அவள் இருக்க இருக்க ஆகர்ஷனின் மனவலு குறைந்துகொண்டே வந்தது. நிச்சயம் தன் முடிவு ஆட்டம் கண்டுவிடும் என்று உணர்ந்தவன்,
“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா பிரத்யு? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?…” என்றவன்,
“படிக்கிறதுக்கு தனியா தெரியாத நாட்டுக்கு வந்திருக்கியேன்னு ஒரு ஹெல்ப்பிங் மைண்ட்ல உனக்கு சப்போர்ட்டா இருந்தேன். போதுமா?…” என்றான் மீண்டும் கோபமாய் அப்பட்டமான பொய்யுரைத்து.
“டோன்ட் ஷவுட். டோன்ட் ஷவுட். டோன்ட் ஷவுட்…” மெதுவாய் ஆரம்பித்து அவனுக்கு மேல் பிரத்யுக்ஷா கொஞ்சம் கொஞ்சமாய் குரலை உயர்த்திக்கொண்டே செல்ல,
“பிரத்யுக்ஷா…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“நான் ஜஸ்ட் ப்ரெண்ட். உன்னோட வெல்விஷர். வேற ஒண்ணுமே இல்லை. என்ன நினைச்சிட்டு இருக்க நீ? கிளம்பிடு. அடுத்து நீங்க சொல்ல போறது அதானே?…” என்றவள் ஆகர்ஷனின் ஆக்ரோஷ பாவத்தில் கொஞ்சமும் அசையவில்லை.
“ஆமா, நானும் கொஞ்சநாள் முன்ன வரைக்கும், நான் சிட்னி விட்டு கிளம்பற வரைக்கும் அப்படித்தான் நானும் நினைச்சேன். பட், கிளம்பும்போது…” என ஏக்கம் ததும்பும் விழிகளுடன் பார்த்து,
“உங்களை நான் மறந்திடுவேன்னு நீங்க சொன்னப்போவும்,,, ப்ச், எனக்கு தெரியலை. வேற மாதிரி யோசிக்கவே தோணலை. உங்களை விட்டு கிளம்பும்போது மனசு முழுக்க என்னோட பெட்டர் ஹாஃபா நீங்க வந்துட்டீங்க சீனியர்? நான் என்ன பண்ணட்டும்? முழுசா போய் தொலைஞ்சிடட்டுமா?…” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு அழுகை பொங்கும் உதட்டை கடித்து கேவலை அடக்கினாள்.
“அடி வாங்குவ பிரத்யு. என்ன பேசிட்டிருக்க நீ? நான் ஏன் இதை சொல்றேன்னு புரியாம பேசற நீ….” என்றான் அதிர்வில் இருந்து மீளாமல்.
“நான் ஏன் புரியனும்? என்னை உங்களுக்கு புரிஞ்சதா? இல்லை இந்த முடிவுக்கு வரும்போது என்னை பத்தி யோசிச்சீங்களா?…” என்றவளின் சத்தம் மேலும் கூடியது.
பதறிவிட்டான் ஆகர்ஷன். கீழே வீடு நிறைய பணியாட்கள். ஷ்யாமளாவும் வீட்டில் தான் இருக்கிறார்.
“சத்தமா பேசாத பிரத்யு…” என அடங்கிய குரலில் எச்சரித்தவன் வேகமாய் சென்று கதவை அடைத்துவிட்டு வந்தான்.
“இதுமட்டும் தப்பில்லையா? நான் உள்ள இருக்கேன். என்னோட நீங்க தனியா இந்த நைட் டைம்ல டோர் லாக் பண்ணிட்டு நிக்கிறது. இது என்ன உரிமையில?…” என்றாள் பட்டாசாய்.
“எவ்வளோ பேசற நீ? ஷட்அப் பிரத்யு….”
“யூ ஷட்அப். நான் தான் பேசுவேன். நான் பேசாம வேற யார் பேசுவா? என்னை தானே வேண்டாம்ன்னு விட்டுட்டு போறீங்க….” என்றவள்,
“இங்க பாருங்க. சும்மா உங்க சொந்த கதை, சோக கதைக்கெல்லாம் என்னோட காதலை பலி குடுக்க முடியாது. புரியுதா?…” என்றவளுக்கு மீண்டும் தொண்டை அடைத்தது.
“இங்கெல்லாம் என்னவோ பண்ணுது சீனியர்…” என்றாள் தன் இதயத்தை காண்பித்து.
தளர்ந்து போய் அவள் படும் சிரமமும், வேதனையும் பொறுக்காமல் ஆகர்ஷன் அவளருகில் வர,
“பக்கத்துல வந்த கொன்னுடுவேன்….” என்று தள்ளிவிட்டு தீயாய் முறைத்தாள் அவனை.
