அதுவே பிரத்யுக்ஷாவின் ஆத்திரத்தை மேலும் மேலும் அதிகமாக்கிக்கொண்டே சென்றது.
“ஸீ மிஸ்டர் ஆகர்ஷன். உன்னோட பிலாசபியை தூக்கி குப்பைல போடு. ஹீட்டட் மொமென்ட்டாம். என்னை தூக்கி அதுல எரிச்சிட்டா அது சரியா போயிருமா?…” என்று அத்தனை கோபம் காட்டினாள் அவள்.
“மத்தவங்களுக்காக என்னை அவாய்ட் பண்ண நினைச்ச உங்களோட கன்சர்ன் எனக்கு தேவையே இல்லை சீனியர். எப்போ உங்களோட காதலை என்கிட்ட மறைக்க நினைச்சீங்களோ அப்பவே பினிஷ் மேன்….” என்று அத்தனை கொந்தளிப்புடன் சொல்லிய ப்ரத்யுக்ஷா,
“இதுக்கு மேல நீ எனக்கு ப்ரப்போஸ் பண்ணனும்னு அவசியமே இல்லை. திரும்ப தத்துபித்துன்னு எதாச்சும் சொல்ல நினைச்ச வாய்லையே நாலு சாத்து சாத்துவேன்….” என்று கூறி,
“போய் கலைச்சு போட்டதை எல்லாம் அடுக்கி வச்சுட்டு ஊருக்கு கிளம்பற வேலையை பாரு. என்னை கிளப்ப நீ எதுவும் சொல்ல வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு புயலென கிளம்பி செல்ல பார்த்தவள் அங்கே ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் கொத்தாய் வெள்ளை நிற தாமரை மொட்டுக்களில் பதிந்தது.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…” என்று அதனை எடுத்து கோபத்தில் அவன் மீது விசிறிவிட்டு பிரத்யுக்ஷா வெளியேற, ஆயாசத்துடன் பார்த்தபடி நின்றான் ஆகர்ஷன்.
“ஓஹ் காட், இவளை எப்படி சமாளிப்பேன்? கேம் விளையாடிட்டீங்கப்பா நீங்க…” என்று தலையை பிடித்து கோதியவன் கிருஷ்ணகுமாருக்கு அழைத்தான்.
“ஆர்ஷ்…” என எடுத்தவரிடம்,
“இப்படி செஞ்சிட்டீங்களே ப்பா. என்னை பினிஷ் பண்ணிட்டா பிரத்யு. இப்போ சந்தோஷமா?…” என அவனே பேசி வைத்துவிட்டு அவளின் பின்னே சென்றான் ஆகர்ஷன்.
அவனிடம் பேசிவிட்டு வந்தாலும் கோபத்தில் உள்ளம் கொதிக்க நேராய் வந்தது அவளை எதிர்பார்த்து காத்திருந்த ஷ்யாமளாவிடம் தான்.
கதவை திறந்துகொண்டு அவள் வெளியே வந்த வேகத்தில் ஷ்யாமளாவும் என்னவென அவளை கேள்வியாய் பார்க்க,
“ஊர்ல இருக்கறவங்க எல்லாரையும் நான் ஏமாத்தி ஊசி போடுவேன். உங்க பிள்ளை என்னையே ஏமாத்த பார்க்குது ஆன்ட்டி. நீங்க தான சொன்னீங்க, என்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் மட்டும் இல்ல அவன் குடும்பமும் குடுத்து வச்சிருக்கனும்ன்னு. இப்போ மட்டும் குடுத்து வச்சதை திரும்ப வாங்கியாச்சா என்ன?…” என்று சொல்லிவிட்டு,
“என்னை மாத்த யோசிக்க வேண்டாம்ன்னு சொல்லி வைங்க உங்க பையன்கிட்ட. அது நடக்காத ஒன்னு. என்னை பத்தி தெரியும் தானே? ம்ஹூம், என்னை பத்தி இன்னும் முழுசா தெரியாது. அதுதான் ஈஸியா விட்டுட்டு போக பார்த்துட்டார்….” என்று சொல்லியவளின் முகமெல்லாம் சிவந்திருந்தது.
