத்துக்கு நான் சமைச்சதையே டப்பாவில் போட்டு எடுத்துட்டு போயிடுவேன். சாயிந்திரம் வேலை பார்த்த காபி ஷாப்பில் ஒரு காபி கொடுப்பாங்க.
ராத்திரி சில நேரம் சாப்பாடு இருக்கும் சில நேரம்…”
“நிஜமாவே எனக்கு எல்லாம் எந்தக் கஷ்டமுமே இல்லை டி..”
“அப்படியில்லைங்க ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி..”
“இனி உனக்கு என்ன சாப்பிடணும்னு தோணினாலும் என்கிட்ட சொல்லு நான் வாங்கி தரேன்..”
“நீங்களே கஞ்சமாமே அறிவு சொன்னான்..”,என்றவள் சிரித்தாள்.
“அவனுக்கு இருக்கு.. விளையாட்டு இல்லை நிஜமா தான் சொல்றேன் சரியா..”
“சரிங்க”, என்றவளுக்கு பாதுகாப்பான கூடடைந்து விட்டதைப் போன்ற உணர்வு.
அடுத்த நாள் காலையில் வீடே அமைதியாய் இருந்தது. யாரும் நந்தினியிடம் பேசவில்லை.