“நான் சொல்றேன். பொறுமையா இருடா. கொஞ்சம் என்னன்னு கேளு பிரத்யு,…”
“என்ன கேட்கனும்? நான் போறேன். நீயும் உன் வாழ்க்கையை பார்த்துக்கோ. கொஞ்சநாள்ல எல்லாம் சரியாகிடும்ன்னா?…” என்று அவன் மனதில் முன்பு நினைத்திருந்ததை சரியாய் அவள் சொல்ல தன்னைப்போல் ஆகர்ஷனின் தலை ஆடியது.
“யூ சீட்…” என்றவள் அவனின் கைகளில், நெஞ்சத்தில் அத்தனை அடி வைத்தவள்,
“மனுஷனா நீ? இன்னும் எத்தனையை தூக்கி குடுப்ப? நான் என்ன பொம்மையா? நீ வேணும்னா என்னை பார்க்கறதுக்கும், விரும்பறதுக்கும். வேண்டாம்ன்னா விலகி போறதுக்கும். நீ எப்படியும் போ. எங்கயும் போ. என் வாழ்க்கையை, என்னோட எதிர்காலத்தையும் சேர்த்து ஏன் தூக்கி வீசற?…” என்றவளுக்கு கண்ணீர் குறைந்து கோபம் மட்டுமே கனன்றது.
“நினைச்சா ஆசையா பார்ப்ப. கைக்குள்ள வச்சு பத்திரம் பண்ணிப்ப. என் மனசுக்குள்ள உன்னை தவிர வேற எதுவுமே இல்லைன்னு என்னை பைத்தியமா நினைக்க வைப்ப. அப்பறம் உன் அம்மா வரவும் யாரும் வேண்டாம்ன்னு நீ பழைய நிலைமைக்கு போய்டுவ. அப்போ நான்? எனக்குன்னு எதுவும் இல்லையா?…”
“பிரத்யு…” ஆகர்ஷன் இதனை எதிர்பார்க்கவில்லை.
“நம்ம நேசிக்கிறவங்க நம்மளை உயிரா நினைக்கிறவங்க நம்மளை விலக்கி வைக்கும்போது அவங்களை தள்ளி நின்னு பார்க்கிற கொடுமையை அனுபவிச்சவன் தானே நீ? இப்போ எனக்கும் அதே வலியை தரனும்ன்னு நினைக்கிறன்னா நான் உனக்கு ஒன்னுமே இல்லை தானே?…”
பிரத்யு கேட்க கேட்க ஆகர்ஷனின் மனநிலையே மாறிவிட்டது. அவள் சொல்வது உண்மை தானே.
தான் நின்ற இடத்தில் இப்போது தன் உயிரானவளையும் நிறுத்தி செல்ல இருந்தேனே என அவன் மூளைக்கு சம்மட்டியால் அடி வைப்பதை போலிருந்தது.
“பிரத்யுடா…” என மீண்டும் கலங்கி போய் அவளருகில் வர,
“எல்லாம் தெரியும். எல்லாம் கேட்டாச்சு. என்னவாம்? கௌசல்யாத்தை பையன் நீ. வேற எப்படி இருப்ப? பெரிய தியாகிங்களா நீங்க எல்லாரும்? அவங்க என்னன்னா எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க…” என்றவள்,
“எல்லாமே தெரியும்ன்னு சொல்றேன். இப்படி எப்படின்ற மாதிரி பார்க்காத மேன். கொலைவெறில இருக்கேன்…” என சொல்லி தன் இயலாமையை அங்கிருந்த உடமைகள் மீது காண்பித்தாள்.
அத்தனை பெட்டிகளையும் பிரித்து கீழே தள்ளிவிட்டு கலைத்து போட்டு களைத்து நிமிர்ந்தவளை பார்த்தவன் விழிகளில் எஞ்சி இருந்தது நேசம் மட்டுமே.
“இந்த லுக் தான். ஆஹ், இரிட்டிட்டிங். இப்ப பார்க்கும் போது தோணுது எப்படியெல்லாம் என்னை மயக்கி வச்சிருக்க நீ. இனிமே இதுக்கெல்லாம் மயங்கவேமாட்டேன். அதுக்கு ஒரு சான்ஸ் கூட குடுக்கமாட்டேன்….”
“ஓகே, நான் என்ன செய்யட்டும் பிரத்யு?…” அவனே இறங்கி வந்தான்.
“ஒன்னும் செய்யவேண்டாம்….” என்றவள்,
“ஹூ ஆர் யூ? இனி எனக்கு வெல்விஷரா கூட வேண்டாம் நீ…” என்றாள் ஆவேசம் தணியாமல்.
