“ஹ்ம்ம், ஐ க்னோ ம்மா. கண்டிப்பா காமிச்சுக்கமாட்டேன். ஆனா அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க இல்ல?…” என கேட்டு,
“இந்த கடவுள் இருக்காரே, பக்கத்துல இருக்காங்க. என்னால ஒரு வார்த்தை அம்மான்னு பேச முடியலை. பக்கத்துல நிக்க முடியலை. உரிமையா பார்க்க முடியலை. எல்லாத்துக்கும் மேல என்னை பார்த்ததும் என் அம்மாவுக்கு அடையாளம் தெரியும். அதுவே அவங்களுக்கான தண்டனையா அமைஞ்சிருச்சு பாருங்க…” மனம் கலங்கி அவன் கூற,
“எல்லாத்துக்குமே காரணகாரியங்கள் இருக்கும் ஆர்ஷ்….”
“நான் என்னை பெத்தவங்களை விட்டு பிரிஞ்சதா?…” என கேட்டதற்கு ஷ்யாமளாவிடம் பதில் இல்லை.
“ஓகே, லீவ் இட். புறப்படலாமா?…” என எழுந்துகொண்டான்.
“நீ சாப்பிடலையா?…”
“போதும்…” என அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அதற்குள் அனன்யா பேச அவளிடம் பேசியபடியே வெளியே வந்து நின்றவன் ஷ்யாமளாவிற்காக காத்துக்கொண்டிருக்க அவரும் கிருஷ்ணகுமாருக்கு அழைத்து வருவதாய் சொல்லி மகனிடம் ஓடி வந்தார்.
“வந்துட்டேன்…” என வந்து நின்றவரை பார்த்து புன்னகைத்தவன்,
“இவ்வளோ வேகமாவா? மெதுவா வரவேண்டியது தானே?…” என்றபடி வந்து காரை கிளப்பினான்.
இருவரும் பேசியபடியே மருத்துவமனை வந்தடைய அன்று ராம்நாத்தை ஐசியூவிலிருந்து அறைக்கு மாற்ற இருக்க, கிருஷ்ணகுமார் அங்கே இருந்தார்.
அவரை பார்த்துவிட்டு வருகையில் ஆகர்ஷனும் ஷ்யாமளாவும் வந்துவிட அந்த தளத்தில் ஸ்ரீவத்சன் காவேரி என அனைவருமே இருந்தனர்.
சாருலதா கௌசல்யாவுடன் அமர்ந்திருக்க இன்னும் பிரத்யுக்ஷா வந்திருக்கவில்லை.
அனைவருமே மருத்துவமனை வந்த பின்னர் தான் பிரத்யுக்ஷா வீட்டிற்கே கிளம்பி சென்றிருந்தாள்.
இருக்கும் சூழ்நிலையில் ஸ்ரீவத்சன் எதுவாவது பேசக்கூடும் என்று அதனை தவிர்க்கவே அவர் இங்குமங்குமாய் அவரின் பார்வையில் படாமல் தப்பித்துக்கொண்டிருந்தாள்.
காலை அவர்கள் கிளம்பி மருத்துவமனை வந்ததும் தான் பிரத்யுக்ஷா தனது பிளாட்டிற்கே சென்றாள்.
காவேரிக்கு மகளின் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் புரியவில்லை. அதனால் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் ஸ்ரீவத்சன் கண்டுகொண்டார். மகள் ஒளிந்து மறைந்து தன்னை தவிர்த்து செல்வதில் தான் அவரின் சந்தேகமே வலுத்தது.
தன்னை போலவே அவளும் இந்த பேச்சினை இப்போது துவங்க நினைக்கவில்லை என்றும் புரியாமல் இல்லை.
அதற்காக அப்படியே விடமுடியாதே. அன்று காவேரியை அழைத்துக்கொண்டு கோவை கிளம்புவதாய் இருந்தார் ஸ்ரீவத்சன்.
அதற்குள் மகளிடம் பேசிவிடவேண்டும். என்னவென்று தெரியாமல் கிளம்பவும் முடியாதென தோன்றியது.
இன்னும் மகள் வராதிருக்க வெளியே கௌரவ்விடம் பேசியபடி நின்றவர் பார்வையில் அங்கே வந்துகொண்டிருந்தவன் விழுந்தான்.