“பிரத்யு…” என ஷ்யாமளா அவளின் தோளை தொட,
“தலை வலிக்குது ஆன்ட்டி. ஒரு ஹாட் சாக்லேட் ப்ளீஸ். என்னால இப்போ என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை. ரொம்ப பேசறேன்…” என்று சொல்லியவள் சோபாவில் அமர்ந்து இரு கைகளையும் ஊன்றி தலையை சாய்த்துக்கொள்ள மனதெல்லாம் புண்ணாகியிருந்தது ஷ்யாமளாவிற்கு.
அமர்ந்த வேகத்தில் கோபம் இன்னும் கட்டுக்கடங்காமல் பெருக மீண்டும் சட்டென எழுந்து நின்றாள் அவள்.
“பிள்ளையா வளர்த்திருக்கீங்க? பேசாம மூட்டை முடிச்சை கட்டிட்டு வந்த வழிய போக சொல்லிருங்க ஆன்ட்டி. நாளைக்கு என் கண்ணுல பட்டா எதாச்சும் எக்குதப்பா பண்ணிட போறேன்…” என்று படபடவென பொரிந்துவிட்டு வெளியேறினாள்.
உண்மையில் ஷ்யாமளா முகம் வாட்டத்துடன் இருந்தது ப்ரத்யுக்ஷா பேச்சில், அவள் கோபத்தில்.
தன்னிடமே இத்தனை கோபம். ஆகர்ஷன் என்னவாகியிருப்பானோ என கவலையுடன் திரும்ப அவன் அத்தனை நிதானமாய் வந்து சேர்ந்தான்.
“ஆர்ஷ் என்னடா இது? இப்படி கோபமா போறா…” ஷ்யாமளா அவனிடம் கேட்க,
“ரொம்ப ஹாட்டா பேசிட்டு போறா இல்ல? நான் வேண்டாமாம். ஆனா என்னை விட்டுட்டும் போகமாட்டா. சரியான வேதாளம். அத்தனை சீக்கிரம் என் கழுத்தை விட்டு இறங்கிருவாளா என்ன?…” என்றான் கொள்ளை காதலுடன் உள்ளம் கசிந்து உயிரால் உருகி.
“அவளை நீ ரொம்பத்தான் டென்ஷன் பன்ற ஆர்ஷ்…”
“ஸோ வாட்? நானுமே கொஞ்சம் லூஸ் பண்ணிட்டேன். இப்போ ரியலைஸ் கூட பண்ணிட்டேன். ஆனா இது வெறும் காதலோட முடியறதில்லையே ம்மா. அதைவிட ப்ரத்யு. அவளோட உணர்வுகள் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்….” என்றவன் மனமும் அவளுக்காகவென இளகி தவித்தது.
“ரொம்ப கோபமா போறாளே ஆர்ஷ். நீ ஈஸியா இருக்க?…”
“ஹ்ம்ம், ரொம்ப க்ளியராவும் இருக்கேன். யாரா இருந்தாலும் இந்த எமோஷன் படுத்தற பாடு இருக்கே?…” என்றவன்,
“இருங்க வர்றேன்…” என வாசலுக்கு விரைந்தான்.
ஸ்கூட்டியை எட்டி உதைத்துக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருந்தாள் பிரத்யுக்ஷா.
விழிநீர் வழிந்துகொண்டே இருக்க அதனை துடைத்துவிட்டு கோபத்துடன் அதனை உதைக்க அவளின் பேச்சை கேட்பேனா என்றது அவளின் வண்டி.
“சீனியர் ராஸ்கல், செல்ப் எடுத்து தொலையேன்…” என்று வேறு கத்த,
“மொத்தமா கொலாப்ஸ் ஆன வண்டி அத்தனை சீக்கிரம் செல்ப் எடுக்காதுங்க பேபி டாக்டர்…” என்று வந்தான் ஆகர்ஷன்.
சற்றுமுன் அவள் பார்த்தபொழுது முகத்திலிருந்த வேதனையின் சுவடு மட்டுப்பட்டதை போல் இந்த நிமிடம் அவளுக்கானவனாய் மட்டுமே அவன் நிற்க கோபமாய் முறைத்தாள் பிரத்யுக்ஷா.
“வா, நான் ட்ராப் பன்றேன்…” என ஆகர்ஷன் இலகுவாய் அழைக்க,