தன்னை வேண்டாம் என்று சொல்லி செல்ல எத்தனை தைரியம்? எப்படி மனது வந்தது? தாங்க முடியவில்லை அவளால்.
அவள் படும்பாடு அத்தனையும் அவனுக்கு அவனுக்கான காதலாய் மட்டுமே தெரிந்தது.
எத்தனை பெரிய முட்டாள்த்தனம் பண்ண இருந்தோம் என்று யோசிக்கையில் வெகுவாய் துவண்டுபோனான் ஆகர்ஷன்.
அதிலும் இத்தனை பேசி அழுது, தானே அவளை தவிக்க வைத்துவிட்டோமே என அந்த குற்றவுணர்வும் அவனை ஆட்டிப்படைத்தது.
“பிரத்யு, இங்க பார்…” மென்மையான அழைப்பும், காதலான பார்வையுமாய் நெருங்க வர,
“முதல்ல இந்த லவ் லுக். பிடிக்கவே இல்லை. அன்ட், ஹஸ்கி வாய்ஸ். யூ யூ டேமிட். இப்படி பேசி என்னை என்னமோ பன்ற நீ. மத்தவங்கட்ட பேசற மாதிரி நார்மலா பேசு…..” என்று விரல் நீட்டி எச்சரிக்கை காண்பிக்க, அவள் சொல்லியதில் புன்னகைத்தவன்,
“நீ நார்மலா பேசறியா முதல்ல?…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
உண்மைக்கும் அத்தனை தூரம் அவனின் மனதின் பாரங்கள் இறகாய் மாறிக்கொண்டிருந்தது பிரத்யுக்ஷாவின் கோபத்தினால்.
கனத்த நெஞ்சத்துடன் கிளம்ப இருந்தவனின் மீதான பிரத்யுக்ஷாவின் உரிமையும், அதட்டலும், கோபமும் உயிரினும் மேலாய் பிடித்தது.
“உங்கம்மா நிம்மதி முக்கியம். அவங்களுக்காக போவீங்க, எல்லாம் சரி. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நான் என்ன பண்ணேன்? உங்களை திரும்ப சிட்னி போகவேண்டாம்ன்னு சொன்னேனா? என்னை வேண்டாம்ன்னு ஏன் சொல்றீங்க?…” மீண்டும் மரியாதை ஆற்றாமையுடன் வந்தது.
“நீ போ. எப்படியும் போ. யார் மேலையும் பாசமா அன்பா இரு. என்னை ஏன் தண்டிக்கிற? உனக்கு பிடிச்சவங்களுக்காக நீ அனுபவிக்கிற வலியை நான் ஏன் அனுபவிக்கனும்? நானும் உள்ளுக்குள்ள சாகனும். இல்ல?…” என்றவளின் கேள்வியில் ஆகர்ஷன் முகத்தில் எவ்வித உணர்வுகளும் இல்லை.
“புரியலைல? ஹார்ட்லெஸ் ஹார்ட் சர்ஜன். நீயெல்லாம். போடா. நீ என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்ல? நானும் சொல்றேன். இப்பவே உனக்கு நேரா சொல்றேன். நீ வேண்டாம். வேண்டவே வேண்டாம். நீ இல்லைன்னா எனக்கு யாருமே இல்லை தான். தனி தான்னு சொல்றேன். அப்பவும் புரியாம நிக்கிற நீ வேண்டவே வேண்டாம்….” என்று சொல்ல,
“பிரத்யு…” என்று அவளின் கை பிடிக்க அவன் நெருங்க,
“உங்கம்மா இல்லாம தனியா சிட்னி போய் தனியா கஷ்டப்பட்டு, தவிச்சு நின்ன மாதிரி நானும் நிக்கனும்ன்னு நினைச்சுட்ட தானே? நான் நிக்கறேன். நீ பாரு மேன். அப்போ மட்டும் உனக்கு நிம்மதி கிடைச்சிடுமா? பிரத்யுக்ஷா இன்னொரு ஆகர்ஷனா நிக்கனும்ன்னு தானே போற. போ. என் கண்ணுல படாம போய்டு…” என்றவள்,
“பிரத்யு, தப்பு தான். நான் அந்த ஹீட்டட் மொமென்ட்ல என்ன பன்றதுன்னு யோசிக்காம. ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட் மீ. என்னால என் எமோஷன்ஸ ஹேண்டில் பண்ண முடியலைடா…” என்றான் அவளிடம் தன்னை புரிந்துகொள்ளேன் என்னும் விதமாய்.