சராசரிக்கும் அதிகமான உயரத்துடன் அவனிடம் என்னவோ தனித்துவம் தோன்ற பார்வையை நகர்த்தவில்லை அவர்.
ஷ்யாமளாவிடம் அவர் பேசுவதற்கு தலையசைத்தபடி ஒரு கையினை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்திருந்தவனின் வலதுகரம் இங்குமங்குமாய் அசைந்தாடியது.
ஆனால் முகத்தில் அறிமுகமான பார்வை எதுவும் இல்லாது மருத்துவனாய் அவரை எதிர்கொண்டான்.
“ஹலோ கௌரவ்…” என ஸ்ரீவத்சன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே கௌரவ்வினை கண்டு கை நீட்டிய ஆகர்ஷனை கண்டு திகைத்தார் அவர்.
“ஹாய் டாக்டர்….” என கௌரவ்வும் கை கொடுக்க அவரின் விழிகள் ஆராய்ச்சியாய் பதிந்தது ஆகர்ஷனின் மீது.
“உங்க அப்பாவை ரூம்க்கு சேன்ச் பண்ணியாச்சா?…” என கேட்க,
“ப்ராசஸ் போய்ட்டிருக்கு. உள்ள டாக்டர் கிருஷ்ணகுமார் இருக்கார்….” என்றான் அவனும்.
“ஓகே, வில் ஸீ…” என்று சொல்லிவிட்டு ஆகர்ஷன் அந்த ஐஸியூவினுள் நுழையும் முன் கௌசல்யாவை பார்த்து லேசாய் புன்னகைக்க பிறந்த பயனை அடைந்துவிட்டதனை போல நெக்குருகி மகனின் தோற்றத்தை, தோரணையை விழிகளால் அள்ளி மனதினுள் நிரப்பினார்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மௌனமாய் அந்த நிமிடத்தை கடக்க ஆகர்ஷன் உள்ளே சென்றுவிட்டான்.
அவன் வந்ததுமே கிருஷ்ணகுமார் தன் கையில் இருந்த கேஸ் பைலை அவனிடம் நீட்டவும் வாங்கி பார்த்தவன் இமைகள் உயர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ராம்நாத்திடம் சென்றது.
அதே பார்வையுடன் அங்கிருந்த உதவி மருத்துவரையும், செவிலியர்களையும் பார்க்க தானாகவே அங்கிருந்து வெளியேறினார்கள்.
“என் மகன்.உங்களுக்கு இந்த சர்ஜரியை பண்ணினது என் மகன் தான்…” என்றார் ராம்நாத்திற்கு அறிமுகம் போல கிருஷ்ணகுமார்.
சட்டென மாற்றம் பெற்ற மகனின் இந்த அவதாரத்தில் துணுக்குற்ற கிருஷ்ணகுமார்,
“ஆர்ஷ்…” என்று அவனின் தோளை தொட்டார்.
“என்ன எங்கையோ பார்த்தமாதிரியே இருக்கு போல மிஸ்டர் ராம்நாத்துக்கு. அதான் விசாரிப்போமே…” என்றவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
ராம்நாத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் அவன் சொல்லுவதை போல எங்கேயோ பார்த்த நினைவு தான்.
ஆனால் எங்கே, எப்போது, யார் என்று எதுவும் ஞாபகத்தில் எழுவேனா என்று சண்டித்தனம் செய்தது.
மயக்கம் தெளிந்தவர் அறிந்தவற்றுள் ஒன்று அந்த மருத்துவமனை பிரத்யுக்ஷா பணிபுரியும் மருத்துவமனை என்பது தான்.
அவரும் அதனை கேள்விப்பட்டிருக்கிறார் தான். ஆனால் யார் எவர் என்றெல்லாம் யோசிக்க அவசியமில்லாது போயிருக்க இப்போது ஆகர்ஷனின் பார்வை, பேச்சு எல்லாம் உள்ளுக்குள் என்னவோ செய்தது.
“இன்னுமா யோசிக்கறீங்க?…” என்று கேட்டவன் எழுந்து வந்து அவரின் மணிக்கட்டை பிடித்தான்.
“ஆர்ஷ், இட்ஸ்…”
“ப்பா…” என கிருஷ்ணகுமாரின் பேச்சினை ஒற்றை அழைப்பில் தடை செய்தவன்,
“பல்ஸ் ரேட் செக் பண்ணுவோமா?…” என அவரின் கையில் அழுத்தம் கூட்டியவன்,